Added a post
ஒரு முறை கிருஷ்ண பகவான் உதங்க முனிவரிடம் என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். ஒன்றும் வேண்டாம் என்றார் முனிவர். கிருஷ்ணர் வற்புறுத்தினார் நான் சுற்றிக் கொண்டே இருப்பவன். சில சமயம் தாகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. அதற்கு ஏற்பாடு செய்தால் நல்லது என்றார் உதங்கர். கிருஷ்ணர் அதை ஒப்புக்கொண்டார். அதே சமயம் ஒரு நிபந்தனையும் விதித்தார். தாகம் எடுக்கும்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கிடைக்கும். ஆனால், நான் எப்படித் தண்ணீரை அனுப்பினாலும் நீங்கள் வாங்கிக கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணர் உதங்கர் ஒப்புக் கொண்டார். நாட்கள் கடந்தன. உதங்கர் ஒரு முறை பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அவருக்குத் தாகம் எடுத்தது. பக்கத்தில் தண்ணீர் கிடைக்க வழி இல்லை. அப்போது கிருஷ்ணனை நினைத்தார்.கிருஷ்ணரின் திருவுள்ளம் தொலை தூரத்தில் இருந்தாலும் உதங்கரின் எண்ணத்தை உணர்ந்த கிருஷ்ணர் உடனே தேவேந்திரனைத் தொடர்பு கொண்டார். உதங்கருக்கு தேவாமிர்தம் தரும்படி சொன்னார். தேவேந்திரன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை மனித ரூபத்தில் உள்ளவர்களுக்கு தேவாமிர்தம் தருவதில்லையே என்றான் கிருஷ்ணரின் வற்புறுத்தலின் பேரில் சம்மதித்தான். ஆனால் என் விருப்பப்படிதான் செல்வேன் என்றான். கிருஷ்ணர் ஒப்புக் கொண்டார். இந்திரன் ஒரு புலையரின் வடிவத்தில் உதங்கரிடம் சென்றான். அழுக்கான உடல் அதைவிட அழுக்கான ஒற்றை ஆடை பஞ்சடைந்த தாடி மீசை கையில் அழுக்குப் பிடித்த ஒரு தகரக் குவளை பக்கத்தில் சொறி பிடித்த நாய், இந்தக் கோலத்தில் சென்றான். உதங்கரிடம் சென்று தகரக் குவளையை நீட்டினான். அருவருப்படைந்த முனிவர் அவனை விரட்டி விட்டார் மாற்றுருவில் வந்த இந்திரன் வற்புறுத்தினான் முனிவர் கேட்கவில்லை. இந்திரன் சென்றுவிட்டான் உதங்கருக்கு மகா கோபம், கிருஷ்ணன் இப்படிச் செய்து விட்டானே என்று வருந்தினார். எப்படியோ சமாளித்துச் சற்றுத் தொலைவில் உள்ள ஊருக்குச் சென்று தாகத்தைத் தணித்துக் கொண்டார்.கிருஷ்ணரை வேறொரு நாளில் மீண்டும் சந்தித்தார் உதங்கர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். புன் சிரிப்போடு நெருங்கிய கிருஷ்ணர் என்ன முனிவரே உங்களுக்காக இந்திரனிடம் தேவாமிர்தம் கொடுத்து அனுப்பினேன் நீங்கள் அவனை விரட்டிவிட்டீர்களே என்றார். உதங்கருக்குத் தன் தவறு புரிந்தது.உதங்கர் பெரிய தவயோகி. ஆனால் ஏன் அவரால் கிருஷ்ணர் அனுப்பிய அமிர்தத்தைக் குடிக்க முடியவில்லை. விஸ்வரூபம் காட்டிய பரந்தாமனே அனுப்பிய நீர் என்றால் யோசிக்காமல் எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? அப்படிச் செய்ய விடாமல் உதங்கரைத் தடுத்தது எது? உயிர்களிடத்தில் உயர்வு தாழ்வு பேதம் பார்க்கும் அவரது குணம் காரணம் ஒருவர் எவ்வளவு தவம் செய்கிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு சாஸ்திரங்களைப் படித்துக் கரைத்துக் குடிக்கிறார் என்பதும் முக்கியமல்ல. புறத் தோற்றம் முக்கியமல்ல தோற்றத்துக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை உணர்வதே முக்கியம். இதைத்தான் கிருஷ்ணர் உதங்கருக்கு உணர்த்தினார். உதங்கர் எவ்வளவுதான் ஞானியாக இருந்தாலும் அவருக்கு மனிதர்களிடத்தில் பேதம் பாராட்டும் தன்மை இருந்தது. தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் தன்மை இருந்தது அது இருக்கும்வரை ஒருவர் கடவுளை நெருங்க முடியாது. ஆகவே தனது மாய விளையாட்டால் இதனை உதங்க முனிவருக்கு உணர்த்தி அவரது குணத்தை மாற்றினார் கிருஷ்ணர்.
