அமரர் Vivekanandan (நடிகர் விவேக்)

  • 1 members
  • 1 followers
  • 1686 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
Added a news 
மாங்குளம் வசந்தநகர் சந்தியில் இராணுவ வாகனமொன்றும் லொறியும் மோதிய விபத்தில் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்ததுடன் 9 சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு முறிகண்டி ஏ 9 வீதியில் மாங்குளம், வசந்தநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாயொருவர் பலியாகியுள்ளார். மேலும் 9 இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.ஏ.09 வீதியின் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரஊர்தி ஒன்றும் திருமுருகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு திரும்ப முற்பட்ட கப்ரக வாகனமும் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் கிளிச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
  • 35
Added a news 
மலையகப் புகையிரதப் பாதையில் புகையிரதத்தில் பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான செயற்பாடுகளால் ஆபத்தில் சிக்கக்கூடும் என புகையிரதப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரையான பகுதியில் சில வெளிநாட்டவர்கள் புகையிரத மிதி பலகைகளில் தொங்கி செல்ஃபி எடுப்பதற்காகவும், சில வெளிநாட்டவர்கள் புகையிரத மிதி பலகைகளில் தொங்கி முத்தமிடுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.இதுபோன்ற பாதுகாப்பற்ற செயல்களில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள், கடந்த 21ம் தேதி ரயிலில் இருந்து தவறி விழுந்து விபத்துக்கு உள்ளானார்கள் எல்ல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் பயணித்த வெளிநாட்டு பெண்களும் விபத்தினால் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.மலையக புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் புகையிரதங்களில் பயணிக்கும் வெளிநாட்டவர்களுக்கு அறிவிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென உல்நாட்டு புகையிரத பயணிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
  • 42
Added a news 
காணாமல் ஆக்கப்பட்டோர் வியடம் தற்போது ஒரு சிலரது சுயநலத்துக்காக சர்வதேசத்தை நோக்கிய வியாபாரமாக ஆக்கப்பட்டமையே உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் உறவுகள் அவலங்களுடனும் ஏக்கத்துடன் இன்றும் இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டுவிட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (26) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த சிறீரங்கேஸ்வரன் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்ததுடன் அது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –எமது நாட்டைப் பொறுத்தளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமென்பது பெரும் பேசு பொருளான ஒரு விடயமாக உள்ளது.அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.ஆனால் பாதிக்கப்பட்ட உறவுகள் அதை நோக்கி சரியாக தமது கோரிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் ஒரு சில சுயநல அரசியல் வாதிகள் தமது தேவைகளுக்காக அந்த உறவுகளின் உணர்வுகளை வியாபாரமாக்கி விட்டுள்ளதன் வெளிப்பாடே இதுவரை எந்தவொரு தீர்வையும் எட்ட முடியாதிருக்கின்றது.இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சிறிதளவேனும் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.ஆனால் 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரையான காலப்பகுதிககுள் காணாமல் அக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு உண்மையாகவே பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து எத்தகைய ஆதரவு அல்லது ஒத்துழைப்புகள் கிடைத்திருக்கின்றது என்பதே இங்கு பார்க்கப்பட வேண்டிய முக்கிய விடயமாக உள்ளது.இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயம் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினாகிய நாம் 1995 களில் அதாவது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட காலப் பகுதியில், பல்வேறு அழுத்தங்கள் இருந்தபோதிலும் அவற்றை உடைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பாதுகாவலர் சங்கத்தை அமைத்து உறவுகளை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெற்றோர்கள் இன்றும் தமது பிள்ளைகள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.அது அவர்களது உணர்வுடன் கூடிய விடயம்.ஆனால் அதை கொச்சைப்படுத்தும் வகையில் ஏற்பாட்டுக் குழு அல்லது சங்கம் என்று கூறி அவர்களது கட்டமைப்புக்குள் உள்நுழைந்த சுயநல அரசியல் குழுவினர் அவர்களது வலிகளையும் வேதனைகளையும் தமக்கான அரசியல் வியாபாரத்தின் முதலீடாக்கி வருமானம் ஈட்டும் ஒரு மையப்பொருளாக அந்த போராட்டத்தை திசைவழிமாறச் செய்துவிட்டனர்.அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து  சுயநலன்களையும் அரசியல் இலாபங்களையும் குறித்த தரப்பினர் கைவிட்டு தீர்வுகளையும் பரிகாரத்தையும் தேடிகொள்ளும் வகையில் அந்த உறவுகளுக்கு ஒத்துழைப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • 44
Added a news 
அமெரிக்காவில் TikTok சமூக ஊடக வலையமைப்பை தடை செய்யும் திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க செனட் சபையில் கையெழுத்திட்ட பின்னரே அமெரிக்க ஜனாதிபதி அதற்கான தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளார்.புதிய முன்மொழிவின்படி, TikTok ஐ வைத்திருக்கும் நிறுவனத்திற்கு அதன் பங்குகளை ஏலம் விட 09 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • 46
  • 46
  • 47
Added a post 
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர இதனைத் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதன்படி, உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள 8,400 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000 
  • 208
Added a post 
தேசிய தொழிலாளர் தினம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது.இவ்வாறு உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள மே தினத்தன்று இலங்கைத்தீவில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மே தினத்தையும் தேர்தல் விளம்பரமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில், எதிர்வரும் தொழிலாளர் தினத்தில் சாதாரண குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பரோல் வழங்குமாறு சர்வதேச கண்டங்களுக்கு இடையிலான மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இதில், துஷ்பிரயோகங்கள், சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டாம் என்றும் இந்த ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.சிறைகள் ஏற்கனவே நிரம்பி வழிகின்றன. நமது நாட்டில் தற்போதுள்ள சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.இந்த கைதிகளில் சிறிய அபராதம் செலுத்த முடியாதவர்களும், சிறு குற்றங்களுக்கு தண்டனை பெற்று பிணை வழங்க ஆள் இல்லாததால் தண்டனை பெற்றவர்களும் உள்ளனர்.கைதிகளுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும்போது இவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 207
Added a post 
நாட்டை அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.சிறப்புப் பயிற்சி பெற்ற 100 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட 50 மோட்டார் சைக்கிள் குழுக்கள் கட்டுகுருந்த விசேட படைப் பயிற்சி முகாமில் 02 வார பயிற்சியை நிறைவு செய்து விசேட அதிரடிப்படை மோட்டார் சைக்கிள் குழுக்களுடன் இணைந்து செயற்படும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இலங்கை பொலிஸாரால் இந்நாட்டில் சிறப்பாக செயற்பட முடியும் என்றும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தில் இருந்து நம் நாட்டை காப்பாற்றவே நீதி நடவடிக்கையை தொடங்க காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்மேலும் அனைவரும் அச்சமின்றி இலக்கை நோக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் அவசரகாலத்தில் துப்பாக்கியை உபயோகிக்க நேரிட்டால், அதைப் பயன்படுத்துங்கள். நாங்கள் உங்களுக்காக நிற்கிறோம். தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000 
  • 209
Added a post 
கிழக்கு ஆபிரிக்க நாடான தன்சானியாவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழந்தனர். மேலும் 236 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.தொடர்ந்தும் அங்கு பெய்து வரும் மழை காரணமாக 51 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு தன்சானிய பிரதமர், அந்த நாட்டு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 209
Added a post 
மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வீழ்ச்சியடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு ஐ.டி.சி ரத்னதீப விருந்தக கட்டடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. ஜனாதிபதியின் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.பொருளாதார வீழ்ச்சியின் காரணமாகவே மக்கள் அதில் பங்கெடுத்தனர். இருப்பினும் அந்த பொருளாதார சரிவிலிருந்து இரண்டு வருடங்களில் நாட்டை மீட்டெடுக்க முடிந்துள்ளது.தற்போது கொழும்பு சுற்றுலா நகரமாக மாறியுள்ளது. சரிவடைந்த பொருளாதாரத்தை சுற்றுலா வியாபாரத்தினால் துரிதமாக மீட்கலாம்.அதற்கான வசதிகளை வழங்க தங்களது தரப்பினர் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 209
Added a post 
கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.இதன் பணிகள் அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வியியற் கல்லூரி பயிற்சி முடித்த 4,160 பேர் கல்லூரிகளை விட்டு வெளியேறவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.000 
  • 208
Added a post 
18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக காவல்துறை விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது.இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சிறார்களுடன் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்ட 10 சம்பங்கள் பதிவாகியுள்ளன.இதன்படி, கூகுள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கைதானவர்கள் 20 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 10 வயதிற்கும் குறைவான பாடசாலை செல்லும் மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளங்களில் தரவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 223
Added a post 
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கு தொடர்பான விராசணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றத்தினால் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது ​​குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, இந்த விசாரணைகள் தொடர்பான விபரங்களை முன்வைக்க ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு கோரியுள்ளதாகக் கூறப்படுகின்றது.இந்நிலையில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான், விசாரணைகளை உடனடியாக முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்ததுடன், அதன் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது000
  • 223
Added a post 
சில அரச அதிகாரிகள் வேண்டுமென்றே காலதாமதமாக வேலை செய்கின்றனர். வேலை செய்ய முடியாதவர்களை நீக்கிவிட்டு, வேலை செய்யக்கூடிய ஆட்களை பணியில் இணைத்துக்கொள்ள சொல்கின்றேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.கம்பஹா மாநகரசபையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில்,கம்பஹா மாநகரசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.அரச அதிகாரிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசாங்கம் மாற போகின்றது என்று. இல்லை அரசாங்கம் அப்படியே இருக்கும். இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே நடக்கும்.சில அரச அதிகாரிகளின் தவறான முடிவுகளினால் அரசாங்கமும் மக்களும் பாரிய நட்டத்தை எதிர்கொள்கின்றனர்.அதிகாரிகள் செய்யும் இவ்வாறான தவறுகளினால் இறுதியில் மக்களால் குற்றம் சுமத்தப்படுவது அரசியல்வாதிகள் தான்.சில அரச நிறுவனங்களில் அதிகாரிகளின் அதிகாரத்துவம் காரணமாக அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 226
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 13 ஆம் தேதிமேஷம் -ராசி:உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பங்களால் சில தடுமாற்றங்கள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்ரிஷபம் ராசி: பிடிவாத குணம் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.  அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்மிதுனம் -ராசி: பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கவலை விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்கடகம் -ராசி: சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆடம்பரமான செலவுகளை தவிர்க்கவும். மனதில் புதுமையான சிந்தனை தோன்றும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடு அதிகரிக்கும். அசதி விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்சிம்மம் -ராசி:மனை சார்ந்த வியாபாரத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.  அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை கன்னி -ராசி: உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.  அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புதுலாம் -ராசி: கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் தடைபட்ட தனவரவுகள் வசூலாகும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். அச்சம் மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்விருச்சிகம்- ராசி: இளைய உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். தொழில் நுட்ப கருவிகளால் லாபம் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். செலவு நிறைந்த நாள்.  அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் தனுசு -ராசி: ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். பணி நிமிர்த்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். பயணம் தொடர்பான விஷயங்களில் அனுபவம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.  அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதாமகரம் -ராசி:குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்களின் வருகையால் சில மாற்றங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.  அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சைகும்பம் –ராசி:மனதளவில் வித்தியாசமான சிந்தனை தோன்றும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். விவசாயப் பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பகை விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்மீனம் -ராசி: உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் அலைச்சல் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். புதிய மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.  அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 255
Added a post 
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 26.4.2024. இன்று காலை 07.26 வரை துவிதியை. பின்னர் திரிதியை. இன்று அதிகாலை 02.09 வரை விசாகம். பின்னர் அனுஷம். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 263
Good Morning...
  • 250
Added a news 
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தெரியவந்துள்ளதுமுறையான அனுமதியின்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல், சரியான வேலை உத்தரவு இல்லாமல் வெளிநாட்டு வேலைகளை வழங்குவதற்காக பணம் வசூலித்தல், சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு மக்களை வழிநடத்துதல் போன்ற புகார்கள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன.பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 495 முறைப்பாடுகளுக்கு இக்காலப்பகுதியில் தீர்வு காணப்பட்டுள்ளதுடன், 680 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்காக மோசடி செய்பவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.​​வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 28 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதுடன், பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்டு, முறையான பணி உத்தரவைப் பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்த 8 முகவர் நிலையங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 388
Added a news 
மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள், சட்டத்துறை என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும், ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என ருவாண்டாவில் வாழ்பவர்களே கூறியபின்னரும் கூட புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவதில் உறுதியாக இருக்கிறார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனேக்.இந்நிலையில், வடக்கு பிரான்சிலுள்ள Dunkirk நகரில் முகாமிட்டுள்ள, புலம்பெயர்வோர், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்கள், தாம் பிரித்தானியாவில் கால்வைத்ததும், பிரித்தானிய அதிகாரிகள் தங்களைப் பிடித்து ருவாண்டாவுக்கு நாடு கடத்திவிடக்கூடும் என்பது தங்களுக்குத் தெரியும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்துவதில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதி என்பதில் எவ்வித மாறுப்பட்ட கருத்தும் கிடையாது.பிரித்தானியாவுக்கு புலம்பெயரவேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பவர்கள், அங்கு சென்றால், தங்களைப் பிடித்து ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவிடுவார்கள் என்ற பயத்தை உருவாக்கவே, பிரித்தானிய பிரதமர் ரிஷியும், அவரது உள்துறைச் செய்லரான ஜேம்ஸ் கிளெவர்லியும் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
  • 395
Added a news 
அனுமதி பெற்று இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணம் பெறுவதற்கு அதிகாரம் இல்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், அநுராதபுரத்தை அண்மித்த விஹாரை ஒன்றின் விஹாராதிபதி தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி பணம் பெற்ற சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.இதனடிப்படையில், முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு புலனாய்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.அதுமட்டுமன்றி, இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்ய சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவுக்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், இவ்வாறான மோசடிகளை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 399
Added a news 
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியது.எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த தீர்மானத்தை ஆதரித்தார். 91 வயதாகும் ஆர் சம்பந்தன் தற்போது சுகயீனமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 406
Added a news 
உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையின் பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இதன் பெறுமதி சுமார் 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது.கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தினகல் வகைகளில் ஒன்றாகும். உலக வளங்களில் கொருண்டம் குடும்பத்தின் மிகப்பெரிய நீல கொருண்டம் இதுவாகும்.அதேவேளை பல இரத்தினங்கள் மற்றும் கொருண்டம் இனங்களின் படிகங்கள் பல்வேறு இரத்தினங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் காணப்படுகின்றன.அதேவேளை கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆசியாவின் ராணி” என அழைக்கப்பட்ட சுமார் 310 கிலோ எடை இரத்தினம் கல் ஒன்று இரத்தின புரியில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய இயற்கையான கொருண்டம் நீல சபையர் அது என கூறப்பட்ட நிலையில் தற்போது 802 கிலோ எடை இரத்தினக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 408
Added a post 
சாணக்கியர் பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணர் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டவர். சாணக்கியர் அவருடைய வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கொள்கைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாணக்கிய நீதியில் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்துவது பற்றிய முக்கியமான தகவல்களைப் பெறுவீர்கள்.Chanakya Niti Qualities of a Intelligent Person in Tamilசாணக்கியருக்கு அரசியல் மற்றும் இராஜதந்திரம் பற்றிய நல்ல புரிதல் இருந்தது. இது தவிர வேறு பல துறைகளிலும் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. சாணக்கியர் பொருளாதாரத்தில் நிபுணராக இருந்தார். எனவே அவர் கௌடில்யர் என்றும் அழைக்கப்படுகிறார். சாணக்கியரின் அறிவுரைகளை ஒருவர் தன் வாழ்வில் இணைத்துக் கொண்டால், அவர் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த முடியும்.சாணக்கியர் ஒரு மனிதருக்கு இருக்க வேண்டிய சில குணங்களைப் பற்றி பேசியுள்ளார். இந்த குணங்களைக் கொண்ட ஒரு நபர் எப்போதும் புத்திசாலி என்று அழைக்கப்படுகிறார். ஒரு அறிவாளி எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். அவர்களின் வார்த்தைகளை சமுதாயம் கேட்டு பின்பற்றுகிறது. சாணக்கிய நீதியின் படி ஒருவரை புத்திசாலியாக்கும் குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.நெருக்கடியான சூழ்நிலையில் அமைதியாக இருப்பதுவாழ்க்கையின் இக்கட்டான நேரங்களிலும் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவர் சமூகத்தால் புத்திசாலி என்று அழைக்கப்படுகிறார் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால், நெருக்கடியான நேரங்களில் அவசர முடிவுகள் உங்களை சிக்கலில் மாட்டிவிடும். எனவே ஒரு நெருக்கடி ஏற்படும் போது, ​​உங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்.உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் மற்றும் சிக்கலைத் தவிர்க்கவும். நெருக்கடிகள் ஏற்படும் போது தயங்காமல், உங்கள் சொந்த பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து உங்கள் நெருக்கடிகளை சமாளிக்கவும்.தவறு செய்யாமல் இருப்பவர்கள்சாணக்கியரின் கொள்கையின்படி, ஒரு நபர் எப்போதும் தவறுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். நற்செயல்களைச் செய்து, தவறான செயல்களில் இருந்து விலகி இருப்பவர் மக்களால ஞானி என்று அழைக்கப்படுகிறார். எனவே ஒரு நபர் எப்போதும் தவறு மற்றும் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். சாணக்கியர் கூறுகிறார், தனது புத்தியை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறத் தெரிந்தவர், சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பவரை ஞானி என்று அழைக்கலாம் என்று சாணக்கியர் கூறுகிறார்.எதிர்கால திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பவர்சாணக்கியர், தனது எதிர்காலத் திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பவர் சிறந்த புத்திசாலி என்று கூறுகிறார். ஏனென்றால் வேலை முடிவதற்குள் தனது திட்டங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது அவர்களின் வேலையை சீர்குலைக்க வாய்ப்புள்ளது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது திட்டங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.இலக்கில் கவனம் செலுத்துவதுஎப்பொழுதும் தனது இலக்கை அடைவதற்காக உழைத்து, எந்தத் தடைகளையும் அச்சமின்றிச் சமாளிக்கும் திறன் கொண்டவர்தான் அறிவாளி என்கிறார் சாணக்கியர். நேரத்தையோ, சூழ்நிலையையோ நினைத்து தயங்காத ஒருவர் தனது இலக்கை அடைய அதிக நேரம் எடுப்பதில்லை.தடைகளை கடக்கும் திறன்எல்லா தடைகளையும் கடக்கும் திறன் ஒரு நபரை அறிவாளியாக மாற்றுகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது பணிகளை முடிப்பதில் எந்த தடைகளுக்கும் பயப்படாமல் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி நகந்தால் அவர் புத்திசாலி என்று அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்டவருக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதும் இருக்கும்.
  • 408
Added a post 
இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..” எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!ஆனால் இன்று ஏனோ.... இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு... அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”*பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!.இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே.... அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்....“ அது வந்து.... அதாவது.... சிவனின் திருவிளையாடல்களில் அதுவும் ஒன்று.... அதற்கு மேல்.... .... முழுசா தெரியலியே..!”.சரி...பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்.. கண்ணதாசன்...! சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்..! அவர் ஒரு வரி எழுதினால் .. அதற்குள்ளே ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!.கூகிளில் , அங்கும் இங்கும் தேடி ஓடி... சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்.... அது இதுதான்...!.அந்தக் காலத்தில் காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன். அவன் பெயர் அரதன குப்தன் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்.காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை.எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .... வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்.. சற்றுத் தள்ளி ஒரு கிணறு...கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு .... அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...காரணம்...? அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்... நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் .... நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட... உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்... சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி , இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..” மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்.. இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ... அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...! இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்..... கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..! வழக்கு சபைக்கு வந்தது... திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்... “மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி... முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.... கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் : "நாங்கள் சாட்சி.."குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க.... ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்... ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...! பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்... வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....!நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..! கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..![ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]கதையைப் படித்து முடித்த நான் , கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்து போனேன் ...!“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?” ....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் , இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..! இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் , கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒரு வரியை எழுதி இருக்க முடியாது..!சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் .... அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?
  • 526
Added article 
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவருக்கு 15 வயதில் கவின்யா என்ற ஒரு மகளும் இருக்கிறார். இந்த நிலையில் மணப்பெண் நவீனா வின் மகள் கவின்யா தன் அம்மாவின் திருமணம் பற்றி கூறும்போது, "எங்க அம்மா ரொம்ப நாள் கழித்து சந்தோஷமா இருக்காங்க.. இதே போல் Life Full -ஆ சந்தோசமா இருக்கணும். அவர் எனக்கு ஒரு நல்ல அப்பாவாகவும், என் அம்மாவுக்கு ஒரு நல்ல கணவராக இருப்பாருன்னு நினைக்கிறேன்..” என்று கூறினார்.தொடர்ந்து பேசிய மணப்பெண் நவீனா விராத் என்னிடம் காட்டிய அன்பு போல் வேறு யாரிடம் என்னிடம் இந்தளவு அன்பு காட்டியதில்லை. எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என் வாழ்க்கையை நான் சரியாக வாழவில்லை. எனக்கு இப்போ அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கூறினார். விராட் கூறும்போது நவீனா என் வாழ்க்கை துணையாக வருவதற்கு நான் புண்ணியம் பண்ணிருக்கேன் என்று கூறினார்.
  • 508
  • 557
நியாயமான கேள்விதான்.....ஆனால்... பதில் சொல்ல தெரியலை...
  • 540