வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு புதிய புதுப்பித்தல்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.அந்த வகையில் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பும் வசதி வெகு விரைவில் வாட்ஸ்அப் தளத்தில் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4,000ஐ தாண்டியது உயிர் பலி – எட்டு மடங்காக அதிகரிக்கலாமென எச்சரிக்கைதென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் கனமழை மற்றும் பனியுடன் போராடி வருகின்றனர்.மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலும் பலரைக் கண்டறிவதால், பலி எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.அனர்த்த வலயத்தில் உள்ள பலர் கட்டடங்களுக்கு திரும்புவதற்கு மிகவும் அச்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துருக்கியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பாக தகவல்களை பெற இலங்கை தூதரகம் தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டுள்ளது.Call 00903124271032Mobile- 00905344569498.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழம டெக்சாஸின் டல்லாஸ் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தில் இடம் பெற்றிருந்தது. போயிங் பி-17 குண்டுவீச்சு விமானம் மற்றும் ஒரு சிறிய விமானம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி தரையில் மோதி விழுந்ததில் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் விமான பணியாளர்கள் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட சில ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த ட்விட்டர் முடிவு செய்துள்ளது.எலோன் மஸ்க் ட்விட்டரில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிய பிறகு சுமார் 3,700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.நிறுவனத்தை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எலோன் மஸ்க் கூறியிருந்தார்.