Added a post
ஒரு சிலருக்கு ஏனோ எதைத் தொட்டாலும் நஷ்டம் ஆகிக்கொண்டே இருக்கும்.எந்த தொழில் செய்தாலும் அதில் நஷ்டம் தான் கிடைக்கும். வீடு கட்ட வேண்டும் என்று ஆரம்பித்தால் அதுவும் பாதியிலே நின்று விடும் வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எல்லாம் தள்ளி போய் கொண்டே இருக்கும். கையில் உள்ள பணம், நகை எல்லாம் எப்படி போகிறது எதற்காக செலவாகிறது என்று தெரியாமல் போய்க் கொண்டே இருக்கும்.இப்படி ஆன பிரச்சினை அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு இருந்தால்......பிரச்சனைகளில் வெளிவர செய்யக் கூடிய மிக எளிய சாதாரணமான ஒரு பரிகாரம் தான் இந்த மஞ்சள் அருகம்புல் பரிகாரம்.இந்த பரிகாரத்திற்கு தேவையானது மூன்றே பொருள் தான். அருகம்புல், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் நூல்.இந்த பரிகாரத்தை செய்வதற்கு, காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்கள் பூஜை அறையில் விளக்கேற்றி உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு, இந்த மஞ்சளையும் அருகம்புல்லையும் ஒன்றாக வைத்து மஞ்சள் நிற நூலால் கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள் போதும்.எந்த ஒரு மங்கள காரியங்களிலும் இந்த மஞ்சள் இல்லாமல் இருக்காது. அதே போல் எந்த காரியம் தொடங்கினாலும் அதற்கு முழுமுதற் கடவுள் விநாயகர் அவருக்கு இஷ்டமான ஒரு பொருள் இந்த அருகம்புல் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து இப்படி வைக்கும் பொழுது உங்களின் எந்தக் காரிய தடைகளையும் இது உடைத்து விடும்.இதை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை அருகம்புல் காய்ந்து விட்டால் மட்டும் அருகம்புல்லை மாற்றி வேறு அருகம்புல் வைத்துக் கொள்ளலாம். மஞ்சள் பூச்சி உடைந்து விட்டால் மட்டும் மாற்றுங்கள் இல்லை என்றால் அதை மஞ்சளிலே வைத்து கட்டலாம் இந்த அருகம்புல்லை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள் மஞ்சளை நீங்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த எளிய பரிகாரத்தை நீங்கள் செய்து வைத்தாலே போதும் உங்களின் தடைபட்ட சுபகாரியங்கள், தொழில், வியாபாரம் அனைத்துமே சிறந்து உங்களுக்கு கை மேல் பலன் அளிக்கக்கூடிய தாக இருக்கும்.இந்த எளிய பரிகாரத்தை செய்து நீங்கள் தொடங்கும் அனைத்து காரியத்திலும் வெற்றி அடைந்து நல்ல ஒரு வளமான வாழ்க்கையை வாழுங்கள..sv
Added a post
*மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..**மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..**சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..**சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..*இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..விளக்கம் சிம்பிள்தாங்க.. மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் ஸ்தம்பித்துவிடுமாம்.மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்இப்போ, உங்க மைண்ட்வாய்ஸ் என்ன நினைக்கும் அப்படீங்கிறது நல்லாவே கேட்குதுங்க..பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்லவிட்டு நீங்கள் வேண்டுமானால் ஏதாவது ஏணியின் மீது ஏறி நின்று கொண்டு பாருங்களேன்.*மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு:*வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.*சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு:*ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர்.எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பது அதன் பொருள்.*சாமிதான் பொய்யானால் சாணம் பாரு.*இது ரொம்ப சுவாரசியமான விஷயம். நம் கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள்.ஒரு அடுப்பு பிய்ந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை #விநாயகர் என்று #உருவம் #பிடித்துவணங்குவார்கள். அதன்பிறகே அடுப்பு செய்வார்கள்.இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதில்தான் ஆச்சரியம்.விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும்.விநாயகர் என்று நாம் உருவேற்றிவிட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தைபார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதுதான் இந்த பழமொழியின் கருத்து.
Added a post
பாவங்களை போக்கி, அளவில்லாத புண்ணிய பலன்களை தரும் மாதமாக இந்த மாசி மாதம் இருக்கிறது. மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் வரும் நாளை மாசி மகம் என கொண்டாடுகிறோம். இது பல்வேறு ஆன்மிக சிறப்புக்களை பெற்ற நாளாகவும் உள்ளது. பாவங்களை போக்கி, அளவில்லாத புண்ணிய பலன்களை தரும் மாதமாக இந்த மாசி மாதம் இருக்கிறது. இந்த மாதம் பொதுவாக சில வழிபாடு செய்ய உகந்த மாதமாக சொல்லப்படுகிறது.மாசி மாதத்தில் வரும் மாசி மகம்,இந்த நாளில் தான் முருகப் பெருமான், தன்னுடைய தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக சொல்லப்படுகிறது.பாதாள உலகத்தில் இருந்து பூமியை பெருமாள், வராக அவதாரம் எடுத்து மீட்டு வந்ததும் மாசி மகம் நாளில் தான். அதனால் இந்த நாளில் சிவ பெருமான், அம்பாள், முருகப் பெருமான், பெருமாள், முன்னோர்கள், குலதெய்வம் என எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம். மாசி மகம் அன்று விரதம் இருந்து, வழிபடுவதால் சகல விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.இந்த ஆண்டு மார்ச் 12 ம் தேதி புதன்கிழமை மாசி மகம் அமைகிறது. அன்றைய தினம் அதிகாலை 03.53 மணி துவங்கி, மார்ச் 13ம் தேதி காலை 05.09 வரை மகம் நட்சத்திரம் உள்ளது. அதே போல் மார்ச் 12ம் தேதி காலை10.50 மணி துவங்கி சதுர்த்தசி திதி உள்ளதால் சிவ வழிபாடு செய்வது மிக உகந்தது. சதுர்த்தசி, சிவனுக்குரிய திதி ஆகும்.அதிகாலை 03.53 மணி துவங்கி, மார்ச் 13ம் தேதி காலை 05.09 வரை மகம் நட்சத்திரம் உள்ளது.இந்த திதியில் வழிபடுபவர்களுக்கு சிவ பெருமானின் அருளும், பாவங்களில் இருந்து விடுதலையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை இல்லாத தம்பதிகள் மாசி மகம் அன்று புனித நீராடினால் அவர்களுககு குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த மாசி மகம் நாளில் ஜென்ம பாவங்கள் தீர்க்கும் கும்பகோணம் மகாமகம் குளம் கடல், நதிகள், கோவில் குளங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றனர் கோவில் குருக்கள்.
Added a post
விநாயகர் துதிஐந்து கரத்தனை ஆனை முகத்தனைஇந்தின் இளம் பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே !முருகன் துதிமுருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்மருகனே! ஈசன் மகனே - ஒருகை முகன்தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்நம்பியே கைதொழுவேன் நான்.- திருமுருகாற்றுப்படைசிவன் துதிநமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஇமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.ஈசனடி போற்றி எந்தையடி போற்றிதேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி !- சிவபுராண வரிகள்பெருமாள் துதிபச்சைமா மலைபோல் மேனிபவளவாய் கமலச் செங்கண்அச்சுதா அமரர் ஏறேஆயர்தம் கொழுந்தே என்னும்இச்சுவை தவிர யான்போய்இந்திர லோகம் ஆளும்அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !- தொண்டரடிப்பொடி ஆழ்வார்அம்பாள் துதிநன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவதுஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளவெல்லாம்அன்றே உனதென்று அளித்து விட்டேன் அழியாத குணக்குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே.- அபிராமி அந்தாதிமகாலட்சுமி துதிஒருமால் உளமகிழ் ஒருத்தி போற்றிதிருமா மகள் நின் செவ்வி போற்றிஒருமா மணியா ஒளிர்வாய் போற்றிபிரியாது அவனுளம் பேணுவாய் போற்றிவருமாசு அகற்றுசெம் மணியே போற்றி !சரஸ்வதி துதிஆய கலைகள் அறுபத்து நான்கினையும்ஏய உணர்விக்கும் என்னம்மை - தூயஉருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளேஇருப்பளிங்கு வாரா(து) இடர்.படிகநிறமும் பவளச் செவ் வாயும்கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் – துடியிடையும்அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்கல்லும் சொல்லாதோ கவி !- கம்பர் பெருமான்தக்ஷிணாமூர்த்தி துதிதெளிவு குருவின் திருவுருக் காண்டல்தெளிவு குருவின் திருநாமம் செப்பல்தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!- திருமூலர் திருமந்திரம்அனுமன் துதிஅருள்மிகு நாமக்கல் ஆஞ்சநேயர் வடைமாலை அலங்காரத்துடன்..அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவிஅஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகிஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.- கம்பர் பெருமான்நவக்கிரக துதிவேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்மிகநல்ல வீணை தடவிமாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளிசனி பாம்பு இரண்டும் உடனேஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே.- திருஞானசம்பந்தர்திருவிளக்குத் துதிஅன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மாவந்த வினையகற்றி மகாபாக்யம் தாருமம்மாதாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்.துளசியன்னை துதிபச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தேபரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தேஅற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தேஅஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தேஹரியுடைய தேவி அழகி நமஸ்தேவனமாலையுடன் மகிழ்வாய் நமஸ்தேவைகுண்ட வாசியுங்களேன் மகிழ்வாய் நமஸ்தே !
