சினிமா செய்திகள்
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது.
நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’ படத்தில் நடித்தவர். மகார
மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்
உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில்
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

எங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பதும் எங்களை வெளியேற்றி வளங்கைளை கொள்ளையிடுவதையும் பேரினவாத அரசு தொடர்சியாக மேற் கொண்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

எங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பதும் நாங்கள் வாழ்கின்ற இடத்திலிருந்து எங்களை வெளியேற்றி அங்குள்ள வளங்கைளை கொள்ளையிடுவதையும்  பேரினவாத அரசு தொடர்சியாக மேற் கொண்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொன்னாவெளி பிரதேசத்தில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக சுன்னக்கல் அகழ்வு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது குறித்த பிரதேசத்தில் சுன்னக்கல் அகல் பணியை மேற்கொள்வதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை (17-03-2023) வேரவில் பகுதியில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் பொன்னாவெளி என்ற பிரதேசமானது எங்கள் மூதாதையர்கள் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்னரே ஏதோ விதத்தில் அறிந்தது போல் குறித்த பெயர் கொண்டு அழைத்துள்ளார்கள்; அதேபோல வேரவில் பிரதேசம் ஈழவூர் என்றும் அப்போது அழைக்கப்பட்டிருக்கின்றது அதுமட்டுமல்லாது புளியந்தரை போன்ற பழம்பெரும் கிராமங்களும் இருக்கின்றனஇந்த பிரதேசத்தில் இருக்கின்ற வளங்களை கொள்ளை அடிப்பதற்கு இது போன்ற பல முயற்சிகளை செய்து வருகின்றார்கள்.

யுத்தம் நடந்த போது விடுதலைப் புலிகள் எங்களையும் எமது நிலங்களையும் பாதுகாத்தார்கள் இங்குள்ள வளங்களும் பாதுகாப்பாக இருந்தது நாங்களும் மனிதர்களாக இந்த மண்ணிலே வாழ்ந்தோம் இப்போது திருகோணமலை முல்லை தீவு குச்சவெளி பகுதியிலே 36 இடங்களிலே விகாரைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதைவிட மயிலிட்டியில் தனியார் காணி ஆக்கிரமித்து அங்கே விகாரை அமைக்கப்பட்டு இருக்கின்றது நாவற்குழியில் மெருகூட்டி இருக்கின்ற விகாரைக்கு நாளைய தினம் இராணுவ தளபதி சவேந்திர சில்வா வர இருக்கின்றார்.

இதேபோல இப்போது புதிய பிரச்சினை ஒன்று உருவெடுத்து இருக்கின்றது.   நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை ஆக்கிரமிக்க முயற்சிகள் இவ்வாறு எங்கள் நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுடன் ஏற்கனவே நாங்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இருக்கின்ற வளங்களை சுரண்டும் நோக்கில் அந்த மக்களை அந்த இடங்களில் இருந்து வெளியேற்றுகின்ற வேலையையும் செய்து வருகின்றார்கள் என்றும்;  குறிப்பிட்ட அவர் நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற கட்சி நாங்கள் எங்களது மக்களுடைய விருப்புகளுக்கு மாறாக செயற்பட்டதில்லை பாரம்பரியமாக வாழ்ந்த எங்களது பூர்வீக நிலத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோரிடத்திலும் இருக்கின்றது.   பொன்னாவெளியில் சுன்னக் அகழ்வு தொடர்பில் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் யாழ் பல்கலைக்கழகமும் அக்கறை கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிறிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பூனகரி பிரதேச சபையின் உபதவிசாளர் எமிலியாம் பிள்ளை மற்றும் ஆசிரியர்கள் வேரவில் கிராஞ்சி பொன்னாவெளி ஆகிய கிராமங்களின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 244
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads