Feed Item
Added a news 

அச்சுவேலி போலீசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த பொழுது, சந்தே நபர் எதிராளி சாட்சி அளித்துவிட்டு வரும்பொழுது கன்னத்தில் அறைந்து உள்ளார்.நீதவான் முன்னால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.உடனடியாக அச்சுவேலி பொலிசாருக்கு உத்தரவிட்ட நீதவான் குறித்த நபருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் மற்றும் நீதிமன்றத்தை அவமதித்த போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு கட்டளை இட்டார்.அத்துடன் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபருக்கு இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.குறித்தநபருக்கு எதிராக நாலைந்து வழக்குகள் நீதிமன்றத்தில் இடம் பெற்று வருவதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

  • 319