Added a post
தமிழ்நாட்டில் திருக்கடையூர் திருத்தலம் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் வழித் தடத்தில் சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.கடவூர், திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில் வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாப விமோசன புண்ணிய வர்த்தம், பிஞ்சிலாரண்யம் என்பது உள் பட திருக்கடையூருக்கு பல புராதண பெயர்கள் உண்டு.மார்க்கண்டேயருக்காக இத்தலத்து ஈசன், எமனை உதைத்து தள்ளியதால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.பிரம்மன் இத்தலத்தில் உபதேசம் பெற்றார்.ஆதியில் இத்தலத்தின் தல விருட்சமாக வில்வம் இருந்தது. தற்போது மார்க்கண்டேயரால் நடப்பட்ட பிஞ்சில மரம் (சாதி மல்லிப் பூ மரம்) தல விருட்சமாக உள்ளது.இத்தலத்தில் அமிர்த தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.திருமால், பிரம்மன், மார்க்கண்டேயர், அகத்தியர், எமன், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, ஏழு கன்னிகள் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.குங்குலிய கலய நாயனார், காரி நாயனார் இருவரும் இத்தலத்தில் வாழ்ந்து பல அற்புதங்கள், சேவைகள், திருப்பணிகள் செய்தனர்.அப்பர், சுந்தரர் இருவரும் ஒரு சேர எழுந்தருளி, இறைவனை தொழுது குங்கிலிய நாயனாரின் திருமடத்தில் தங்கி இருந்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன.மார்க்கண்டேயர் இறையருள் பெற்ற 108 தலங்களில் இது 108வது தலமாகும். அமிர்தகடேசுவரரை கண்ட பிறகு அவர் வேறு எங்கும் செல்லவில்லை.பூமாதேவி இத்தலத்தில்தான் முழுமையான அனுக்ரகம் பெற்றுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது.சதாபிஷேகம், கனகாபிஷேகம், ஆயுள் ஹோமம், ம்ருத்யுஞ்ச ஹோமம், உக்ரக சாந்தி, பீமரத சாந்தி ஆகியவை செய்ய தமிழ்நாட்டில் இத்தலம் மட்டுமே 100 சதவீதம் ஏற்ற தலமாக உள்ளது.இத்தலத்தில் நடக்கும் பெரிய விழாக்களில் கார்த்திகை மாதம் நடக்கும் சோமவார விழா மிகவும் சிறப்பானது. சோமவாரத்தில் 1008 சங்கா பிஷேகம் நடப்பதை காண கண் கோடி வேண்டும் என்பார்கள்.திருக்கடையூர் தலத்தையும், ஊரையும் சோழ, பாண்டிய மற்றும் விஜய நகர மன்னர்கள் செப்பணிட்டு சீரமைத்து ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர். அது பற்றிய குறிப்புகள் ஆலயம் முழுவதும் உள்ள 54 கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது.சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி வீடு திருக்கடையூரில் தேரோடும் வீதியில் அமைந் திருந்ததாக பாடல்கள் உள்ளன. ஆனால் இப்போது மாதவி வாழ்ந்த வீடு என்று எந்த ஒரு வீட்டையும் சுட்டிக்காட்ட இயலவில்லை.திருக்கடையூர் அமிர் தகடேசுவரர் ஆலயம் திரா விட கட்டிடக்கலையை பின் பற்றி கட்டப்பட்டுள்ளது.தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இந்த தலம் 47வது தலமாக போற்றப்படுகிறது.திருக்கடையூர் ஆலயம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.மிகச் சிறந்த பரிகாரத் தலமான திருக்கடையூர் தலத்தை 04364-287429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்திருக்கடையூர் கோயிலில் வழிபடுவது எப்படி?பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பி கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, இத்தலம் வந்து சிவனை வணங்கினார்.சிவன் அவருக்கு காட்சி தந்து, ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆதி வில்வ வனநாதராக தனிசன்னதியில் அருளுகிறார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு அமிர்தகடம் வந்தது முதல் ஈசன் அமிர்தகடேசுவரர் என்றும் பெயர் பெற்றார்.திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை.புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும்.
Added a post
குதிரை முகமும், மனித உடலும் கொண்டு உருவானவர் ஹயக்ரீவர். இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவர் கல்வித் தெய்வமாகக் குறிப்பிடபடுகின்றார். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை.அவதாரக் காரணம்பிரம்மாவிடம் இருந்த வேதங்களை மது ,கைடபன் என்ற அசுரர்கள் பறித்துக் கொண்டு பாதாள லோகத்திற்கு சென்று விட்டனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர் .அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். அந்த உருவமே ஹயக்ரீவர். மது , கைடபனும் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார் ஹயக்ரீவர்.லட்சுமி ஹயக்ரீவர்மது, கைடபனுடன் போரிட்டு அவர்களை அழித்தப்பிறகும் ஹயக்கீரீவருக்கு உக்கிரம் தணியாததால், லட்சுமி தேவியை அவர் மடியில் அமரச்செய்தனர் தேவர்கள். இத்திருவுருவத்திற்கு 'லட்சுமி ஹயக்ரீவர் ' என்று பெயர். ஹயக்ரீவருக்கு கல்வி கருவாக அமைந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும், லட்சுமி உடனாருப்பதால் செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்ரீவர் வணங்கப்படுகிறார்.ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையான வரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்ரீவரை வணங்குகிறேன் என்னும் பொருளுடைய ஸ்தோத்திரம்." ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸாமஹே"மாணவ மாணவியர் ஹயக்ரீவ மந்திரங்களை ஓதி, கல்வித் தெய்வமான ஹயக்ரீவரை வணங்கி வெற்றி பெற வாழ்த்துகள்.
