அமரர் Vivekanandan (நடிகர் விவேக்)

  • 1 members
  • 1 followers
  • 2289 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
தமிழ்பூங்காவில் சேர்ந்து உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். ஒவ்வொரு பதிவிற்கும் புள்ளிகள் கிடைக்கும். உங்கள் புள்ளிகளைப் பயன்படுத்தி பரிசுகளைப் பெறுங்கள்.
  • 2905
Added a post 
கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு, ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம். இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் "இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?. " என கிண்டலாக கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ! பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்ஒன்பது ஓட்டைக்குள்ளேஒருதுளிக் காற்றை வைத்துசந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்முற்றும் கசந்ததென்றுபற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்தென்னை இளநீருக்குள்ளேதேங்கியுள்ள ஓட்டுக்குள்ளேதேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்வெள்ளருவிக் குள்ளிருந்துமேலிருந்து கீழ்விழுந்துஉள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனைஉணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்வானவெளிப் பட்டணத்தில்வட்டமதிச் சக்கரத்தில்ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனைநாடிவிட்டால் அவன்தான் இறைவன்அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளேஆசைமலர் பூத்திருந்தால்நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனைநினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்கற்றவர்க்குக் கண் கொடுப்பான்அற்றவர்க்குக் கை கொடுப்பான்பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனைபின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன்பஞ்சுபடும் பாடுபடும்நெஞ்சுபடும் பாடறிந்துஅஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான்ஆறுதலைத் தந்தருளும் இறைவன்கல்லிருக்கும் தேரைகண்டுகருவிருக்கும் பிள்ளை கண்டுஉள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதைஉண்டுகளிப் போர்க்கவனே இறைவன்முதலினுக்கு மேலிருப்பான்முடிவினுக்குக் கீழிருப்பான்உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனைஉணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்நெருப்பினில் சூடு வைத்தான்நீரினில் குளிர்ச்சி வைத்தான்கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம்கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்உள்ளத்தின் உள் விளங்கிஉள்ளுக் குள்ளே அடங்கிஉண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர்உருவமில்லா அவன்தான் இறைவன்.கோழிக்குள் முட்டை வைத்துமுட்டைக்குள் கோழி வைத்துவாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் - அந்தஏழையின் பேர் உலகில் இறைவன்சின்னஞ்சிறு சக்கரத்தில்ஜீவன்களைச் சுற்ற வைத்துதன்மைமறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத்தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்தான் பெரிய வீரனென்றுதலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் - அவன்தான்நாடகத்தை ஆடவைத்த இறைவன்!அ முதல் அஃகு வரை.
  • 54
Added a post 
உண்மை சம்பவம்சென்னையில் உள்ள திருவெற்றியூரிலே செக்கார் என்னும் குலத்திலே பிறந்தவர் கலிய நாயனார். இவருடைய காலம் 8-ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். அப்போது செக்கு தொழிலே இவரது பிரதான தொழிலாக இருந்தது. நல்ல செல்வந்தராய் இருந்த இவர் சிவனின் மீது பக்தி கொண்டார். அதன் காரணமாக திருவெற்றியூர் திருக்கோயிலில் உள்ளும் புறமும் ஆயிர கணக்கில் விளக்கேற்றும் சிவ தொண்டினை இவர் செய்து வந்தார். இவரின் பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான் இவரது செல்வத்தை கரைக்க தன்னுடைய திருவிளையாடலை அரங்கேற்றினார்.ஒரு கட்டத்தில் இவரது செல்வங்கள் யாவும் கரைந்து போனது. ஆனாலும் சிவனுக்கு விளக்கேற்றும் தொண்டினை இவர் விடுவதாக இல்லை. தினமும் கூலிக்கு வேலை செய்து அதன் மூலம் வரும் வருவாய் கொண்டு திருவிளக்கேற்றி ஆனந்தம் கொண்டார்.இப்படியே நாட்கள் கடந்தன, அதன் பிறகு சில காலங்களில் கூலிக்கு வேலை செய்வோர் அதிகரித்ததால் இவரை யாரும் வேளைக்கு அமர்த்தவில்லை. அதனால் தன் வீட்டில் இருந்த பண்ட பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் விற்று அதன் மூலம் கிடைத்த வருவாய் கொண்டு விளக்கேற்றி வந்தார். வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீர்ந்து போக என்ன செய்வதென்று தவித்த இவர், தான் தங்கி இருந்த வீட்டை விற்றார், அதன் மூலம் வந்த வருவாயை கொண்டு விளக்கேற்றும் பணியை தொடர்ந்து செய்தார்.ஒரு கட்டத்தில் தன்னுடைய சொத்துக்கள் யாவையும் விற்றுவிட்டார், இப்போது விற்பதற்கு ஏதும் இல்லை, விளக்கேற்ற எண்ணெய் வாங்கவும் பணம் இல்லை. இதனால் தவித்து போன அவர், தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு தான் விளக்கேற்றும் படம்பக்கநாதர் திருக்கோவிலிற்கு சென்றார். அங்கு இறைவனை மனதார வணிங்கிவிட்டு, இறைவா நான் உனக்காக செய்யும் இந்த விளக்கேற்றும் திருப்பணி நின்றுவிட்டால் நான் என் உயிரையே மாய்த்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.இவ்வடியேன் ஏற்றும் அகல் விளக்குகளில் எண்ணெய் குறைந்து விளக்குகள் நில்லுமாயின் நான் என் ரத்தத்தை கொண்டு விளக்கேற்றவும் தயங்க மாட்டேன் என்று மகிழ்ச்சியோடு சொன்னார். சொன்னதோடு நின்றுவிடாமல் அதை மெய்ப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினார். நீண்ட தொரு அரிவாளை எடுத்து அதன் மூலம் தன் கழுத்தை அறுத்து உதிரத்தை விளக்கில் கொட்ட முயற்சித்தார். அப்போது அங்கு எழுந்தருளிய சிவபெருமான் அவரின் கரத்தை பிடித்து தடுத்தாட்கொண்டார்.கோவிலில் இருந்த விளக்குகள் அனைத்திலும் எண்ணெய் நிரம்பி, விளக்குகள் பிரகாசமாக எரிய துவங்கின, கோவில் முழுக்க சிவபெருமானின் பேரொளி படர்ந்தது, சிவனை கண்டதும் தன் மனைவியோடு சேர்ந்து இரு கரங்களையும் தன் தலையின் மீது குவித்து சிவபெருமானை வணங்கினார் கலிய நாயனார். சிவபெருமான் அவருக்கு பேரின்ப பெருவாழ்வு அளித்தார். அதோடு இறுதியில் தன் திருவடியில் சேர்த்து சிறப்புற்றிருக்கும் அருளையும் வழங்கினார் என்கிறது அவரது வரலாறு.சிவனிடம் உண்மையான பக்தியோடு இருப்பவரை சிவன் நிச்சயம் காத்தருள்வார் என்பதற்கு இவர் ஒரு மிகப்பெரிய சாட்சி. அதோடு சிவனை வணங்குவோருக்கு பற்பல இன்னல்கள் எல்லாம் வரத்தான் செய்யும், அதை எல்லாம் கடந்து ஈசனை மனதார வணங்கி வந்தால் தான் அவனுடைய பேரருளை நாம் பெறமுடியும் என்பதற்கும் இவரே சாட்சி.
