அமரர் Vivekanandan (நடிகர் விவேக்)

  • 1 members
  • 1 followers
  • 2170 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
Added a video 
பயங்கரவாத தடைச் சட்டம் ( PTA) மற்றும் மருந்துகள், அத்தியாவசிய உணவு, மற்றும் பாடசாலைப் பொருட்களுக்கான வரிக்குறைப்பு (VAT) உள்ளிட்டவற்றை வாக்குறுதி அளித்தபடி அனுர அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுப் பாதையில் கையொப்பம் என்னும் போராட்டம் இன்று (11)யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.
  • 49
  • 78
Added a news 
அஞ்சல் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன. கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜயசுந்தர இதனைக் குறிப்பிட்டார். ஊழியர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் வேதன உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  இந்தப் பிரச்சினைகள் குறித்து அஞ்சல் மா அதிபருடன் கலந்துரையாடப்பட்டதாகவும், எனினும், சாதகமான எந்த தீர்வும் எட்டப்படவில்லை எனவும் அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.000
  • 196
Added a news 
நாட்டுக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறியும், தவறான உற்பத்தி திகதிகளுடன் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  எனினும், வாகனங்கள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். தற்போது பழைய வாகனங்கள் எவையும் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கப்பலில் ஏற்றும் திகதியிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னதாக உற்பத்தி செய்யப்பட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சட்டரீதியாக அனுமதி உள்ளது. சுங்கத்தினால் இந்த வாகனங்கள் முறையாக பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. பொய்யான பல முறைப்பாடுகள் இந்த வாகனங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் அவை தொடர்பிலும் சுங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனவே, பழைய வாகனங்கள் எவையும் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் எந்தவொரு வாகனமும் மீள ஏற்றுமதி செய்யப்படமாட்டாது எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.00
  • 198
Added a news 
இன்று நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் பரீட்சைக்கான பயிற்சிகளை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  அதன்படி, சம்பந்தப்பட்ட சட்டங்கள் மீறப்பட்டால், காவல்துறைக்கும் தமக்கும் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.000
  • 199
Added a news 
 கடந்த 20 நாட்கள் நடைபெற்ற 15 போட்டிகளைக் கொண்ட சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் டுபாயில் இடம்பெற்ற நேற்றைய இறுதிப் போட்டியில் இந்தியா 12 வருடங்களுக்குப் பின்னர் வெற்றி கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.  இருப்பினும் போட்டியை நடத்திய பாகிஸ்தானிய கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் எவரும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. போட்டி தொடரை நடத்தும் நாடாக பாகிஸ்தான் இருந்த போதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை, குறிப்பாகச் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி நிறைவு விழாவிற்காக டுபாய் செல்லவில்லை. சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காகப் பாகிஸ்தானுக்கான பிரதிநிதியாக அனுப்பப்பட்ட நபர், பணியாளர் என்ற காரணத்தால், சட்டதிட்டங்களுக்கு அமைய மேடைக்குச் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இந்த அசாதாரண நடத்தை காரணமாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.00
  • 198
Added a news 
இந்த ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தகுதி பெற்ற வாக்காளர்களுக்கு மேலதிகமாக இந்தப் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, புதிய வாக்காளர்கள் 2024 ஒக்டோபர் 1 மற்றும் 2025 பெப்ரவரி 1 ஆகிய திகதிகளில் சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதன்படி, இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்காக மொத்தம் 1,729,330 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.இதற்கிடையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து ஆரம்ப ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க உறுதிப்படுத்தினார்.மேலதிகமாக தேர்தலுக்கான தபால்மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளை முடிவடையும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
  • 199
Added a news 
உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத சுட்டெண்ணில் இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச நிறுவனத்தால், பயங்கரவாதத்தின் தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளை, உலகளாவிய பயங்கரவாத சுட்டெண்ணில் தரவரிசைப்படுத்துகிறது.உலக மக்கள் தொகையில் 99.7 சதவீத மக்களை உள்ளடக்கிய, 163 நாடுகளுக்கு பயங்கரவாதத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்து, உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல் கொண்ட நாடுகளின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய, உலகில் அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள நாடாக புர்கினா பாசோ முதலிடத்தில் உள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தான் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள நாடுகளில் சிரியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தக் குறியீட்டின்படி, பயங்கரவாத ஆபத்து மிகக் குறைந்த நாடாக, உலகளாவிய பயங்கரவாதக் சுட்டெண்ணில் இலங்கை 100 வது இடத்தில் உள்ளது.2023 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் 36 வது இடத்தில் இருந்த இலங்கை, 64 இடங்கள் பின்தங்கி, பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தெற்காசிய பிராந்தியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதல்களும் பதிவாகாத நாடுகளாக இலங்கை மற்றும் பூட்டான் பெயரிடப்பட்டுள்ளன.மேலும் 2019ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
  • 201
Added a news 
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் நேற்றுவிசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.இது தொடர்பில் அதில் குறிப்பிட்டதாவது,தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான பரீட்சை ஒன்று 2028 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக அரசாங்கத்தால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.புலமைப்பரிசில் பரீட்சை ஒரு போட்டிப் பரீட்சையாக மாறியிருப்பது பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளால் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலைகளுக்கு இடையிலான தர ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.00
  • 202
Added a news 
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் நேற்றுவிசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.இது தொடர்பில் அதில் குறிப்பிட்டதாவது,தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான பரீட்சை ஒன்று 2028 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக அரசாங்கத்தால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.புலமைப்பரிசில் பரீட்சை ஒரு போட்டிப் பரீட்சையாக மாறியிருப்பது பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளால் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலைகளுக்கு இடையிலான தர ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.00
  • 201
Added a news 
ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளதும் கடற்படைகள் தென் கிழக்கு ஈரான் கடற்பரப்பான வடக்கு இந்து சமுத்திரத்தில் இன்று கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபடுகின்றன.ஈரானின் தென் கிழக்கு துறைமுக நகரான சபாஹர் கடற்கரைப் பகுதியில் இப்பயிற்சி இடம்பெறுகிறது.இப்பயிற்சியில் ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளின் கடற்படைகளும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படையும் அவற்றின் போர்க்கப்பல்களும், தளவாடக் கப்பல்களும் பங்குபற்ற உள்ளன.பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துதல், பலதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவித்தல், உலக அமைதியைப் பாதுகாத்தல், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பொதுவான எதிர்காலத்துடன் கடல் சார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கான பங்கேற்பாளர்களின் திறன்களை வெளிப்படுத்துவதை இப்போர்ப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது ஈரானிய பாதுகாப்பு தரப்பினர் என தெரிவித்துள்ளனர்
  • 204
Added a news 
குமார் சங்கக்கார 47 பந்துகளில் 106 ஓட்டங்களை எடுத்து, சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற உதவினார்.இந்த வெற்றியின் மூலம், இலங்கை லீக்கில் முதலிடத்தைப் பிடித்தது, அத்துடன், மேற்கிந்திய தீவுகள் அல்லது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.அதேவேளை, நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 146 ஓட்டங்களை பெற்றது.எனினும், இலங்கை அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை எடுத்து போட்டியில் வெற்றி ஈட்டியுள்ளது.
  • 206
Added a news 
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நாளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவருமே இன்று காலை பதவியேற்கின்றனர்.யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேமசங்கர் சுமார் 28 ஆண்டுகள் நீதிச் சேவையில் கடமையாற்றியுள்ளார்.1967ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலையில் அன்னலிங்கம் (முன்னாள் அத்தியாவசிய சேவைகள் உதவி ஆணையாளர்) மகாலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர் பிறந்தார்.துன்னாலை அமெரிக்க மிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்து சட்டத்துறையில் கல்வி கற்று சட்டத்தரணியானார்.1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நீதித்துறை அலுவலராக நீதிபதி நியமனம் பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, சாவக்கச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் ஒரே தடவையில் நீதிவானாகவும் மல்லாகம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் என யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாகக் கடமையாற்றியுள்ளார்.சுமார் 14 ஆண்டுகள் நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த அன்னலிங்கம் பிரேமசங்கள் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக (மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நாடாளுமன்றினால் அதிகரிக்க முன்னர்) பின்னர் 2013ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளராக பதவி வகித்ததுடன் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு என மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் சுமார் 13 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.இந்த நிலையில் 27 ஆண்டுகள் நீதிச் சேவையில் முதல் நிலை நீதிபதியாகத் தொடர்ந்த நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், தலைமை நீதியரசர் முறுது பெர்னான்டோ தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையுடனும் சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடனும் ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
  • 207
Added a news 
வடகிழக்கு இங்கிலாந்தில் அமெரிக்க இராணுவத்திற்காக ஜெட் எரிபொருளை ஏற்றிச் சென்ற ஒரு டேங்கர் கப்பல் ஒரு கொள்கலன் கப்பலுடன் திங்கட்கிழமை (10) மோதி விபத்துக்குள்ளானது.இந்த மோதலில் இரு கப்பல்களிலும் தீப்பிடித்தது.இதனால் பல வெடிப்புகள் ஏற்பட்டதுடன், இரு குழுவினரும் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.பல்லாயிரக்கணக்கான தொன் ஜெட் எரிபொருளை சுமந்து செல்லக்கூடிய அந்த டேங்கர் கப்பல், சிறிய கொள்கலன் கப்பல் மோதியபோது நங்கூரமிட்டிருந்ததாகவும், அதன் சரக்கு தொட்டி உடைந்து கடலில் எரிபொருளை வெளியிட்டதாகவும் அதன் இயக்குநரான ஸ்டெனா பல்க் கூறினார்.இந்த சம்பவத்தில் தீங்கிழைக்கும் செயல்கள் அல்லது பிற நபர்கள் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று இரண்டு கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.பிரித்தானியாவின் கடலோர காவல்படை ஒரு அறிக்கையில், விபத்தினை அடுத்து 36 பணியாளர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.போர்த்துகீசியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலான சோலாங் (Solong) இன் குழு உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் பணி முடிவடைந்துள்ளதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இன்னும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.அமெரிக்க தளவாடக் குழுவான க்ரௌலியால் இயக்கப்படும் ஸ்டெனா இம்மாகுலேட் (Stena Immaculate) என்ற டேங்கர் கப்பல், ஜெட்-ஏ1 எரிபொருளை ஏற்றிச் சென்றபோது, ​​நங்கூரமிட்டிருந்த ​​சரக்குக் கப்பலான சோலாங்கில் மோதியதாக கூறப்படுகிறது.இந்த டேங்கர் கப்பல் அமெரிக்க அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும், தேவைப்படும்போது ஆயுதப் படைகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய அணுகுமுறையை திறக்கிறது என்று அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.ஹாம்பர்க்கை தளமாகக் கொண்ட சோலாங் கப்பலின் உரிமையாளர் எர்ன்ஸ்ட் ரஸ், கப்பல் பிரித்தானிய கடற்கரையான ஹம்பர்சைடில் இருந்து வடக்குக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​GMT 10.00 மணிக்கு ஸ்டெனா இம்மாகுலேட்டுடன் மோதியதாக குறிப்பிட்டார்.மோதலின் தாக்கத்திலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகளிலும் இரு கப்பல்களும் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்தன.சோலாங் கப்பலில் இருந்த 14 பேரில் 13 பேர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். காணாமல் போன குழு உறுப்பினரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.கடற்படை தரவு வழங்குநர்களின் விபத்து தொடர்பான அறிக்கையின்படி, சோலாங் கப்பலில் 15 கொள்கலன்களில் சோடியம் சயனைடு, முக்கியமாக தங்கச் சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனம் மற்றும் அறியப்படாத அளவு ஆல்கஹால் ஆகியவை இருந்ததாகவும் கூறப்படுகின்றது.இதனிடையே, திங்கட்கிழமை காலை சம்பவ இடத்திற்கு அவசரகால குழுக்கள் ஒரு ஹெலிகொப்டர், நிலையான இறக்கை விமானம், உயிர்காக்கும் படகுகள் மற்றும் தீயணைப்பு திறன் கொண்ட கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.000 
  • 207
Added a post 
மேஷம்எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகி நிறைவு பெறும். பயணங்களில் சுகமான அனுபவங்கள் ஏற்படும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உருவாகும். எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீலம்ரிஷபம்குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தந்திரமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்தியோகப் பணிகளில் இடமாற்றங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மிதுனம்பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். சக ஊழியர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் நெருக்கடிகள் குறையும். குழந்தைகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தேர்ச்சி உண்டாகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : ஊதா கடகம்நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிராமல் இருக்கவும். உயர் அதிகாரிகளால் அலைச்சலும் ஆதாயமும் ஏற்படும். போட்டிகளில் சில மாற்றமான ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு சிம்மம்வேலை செய்யும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனைகளின் போக்கில் கவனம் தேவை. வியாபாரம் நிமித்தமான முடிவுகளில் ஆலோசித்து முடிவெடுக்கவும். பயனற்ற கருத்துக்களை தவிர்க்கவும். ஓய்வு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்கன்னிகுடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். செல்வச்சேர்க்கை குறித்து சிந்திப்பீர்கள். அரசு பணிகளால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகள் கைகூடும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்துலாம்நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மனதை உறுத்திய பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பும், உயர்வும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய முதலீடுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். அனுபவம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு விருச்சிகம்தொழில் நிமித்தமான பயணங்கள் சாதகமாக அமையும். தெய்வ சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகைக்கான வாய்ப்புகள் உருவாகும். தந்தை வழி உறவுகளின் ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சாமர்த்தியமாக செயல்பட்டு எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிக்கல்கள் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சைதனுசுஉடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தந்தை வழி ஆதரவுகள் அதிகரிக்கும். இழுப்பறியான சில வரவுகள் வசூலாகும். நண்பர்கள் அரவணைத்து செல்வார்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புரிதல் பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மகரம்பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்கும்பம்உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். குழந்தைகளுக்கான சுபகாரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் நீங்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சலனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சைமீனம்வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
  • 292
Added a post 
குரோதி வருடம் மாசி மாதம் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11.3.2025.சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 10.30 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.இன்று அதிகாலை 03.07 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.மூலம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 298
  • 299
  • 301
Added a post 
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் ஜாம்ஷெட்பூரில் டாடா ஸ்டீல் ஊழியர்களுடன் வாராந்திர சந்திப்பை நடத்திக் கொண்டிருந்தார்.*ஒரு தொழிலாளி ஒரு தீவிரமான பிரச்சினையை எடுத்துக் கொண்டார்.*தொழிலாளர்களுக்கான கழிப்பறைகளின் தரம் மற்றும் சுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளது என்றார்.*அதேசமயம், எக்ஸிகியூட்டிவ் கழிவறைகளின் தூய்மை மற்றும் சுகாதாரம் எப்போதும் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.*அதைச் சரியாக அமைக்க எவ்வளவு நேரம் தேவை என்று தலைவர் தனது உயர் அதிகாரியிடம் கேட்டார்.*அதை சரி செய்ய நிர்வாகி ஒரு மாதம் கேட்டார்.*சேர்மன், "நான் அதை ஒரு நாளில் செய்துவிடுகிறேன். எனக்கு ஒரு தச்சனை அனுப்பு" என்றார்.*அடுத்த நாள், தச்சன் வந்தபோது, ​​*அவர் சைன் போர்டுகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டார்*.தொழிலாளர் கழிப்பறையில் உள்ள அடையாள பலகை *"நிர்வாகிகள்"* மற்றும் நிர்வாகிகளின் கழிப்பறையில் *"தொழிலாளர்கள்"* என்று காட்டப்பட்டுள்ளது.தலைவர் *இந்த அடையாளத்தை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்* என்று அறிவுறுத்தினார்.இரண்டு கழிப்பறைகளின் தரம் அடுத்த மூன்று நாட்களில் சம நிலைக்கு வந்தது.*தலைமை என்பது நிர்வாகியாக இருப்பதை விட மேலானது**ஒழுக்கம்:*பிரச்சினையை கண்டறிவதற்கு விமர்சன சிந்தனை தேவை**ஆனால் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான சிந்தனை தேவை*இது கதையல்ல உண்மை சம்பவம்.
  • 441
Added a post 
விறகு வெட்டி ஆற்றோரம் விறகு வெட்டும் போது கோடாலி ஆற்றில் விழ ஒரு வன தேவதை முதலில் தங்க கோடாலி கொடுக்க, அவன் அது இல்லை என்று சொல்ல வெள்ளி கோடாலி கொடுக்க அதுவும் இல்லை என்று சொன்னவுடன் அவனுடைய இரும்பு கோடாலியை கொடுக்க அவன் அதுதான் என்று சொல்ல வன தேவதை அவன் நேர்மையை பாராட்டி மூன்று கோடாலியையும் அவனிடமே கொடுத்ததாம்.மூன்று கோடாலியை எடுத்து கொண்டு அவன் வீட்டுக்கு செல்ல! அங்கே அவன் பெஞ்சாதி ஏது இந்த தங்கம் மற்றும் வெள்ளி கோடாலி என்று கேட்க அதற்கு அவன் வன தேவதை கொடுத்தது என்று சொல்ல !மனைவி யார்கிட்ட காதில் பூ சுற்றுகிறாய் என்று சொல்லி, அதெல்லாம் எனக்கு தெரியாது நீ அந்த வன தேவதையை காட்டு என்று சொல்ல, சரி என்று சொல்லிட்டு வன தேவதை இருக்கும் இடத்திற்கு கூட்டி சென்றான்.மனைவியிடம் நீ ஆற்றோரம் இருக்கும் மரத்தின் பக்கத்தில் ஒளிந்து கொள் நான் முன்பு போல் கோடாலியை ஆற்றில் தவற விட்டால் அந்த வன தேவதை வரும் அப்புறம் நீ பேசி கொள்ளலாம் என்று மனைவியிடம் சொன்னான்.அவளும் அதே மாதிரி ஒளிந்து கொள்ள திடீர் என்று கால் தவறி ஆற்றில் விழுந்து விட்டாள்.இவன் இப்போ ஐயோ ! என் மனைவியை காப்பாற்று என்று கத்த!அப்ப அங்கு வந்த வன தேவதை என்று விசயத்தை கேட்டு விட்டு ஆற்றின் உள்ளே சென்று முதலில் நயன்தாராவை கூட்டி வந்து விறகு வெட்டி கிட்ட வந்து இந்தா உன் மனைவி என்று சொல்ல!விறகு வெட்டி ஆமாம் இதுதான் என் மனைவி என்று சொல்ல!அதற்கு என்னப்பா நேற்று நல்லவனா இருந்த இன்னைக்கு மாறி விட்டே என்று கேட்க.விறகு வெட்டி சொன்னான் ! உன்னை பற்றி எனக்கு தெரியும் நீ முதலில் அழைத்து வந்த நயன்தாரா இல்லை என்று சொன்னால் அப்புறம் நீ சமந்தாவை அழைத்து வருவே! நான் அவரும் இல்லை என்று சொன்னால் !கடைசியாக என் மனைவியை கூட்டிட்டு வருவே! ஆமாம் என்று சொன்னால் மூன்று பேரையும் வீட்டுக்கு கூட்டிட்டு போ! என்று சொல்லி விடுவே.ஏற்கனவே ஒன்னை கட்டிகிட்டு நான் படுற கஷ்டம் உனக்கு எங்க தெரியும் என்றான்.
  • 489
Added a post 
அரிதான பெருமாள் திருக்கோலங்கள் கொண்ட கோவில்கள் :1. ஆசியாவிலேயே மிகப் பெரிய பள்ளி கொண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ள தலம் திருமயம். மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில் இது மட்டுமே.2. திருப்பதி ஏழுமலைக்கு மேல் நாராயணகிரி என்ற தலம் உள்ளது. இங்கு ஏழுமலையானின் பாதச்சுவடுகள் உள்ளன. இதனை ஸ்ரீவாரி பாதம் என்பார்கள். பெருமாள் திருமலையில் முதலில் தடம் வைத்த இடம் இது தான் என சொல்லப்படுகிறது.3. திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெருமாளின் உற்சவ மூர்த்தியின் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.4. உடுப்பியில் உள்ள கிருஷ்ணருக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் புடவை சாத்தி வழிபடும் முறை உள்ளது.5. ஆந்திர மாநிலம் பத்ராச்சலத்தில் உள்ள ராமர் கோவிலில் உள்ள ஸ்ரீராமர், கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி காட்சி அளிக்கிறார்.6. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் இருக்கும் மூலவருக்கு தினமும் 3 லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பிறகு இந்த எண்ணெய் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.7. சிவ பெருமானைப் போலவே பெருமாளை மூன்று கண்களுடன் தரிசிக்க முடியும். சென்னை அருகில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள மூலவர் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன.8. திருக்கண்ணபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார் கண்ணபுர பெருமாள்.9. திருச்சிக்கு அருகில் உள்ள வேதநாராயணன் கோவிலில் காட்சி தரும் பெருமாள் நான்கு வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். அதனாலேயே இவருக்கு வேதநாராயணன் என்ற பெயர் ஏற்பட்டது.10. கர்நாடகாவிலுள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில், ரங்கநாதருக்கு படுக்கையாக இல்லாமல், குடைபிடித்தபடி காட்சி தரும் ஆதிசேஷனை தரிசனம் செய்யலாம். இங்கு ஆதிசேஷன் 7 தலைகளுடன் காட்சி தருகிறார்.11. திருமலை, கரூர் தான்தோன்றிமலை, கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், திருச்சி குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோவில்களிலும் தாயாருக்கு தனியாக சன்னதி கிடையாது.12. ஸ்ரீவைகுண்டத்தில் பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனிக்காமல், ஆதிசேஷன் குடைபிடித்து நின்ற கோலத்தில் காட்சி தருவதை காணலாம்.13. காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோவிலில், பெருமாள் ஜோதி வடிவமாக இருப்பதாக ஐதீகம். இங்கு திருக்கார்த்திகை நாளன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடும் வழக்கம் உண்டு.14. தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பெருமாளை மூன்றடி உயரம் கொண்ட சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து வழிபடுகிறார்கள். இதன் இரு புறமும் சங்கு, சக்கரம் உள்ளது.15. மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலில் பெருமாள் ஒரு கையை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சயனித்து இருக்கும் கோலத்திலும், சங்கு, சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார்.
  • 494
Added a post 
திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரத்தில் அந்தத் தெருவின் வழியாகப் போகிறவர்கள், அந்த வீட்டை வியக்காமல் போக முடியாது.பார்ப்பதற்கு சாதாரண விவசாயக் குடும்பம் வசிக்கும் வீடு போல் தென்பட்டாலும், உள்ளிருந்து வரும் ‘கமகம’ ஊதுவத்தி மணமும், கதம்பமும், சாம்பிராணி கலந்து கட்டி வரும் வாசமும், இதையெல்லாம் விட “ஓம் நமச்சிவாய” என்று அழகிய இளங்குரலில் வரும் மந்திரமும், அதை ஒரு சிவாச்சாரியார் வீடோ என்றே ஐயம் கொள்ள வைக்கும்.“அருள்மொழி.. அருள்மொழி”பதிலில்லை.. போய்ப் பார்த்தார் ஆயி அம்மாள்.கண்மூடி தியானத்தில் அமர்ந்திருந்தாள், அருள்மொழி.ஆச்சரியமாக இருந்தது ஆயி அம்மாளுக்கு.. “எங்கிருந்து வந்தது இந்தப் பெண்ணிற்கு இவ்வளவு பக்தி. இவள் வயது பெண்களெல்லாம், தோழிப் பெண்களோடு விளையாடிக் கொண்டும், காட்டில் வேலை செய்து கொண்டும் இருக்கிறார்கள். இவள் மட்டும்தான் ‘சிவமே கதி’ என்றிருக்கிறாளே” என்று குழப்பத்துடனே நின்றிருந்தார்.அரைமணிநேரம் கழித்து தீபாரதனை செய்து விட்டு சாப்பிட வந்தாள் அருள்மொழி.சாப்பிடும் முன்பும் கூட, தியானம் செய்து விட்டு சாப்பிடும் பெண்ணைப் பார்த்து பயந்தே போனாள், ஆயி அம்மாள்.கணவர் கோபால் பிள்ளை வீடு வந்தவுடன், “எதாவது செய்யுங்க. சாமி கும்பிட வேண்டியதுதான். அதுக்காக இப்படியா? எந்நேரமும் பூஜையறையே கதின்னு கிடக்கிறா” என்று ஆதங்கப்பட்டார் ஆயி அம்மாள்.மனைவியின் புலம்பலைக் கேட்ட கோபால், “சரி ஆயி.. உன்னோட சித்தப்பா பையனுக்கோ, இல்லை எங்க அக்கா பையனுக்கோ வர்ற தை மாசம் பரிசம் போட்டுரலாம். இரண்டு பேருமே நல்லவங்க. கல்யாணம் ஆனா எல்லாம் சரியாப் போயிரும்” என்றார்.வாசலில் தொங்கிய மாவிலைத் தோரணமும், சமையலறையில் காலையிலேயே வீசிய பலகார வாசனையுமாக, அன்று வீடே களை கட்டி இருந்தது.“என்னம்மா விசேஷம்?” என்றாள் அருள்மொழி.“இன்னைக்கு என்னோட சித்தப்பா வீட்டில் இருந்து உன்னை பெண் கேட்டு பரிசம் போட வரப் போகிறார்கள். உன்னிடம் சொல்லலாம்னு பார்த்தா நீ கண்ணைத் தொறந்தாத்தானே?”துடித்துப் போனாள் அருள்மொழி.‘என்ன செய்வது?’ என்று தெரியாமல் திகைத்தாள் அருள்மொழி. ‘பரிசம் போட்டுவிட்டால், கையைக் காலைக் கட்டியாவது கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள்’ என்று பயம்கொண்டாள்.மனதில் இருந்த துயரம், கால்களைக் கட்டிப் போடவில்லை. விறுவிறுவென்று வேகமாக நடக்கத் தொடங்கினாள்.“சிவாயநம.. சிவாயநம” என்று ஜெபித்தபடி நடந்தவர், தன்னுணர்வு பெற்றுப் பார்த்த போது கோமுட்டிக்குளம் என்ற நீர்த் தடாகத்தின் முன் நிற்பதைக் கண்டார்.“அருணை ஈஸ்வரா.. உன் கருணையே.. கருணை..” என்றபடி, அந்தக் குளத்தில் குதித்து விட்டாள், அருள்மொழி.குளத்தைச் சுற்றி இருந்த வயல்வெளியில் வேலைசெய்து கொண்டிருந்தவர்கள், அவள் விழுந்ததைப் பார்த்து ஓடிவந்தனர். குளத்தில் குதித்துத் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை.ஆயி அம்மைக்கும், கோபாலனுக்கும் அழுதழுது கண்ணீர் வற்றி விட்டது. எல்லோரும் எவ்வளவோ சொல்லியும் குளக் கரையை விட்டு நகர மாட்டேன் என்று அங்கேயே தவம் இருந்தார்கள். குளத்தில் எதாவது சின்னச் சலனமாவது தெரி கிறதா? என்று பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் குளம் மவுனமாகவே இருந்தது.மூன்றாவது நாள் குளம் திடீரென சல சலத்தது. தாயும், தந்தையும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பார்த்தார்கள். அங்கே அன்று மலர்ந்த மலர்போல் உயிருடன் வந்தாள், அருள்மொழி.விஷயம் கேள்விப்பட்டு கூடிய கூட்டத்தினருக்கு, அருள்மொழி அங்கிருந்த குளக்கரை மண்ணை எடுத்து கொடுக்க, அது அருணாசலேஸ்வரர் அவல், பொரி பிரசாதமாக மாறியது.தனக்கு சிவபெருமானே குருவாக இருந்து யோக நிலையைக் கற்றுத் தந்ததாகவும், தான் ஒரு பெண் சித்தராக மாறி விட்டதாகவும் கூறிய அருள்மொழி, தன் பெயர் ‘அம்மணி அம்மாள்’ என்றும் சொன்னார்.அப்போதே திருவண்ணாமலைக்கு பயணப்பட்டார். கண் நிறைய அண்ணாமலையானை தரிசித்து “பக்தர் களுக்கு தொண்டு செய்வதே மகேசனைத் திருப்திப்படுத்தும்” என்று அன்றிலிருந்து அருணைக்கு வரும் பக்தர்களுக்கும், கிரிவலம் செய்பவர்களுக்கும் தொண்டாற்றத் தொடங்கினார். ஆனால் ஈசன் எதற்காக அவரைத் தேர்ந்தெடுத்தானோ, அந்தப் பணி முடிவடையாமலேயே இருந்தது.திருவண்ணாமலைக் கோவிலில் அனைத்து கோபுரங்களும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், வடக்கு கோபுரம் மட்டும் எப்போது கட்ட ஆரம்பித்தாலும் ஏதோ ஒரு தடங்கல் வந்து கட்டி முடிக்க முடியாமல் மொட்டை கோபுரமாகவே நின்றது.ஒருநாள் இரவு அம்மணி அம்மாள் கனவில் வந்த ஈசன், “வடக்கு கோபுரத்தைக் கட்டுவதே உன் பணி” என்று சொல்லி மறைந்தார்.அன்றில் இருந்து உயிர் மூச்சாக அந்தப் பணியைத் தொடங்கினார்.அவர் ஆற்றலை அறிந்த வணிகர்கள், பண உதவி செய்தனர். ஒரே ஒருவர் மட்டும் பணத்தை வைத்துக் கொண்டே இல்லை என்று கூறிவிட்டார்.அப்போது அம்மணி அம்மாள், அவரது சட்டைப் பையில் இருந்த பணத்தின் அளவை சரியாகச் சொல்ல, வீட்டுக்குச் சென்றதும் எண்ணிப்பார்த்த வணிகருக்கு பெரிய அதிர்ச்சி. அம்மணி அம்மாள் கூறிய தொகை, ஒரு ரூபாய் கூட அதிகமாகவோ குறைவாகவோ இல்லாமல், மிகச்சரியாக இருந்தது. அந்தச் செல்வந்தர், உடனடியாக மனம் மாறி, இருமடங்கு பொருளுதவி செய்தார்.இவ்வாறு பலரும் பொருளுதவி செய்ய, கோபுரம் ஒவ்வொரு நிலையாகக் கட்டி முடிக்கப்பட்டு, ஐந்து நிலைகள் வரை வந்துவிட்டது.எல்லாப் பணமும் தீர்ந்து விட்டாலும், இனி யாரைக் கேட்பது என்று சோர்வடையாமல், மைசூர் மகாராஜாவிடம் சென்றார், அம்மணி அம்மாள்.இவரின் எளிய தோற்றம் கண்டு, தடுத்து நிறுத்திய காவலன் “யார் நீ?” என்றான்.“மகாராஜாவிடம் உதவி கேட்டு வந்திருக்கிறேன் அப்பா”“பார்க்கலாம்.. அப்படிப் போய் உட்காரு..”சொன்னபடியே ஓரமாகப் போய் உட்கார்ந்து விட்டார் அம்மணி அம்மாள்.ஆனால் தனது லகிமா சக்தியால், அரண்மனைக்குள் தர்பார் மண்டபத்திற்குள் நுழைந்து, மகாராஜா முன்னால் போய் நின்றார்.உரிய அனுமதி இல்லாமல் தன் முன் வந்து நின்ற பெண்ணைப் பார்த்த அரசர் ஆச்சரியம் அடைந்து, “யார் நீங்கள்?” என்றார்.“என் பெயர் அம்மணி. திருவண்ணாமலை வடக்கு கோபுரம் கட்ட பொருளுதவி கேட்டு வந்தேன். காவல்காரன் உள்ளே விட மறுத்ததால், லகிமா சக்தியைப் பயன்படுத்தி உள்ளே வந்தேன்.”“என்ன இது.. என்னால் நம்ப முடியவில்லையே?. யாரங்கே காவல்காரனை அழைத்து வா”மன்னனின் கட்டளைப்படி அரண்மனைக் காவலன் உள்ளே வரவழைக்கப்பட்டாள். அவன் தான் வெளியே நிறுத்தி வைத்த பெண்மணி, உள்ளே இருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டான். “நீ எப்போது உள்ளே வந்தாய்.. வெளியே அல்லவா அமர்ந்திருந்தாய்?”மகாராஜா குழம்பிப் போய் அம்மணி அம்மாளையும் உடன் அழைத்துக் கொண்டு வெளியே போய்ப் பார்க்க, அங்கே அம்மணி அம்மாள் அமர்ந்து இருந்தார்.அவரது சக்தியைக் கண்டு வியந்து, அவருக்கு உரிய மரியாதைகள் செய்து பட்டுப்புடவை பரிசளித்து குதிரைகளில் பொன்னும் பொருளும் அனுப்பி வைத்தார்.அதைக்கொண்டு ஆறு மற்றும் ஏழாம் நிலைகளைக் கட்டி முடித்தார். மீண்டும் பொருள் தீர்ந்து விடவே, “நீயே கதி.. நீயே சரணம் நமசிவாய” என்று தவத்தில் ஆழ்ந்து விட்டார்.தவத்தில் காட்சி அளித்த இறைவன், “பொருள் தேவைப்படும் இடங்களில் எல்லாம், வேண்டிய அளவு திருநீற்றைக் கொடு. அது பொன்னாக, கூலிப்பணமாக மாறி விடும்” என்றார்.அம்மணி அம்மாளும் அதன்படியே செய்ய பதினொரு நிலைகள் கட்டி முடிக்கப்பட்டன.இவரது இறை ஆற்றலையும், விடாமுயற்சியும் கண்டு அப்போதைய ஆங்கிலேய அரசு வாய் பிளந்தது.மேற்கு மற்றும் தெற்கு கோபுரங்களை விட உயரமாகவும், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்திற்கு இணையாகவும் இருந்த கோபுரம் பதிமூன்று கலசங்களைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது.கோபுரத்தைக் கட்டி முடித்து, ஈசன் அருளால் தானே முன்னின்று கோபுர கும்பாபிஷேகத்தையும் செய்து வைத்தார், அம்மணி அம்மாள்.அவர் கட்டியமைத்த கோபுரம், இன்றளவும் ‘அம்மணி அம்மாள் கோபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது.தன் யோக சக்தியால் திருநீற்றின் மூலம், பல்லாயிரக்கணக்கானவர்களின் நோய் தீர்த்த அம்மணி அம்மாள், தனது ஐம்பதாவது வயதில் தைப்பூச தினத்தன்று ஈசனோடு கலந்தார்.இவரது ஜீவ சமாதி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், எட்டாவது லிங்கமான ஈசான்ய லிங்கத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.1735-ம் ஆண்டு மார்கழித் திங்கள் ஆயி அம்மாள் - கோபால் பிள்ளை தம்பதிக்கு மார்கழி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் அம்மணி அம்மாள். அவர் சிவனையே குருவாகக் கொண்டு ஐம்பது ஆண்டுகள் இறை தொண்டு செய்து, 1875-ம் ஆண்டு சிவலோகப் பதவி அடைந்தார்.அவர் ஈசனோடு கலந்து 150 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்றும் இவரின் சமாதியில் கொடுக்கப்படும் விபூதிப் பிரசாதம் நோய்களை தீர்க்கிறது.இன்றும் கிரிவலம் வரும் பக்தர்கள் அம்மணி அம்மாளை தியானம் செய்து நம்பிக்கையோடு தனது குறைகளைச் சொல்லிச் செல்கின்றனர். அவர்களின் வேண்டுதலை அம்மணி அம்மாள் அரூபமாக நின்று கேட்டு வழிநடத்துவதாகவும் நம்பப்படுகிறது. அவரது சன்னிதியில் தியானம் செய்தாலே, மனம் அமைதி பெறுவதை உணர முடியும்.பெண்களுக்கு ஆன்மிக சுதந்திரம் இல்லாத காலகட்டத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒரு பெண் தன்னந்தனியாக ஒரு கோபுரத்தையே கட்டி முடித்திருக்கிறார் என்பது சாதாரணக் காரியமல்ல..இறையருளும், விடாமுயற்சியும், வைராக்கியமும் தன்னம்பிக்கையும் கொண்ட அம்மணி அம்மாளின் நினைவாக இன்றும் போற்றப்படும் திருவண்ணாமலை வடக்கு கோபுரத்தையும், அவரின் ஜீவசமாதியையும் எப்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் சென்றாலும் தரிசித்து வரலாம்.
  • 501
Added a post 
அகத்திய மாமுனிவர் ஸ்ரீ சக்ரம் அமைத்த ,இந்த ஊத்துமலை பாலசுப்பிரமணியர் திருக்கோயில், மருத்துவ குணங்கனால் கொண்ட சுனைகளும் அரிய வகை மூலிகையாலும் நிரம்பிய திருத்தலம்.சித்தர் பெருமக்களால் உருவாக்கப்பட்ட மூலிகை ஊற்றுநீர், இன்றும் வற்றாத மூலிகை நீராக மக்களின் நோய்களைத் தீர்த்துக் கொண்டுள்ளது. சப்தசாகரம் என்றழைக்கப்படும் ஏழுவிதமான மூலிகைகள் கலந்த சுனைகள், தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்களைப் போக்கும் ஆற்றலுடையதாக திகழ்கிறது.குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்லும்படி இந்த ஊத்துமலை முருகன் கோயில் மூன்று நிலைகளை கொண்டதாக அமைந்து உள்ளது.இம் மலையை சுற்றி ஸ்கந்தகிரி, நாமகிரி, குமரகிரி, பத்மகிரி என மலை வளம் நிறைந்த இந்த ஸ்தலம், நோய் தீர்க்கும் அற்புத தலமாக அமைந்து உள்ளது.அகத்தியர் உட்பட பதினெண் சித்தர்களும் வழிபட்ட இடம், ஸ்ரீசக்ரம், மூலிகை சுனை, மூலிகை வனம், மலை மீதமர்ந்த திருக்கோயில் என பல சிறப்புகளை கொண்ட இந்த ஊத்துமலை முருகன் கோயில் சேலம் , சீலநாயக்கன் பட்டி என்ற ஊருக்கு அருகில் உள்ளது,
  • 503
Added a post 
வடகொரியாவை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் இதோ :-வடகொரியாவில் பாலியல் படங்களைப் பார்ப்பது, தென்கொரிய படங்களை பார்ப்பது, பைபிள் வாசிப்பது குற்றமாக கருதப்படும்; அப்படி செய்தால் அவர்களை அந்நாட்டு அரசு தூக்கிலிட்டு விடுவார்கள்.வடகொரியாவில் கஞ்சா செடி வளர்ப்பது சட்டப்படி செல்லும் தெரு ஓரங்களில் கூட இந்த செடி வளர்ந்து இருக்குமாம். போதை மற்றும் மருத்துவத்திற்காக இந்த செடியை அந்நாட்டு அரசு பயன்படுத்துகிறது.வடகொரியாவில் அரசை எதிர்த்து பேசினால் அவர்களை சிறையில் விடுவது மட்டுமல்லாமல் மூன்று தலைமுறையினரையும் சிறைவாசம் அனுபவிக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிடும்.வடகொரிய ராணுவத்தில் பணி புரிய வேண்டுமென்றால் 28 வகையான ஹேர்ஸ்டைல் இருந்தாலே போதுமானது.வடகொரியாவில் சாமானிய மக்கள் கார்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.வட கொரியாவின் கிம் -ஜோங்- இல் பிறந்தநாளை அந்நாட்டு மக்கள் புத்தாண்டாக அனுசரிக்கிறார்கள்.வடகொரியாவில் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடக்கும் ஆனால் அங்கு ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.உலக அளவில் வடகொரிய ராணுவம் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.வட கொரிய அதிபர் கிம் ஜாங் இல் அவரின் உடல் பதப்படுத்தப்பட்டு இருக்கின்றது.வடகொரியாவில் காண்டம் தடை செய்யப்பட்டிருக்கின்றது இதனால் தென்கொரிய மக்கள் ஒரு பேராஷூட் முழுவதும் வடகொரிய மக்களுக்கு இதனை பரிசாக அளித்துள்ளனர்.மைக்ரோசாப்ட் போன்று வடகொரியாவில் ரெட் ஸ்டார் என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகின்றது.
  • 507
Added a post 
2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.இது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அகவுள்ளார். சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்சனி பகவான் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். சனி பெயர்ச்சிக்கு பிறகு சனி பகவான் ஏப்ரல் மாதம் உதயமாவார். தற்போது மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ள சனி பகவான் அந்த ராசியிலேயே உதயமாவார்.சனி உதயம்சனி பெயர்ச்சிக்கு பின் நிகழவுள்ள சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும்.மற்றும் சனி உதயத்தின் தாக்கத்தால் சனி பகவானின் முழுமையான ஆசிகள் கிடைக்கும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் தொடர்ந்து முன்னேறும். பலர் தங்கள் வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்கலாம். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.ரிஷப ராசிரிஷப ராசிக்கு 11 இல் லாபத்தில் சனி பகவான் வருகிறார். ரிஷபத்துக்கு சுக்கிரன் அதிபதியாக உள்ளார். சுக்கிரனும், குருபகவானும் நட்பு கிரகங்கள். கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலத்துக்குச் சென்று வருவது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும்.பெற்றோர், ரத்த பந்த உறவுகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் பெரியோரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் அவர்களை உள்ளங்கையில் வைத்து தாங்குவது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.மிதுனம்:மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியும் அதன் பின் வரும் சனி உதயமும் அதிக அளவில் நன்மை பயக்கும். நிதி நிலை முன்னேறும்.பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பழைய முதலீட்டிலிருந்து திடீரென்று நிதி லாபம் கிடைக்கக்கூடும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.மகரம்:சனி பெயர்ச்சிக்கு பிறகு வரும் சனி பகவானின் உதயத்தால், மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். இதன் காரணமாக மிகப்பெரிய அதிர்ஷ்டம் இவர்களுக்கு கிடைக்கும்.செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.சனி பகவானின் பரிபூரண அருள் பெறநீதி தேவரனான சனி பகவானின் பரிபூரண அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.நீதி தேவரனான சனி பகவானின் பரிபூரண அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.
  • 515
Added a post 
காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் (தேவராஜன்) கோயில் இருக்கிறது.அதை மலைக்கோயில் என்றுதான் பெரும்பாலானோர் சொல்வார்கள்.'ஹஸ்திகிரி'யில் வாசம் செய்பவர், 'ஹஸ்திகிரி நாதர்' - இப்படி ஒரு பெயர்,வரதருக்கு.வருஷத்தில், ஏறக்குறைய முந்நூறு நாள்கள் உற்சவம் நடைபெறும். அந்தக் கோயிலில் உண்மையில் அவர் ராஜாதான்.திருவிழா என்றால் அப்படி ஒரு கோலாகலம்.காஞ்சிபுரத்தில் மூன்று 'டை'கள் ரொம்ப பிரசித்தம். - நடை,,வடை,,குடை!நடைவரதராஜர், பல்லக்கு அல்லது வாகனத்தில் பவனி வரும்போது, அந்த நடை கண்கொள்ளாக் காட்சி. பல்லக்கு,வாகனம் தூக்குபவர்களுக்கு அவ்வளவு பயிற்சி. யுத்த வீரர்கள் நடையில் மிடுக்கு இருப்பதைப் போல, பல்லக்குத் தூக்கிகள் நடையில் தெய்வீகமான அழகு,பார்த்துப் பார்த்து ரசிக்கத்தக்கதாக இருக்கும்.வடைஅடுத்தது, காஞ்சிபுரம் மிளகு வடை.,காஞ்சிபுரம் இட்லி - நாக்கு படைத்தவர்களுக்குப் பரமானந்த விருந்து. காஞ்சிபுரம் மிளகு வடை பல நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.குடைகாஞ்சிபுரத்தில்தான் கோயில்களுக்கான குடை தயாரிப்பவர்கள் பல பேர் ஆண்டாண்டுக் காலமாக இருந்து வருகிறார்கள். குடையிலும் பல தினுசுகள் வகை. சின்னக் குடையிலிருந்து மிகப் பெரிய, மிகவும் அழகான கை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட குடைகள் வரை தயாரிக்கப்படுகின்றன.தமிழ்நாட்டின் பல கோயில்களுக்கு மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் குடைகள்ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
  • 518
Added a post 
இளமை சீக்கிரம் போய்விடும். முதுமை சீக்கிரம் போகாது.ஆசைப்பட்டாலும் கோயிலைப் பார்க்க முடியாது.சொத்து சுகம் இருந்தாலும் சொந்த பந்தம் இருந்தாலும் முதுமையான காலத்துல யாரும் கோயிலுக்கு கூட்டிகிட்டு போக மாட்டாங்க.கடைசி காலத்தில் உயிர் இழுத்துகிட்டு சாவுற நிலைமை யாருக்கும் வரக்கூடாது.யாராக இருந்தாலும் முதுமை கால வாழ்க்கை மிகவும் மோசமானது.கடைசி காலத்துல கட்டில்ல படுத்துகிட்டு பிள்ளைகளுக்கு சிரமத்தை கொடுக்கிற வாழ்க்கை நமக்கு வேண்டாம்.இளமையில் சாப்பிட்ட அத்தனையும் முதுமையில் சாப்பிட தோணும்.பணிவிடை செய்வதற்கு இன்று யாரும் தயாராக இல்லை.அசிங்கமா போயிடும் நம்ம நாற்றம் பிடித்த உடம்பை வைத்துக்கொண்டு மிகவும் கொடுமையான சித்திரவதையை அனுபவிக்க வேண்டும், இறுதி காலத்தில்.சிவசிவ என்று சொன்னாலே உயிர் போய் விட வேண்டும் சிவபெருமான் திருவடிக்கு .சேர்த்து வைத்த சொத்து சுகமெல்லாம் ஒரு பைசாவுக்கு உதவாது. உன்னுடைய பிள்ளைகளும் உனக்கு உதவ மாட்டார்கள். இளமை காலங்களில் சிவபெருமானை நேசி அவர் எதிர்காலத்தில் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார். இளமை காலம் முழுவதும் சிவபெருமான் திருவடியைத் கோயில் கோயிலாக தேடிச் சென்றால், இறுதி காலம் முழுவதும் சிவபெருமான் துணை இருப்பார்.நமசிவாய வாழ்க.....
  • 519