Added a post
பாம்பாட்டிச் சித்தரும் பிறக்கும் போது சித்தராகப் பிறக்கவில்லை. பிறக்கும்போது எல்லோரும் சாதாரணம்தான். வளர்ப்பும் வழிகாட்டுதலுமே ஒருவரை உயர்ந்த இடத்துக்கோ, தாழ்ந்த இடத்துக்கோ கொண்டு செல்கின்றன. இந்த பாதிப்பின் காரணமாகத்தான் சிறு வயதில் நல்ல விஷயங்கள் போதிக்கப்படுகின்றன. பாம்பாட்டியும் அப்படிதான்.திருக்கோகர்ணம் திருத்தலத்தில் ஒரு கார்த்திகை மாதம் மிருகசீரிஷ நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் மிதுன ராசியில் பிறந்தவர் பாம்பாட்டிச் சித்தர் என்று கூறப்படுகிறது. இவரின் தந்தை, பார்வை இல்லாதவர் என்கிற குறிப்பும் சொல்லப்படுகிறது. பிறக்கும்போதே கழுத்தில் மாலை சுற்றிப் பிறந்தார். ஜோகி எனப்படும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர் பிழைப்புக்காக பாம்புகளை உயிருடன் பிடித்தோ அல்லது கொன்றோ , இதை வாங்குவதற்கென்றே இருக்கும் வைத்தியர்களிடம் விற்று வந்தார். பாம்புகளின் பாஷை அறிந்தவர். இப்படிப் பாம்புகளைத் தேடி பாண்டிய நாட்டு காடுகளிலும் மருதமலைக் காடுகளிலும் (இன்றைய மருதமலை அமைந்திருக்கும் பகுதி) நேரம் காலம் பார்க்காமல் சுற்றி திரிவது இவரது வழக்கம். பாம்புகளின் விஷத்தை அசாதாரணமாக அருந்தியவர் பாம்பாட்டி என்பதை போகர் பெருமான் தனது பாடலில் சொல்லி இருக்கிறார். அதோடு, இவரது பிறப்பைப் பற்றிச் சொல்லும் போகர். தாயான பாம்பாட்டி சித்தரப்பா தரணியில் நெடுங்கால மிருந்தசித்து காயான முப்பழமும்பாலுங் கொண்ட கலியுகத்தில் நெடுநாளா யிருந்தசித்து என்கிறார். அதாவது கிடைத்தற்கரிய விசேஷமான கனிகளை உண்டும் ஞானப் பால் அருந்தியும் தன் சித்துத் திறமையால் பல காலம் தரணியில் வாழ்ந்தவர் என்று சொல்கிறார் போகர். ஆரம்பத்தில், மிகவும் மூர்க்கனாக இருந்தார் பாம்பாட்டி, கொடிய வகை பாம்புகளை-பயம் அறியாமல்-மிகுந்த லாகவமாகப் பிடித்து அவற்றைக் கொன்றார்.இவரது இயற்பெயர் தெரியவில்லை. செடிகளும் கொடிகளும் மண்டி வளர்ந்த அடர்ந்த வனத்துக்குள் அநாயாசமாக நுழைவார். பாம்புகளைத் தேடி அலைவார். இவரை நம்பியே பல வைத்தியர்கள் அப்போது இருந்தனர். இன்ன வைத்தியத்துக்காக இந்த வகை பாம்பின் விஷம் தேவைப்படுகிறது. என்கிற கோரிக்கை அவர்களிடம் இருந்து வந்ததும் அதற்கான தேடல் துவங்கிவிடும். கொடிய நச்சு கொண்ட பாம்புகளின் விஷம். எந்தெந்த வியாதியை முறியடிக்கும் தன்மை கொண்டது என்பதையும் இவர் அறிந்து வைத்திருந்தார். இதனால், சில நேரங்களில் பாம்பாட்டிச் சித்தரே ஒரு வைத்தியராகச் செயல்பட்டதும் உண்டு. இவரிடம் சிகிச்சைக்காக வந்தவர்களும் ஏராளம். ஒரு முறை சில வைத்தியர்கள் பாம்பாட்டிச் சித்தரை அவரது இருப்பிடம் தேடி வந்து சந்தித்தார்கள். சரி.... தனக்குப் புதிதாக ஒரு வேலை வரப் போகிறது... அதன் மூலம் நிறைய பணம் கிடைக்கும். என்கிற சந்தோஷத்தில், வாருங்கள் வைத்தியர்களே... உங்களுக்கு ஏதாவது பாம்பு வேண்டுமா? எந்த வகை பாம்பு வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் விருப்பத்துக்கேற்றபடி அதை உயிருடனோ, அல்லது சாகடித்தோ கொண்டு வருகிறேன். என்றார் உற்சாகமாக. ஐயா பாம்பின் பாஷை அறிந்தவரே.... நவரத்தினம் போல் ஜொலிக்கக்கூடிய பாம்பு ஒன்று இருக்கிறது. கொஞ்சம் குறைவான உயரத்தில் இருக்கும் அந்தப் பாம்பின் தலையில் ஒரு மாணிக்கக் கல் காணப்படும். அந்தப் பாம்பின் விஷம் எங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. உயிர் காக்கும் பல நோய்களைத் தீர்க்கக்கூடிய வலிமை அந்த விஷத்துக்கு உண்டு. அதனால்தான் உன்னைத் தேடி வந்தோம் என்றனர். அந்தப் பாம்பின் விஷம் மட்டும் போதுமா? ஏதோ, மாணிக்கக் கல் என்று சொன்னீர்களே.... அதையும் எடுத்து வரவேண்டுமா? என்று சவாலாகக் கேட்டார் பாம்பாட்டிச் சித்தர். விஷம்தான் எங்களுக்கு முக்கியம். முடிந்தால், அந்த மாணிக்கக் கல்லையும் கொண்டு வா. அதற்கும் ஒரு நல்ல விலை போட்டுக் கொடுத்துவிடுகிறோம் என்றனர் பேராசைக்காரர்களான அந்த வைத்தியர்கள். நீங்கள் கேட்ட அனைத்தும் நாளை காலை உங்களிடம் இருக்கும் சந்தோஷமாகப் போய் வாருங்கள் என்று அவர்களை அனுப்பி வைத்தார் சித்தர். இரவு வேளையில்தான் இத்தகைய பாம்புநடமாடும் என்பதை அறிந்த பாம்பாட்டிச் சித்தர். அன்று இரவில் வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு, நவரத்தினப் பாம்பை வேட்டை யாடுவதற்காகப் புறப்பட்டார். இறைவன், பாம்பாட்டிச் சித்தரை ஆட்கொள்ளத் தீர்மானித்தது இந்தத் தினம்தான். சோதனைகளை முதலில் தந்தான் இறைவன். எத்தனையோ பாம்புப் புற்றுகளைத் தரைமட்டம் ஆக்கியும், குறிப்பிட்ட அந்தப் பாம்பு சிக்கவே இல்லை. முதலில் சலித்துப் போன பாம்பாட்டிச் சித்தர், தன் முயற்சியில் இருந்து கொஞ்சமும் துவளாமல், அடுத்தடுத்து காட்டில் பயணிக்கலானார். அப்போது வித்தியாசமான ஒரு புற்று அவரது கண்களில் பட்டது. ஒருவேளை நவரத்தினப் பாம்பு ஓய்வெடுக்கும் புற்று இதுவாக இருக்குமோ என்ற எண்ணத்தில், தன் கையில் இருந்த ஆயுதத்தால், இடிக்க முற்பட்டபோது அந்த விநோதம் நிகழ்ந்தது. திடீரென யாரோ ஒருவர் வனமே அதிரும்படி சிரிக்கும் பேரோசை கேட்டது.பாம்புப் புற்றை இடிக்கும் தன் முயற்சியைச் சட்டென நிறுத்திவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தார் பாம்பாட்டிச் சித்தர். உருவம் எதுவும் புலப்படவில்லை. ஆனால் கண்களைக் கூச வைக்கும் பேரொளி ஒன்று அவர் முன் தோன்றியது. கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தார். பாம்பாட்டிச் சித்தரின் முன்னே-தேஜஸான உடல்வாகுடன்-பிரகாசிக்கும் கண்களுடன்-ஜடாமுடிதாரியாக சித்த புருஷர் ஒருவர் பிரசன்னமானார். பாம்பாட்டிச் சித்தர் திகைத்துப் போனார். யார் நீங்கள்? எதற்குமே பயப்படாத என்னை உங்களது சிரிப்பு நடுங்க வைக்கிறது. என் பணியின்போது ஏன் குறுக்கிடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டார்.எனக்கு நீதானப்பா வேண்டும் என்று ஆரம்பித்த அந்த சித்த புருஷர், பாம்புகளை இப்படிப் பிடித்து வதைக்கிறாயே... உனக்கு அதில் என்னப்பா சந்தோஷம்? என்று கேட்டார். என்ன அப்படி கேட்கிறீர்கள்? இந்தத் தொழில்தான் எனக்கு சோறு போடுகிறது. சந்தோஷம் தருகிறது. விதம் விதமான பாம்புகளைத் தேடித் தேடிப் பிடிக்கும்போது எனக்குள் ஒரு உற்சாகம் தோன்றுகிறது என்று எதிரில் நிற்பவர் யார் என்றே அறியாமல், அப்பாவியாகப் பேசிக் கொண்டிருந்தார் பாம்பாட்டிச் சித்தர். இருக்கப்பா..... இதை விட உயர்ந்த தொழில் இருக்கிறது. வீரம் மட்டுமே வாழ்க்கை அல்ல. விவேகமும் உன்னிடம் இருக்க வேண்டும். ஒன்றும் அறியாத இந்தப் பாம்புகளை வேட்டை ஆடுகிறாயே... உனக்குள்ளும் பாம்பு இருக்கிறது. அதை என்றாவது உணர்ந்தாயா நீ? என்று கேட்டார் சித்தர் புருஷர். என்னது.... எனக்குள்ளும் ஒரு பாம்பா? என்னய்யா தாடிக்காரரே ... கதை விடுகிறீர்? மனிதனுக்குள் எப்படிப் பாம்பு வசிக்க முடியும் ? - பாம்பாட்டிச் சித்தர். இருக்கிறது பிடாரனே... அதை நீ தேட முயற்சிக்க வேண்டும், அதற்கு தியானம் கைகூட வேண்டும். ஐயா..... உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குள் எதோ மாற்றம் தெரிவதாக உணர்கிறேன். இதுவரை நான் செய்து வந்த தொழிலே எனக்கு அருவருப்பாகத் தோன்றுவது போல் இருக்கிறது. எனக்குள் இருக்கும் பாம்பு என்ன என்பதை சற்று விளங்கச் சொன்னால் மகிழ்வேன். உனக்குள் மட்டும் இல்லையப்பா. இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் அந்தப் பாம்பு இருக்கிறது. உன்னை யார் என்று உணரும் வேளை வந்துவிட்டது. சதையும் திரவமும் நிறைந்த இந்த மனித உடம்பு, இறைவனின்அற்புதமான படைப்பு. இதற்குள் ஒரு பாம்பு தலைகீழாகத் தொங்கிக் கிடக்கிறது. அடங்கிக் கிடக்கிறது. அதன் பெயர் குண்டலினி. உடலின் சுவாசத்தைக் கட்டுப்படுத்து. இறைவனை நினைத்து தவம் செய்தால், உன் சுவாசம் உன் கட்டுக்குள் வரும். சுவாசம் ஒடுங்கும் வேளையில் குண்டலினி என்கிற அந்தப் பாம்பு புத்துயிர் பெறும். நீ நினைத்தபடி எல்லாம் அதை ஆட்டி வைக்கலாம். இதில் கிடைக்கிற பரமானந்தத்தை ஒரு முறை உணர்ந்து பாரேன். உலகம் எவ்வளவு விந்தையானது.... அதி அற்புதமானது என்பதை நீயே உணர்வாய். இதில் கிடைக்கிற ஆனந்தத்தை இது வரை நீ அனுபவத்திருக்க மாட்டாய் என்று ஒரு சீடனுக்குச் சொல்வதைப் போல் அந்த சித்த புருஷர் சொல்ல... உடல் லேசாகிப் போனார் பாம்பாட்டிச் சித்தர்.அடுத்த கணமே படாரென அவரது கால்களில் வீழ்ந்தார் பாம்பாட்டிச் சித்தர். மகா புருஷரே... எனக்குத் தெளிவை ஏற்படத்திவீட்டீர்கள். உங்கள் வார்த்தைகளின் மகத்துவம் இப்போதே என்னைப் பரவசம் கொள்ள வைக்கிறது. தாங்கள் காட்டிய வழியில் என் பயணம் தொடரும் என்று கம்பீரமாகச் சொன்ன பாம்பாட்டிச் சித்தர். பாம்புப் புற்றுகளை இடிப்பதறகாகத் தான் வைத்திருந்த ஆயுதங்களையும் பாம்புகளைச் சேகரிக்கத் தான் வைத்திருந்த கூடைகளையும் தூக்கி எறிந்தர். சபாஷ் இளைஞனே.... இனி. நீ காணப் போகும் உலகமே அலாதியானது. உன்னைத் தேடிப் பலரும் கூடுவர். நல்லவர்களுக்கு நன்மை செய். அல்லாதவர்களை உன்னிடம் அண்ட விடாதே என்று சொல்லி மறைந்தார் சித்த புருஷர். சட்டை முனி தனக்குச் சொல்லி அருளியபடி. குண்டலினியை உணரும் தவம் துவங்கினார் பாம்பாட்டிச் சித்தர். அடுத்து வந்த நாட்களில் அவரது தேகம் மெள்ள மெள்ள பொலிவு பெறத் துவங்கியது. குண்டலினியின் சக்தியை அறிந்தர். மாபெரும் சித்திகள் அவரிடம் கூடின. மண்ணை அள்ளினார்; பொன் துகள் ஆனது. கற்களை எடுத்தார்; நவரத்தினமாக ஜொலித்தது. இரும்பைத் தொட்டார்; தங்கமாக மின்னியது. ஆசை, அறவே ஒழிந்து போனது. தங்கத்தையும் நவரத்தினங்களையும் அல்லல் படும் மாந்தர்களிடம் அளந்து கொடுத்தார். சோம்பேறிகளுக்கு உபதேசம் செய்தார். பேராசையோடு தன்னிடம் வந்தவர்களை, சட்டைமுனியின் சொற்படி துரத்தி அனுப்பினர். காசுக்காக பாம்புகளைப் பிடித்து வந்த இளைஞன் சித்தராக-பாம்பாட்டிச் சித்தராக ஆன கதை இதுதான். எண்ணற்ற சித்து விளையாட்டுகள் மூலம், அகிலத்தையே தன் பக்கம் திருப்பிய பாம்பாட்டிச் சித்தர் ஒரு முறை ஆகாய மார்க்கமாகப் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஓர் அழுகுரல் அவரைத் திசை திருப்பியது. ஒரு தேசத்து மகாராணியின் ஓலம் அது.தரை இறங்கியபோது அந்த நாட்டின் மகாராஜா இறந்து விட்டதை அறிந்தார். மகாராணி உட்பட தேசத்து பிரஜைகள் அனைவரும் அங்கே கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அங்கே ஒரு சித்து விளையாடல் நிகழ்த்த விரும்பினார் பாம்பாட்டிச் சித்தர். இறந்து கிடந்த மகாராஜாவின் உடலில் தன் உயிரைச் செலுத்தினர். அதாவது கூடு விட்டுக் கூடு பாய்ந்தார். பிறகென்ன... செத்துப் போன மகாராஜா, சிரித்தபடியே எழுந்து உட்கார்ந்தார். ராணி உட்பட பிரஜைகள் அனைவரும் அதிர்ந்தனர். இந்த வேளையில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம். வாழ்வின் தத்துவத்தையும் வாழ்க்கை நெறியையும் பலருக்கும் உணர்த்தும் விதமான ஆடு பாம்பே.....ஆடு பாம்பே என்கிற முடிவு வரிகளைக் கொண்ட பாடல்கள் அப்போது பிறந்தன. சாதாரணமாக இருந்த - தன் கணவரான மகாராஜா - திடீரென எப்படிக் கவிதை மழையாகப் பொழிகிறார் என்று சந்தேகப்பட்ட மகாராணிக்கும் உண்மையை உணர்த்தி. அவர்கள் அனைவரும் தெளிவுறும்போது. நிழல் நிஜமானது அரசர் சரிந்து விழுந்தார். அரசனுக்குள் அதுவரை இருந்த பாம்பாட்டி, மகாராணிக்கு உபதேசம் செய்து வைத்து அங்கிருந்து அகன்றார். மிகவும் பிரபலமான நாதர்முடி மேலிருக்கும் நாகப்பாம்பே நச்சுப்பை வைத்திருக்கும் நல்லபாம்பே பாதாளத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே பாடிப் பாடி நின்று விளையாடு பாம்பே என்ற பாடல் பாம்பின் சிறப்பு என்ற தலைப்பில் இவர் எழுதியதுதான்.தவிர கடவுள் வணக்கம். குரு வணக்கம், சித்தர் வல்லபங் கூறல், சித்தர் சம்வாதம், பொருளாசை விலக்கல், பெண்ணாசை விலக்கல், சரீரத்தின் குணம் அகப்பற்று நீக்கல் போன்ற தலைப்புகளில் எல்லாம் பாம்பைச் சம்பந்தப்படுத்தி இவர் எழுதிய பாடல்கள் பிரபலம். சித்தர் ஆரூடம், வைத்திய சாத்திரம் உட்பட பல நூல்களையும் இவர் எழுதி உள்ளார். பல அற்புதக் கலைகளையும் சித்த ரகசியங்களையும் அறிந்து வைத்திருந்த பாம்பாட்டிச் சித்தர் தனது 163 ஆவது வயதில் சமாதி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சமாதி கொண்ட இடம் விருத்தாசலம் என்றும் துவாரகை என்றும் மருதமலை என்றும் பல தகவல்கள் இருந்தாலும் சங்கரன்கோயிலில் புளியங்குடி சாலையில் இவர் சமாதி ஆனார் என்கிற தகவலே பலராலும் ஊர்ஜிதமாகச் சொல்லப்படுகிறது, மருதமலை கோயிலில் பாம்பாட்டிச் சித்தரின் சன்னிதியிலும் இதே தகவல் காணப்படுகிறது. பாம்பாட்டிச் சித்தரோடு மருதமலை அதிக அளவில் சம்பந்தப்பட்டிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. என்னவென்றால், மருதமலையில் இவர் வாழ்ந்த காலம் அதிகம். இதை உறுதி செய்வது போல் பாம்பாட்டிச் சித்தர் மருதமலையில் தவம் செய்த குகை, குகைக்குள் இருந்து ஆதி மூலஸ்தானம் சென்று முருகப் பெருமானை வழிபடுவதற்கு இவர் ஏற்படுத்திய சுரங்கம். இவர் உருவாக்கிய சுனை போன்றவையும் இன்றளவும் இருக்கின்றன. பாம்பாட்டிச் சித்தர் இன்றும் கூட அரூபமாக (உருவமற்ற நிலையில்) இந்தச் சுரங்கம் வாயிலாக முருகப் பெருமானின் கருவறை சென்று அவரை பூஜித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. உள்ளிருக்கும் குண்டலினி என்கிற பாம்பை மேலெழுப்பு என்று இவருக்கு சட்டைமுனி அறிவுரை கூறியதை நினைவுபடுத்தும் விதமாக படமெடுத்து ஆடும் ஒரு பாம்பின் வடிவில், இயற்கையாக அமைந்த ஒரு கற்பாறையும் (சுயம்பு) இவரது சன்னதியில் இருக்கிறது. மருதமலை முருகனைத் தரிசித்து விட்டு, பிராகார வலம் வரும்போது இடப்பக்கம் செல்லும் படிகளில் கீழிறங்கிச் சென்றால், பாம்பாட்டிச் சித்தரின் சன்னதியை நாம் தரிசிக்கலாம். இந்த சன்னிதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் யோகியார் ஒருவர் வரைந்த பாம்பாட்டிச் சித்தரின் படம் இருக்கிறது. தவிர நந்திகேஸ்வரருடன் கூடிய சிவலிங்கம். பாம்பாட்டின் கல் விக்கிரகம், நாகராஜாக்கள் சூழ சன்னிதி நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வைக்கப்படும் முட்டை மற்றும் பால் போன்றவற்றை ஒரு சர்ப்பம் பலர் கண்களிலும் படாமல் வந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறதது. சில