சினிமா செய்திகள்
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

எங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பதும் எங்களை வெளியேற்றி வளங்கைளை கொள்ளையிடுவதையும் பேரினவாத அரசு தொடர்சியாக மேற் கொண்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

எங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பதும் நாங்கள் வாழ்கின்ற இடத்திலிருந்து எங்களை வெளியேற்றி அங்குள்ள வளங்கைளை கொள்ளையிடுவதையும்  பேரினவாத அரசு தொடர்சியாக மேற் கொண்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொன்னாவெளி பிரதேசத்தில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக சுன்னக்கல் அகழ்வு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது குறித்த பிரதேசத்தில் சுன்னக்கல் அகல் பணியை மேற்கொள்வதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை (17-03-2023) வேரவில் பகுதியில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் பொன்னாவெளி என்ற பிரதேசமானது எங்கள் மூதாதையர்கள் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்னரே ஏதோ விதத்தில் அறிந்தது போல் குறித்த பெயர் கொண்டு அழைத்துள்ளார்கள்; அதேபோல வேரவில் பிரதேசம் ஈழவூர் என்றும் அப்போது அழைக்கப்பட்டிருக்கின்றது அதுமட்டுமல்லாது புளியந்தரை போன்ற பழம்பெரும் கிராமங்களும் இருக்கின்றனஇந்த பிரதேசத்தில் இருக்கின்ற வளங்களை கொள்ளை அடிப்பதற்கு இது போன்ற பல முயற்சிகளை செய்து வருகின்றார்கள்.

யுத்தம் நடந்த போது விடுதலைப் புலிகள் எங்களையும் எமது நிலங்களையும் பாதுகாத்தார்கள் இங்குள்ள வளங்களும் பாதுகாப்பாக இருந்தது நாங்களும் மனிதர்களாக இந்த மண்ணிலே வாழ்ந்தோம் இப்போது திருகோணமலை முல்லை தீவு குச்சவெளி பகுதியிலே 36 இடங்களிலே விகாரைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதைவிட மயிலிட்டியில் தனியார் காணி ஆக்கிரமித்து அங்கே விகாரை அமைக்கப்பட்டு இருக்கின்றது நாவற்குழியில் மெருகூட்டி இருக்கின்ற விகாரைக்கு நாளைய தினம் இராணுவ தளபதி சவேந்திர சில்வா வர இருக்கின்றார்.

இதேபோல இப்போது புதிய பிரச்சினை ஒன்று உருவெடுத்து இருக்கின்றது.   நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை ஆக்கிரமிக்க முயற்சிகள் இவ்வாறு எங்கள் நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுடன் ஏற்கனவே நாங்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இருக்கின்ற வளங்களை சுரண்டும் நோக்கில் அந்த மக்களை அந்த இடங்களில் இருந்து வெளியேற்றுகின்ற வேலையையும் செய்து வருகின்றார்கள் என்றும்;  குறிப்பிட்ட அவர் நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற கட்சி நாங்கள் எங்களது மக்களுடைய விருப்புகளுக்கு மாறாக செயற்பட்டதில்லை பாரம்பரியமாக வாழ்ந்த எங்களது பூர்வீக நிலத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோரிடத்திலும் இருக்கின்றது.   பொன்னாவெளியில் சுன்னக் அகழ்வு தொடர்பில் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் யாழ் பல்கலைக்கழகமும் அக்கறை கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிறிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பூனகரி பிரதேச சபையின் உபதவிசாளர் எமிலியாம் பிள்ளை மற்றும் ஆசிரியர்கள் வேரவில் கிராஞ்சி பொன்னாவெளி ஆகிய கிராமங்களின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 415
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads