·   ·  23 news
  • 1 members
  • 0 friends

வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதாக சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (22) வலுப்பெறுவதுடன் ,பின்னர் அது வடதிசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை நிலையம் குறிப்பிட்டுள்ளது.
22.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  • 786
  • More
Comments (0)
Login or Join to comment.