Support Ads
 ·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

சிறந்த பக்தி - ஆன்மீக கதை

அன்று ஏகாதசி கூட்டம் அலை மோதியது ஆனால் மூலஸ்தானத்தில் விட்டலனின் சாநித்யத்தை காணவில்லை.

எங்கே போனான் விட்டலன் தான் போகும் இடத்தை எங்களுக்குக் கூட தெரிவிக்காமல் சென்றிருக்கிறானே!

பாண்டுரங்கா, ஒரு வேளை எங்களுடன் விளையாடிப் பார்க்கிறாயா? அப்படியானால் அந்த விளையாட்டில் நாங்களும் பங்குபெறத்தயார். விட்டலா, உன்னைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டோம் என நாமதேவரும் ஞானேஸ்வரரும் தேடத்தொடங்கினார்கள். விட்டலன் சென்ற பாதையில் அவர்கள் சரியாகவே பின்தொடர்ந்தனர். எல்லாம் விட்டலனின் அருள்.

இதோ நமக்கு மிகவும் அறிமுகமான விட்டலனின் துளசிமாலை வாசம். அந்த வாசனையையே அடையாளமாகக் கொண்டு, இருவரும் விட்டலன் சென்று கொண்டிருந்த பகுதியை மெல்ல மெல்ல அடைந்துகொண்டிருந்தனர்.

அதே சமயம் அன்று தம் வாழ்நாளின் பொன் நாள் என்பதை அறிந்திராத ஸாவ்தாமாலி நந்தவனத்தில் பூக்களைக் கொய்து கொண்டிருந்தார். அவர் உதடுகளோடு அபங்கங்களைத் தொடுத்து வெகு இயல்பாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அப்போது சற்று தூரத்தில் வேகமான காலடி ஒலி கேட்டது. அந்த ஒலி மேலும் அதிகமானது. இப்படி ஓட்டமும் நடையுமாக வருவது யார்? உற்றுப் பார்த்த ஸாவ்தாமாலி ஒரு கணம் உறைந்து விட்டார்.

தம்மை நோக்கி ஓடி வந்து கொண்டிருப்பது தம் மனத்தில் இடைவிடாது பூஜிக்கும் பாண்டுரங்கன் அல்லவா? பரவச உச்சத்தை அடைந்தார். விட்டலனின் பாதங்களில் விழுந்தார். அவனது இரு பாதங்களிலும் தம் தலையைப் பதித்தார். என்ன ஒரு சுகானுபவம்!


பண்டரிபுரக் கருவறையில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் மிகப்பெரும் பாக்கியமும் தலைசாய்த்து எடுக்கும் அனுபவம்...

பிற பக்தர்கள் பதிப்பது மூலச்சிலையின் பாதங்களில் என்றால், ஸாவ்தாமாலிக்கு, விட்டலனின் உயிர்ப்புள்ள வடிவத்தின் பாதங்களை நேரடியாகவே பற்றிககொள்ளும் பெரும் பேறு...

ஸாவ்தா, உன் வழிபாட்டுக்கெல்லாம் இப்போது நேரமில்லை எனக்கு உடனடியாக உன் உதவி தேவை என்றான் விட்டலன்.

இறைவனுக்கு எதற்கு என் உதவி என்றெல்லாம் ஸாவ்தா மாலி யோசிக்கவில்லை. பக்தியின் உச்சக்கட்ட சிறப்பே அதுதானே. தர்க்கங்கள் மறைந்துவிட, நம்பிக்கை கோலோச்சும் தருணங்கள். கட்டளையிடுங்கள் என்றார் ஸாவ்தா மாலி.

இரண்டு திருடர்கள் என்னைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள், எங்காவது ஒளிந்து கொள்ள இடம் வேண்டும் என்றார் விட்டலன்.

“தம் மூன்று அடிகளால் பிரபஞ்சத்தையே அளந்த திருமாலின் வடிவம், ஒளிய இடம் கேட்ட விந்தையை அன்று உலகம் கண்டது.”

ஏதாவது பெரிய மரத்துக்குப் பின்னால் விட்டலனை மறைத்து நிற்கச் சொல்லலாமா? அல்லது சற்றுத் தள்ளி நிற்கும் தம் குடிசையில் ஒளிந்துகொள்ளச் சொல்லலாமா? ஒருவேளை கிணற்றுக்குள் உள்ள படிகள் விட்டலனுக்கு அதிகப் பாதுகாப்பு அளிக்குமா?'


ஸாவ்தா மாலியின் சிந்தனைக்கு விட்டலனின் வாசகம் கடிவாளம் போட்டது. இங்கெல்லாம் மறைந்து கொண்டால் அவர்கள் இருவரும் கண்டுபிடித்துவிடுவார்கள்' என்றார் பதற்றத்துடன்.

ஆம், கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்டார்கள்.

தெய்விக துளசி மாலையின் வாசம் வலுவடைந்துகொண்டே வந்தது. ஆக விட்டலனை நெருங்கிவிட்டோம். நாமதேவரும் ஞானேஸ்வரரும் உற்சாகம் பொங்க யாம் உனைத் தொடர்ந்து சிக்கெனப்பிடித்தோம். எங்கு எழுந்தருளுவது இனியே!' என்பதுபோன்ற உவகையுடன் ஸாவ்தா மாலியின் நந்தவனத்துக்குள் நுழைந்தனர்.

சீக்கிரமாக எனக்கு ஓர் இடத்தைக்காட்டு' என்று அவசரப்படுத்தினார் விட்டலன்.