நேரங்களில் சிலரின் கண்களுக்கு இது தட்டுப்படும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்கே சிறப்பான வழிபாடுகள் நடக்கின்றன. பாம்பாட்டிச் சித்தருக்கு வழிபாடுகள் செய்ய விரும்புவோர் மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலைத் தொடர்புகொள்ளலாம். பாம்பாட்டிச் சித்தர் சன்னிதியின் முன் பலரும் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். இங்கே செய்யக்கூடிய முறையான தியானம், நம் பித்ரு தோஷத்தையும் அகற்றக்கூடியது என்கிறார் இங்கு பூஜை செய்யும் சிவாச்சார்யர். தாய் தகப்பனாரையும் நம் முன்னோர்களையும் நினைத்து இங்கே தவம் செய்வது விசேஷம். தவிர குழந்தை பேறு இல்லாமை, திருமண தோஷம், நாக தோஷம் போன்றவற்றுக்கும் இங்கே வழிபட்டால் நல்ல பலன் உண்டு. இதற்காக பல வெளியூர்களில் இருந்து பக்தர்கள் இங்கே வருகிறார்கள் என்றார். மருதமலைக்குச் செல்லுங்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் தரை மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் இருக்கிறது கோயில். மலைக்கு மேல் பயணிக்க திருக்கோயில் சார்பாகப் பேருந்து வசதி உண்டு.
Added a post
அன்னை பராசக்தியின் போர் படைத்தளபதியாக வாராஹி உள்ளதால், வாராஹியை வழிபடுபவர்களுக்கு மூன்று உலகங்களிலும் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்பது ஆன்றோரின் வாக்கு.ராஜராஜ சோழனுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய தெய்வமாக வாராஹியே விளங்குகிறாள். மற்ற கோவில்களில் எந்த விழாக்கள், உற்சவங்கள் துவங்கினாலும் முழு முதற் கடவுளான விநாயகருக்கு தான் முதல் பூஜை நடைபெறும்.ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் முதல் பூஜை வாராஹிக்கே நடத்தப்படும் மரபு காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.வாராஹி அம்மனை வழிபட நினைப்பவர்கள் மனதில் எந்த விதமான தீய எண்ணங்களும் இல்லாமல், மன தூய்மையுடன் தொடர்ந்து, வாராஹிக்கு உரிய மந்திரங்களை சொல்லி தினமும் மனமுருக வழிபட்டு வந்தால் அவளின் பரிபூரண அருள் கிடைக்கும்.வீட்டில் வாராஹியின் படம் அல்லது விக்ரஹம் வைத்து வழிபட நினைப்பவர்கள் வடக்கு நோக்கி, வாராஹியின் முகம் இருக்கும் படி அமைத்து வழிபட வேண்டும். வாராஹிக்கு உரிய திசையாக வட திசை கருதப்படுகிறது.வாராஹியை வழிபட வேண்டியவர்கள் :27 நட்சத்திரங்களில் கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்கள் பிறந்தவர்கள் வாராஹி அம்மனை வழிபட வேண்டும்.அதே போல் 12 ராசிகளில் மகரம், கும்பம் ராசிகளை சேர்ந்தவர்களும் வாராஹியை வழிபட கஷ்டங்கள் என்பது அவர்களை அண்டாது. மேலும், சனி ஆதிக்கம் உள்ளவர்கள், சனி திசை நடப்பவர்களும் வாராஹியை வழிபட வேண்டும்.
Added a post
ராமாநுஜர் ஆற்றில் குளிக்கச் செல்லும்போது நடப்பதற்கு சிரமமாக இருந்ததால், பிராமண சீடர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு நடந்து செல்வார்.ஆனால், குளித்துவிட்டு கோயிலுக்குப் போகும் போது மறந்தும் அவர்கள் தோளில் கை போட்டுக்கொண்டு நடக்க மாட்டார்.தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த உறங்காவில்லியின் தோளில் கை போட்டபடியே மகிழ்ச்சியோடு நடந்துசெல்வார்.ராமாநுஜரின் இந்தச் செயல் அந்தணச் சீடர்களுக்குப் பிடிக்கவில்லை.ஒரு நாள் வேண்டுமென்றே ராமாநுஜர் குளித்து விட்டு வரும் சமயம் உறங்காவில்லியை வரவிடாமல் அவர்கள் தடுத்து விட்டனர்.பிராமண சீடர்கள் ஓடிப் போய் ராமாநுஜருக்குத் தோள் கொடுத்தனர்.ராமாநுஜர் தனது மேல் துண்டை, தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி சீடர்களின் தோள் மேல் போட்டு அதன் மீது கை வைத்து நடந்தார்.‘ஈரத்துணியை ஏன் எங்கள் மேல் போட்டீர்கள்? என்று அவர்கள் கேட்டதும், “ உங்களைத் தொட்ட தீட்டு வராமல் இருக்கத்தான். இப்படிச் செய்தேன்” என்றார்.“தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த உறங்காவில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை. உயர்ந்த ஜாதியில் பிறந்த எங்களைத் தொட்டால் தீட்டு வருமா?” என்று குமுறினர்.“உயர்ந்த ஜாதி என்கிற அகம்பாவம் உங்களுக்கு இருக்கிறது. உங்களைத் தொட்டால் அது எனக்கு வந்துவிடும்.உறங்காவில்லிக்கு அந்த அகங்காரம் இல்லை. அடக்கமும் பண்பும் அவனிடம் உள்ளது. அவனைத் தொட்டால் எனக்கு அந்த அடக்கம் வரும் அல்லவா? என்று முகத்திலடித்தாற் போல் கூறிவிட்டு நடந்து சென்றார்.இத்தனைத் துணிச்சலுடனான செயலை அவர் 1000 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார் என்றால், அதனால்தான் அவர் எம்பெருமானார் என அழைக்கப்படுகிறார்.எல்லோருடைய அன்புக்கும் காரணமாக இருப்பதால் அவர் எம்பெருமனார்.