  • 77
Added a post 
இக்கரைக்கு அக்கரை பச்சை....இது ஒரு அருமையான சொல்லாடல் முதுமொழி,அல்லது பழமொழி பசுமையும் ,பனி மேகங்களும், கானலும் ,நாம் இருக்கும் இடத்தில் தெரியாது.... இங்கிருந்து பார்த்தால் அங்கிருப்பது போலவும் அங்கிருந்து பார்த்தால் இங்கிருப்பது போலவும் தோன்றும்காய்ந்த மாடு கம்பிலே விழுந்தாற்போல....பழங்காலத்தில் தமிழர்கள் நெல்லை மட்டும் விதைக்கவில்லை. நெல்லை தவிர கம்பு, வரகு, சாமை போன்ற பலவகையான தானியங்களைப் பயிர் செய்தார்கள். நெல்லு விதைத்த இடத்தை வயல் என்பது போல், கம்பு என்ற தானியம் பயிர் செய்த இடத்தைக் கொல்லை என்பார்களாம். இவ்வளவுக்கும் கம்பு அவ்வளவு சுவையானதுமில்லை, அதை விட நெல்லை விட மலிவானதும், இலகுவாகப் பயிர் செய்யப்படக் கூடியதுமாகும். பசியால் வாடிக்காய்ந்த மாடு எப்படிக் கம்பிலே விழுந்ததோ, அதாவது விழுந்து, விழுந்து சாப்பிட்டது போல, காணாததைக் கண்டவன் போல, யாராவது அவசரப்பட்டால், அல்லது ஆசைப் பட்டால் அல்லது யாராவது சுமாரான அழகுள்ள பெண்ணின் பின்னால் அலைந்தாலும் கூட இந்தப் பழமொழியைக் கூறுவார்கள்கள்ளன் பெரியதா காப்பான் மரபெரியதா…?வண்டு துளைத்த பழம் இனிப்பாக இருக்குமென்று சொல்லுவர் ஆனால் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மாட்டிக் கொள்ளும் வண்டு ஒரு கள்ளன் ,அந்தக் கனியின் சுவையைக் கூட அறிய முடியாமல் , சுவைக்க முடியாமல் மாங்கொட்டையின் உள்ளே மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறது பூ மூடிக் கொண்டு காயாகி பின் கனியாகி அதையாராவது உண்ணும்போதுதான் வெளியே வரமுடியும் அதனால் கள்ளனாய் இருப்பதை விட காப்பனாய் இருப்பதே மேல்ஊரோடு_ஒத்து_வாழ்ஊரோது ஒத்து வாழ் என்றால், நீ எந்த ஊரில் இருந்தாலும், அது சொந்த ஊராக இருந்தாலும் சரி, வேறு ஊராக இருந்தாலும் சரி . அக்கம் பக்கம் உள்ளவர்களிம் அன்புடனும் ஆதரவுடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்பதே இத‌ன் உ‌ண்மையான பொருளாகும். இதையே ஔவையார் ஊருட‌ன் பகைக்கின் வேறுட‌ன் கெடும் எ‌ன்று கூறியுள்ளார்.ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.ஒருவர் பிறருடன் ஒற்றுமையாக இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம். ஏனெனில் அவருக்குப் பிறர் உதவி எப்போதும் கிடைக்கும். மற்றவர்களிடம் ஒற்றுமையில்லாதவருக்கு யாரும் உதவ மாட்டார்கள்.நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்அதாவது, நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழியை நாம் நகைச்சுவைக்காகஅல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.இது தவறு, ஓர் அரண்மனை வாயிலில் நாயைக் கட்டி வைக்க வேண்டும் என்று மன்னன் விரும்பினான். அது கொஞ்சம் சிரமம் என்பதால்அதற்கு மாறாக நாயை தத்ரூபமாக கல்லில் செதுக்கி அரண்மணை வாயிலில் அமைத்தனர்.அதனை சற்றுத் தொலைவில் இருந்து கண்டுற்ற பொது ஜனம் ஒருவர், அதை உயிரோடு இருக்கும் நாய்தான் என்று எண்ணினார். ஒரு சிலநாட்கள் கழித்து அதனை பார்த்த அவர், ஒரு நாய் எவ்வாறு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் என்ற சந்தேகத்தில் அருகேச் சென்றுப் பார்த்தார்.அப்போதுதான் அது நாய் அல்ல கற்சிலை என்பது விளங்கிற்று. அப்போது அந்த நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் கல்லாகக் கண்டபின் அங்குநாய் இல்லை. நாயாக காணும்போது அங்கு கல் தெரியவில்லை என்று கூறினர். அதாவது நாம் ஒரு விஷயத்தை எவ்வாறு பார்க்கிறோமோ அது அவ்வாறு தான் நமது கண்களுக்குப் புலப்படுகிறது என்பதை உணர்த்துவதேஇந்த பழமொழி.அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்இதனை நாம் மற்றவர்களை அடிக்கும் போதோ அல்லது அடி வாங்கும்போதோ எத்தனை முறை காதில் கேட்டிருக்கிறோம். இது தவறுஅதாவது பழமொழியின் உண்மையான பொருள்... ஆண்டவனின் திருவடி நிழல் உதவுவது போல அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள்என்பதுதான். ஆண்டவனின் திருவடியைத்தான் அடி என்றார்களேத் தவிர, மற்றவர்களை துன்புறுத்தும் விதத்தில் நாம் அடிப்பதை அல்ல.முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று.....யாராவது போலியாக அழும்போது முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள். அதாவதுஅறிவியல் பூர்வமாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் இந்த அழுகை போலியானது என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறுசொல்லப்படுகிறது.ஆனால் அதற்கான பொருள் அதுவல்ல, முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல என்பதுதான் நாளடைவில் திரிந்து முதலைக் கண்ணீர்என்றாகிவிட்டது. அதாவது தொழிலில் முதல் போட்டு செய்தவன் இழப்பு ஏற்பட்டால் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்பதை கூறவே இந்தபழமொழி உண்டானது.வெளுத்ததெல்லாம் பாலல்ல......நல்லவர்கள் போல் வெளியே பேசப்படுபவர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்ல.
  • 77
Added a post 
அவள் பெயர் ஐடா ஸ்கேடர் ( Dr. Ida Sophia Scudder ): அமெரிக்கப் பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள். ஆனால் மிஷனரிகள்அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்த பலரில் இவர்களும் அடங்குவர். அப்படித்தான் 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள், வந்த இருமாதங்களில் அவளின் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார்தந்தையுடன் வேலூரில் விடுமுறையை கழித்துகொண்டிருந்தாள் அந்த சிறுமி. அந்த இரு சம்பவங்களும் அவளை புரட்டிப் போட்டன‌என்ன சம்பவம்?அந்த நள்ளிரவில் அவர் வீட்டு கதவினை தட்டுகின்றான் ஒரு பிராமணன், அவனின் கண்கள் டாக்டரம்மாவினை தேடுகின்றன. ஐடாவின் தகப்பனார் என்ன என்கின்றார்? என் மனைவிக்கு பிரசவம் டாக்டரம்மாவினை அனுப்ப முடியுமா?இல்லை அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள் நான் வரட்டுமா என்கின்றார் அவர்இல்லை அய்யா, எங்கள் சமூகத்தில் பெண்ணுக்கு பெண்ணே பிரசவம் பார்க்க வேண்டும் , கட்டுப்பாடு அது என்னால் மீறமுடியாது என கண்களை துடைத்துகொண்டே செல்கின்றார்மறுநாள் அந்த கர்பிணியின் இறந்த உடலை அந்த ஐடாவின் வீட்டு முன்னால் எடுத்து செல்கின்றார்கள். குற்ற உணர்வினால் அத்தந்தை அழ, தன்னையறியாமல் ஐடாவும் அழுகின்றாள்இருநாள் கழித்து ஒரு இஸ்லாமியருக்கு அதே தேவை. ஆனால் அதே கட்டுப்பாடு. டாக்டரம்மா இல்லாததால் கண்களை துடைத்துவிட்டுச் செல்கி்றார் அந்த இஸ்லாமிய கணவன்மறுநாள் அதே ஊர்வலம்மனதால் வெடித்து அழுதாள் ஐடா, என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்கவும் மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்அவளுக்கு ஏதாவது அம்மக்களுக்கு செய்ய தோன்றிற்று, நிச்சயம் இங்கு மகளிரை படிக்க வைக்க முடியாது, நாமே மருத்துவராகி இவர்களோடு தங்கிவிட்டால்?அந்த வைராக்கியம் அன்றே வந்தது, அமெரிக்கா சென்று படித்து மருத்துவரானாள், பெரும் வேலைவாய்ப்பு வந்தாலும் அவள் கண்களில் அந்த இரு ஊர்வலங்களும் வந்து அவள் வைராக்கியத்தை அதிகரித்துகொண்டே இருந்தன‌திரும்பி அதே வேலூருக்கு வந்தாள், இனி ஒரு கர்பிணியையும் சாகவிடமாட்டேன் எனச் சொல்லி அந்த மருத்துவனையினைத் தொடங்கினாள்இந்தியாவில் மகளிருக்கான முதல் மருத்துமனையாக அதுதான் உதித்தது.பெண்கள் தயக்கமின்றி அவளிடம் சிகிச்சைக்கு வந்தனர். எந்த மதக் கட்டுப்பாடுகளும் அதற்குத் தடையாக இல்லை.இந்நாட்டுப் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்து வந்து இப்பெண்களைக் காப்பாற்றுவேன் எனச் சூளுரைத்து அதை செய்தும் காட்டினாள் அவள்.அவள் பெண்ணுரிமை பேசவில்லை, கொடி பிடிக்கவில்லை, புரட்சி செய்யவில்லை மாறாக, தன்னால் அந்தகால யதார்த்த வாழ்விற்கு எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்தாள்அதற்கு அவள் கொடுத்த விலை அவளின் வாழ்வு.நிச்சயம் தனி ஆளாகத்தான் போராடினாள், பின்பே பல சேவை மருத்துவர்கள் அவரோடு இணைந்தனர்.அவள் தனியே ஏற்றிய மெழுகுவர்த்திதான் இன்று மிகப் பிரகாசமாக ஒளிகொடுத்துகொண்டிருக்கின்றதுஅதுதான் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியாக இன்று வளர்ந்து நிற்கின்றது, உலகின் மிகத் தரமான மருத்துவமனை என அதற்கு இன்றும் பெயர்.அப்பல்லோ, குளோபல், ராமசந்திரா எனப் பல வந்தாலும் இன்று மிகப் பெரியதும், மிக மிகத் தரமான சிகிச்சை கொடுப்பதும் அந்த வேலூரில் சிஎம்சி மருத்துவமனையேஅவள் யார்? அவளுக்கும் இம்மக்களுக்கும் என்ன சம்பந்தம்?ஆனால் நம் மக்களுக்காக அழுதிருக்கின்றாள். நம் மக்களின் சாவினைத் தடுக்க மருத்துவராகித் திரும்பி வந்து இங்கு தன் வாழ்வினை அர்பணித்திருக்கி்றாள்அன்னை தெரசாவிற்கு அவள்தான் வழிகாட்டி.அந்த வணங்கதக்க பெண்மணியின் உழைப்பில் உருவான அந்த மருத்துவமனைதான் இன்று 100ம் ஆண்டுவிழாவினைக் கொண்டாடுகின்றதுஜனாதிபதி அதற்குத்தான் வந்திருந்தார்அந்த வெளிநாட்டு தெய்வத்தைப் பற்றி ஒருவார்த்தை அவர் சொல்வார் என்றோ, இல்லை இந்த பத்திரிகைகள்தான் அந்த பெண்ணைச் சொல்லுமா என்றோ தேடிபார்த்தால் ஒன்றுமே இல்லைஅவளின் மகத்தான தொண்டிற்கு இத்தேசம் கொடுக்கும் அஞ்சலி இதுதானா?அவளின் கல்லறை அதே வளாகத்தில்தான் இருக்கின்றது, நிச்சயம் இந்த நூற்றாண்டு விழாவில் அவள் கல்லறைக்கு அரசு மரியாதை செலுத்தபட்டிருக்க வேண்டும்இங்கு நாட்டினைச் சுருட்டி தனக்கு எஸ்டேட் கட்டிய நடிகைக்கு மணிமண்டபம் கட்டுபவர்களுக்கு தியாகத்தின் மகத்துவம் எப்படி தெரியும்?ஒரு குற்றவாளிக்கு மணிமண்டபமாம், எங்கிருந்தோ வந்து இங்கு வந்து உழைத்து இன்றுவரை மக்கள் நலம்பெற பெருந்தொண்டாற்றியிருக்கும் அவருக்கு ஓன்றுமில்லையாம்.இந்த தேசம் மிக மிக நன்றிகெட்ட தேசமாகச் சென்றுகொண்டிருக்கின்றதுநன்றி கெட்டவர்கள் செல்லட்டும்.அந்த வேலூர் மருத்துவமனை ஐடா ஸ்கேடரின் கனவு, கடந்த 100 ஆண்டுகளாக எத்தனையோ லட்சம் மக்களை அது காப்பாற்றிக்கொண்டிருக்கின்றது, இன்றுவரை, இந்த நொடிவரை எத்தனையோ பேர் நலம்பெற்றுக் கொண்டிருக்கின்றனர்அந்த பலன் பெற்றவர்கள் நிச்சயம் மனதில் வாழ்த்துவார்கள், அவர் தொண்டையும் அந்த மருத்துவமனை பற்றி அறிந்தவர்களும் இந்த 100ம் நினைவு ஆண்டில் அவளுக்கு மாபெரும் அஞ்சலியினைச் செலுத்தலாம்.இங்கு வந்தவர்கள் எல்லாம் மதம் பரப்ப வந்தவர் அல்ல, உண்மையிலே இம்மக்களுக்கு ஏதும் செய்ய வாழ்வினை அர்பணித்தவர்கள்.அதில் பென்னி குயிக்கும், ஐடா ஸ்கேடரும் எந்நாளும் நினைவில் நிற்பார்கள்ஆனாலும் ஜனாதிபதி ஒருவார்த்தை அவரை குறிப்பிட்டிருக்கலாம், தமிழக அரசுப் பிரநிதிகளும் அவள் பெயரைச் சொல்லவில்லை. அப்படி அவள் இந்நாட்டு மக்களுக்கு என்ன துரோகம் செய்தாள்??அவள் வெளிநாட்டுகாரியாகவும், கிறிஸ்தவராகவும் இருந்ததுதான் அவளின் தவறு.இவர்கள் சொல்லித்தான் அவள் புகழ் தெரிய வேண்டுமா? நிச்சயம் இல்லை. தொண்டு என்பதும் சேவை என்பதும் அரசியலுக்கு அப்பாற்பட்டது100 ஆண்டுகளை கடந்து இந்திய மக்களுக்கு ல்ப் பணிசெய்யும் அந்த மருத்துவமனை நிற்கும் வரை ஐடா ஸ்கேடர் வாழ்வார்.வாழ்வில் நாம் கண்டு கண்ணீர் வீடும் அதிசய கிறிஸ்தவர்களில் அந்த ஐடாவும் ஒருவர்.அந்த மருத்துவமனை 100 அல்ல, 1000 ஆண்டுகள் இம்மக்களுக்கு தொண்டு செய்யும், காரணம் அதன் அடித்தளம் மிக மிக உன்னதமான மானிட நேயம் எனும் அஸ்திவாரத்தால் அமைக்கபட்டிருக்கின்றது.ஜனாதிபதியும் பிரதமரும் முதல்வரும் 100ம் ஆண்டில் ஐடா ஸ்கேடரை நினைவு கூறாதது அவளுக்கு பெருமையே.அந்த கருணையின் தேவதையினை நினைத்து பார்க்காதது இவர்களுத்தான் அவமானம்.
  • 91
  • 91
Added a news 
நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 58 பேர் காயமடைந்துள்ளதோடு பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்குண்டவர்களை மீட்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும் விபத்து தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழுவொன்று கொத்மலை கெரண்டிஎல்ல பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
  • 221
  • 251
  • 252
Added a post 
நான் ஒரு வேலை இல்லா பட்டதாரி ! நல்ல வேலை தேடி கொண்டு இருக்கேன்!நேற்று ஒரு ரெஸ்டாரண்டில் வேலை காலியாக இருக்கு என்று சொன்னார்கள் அதனால் அங்கு போய் இருந்தேன்!மரியாதை நிமித்தம் என்னை அமர வைத்து குடிக்க காபி கொடுத்தார்கள்! நான் குடித்து கொண்டு இருக்கும்போது! எனக்கு ரெண்டு டேபிளுக்கு அருகில் ஒரு வசதியான நபர் ஒருவர் அமர்ந்து உணவு அருந்தி கொண்டு இருந்தார்!அப்பொழுது அங்கு வேலை செய்து கொண்டு இருக்கும் ஒரு வெயிட்டர் அவரின் காலில் விழுந்து ஐயா என் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை ஆபரேசன் செய்யணும் என்று சொல்ல உடனே அவர் தன் உதவியாளரை கூப்பிட்டு அவனுக்கு தேவையான பணத்தை கொடுத்தார்!சற்று நேரத்தில் உணவகத்தை சுத்தம் செய்யும் பெண்மணி ஐயா என் மகளுக்கு படிப்பு செலவுக்கு பணம் தேவை படுகிறது என்று சொல்ல ! அவரும் உடனே பணம் எடுத்து கொடுத்தார்!கொஞ்ச நேரம் ஆகி இருக்கும் அந்த உணவகத்தின் வாட்ச் மேன் வந்து ஐயா ! நான் இன்றுடன் நான் ரிடயர்டு ஆகிறேன்! அடுத்த மாதத்தில் இருந்து குடும்ப செலவுக்கு என்ன செய்வேன் என்று தெரியவில்லை என்று சொல்ல உடனே உதவியாளரை கூப்பிட்டு தேவையான பணத்தை கொடுத்து அனுப்பினார்.இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த நான் பொய் சொல்ல தயாரானேன்!பார்த்தேன் இப்ப யாரும் அவர் அருகில் இல்லை!டக் என்று அவர் அருகில் சென்று அவர் காலில் விழுந்து ஐயா நான் ரொம்ப ஏழை! சாப்பாட்டிற்கு வழியில்லை! பெரிய குடும்பம்! குடிகார தந்தை, நோயால் வாடும் அம்மா! ஊனமுற்ற தந்தை காப்பாற்றுங்கள் ஐயா என்று அவர் காலை பிடித்து சத்தமாக கெஞ்ச ஆரம்பித்தேன்.அவ்வளவு தான் !கட் ! கட் ! யாருப்பா அது நடுவில்! என்று ஒரு சத்தம்!திரும்பி பார்த்தால்டீவி சீரியல் படப்பிடிப்பு!நான் அசட்டு சிரிப்பு சிரிக்க!ஒருவன் சொன்னா காசு கொடுக்காமலே எப்படி கூவுறான் என்று!
  • 324
Added a post 
இதயம் உண்மையிலேயே வலித்தது.வீடியோவில் ஒரு இராணுவ வீரர் கரடுமுரடாக, மேடு பள்ளமாக, கற்கள் சிதறிக்கிடக்கும் மலைப்பகுதியில் வேகமாக ஓடுவது போல நடந்து விறுவிறு என்று வருகிறார். வீடியோவில் அங்கே வீசும் காற்றின் ஓசை கேட்கிறது.திறந்தவெளி, நிச்சயம் மலைப்பகுதியின் குளிர்க்காற்றாகத்தான் இருக்கும்.வந்து ஒரு சற்றே பாங்கான இடத்தில் அமர்கிறார். கையில் ஒரு சிறிய டிஃபன் பாக்ஸ். அதை கீழே வைக்கிறார். பின்னர், தன் கார்கோ - மிலிட்டரி உடையில் இருந்து ஒரு காகிதப் பொட்டலத்தை எடுக்கிறார். அதில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. அந்த சிறிய பேண்ட் பாக்கெட்டில் அந்தப் பொட்டலம் அடைக்கப்பட்டு இருக்கிறது. அதனால்தான் எடுக்க சிரமம்.பின்னர் சுற்றும், முற்றும் பார்க்கிறார். ஒரு ஸ்லாப் போன்ற கல் கண்ணில் படுகிறது. அதை எதிரே வைத்துவிட்டு, தன் கைகளால் அதை சுத்தம் செய்கிறார். மண் துகள்கள், தூசி விரட்டப்படுகின்றன.அந்த ஃப்ளாட்டான கல்லின் மேல் அந்த டிஃபன் பாக்ஸை வைத்து அதைத் திறக்கிறார். பின்னர் அந்த காகிதப் பொட்டலத்தையும் திறக்கிறார்.பொட்டலத்தில் கசங்கிய நிலையில் சப்பாத்திகள் இருக்கின்றன. தூசு தட்டிய கைகளை சுத்தம் செய்ய அங்கே வசதியில்லை. அவசரமாக சப்பாத்தியை விண்டு, டிஃபன் பாக்ஸில் இருக்கும் தொட்டுக்கொள்ள வைத்திருக்கும் சப்ஜியில் நனைத்து வாயில் போட்டுக் கொள்கிறார். மென்று முழுங்கியபடி இன்னொரு விள்ளல், சப்ஜியில் தோயல், வாயில் போடல்.சாப்பாட்டுக்கு உட்கார்ந்தாலே ஒரு பாட்டில் குளிர்ந்த நீருடன் உட்காரும் நான் யோசிக்கிறேன். என்ன இது குடிக்க தண்ணீர் கூட இல்லாமல், எப்படி சாப்பிடுகிறார்.ஒருவேளை ஏதாவது வாட்டர் பேக் வைத்திருப்பாரோ?சப்பாத்தியை மென்றபடி சுற்றும், முற்றும் பார்க்கிறார். அருகில் இருக்கும் பள்ளத்தில் எதையோ தேடுகிறார். ஒரு துணி துண்டம் கிடக்கிறது. அதை எடுத்துக் கொண்டு மீண்டும் உணவு இருக்கும் பக்கம் வருகிறார்.இதுவரை நம் நெஞ்சம் கொஞ்சம் அசையாவிட்டால், இப்போது நிச்சயம் அசைந்து கொடுக்கும். பிசையச்செய்யும்.கீழே இருந்து கொண்டு வந்த அந்த கந்தல் துணியை தன் முன்னே மண்ணில் இருக்கும் ஒரு சிறிய குழியில் நுழைக்கிறார். அங்கே கொஞ்சமே, கொஞ்சம் ஈரம் (கல்லுக்குள் ஈரம்) இருக்கிறது போல.துணியை அழுத்தி வைத்துவிட்டு இன்னொரு விள்ளல் சப்பாத்தியை சாப்பிடுகிறார். ஒரு கையால் துணியை குழியில் அழுத்துகிறார்.அழுத்தி அழுத்தி துணியை நுழைத்து, பின் அதை எடுக்கிறார். தன் வாயைத் திறந்து நனைந்த துணியை பிழிகிறார். அதுதான் அவரது குடிநீர். சில துளிகள். கங்கையில் இருந்து நமக்கு புனிதமாக கொண்டு வரும் தண்ணீரைவிட மகத்தானது.ஹம்மாடி... எத்தனை கடின வாழ்க்கை?இராணுவவீரர்கள் தேசப்பாதுகாப்புக்காக எத்தனை எத்தனை சவுகரியங்களை விட்டொழிக்கிறார்கள்?அவர் பிழிந்து கொண்டு வாயை நனைத்த அந்த சிறு துளி தண்ணீரில் என் இதயமும் சேர்ந்து அழுது நனைந்தது. இதை மிகையாக சொல்லவில்லை. நிஜமே.அங்கே அவரையும், அந்த வீடியோ எடுத்தவரையும் தவிர வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லை. அல்லது அவரே வீடியோ எடுக்க மொபைலை செட் செய்திருக்கலாம். எப்படி இருந்தாலும், அந்த சிறு வீடியோ படம் நமக்கு நம்மைக்காக்கும் இராணுவத்தினரின் தியாகத்தை எடுத்துக்காட்டியது.இதுபோல லட்சக்கணக்கில் நமது இராணுவவீரர்கள் தசாப்தங்களாக தேச சேவையில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட காணொளிகள்தான் சிறிதளவேனும் நமக்கு அவர்கள் வாழ்க்கையைக் காட்டி, நம்மை அவர்கள் மீது நன்றியுணர்வை ஏற்படுத்துகிறது.இந்த இராணுவவீரர் யார், என்ன ஜாதி, என்ன மதம், அவருடைய குடும்பம் என்ன, எத்தனை குழந்தைகள் என்று ஒன்றும் தெரியாது. அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. தேசநலனுக்காக உயிரை அர்ப்பணிக்கத் தயாரான மனதுடன்தான் அவரும், அவரைப் போன்றவர்களும் இருக்கிறார்கள்.ஒரு சொட்டு தண்ணீருக்கு அவர் படும்பாட்டைப் பார்க்கும்போது, நாம் வெகு அசட்டையாக குழாயை மூடாமல் வீணாக்கும் தண்ணீரும், வாட்டர் டேங்க் மோட்டர்களை மூடாமல் வழிந்து ஓடும் தண்ணீரும், பழுதான குழாயினால் இரவு முழுக்க சொட்டு சொட்டென்று ஒழுகும் தண்ணீரும் அதன் விலைமதிப்பின்மையை உணர்த்தியது.ஒரு விஷயம் இல்லாதபோதுதான் அதன் அருமை நமக்குத் தெரியும்.போர்க்காலங்களில்தான் அமைதியின் வலிமை புரியும். அந்த அமைதியை நமக்கு அல்லும், பகலும் தர பாடுபடும் இந்த பெயர் தெரியாத இராணுவ வீரர்களின் மகிமை, தியாகம் புரியும்.
  • 322
Added a post 
தொடர் மழையின் காரணமாக பலரும் நெஞ்சு சளியால் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதற்காக பலர் மாத்திரை மருந்துகள் எடுத்தும் விரைவில் பலன் கிட்டுவதில்லை.இதோ இந்த 3 பொருளை பயன்படுத்தி நெஞ்சு சளியை ஒரே நாளில் கரைத்து விடலாம்.தேவையான பொருட்கள் :வெற்றிலை – 5 இலைகள்மிளகு – 5 மிளகுசீரகம் -அரை டீஸ்பூன்செய்முறை :ஐந்து வெற்றிலை,ஐந்து மிளகு மற்றும் அரை டீஸ்பூன் சீரகத்தை எடுத்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.இதன் பிறகு ஒரு டம்ளர் தண்ணீரில் இடித்து வைத்த இந்த மூன்று பொருட்களையும் கலந்து இதன் சாறு இறங்கும் வரை சிறிது நேரம் கொதிக்க விடவும்.இதன் பிறகு இதனை குடிக்கும் சூட்டிற்கு வரும் வரை ஆற விடவும்.பின்னர் இந்த கசாயம் குடிக்கும் சூட்டிற்கு வந்தவுடன் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் உணவு சாப்பிட்டதற்கு பிறகு இதனை குடிக்க வேண்டும்.இதனை ஒரு நாள் குடித்தாலே நெஞ்சு சளி கரையே தொடங்குவது உங்களால் உணர முடியும்.இந்த கசாயத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் நெஞ்சு சளி முழுமையாக கரைந்து வெளியேறிவிடும். மேலும் வறட்டு இருமல் தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பிரச்சனைக்கும் இது நல்ல தீர்வாக அமையும்.
  • 327
  • 339
  • 338
Added a post 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் கைகூடும். அந்நிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும் மேம்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுரிஷபம்தன்னம்பிக்கையான சில பேச்சுக்கள் மனதில் நம்பிக்கையை உண்டாக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகப் பணிகளில் நல்ல பெயர் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் ஆதரவு ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிர்பாராத சில திடீர் திருப்பம் உண்டாகும். உதவிகள் கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்மிதுனம்மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். மற்றவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆக்கபூர்வமான நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்கடகம்பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. கலை துறைகளில் கற்பனைகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைசிம்மம்கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் எண்ணியதை வித்தியாசமான முறையில் நிறைவேற்றிக் கொள்வீர்கள். மனதில் நம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அதிரடியான சில செயல்களின் மூலம் வியாபாரம் சார்ந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்கன்னிபொன், பொருட்சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணிதம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை உயரும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பெருமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்துலாம்வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகளைப் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். எண்ணிய சில பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். கேளிக்கை செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புவிருச்சிகம்எதிலும் பதற்றமின்றி செயல்படவும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். விடாப்பிடியான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கோபம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்தனுசுவியாபாரம் சார்ந்த பணிகளில் மறைமுகப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமகரம்வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிந்தனையின் போக்கில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அந்நிய வர்த்தகத்தில் லாபம் மேம்படும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். இரக்கம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதாகும்பம்வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். அரசு பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இழுபறியான சில விஷயங்களுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதையும் தன்னம்பிக்கையோடு அணுகி வெற்றி பெறுவீர்கள். சிந்தனை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சந்தன ம்மீனம்எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளால் மனதில் கோபம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விட்டுக் கொடுத்து செயல்படவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • 382
Added a post 
விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11.5.2025.இன்று இரவு 08.47 வரை சதுர்த்தசி. பிறகு பௌர்ணமி.நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.14 வரை சித்திரை. பின்னர் சுவாதி.நாமயோகம் : இன்று அதிகாலை 04.09 வரை சித்தி. பிறகு வியதீபாதம்.கரணம் : இன்று காலை 07.47 வரை கரசை. பின்னர் இரவு 08.47 வரை வணிசை. பிறகு பத்தரை .அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 04.14 வரை மரண யோகம். பின்னர் அதிகாலை 05.53 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 07..30 முதல் 08.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை மாலை : 04.30 முதல் 04.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
  • 389
Good Morning....
  • 403
  • 404
Canada Kanthan
  • 569
Added a post 
ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?தமிழன்_படைத்த_கணிதம் .கணக்கதிகாரம்_நூலின்_சிறப்பு: ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள். "கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி_நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறிவேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலேபாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும் பூசணிக்காய் தோறும் புகல்"ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.ஷ...ரு"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்குசிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதைஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவேவேறெண்ண வேண்டாஞ் சுளை."கணக்கதிகாரம்_விளக்கம் : பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.நம் முன்னோர்களின் அறிவியல் படைப்புகளில் இதுவும் ஒன்று......
  • 629
Added a news 
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான், நமது நாட்டு ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.தாக்குதல் துவங்கியது முதல் இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வந்தன. சீனாவும் அதேபோன்ற கருத்தை தெரிவித்து இருந்தது. இரு நாடுகளும் விரைவில் பதற்றத்தை தணிக்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிக்கிறேன். அறிவுப்பூர்வமாக செயல்பட்ட இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் வெளியிட்ட அறிக்கையில், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டு உள்ளன. பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதிக்காத வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாடுபடும் எனத் தெரிவித்து உள்ளார். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், போர் நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
  • 637
Added a news 
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் மிகுந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு மருந்துகள் மற்றும் மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதனையடுத்து, தமிழக மருந்து உற்பத்தியாளர்கள் பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கையை நிறுத்தியுள்ளனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மருந்து நிறுவனங்களின் சங்கத் தலைவர் டாக்டர் ஜெயசீலன் இதை உறுதி செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு ஜெனரிக் மருந்துகள் மற்றும் அதற்கான மூலப்பொருட்கள் பெரிதளவில் அனுப்பப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் ரூ.2.40 லட்சம் கோடி மதிப்புள்ள மருந்துகள் உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில், தமிழகத்திலிருந்து மட்டும் ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடி மதிப்பில் மருந்துகள் அனுப்பப்படுகின்றன.பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் உயிருக்கு பயனுள்ள மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் மதிப்பு மட்டும் ரூ.100 கோடி இருக்கலாம். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளோம். ஆனால் அதே நேரத்தில் மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதியில் எந்த தடையும் இல்லை. அமெரிக்கா போன்ற நாடுகள் தற்போது அதிக அளவில் மருந்துகள் அனுப்புமாறு முன்பே ஆர்டர்கள் வழங்கியுள்ளன. சீனாவிலிருந்து வரும் மூலப்பொருள் இறக்குமதியிலும் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே, நாட்டிற்குள் மருந்து பற்றாக்குறை ஏற்படாது” எனத் தெரிவித்தார்.