சட்டென அந்த எண்ணம் தோன்றியது ஸாவ்தா மாலிக்கு... எப்போதும் என் இதயத்தில் நிறைந்திருப்பது விட்டலன் தானே, அந்த வீட்டிலேயே அவனை மறைத்துவைத்தால் என்ன?' சட்டென அருகில் இருந்த கத்தியை எடுத்து தன் மார்புப் பகுதியைக் கிழித்தார். உள்ளே மறைந்துகொள்ளுங்கள்' என்றார்.

பக்தனின் இதயத்தில் குடிகொள்ள பரந்தாமனுக்குக் கசக்குமா என்ன? மறைந்து கொண்டான். தூரத்தில் ஞானேஸ்வரரும் நாம தேவரும் விழிகளால் விட்டலனைத் தேடியபடியே விரைந்து நெருங்கிக் கொண்டிருந்தனர்.

தம் இதயப் பகுதியில் பெருகிக்கொண்டிருக்கும் ரத்தத்தையே அடையாளமாகக் கொண்டு விட்டலனின் மறைவிடத்தை இவர்கள் கண்டுபிடித்தால்?' இப்படி யோசித்த ஸாவ்தாமாலி ஒரு பெரிய கம்பளத்தை எடுத்து, தம் உடலின் மேல் பகுதியைப் போர்த்திக்கொண்டார்.

விட்டலனைத் துரத்திவரும் இந்த திருடர்களை என்ன செய்யலாம்? கோபத்துடன் அந்த இருவரையும் பார்த்தார் ஸாவ்தாமாலி குழப்பம் ஏற்பட்டது.

இவர்களா திருடர்கள்? ஞானஒளி வீசுகிறதே இவர்களிடம் குழம்பினார்...

நாமதேவருக்கும் குழப்பம் ஏற்பட்டது, உங்களுக்குப் புரிகிறதா? என்று ஞானேஸ்வரரைக் கேட்டார், அவருக்கும் அதே உணர்வுதான்.

இந்தப் பரந்த நந்தவனத்தில் ஒரு தோட்டக்காரனைத் தவிர வேறு யாரும் புலப்படவில்லை. ஆனால் அதேசமயம் அந்த தோட்டக்காரனைத் தாண்டிச் சென்றால் துளசி மாலையின் வாசனை குறைகிறதே. அப்படியானால் விட்டலன் இங்கு தான் இருக்கிறான்... ஆனால் குறிப்பாக எங்கு இருக்கிறான்?

விபரம் புரியாமல் திகைத்து நின்றனர்.

இருவரும் எதிரே நின்ற தோட்டக்காரர் போர்த்தியிருந்த கம்பளியையும் மீறி உதிரம், வெளியே கசிந்தது.

அப்போது நாமதேவர் இந்த தோட்டகாரன் நம் விட்டலனை ஏதோ செய்து விட்டான் என அவரை தாக்க முயற்சிக்க உடனே ஞானேஸ்வரர் அவரை சமாதானம் செய்ய..

பிறகு ‘விட்டலா’ ‘விட்டலா' இருவரின் தொண்டையிலிருந்தும் பெரும் ஓலம் கிளம்பியது... விட்டலன் வெளிப்பட்டான்.

ஸாவ்தாமாலியின் உடல் காயம், நீங்கி பழைய நிலையை அடைந்தது.

என்ன நடந்தது என்பதை அறிந்தவுடன் பின் தொடர்ந்த' மகான்கள் இருவரும் பிரமித்தனர்.

ஆனந்த கண்ணீரால் அவர்கள் கரங்கள் இரண்டும் குவிந்தன.

ஸாவ்தா மாலியும் வந்தவர்கள் யாரென அறிந்ததும் பெரும் மகிழ்ச்சியுடன் அவர்களின் பாதங்களில் விழுந்தார்.

செயற்கரிய செயலைப் புரிந்த ஸாவ்தா, உனக்குத் தேவையான வரம் என்ன?'' எனக் கேட்டான் விட்டலன்.

தமக்கு எது தேவை என்பது ஸாவ்தாமாலிக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களை மறவாத நிலை வேண்டும்' என்றார்.
அந்த வரம் தயக்கமின்றி அளிக்கப்பட்டது.

இன்றும் பாகவத வரிசையில் ஸாவ்ந்த மாலீ மிக முக்கியமானவர் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த நாமதேவரும் ஞானேஸ்வரரும் உடல் புல்லரிக்க நெக்குருகி நின்றனர்.

சரி வாருங்கள் வகுளாபுரி செல்வோம்... அங்கே எனது மற்றொரு பக்தன் கூர்மதாசன் இருக்கிறான் அவனுக்கு நாம் அனைவரும் சென்று தரிசனம் தரலாம் எனக்காகக் அவன் காத்துக்கொண்டிருக்கிறான்' என்றான் விட்டலன்.

நால்வருமாகப் புறப்பட்டனர் அங்கே கூர்ம தாசர் கலங்கியபடி ஊர்ந்து கொண்டிருந்தார் அவருக்கு அங்கேயே அப்போதே தரிசனம் கிட்டியது பிறகு கூர்ம தாசரின் வேண்டுகோளின் படி அங்கேயே ஒரு சுயம்புவாக பகவான் இன்றளவும் காட்சி தருகிறான் அந்தஊர் குர்மியா என அழைக்கபடுகிறது.

  • 9700
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்