Added a post
கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய ஆலயம் "திருச்சேறை"ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற்பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.இச்சந்நதியின் முன் நின்று கூறை உவந்தளித்த கோவேயென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்."பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னைவருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே."திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு, மிக்க செல்வத்தை உடைய, இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய, பெருமான் அவளை திருமணம் செய்து கொண்டு, தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டார்.
Added a post
மார்கழி மாதம் பீடை மாதம் என்று தவறாக கூறுவர் .பீடுடைய மாதம் என்றே சொல்ல வேண்டும். அதாவது மார்கழி மாதமானது தேவர்களுக்கு அதிகாலையான பிரம்ம முகூர்த்த மாதமாகும். இதனால், மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக இருக்கிறது. மார்கழி மாதத்தை வழிபாட்டுக்குரிய மாதமாக ஒதுக்க வேண்டும். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று பகவான் மஹாவிஷ்ணு கூறியுள்ளார். மார்கழி தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதேநேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆண்டாள் இம்மாதம் முழுவதும் விரதம் இருந்துதான் பெருமாளை கணவனாக அடையும் பெருமையைப் பெற்றாள்.மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வாசல் தெளிப்பது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். அதிகாலையில் வெளியே வருவதால் அந்த காற்றும் கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.மார்கழி மாதத்தில்தான் சிவனுக்காக திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காக தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் இடம் பெறுகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வரவேண்டும். அவனோடு சேர்ந்து சிவனை தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவை நோன்பின் நோக்கம்.மார்கழி மாதம் அதிகாலை வேளையில் நடைபெறும் வழிபாடுகளில் முக்கியமானது பஜனை. தொன்று தொட்டு நடைபெறும். இந்தச் சம்பிரதாய பஜனை மிகவும் சிறப்பானது. இதில் மிருதங்கம், வயலின், ஹார்மோனியம், கஞ்சிரா, புல்லாங்குழல், மோர்சிங் போன்ற வாத்தியங்கள் இசைக்கப்படும். தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருப்புகழ், அபிராமி அந்தாதி, திருவருட்பா மற்றும் சமயப் பெரியவர்களின் கீர்த்தனைகளில் இருந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அடியார்கள் பாடுவார்கள்.\மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வாசலில் கோலம் போடுவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடைபெறும். பசுஞ்சாண உருண்டையில் பூசணி பூவை செருகி கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும்.சில வீடுகளில் அந்த பூ உருண்டையை வரட்டியாக தட்டி சேகரித்து பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள். மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன.
Added a post
வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்கள் பலரும் ஏதாவது ஒரு காரியம் நல்லவிதமாக நடைபெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அந்த காரியத்தை செய்வதற்காக வீட்டை விட்டு வெளியே செல்வார்கள். அந்த சமயத்தில் யார் வருகிறார்கள்? சகுனம் நன்றாக இருக்கிறதா? இவர்களை பார்த்துவிட்டு சென்றால் இந்த காரியம் வெற்றி அடையும் என்று பலவிதமான விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். இன்னும் சிலரோ தங்களுக்கு பிடித்தமான தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு அந்த தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு இந்த காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு செல்வார்கள். இப்படி செல்லும் பொழுது அந்த வேண்டுதலோடு மட்டை தேங்காய் வழிபாட்டையும் சேர்த்து செய்தால் அந்த காரியம் வெற்றி அடையும். அந்த மட்டை தேங்காய் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.மட்டைத் தேங்காய் வழிபாடு:ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்று ஒன்று இருக்கும். குலதெய்வம் தெரியாதவர்களும் இருப்பார்கள். ஆனால் அனைவருக்குமே இஷ்ட தெய்வம் என்ற ஒரு தெய்வம் இருக்கும். சதா சர்வ காலம் நம்மை அறியாமலேயே நம்முடைய வாயிலிருந்து ஒரு தெய்வத்தின் பெயர் வந்து கொண்டே இருக்கும். அந்த தெய்வம்தான் இஷ்ட தெய்வம். அந்த தெய்வத்தின் அருளை பெற்று நாம் செல்லக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியம் வெற்றி அடையும். அப்படி அந்த இஷ்ட தெய்வத்தின் அருளை பெறுவதற்கு உதவுவதுதான் மட்டை தேங்காய் வழிபாடு.சுப நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு வீட்டை விட்டு கிளம்பினாலோ அல்லது ஒரு வேலை நிமித்தமாக செல்வதாக இருந்தாலோ அல்லது தொழில் ரீதியாக ஒரு முக்கியமான பேச்சு வார்த்தைக்கு செல்வதாக இருந்தாலோ அல்லது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் மனை வாங்க வேண்டும் அதற்காக செல்கிறோம் என்றாலோ இப்படி நம்முடைய வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடைபெறுவதற்காக நாம் வீட்டை விட்டு வெளியே செல்வோம். அவ்வாறு செல்வதற்கு முன்பாக வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபாடு செய்வோம். அப்படி குலதெய்வத்தை வழிபாடு செய்வதோடு நம்முடைய இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்வோம்.அப்படி இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யும்பொழுது இந்த மட்டை தேங்காயை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு ஒரு மட்டை தேங்காய் ஒன்று வேண்டும். அதை சுத்தம் செய்து அதற்கு ஒரே ஒரு இடத்தில் மஞ்சளை வைத்து அதற்கு மேல் குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதை உங்களுடைய இரண்டு கைகளிலும் வைக்க வேண்டும். இப்பொழுது உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் பெயரைக் கூறி இஷ்ட தெய்வத்தின் மந்திரம் ஏதாவது தெரியும் என்றால் அந்த மந்திரத்தையும் கூற வேண்டும். பிறகு என்ன காரியமாக நீங்கள் வீட்டை விட்டு செல்கிறீர்களோ அந்த காரியத்தை சொல்லி அது வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.பிறகு அந்த தேங்காயை இஷ்ட தெய்வத்தின் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து அதற்குள் வைக்க வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வாசனை நிறைந்த மலர்களை அந்த மட்டை தேங்காய்க்கு சமர்ப்பணம் செய்துவிட்டு வீட்டை விட்டு கிளம்ப வேண்டும். அந்த வேலை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் இந்த மட்டை தேங்காயை எடுத்து இஷ்ட தெய்வத்தின் கோவிலுக்கு சென்று சிதறு தேங்காயாக உடைத்து விட வேண்டும். இப்படி எந்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று மட்டை தேங்காயை வைத்து வழிபாடு செய்தோமோ அந்த காரியம் விரைவிலேயே வெற்றி அடையும்.இஷ்ட தெய்வத்தை முழு மனதோடு இந்த முறையில் மட்டை தேங்காயை வைத்து வழிபாடு செய்து விட்டு நாம் செல்லக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அந்த காரியம் வெற்றி பெறும்.