  • 649
Added a news 
தமிழர் நிலத்தை தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் ஆட்சியை அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து நிர்வகிக்க வேண்டும் என்ற தீர்ப்பையே தமிழ் மக்கள் உள்ளூர் அதிகார சபை தேர்தலின் மூலம் வழங்கியுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் -மக்கள் வழங்கிய தீர்ப்பின்படி ஆட்சி அதிகாரத்தை தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து செயற்படுத்துவது அவசியம்.இதேநேரம் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களை எடுத்துக் கொண்டாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு இருக்கவில்லை. இதனால் தமிழ் மக்களின் நலன்கருதி ஏனைய தரப்பினருக்கும் விட்டுக்கொடுப்புகளுடன்செயற்பட தமிழ் தரப்புகள் தயாராக வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.இதேநேரம் தற்போது  பெரிய, சிறிய என்ற நிலையில் எந்தவொரு கட்சியும் இல்லை.அனைத்தும் சமமான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன.தவறுகள் இனிமேல் இழைக்கப்படகூடாது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, போன்ற கட்சிகள் தேசியத்தை வைத்தே தேர்தலை எதிர்கொண்டனர். இந்த கட்சிகள் அதிகபடியான ஆசனங்களை பெற்று இருக்கின்றன.இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு,கிழக்கு மாகாணத்தில் 307 ஆசனங்களையும்,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 106 ஆசனங்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி 80 ஆசனங்களும் பெற்றுள்ளது. எனவே ஏறத்தாழ 500 ஆசனங்களை கூட்டாக பெற்றுள்ளனர்.மக்களிடம் வைத்தகோரிக்கை மக்கள் ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு கட்சிக்கும் அதிக படியான ஆசனங்களை வழங்கியிருக்கின்றனர்.மக்கள் கொடுத்த ஆணைக்கு ஏற்ப இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஆகிய கட்சியினர் கூட்டாக பேசி ஆட்சி அதிகாரங்களை தமிழ் மக்கள் நிர்வாகத் திறனைகளை ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்பது எமது நிலைப்பாடு.மாகாண சபையினை நடத்தமுடியாதவர்கள், நிதியினை திருப்பி அனுப்பியவர்கள்,நிர்வாகத்தினை செயற்படுத்த முடியாதவர்கள் என பல்வேறுபட்ட எதிர்ப் பிரசாரங்கள்பல்வேறு தமிழ் தரப்பினர்களிடம் இருக்கின்றது.தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கமுடியாத சூழ் நிலையில் தான் உள்ளனர். எனவே தமிழ் மக்களின் அதிகாரம், எதிர்காலம், உரிமைகள் என்பவற்றை புறம்தள்ளி நடக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.மக்கள் ஆசனங்களை அனைவருக்கும் பகிர்ந்தளித்துள்ளனர். பேச்சு வார்த்தைகள் சரியாக நடைபெறுமாக இருந்தால் ஓர் அணியில் நின்று ஆட்சி அதிகாரங்களில் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் இருக்காது சிறப்பாக அமையும் என்றார்000
  • 782
  • 941
  • 977
  • 996
Added a news 
.....உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.யாழ்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் -நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய பாதையிலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக விலகி வருகின்றார்கள் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வந்தது.இவ்வாறான ஒரு காலச் சூழலில் பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்நிறுத்திய ஒரு தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.இதனூடாக வடக்கு கிழக்கில் தென் இலங்கை இனவாதிகளுக்கு இடம் கொடுக்கப்படாது என்பதை ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களால் உணர்த்தப்பட்டுள்ளது.இதேவேளை தமிழ் தேசிய பரப்பில் அனேக பிரதேசங்களில் தமிழ் தேசியம் வெற்றிபெற்றுள்ள போதும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையில் பின்தங்கிய போக்கே இருக்கின்றது.அதேபோன்று தமிழ் தேசிய பேரவைக்கும் இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் மக்கள் கொடுத்துள்ள அல்லது கிடைத்த வெற்றியாகவும் இதை நாம் பார்க்கின்றோம்.தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்கு தேவையான ஒன்றாகும்.இதனால் தமிழ் தரப்பு ஆட்சி அமைக்க நாம் தமிழ் அரசு கட்சிக்கும் கொள்கை நிலைப்பாட்டுடன் நின்று ஆரரவை கொடுக்க பின்னிற்கமாட்டோம்.குறிப்பாக ஆட்சி அதிகாரக் கதிரைக்கான தேசியமாக ஒற்றுமையாக இல்லாது தூய்மையான ஆதரவுக்கான அழைப்பாக இருந்தால் அந்த அழைப்புக்கு தமிழ் தேசிய பேரவை ஆதரவு கொடுக்கும். மேலும் ஒற்றுமையை வலுப்படுத்த தமிழ் அரசியல் பரபில் உள்ள பலதரப்பட்டவர்களுடனும் பேசியிருந்தேன்.அதற்கான சாதக பெறுபேறும் கிடைத்தது.அதேநேரம் தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டும் நிலையும் எம்மிடம் இல்லை. அவர்களுடனும் பேசியே பயணிக்க வேண்டும்.தவறான பாதையில் மக்கள் வழிநடத்தப் படுவதை உணர்ந்து அதை வெளிப்படுத்தி தேசியத்தின் பாதையில் மக்களை கொண்டுசெல்ல நாம் வழிவகுத்தோம்.அதன் ஒரு பகுதியாகவே இம்முறை தமிழ் தேசிய பேரவை என்ற கூடின் கீழ் உள்ளூர் அதிகார சபை தேர்தலில் மக்களிடம் சென்றிருந்தோம்.அதற்கான அங்கீகாரதை மக்கள் தந்துள்ளனர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளின் போக்குக்கு மக்கள் ஒரு பாடத்தைகொடுத்தார்கள். அந்த பாடத்தின் ஊடான கிடைத்த படிப்பினைகள் தற்போது தமிழ் தேசிய பாதையை மீளவும் உறுதிபடுத்திக் கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.000
  • 1003
  • 1013