Latest Cinema
- ·
- · sivam
நடிகர் எஸ்.வி.சுப்பையா அண்ணன் - நடிகர், தயாரிப்பாளர் மிகவும் வித்யாசமானவர்.திடும் என்று படப்பிடிப்பு சமயத்தில் எல்லோரும் சாப்பிட்ட அத்தனை எச்சில் இலைகளையும் கண்மூடித்திறப்பதற்குள் எடுத்துப்போய் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவார். ஏன் என்று கேட்டால், 'தான்' என்ற அகந்தை ஒழிய இப்படிச் செய்வதாகச் சொல்வார்.பாரதியாகவும், அபிராமப் பட்டராகவும் திரையில் வாழ்ந்த அவர் ஜெயகாந்தனின் 'கைவிலங்கு' - நாவலைத் தனது முதல் படமாக தயாரித்தார்.நானும் லட்சுமியும் இணைந்து நடித்த 2- வது படத்தில், சிவாஜி அவர்கள் சாமுண்டி கிராமணி - என்ற கள் இறக்கும் தொழிலாளியாக 3 நாட்கள் கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.அந்த வேடம் படத்தின் முதுகெலும்பாக அமைந்து விட்டது. வெள்ளிப் பெட்டியில் ஒரு தொகை வைத்து சிவாஜியிடம் நீட்டினார் எஸ்.வி
- ·
- · sivam
ஒருநாள், பாலசந்தர், கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் மூன்று பேரும் ஒன்றாக இருந்தபோது, நான் அங்கே போனேன்.'வா, நாகேஷ்... உனக்கு தான் ஒரு, 'டூயட்' பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்...' என்றார், கவிஞர்.'துாத்துக்குடி பாஷை பேசுவியே, அதற்கு ஏற்றார்போல் ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன்...' என்றார், பாலசந்தர்.'துாத்துக்குடியா...' என்று கேட்டு, பக்கத்தில் இருந்த, பஞ்சு அருணாசலத்திடம், 'பஞ்சு... பாட்டை எழுதிக்கோ...' என்று சொல்ல ஆரம்பித்தார், கண்ணதாசன்.முத்துக் குளிக்க வாரீகளா, மூச்சை அடக்க வாரீகளா...'அட... துாத்துக்குடின்னு மனுஷரிடம் சொன்ன மாத்திரத்தில், அதற்கு ஏற்றபடி பாடல் வரிகள் வந்து விழுகின்றனவே...' என்று, நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.அத்துடன் விடவில்லை.எம்.எஸ்.வி.,யிடம், 'நம்ம நாகேஷுக்கு, பாட்டுல ஸ
- ·
- · sivam
வாலி புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட!ஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "வாலி! காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க! நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...'' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.அப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.பிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன்
- ·
- · sivam
இத்தாலியில் நடைபெற்று வரும் ஜிடி 4 கார் ரேஸ் போட்டியில் அஜித் குமார் சென்ற கார் நின்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் சினிமாவிலிருந்து ஒதுங்கி கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். பைக் மற்றும் கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித் கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் தொடரில் பங்கேற்றார். இதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக துபாயில் தங்கி பயிற்சியும் மேற்கொண்டார். கார் ரேஸ்க்காக தன்னுடைய் காரையும் வடிமைத்தார். துபாய் கார் ரேஸ் தொடங்குவதற்கு முன்னதாக அஜித் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பிரேக் ஃபெயிலியர் காரணமாக கார் விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக இந்த கார் விபத்தில் அஜித்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இதைத் தொடர
- ·
- · sivam
இலவசமாக ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்கும் நடிகர் செந்திலின் மகன்..செந்தில் நடிகராக இருந்தாலும் அவர்களுடைய மகன் மருத்துவராக பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார்.அதே நேரத்தில் செந்திலுடைய குடும்பத்தில் யாருமே படித்தவர்கள் கிடையாதாம். முதல் முறையாக டாக்டருக்கு படித்தது செந்திலுடைய மகன் தான். அவர் டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு சினிமாவிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு எந்த சினிமாவிலும் அவர் நடிக்கவில்லை. தன்னுடைய படிப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தி அடுத்தடுத்து அதில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாராம்.அப்போதுதான் ஜனனி என்ற பல் மருத்துவரை மணிகண்ட பிரபு காதலித்து இருக்கிறார். இவர்களுடைய காதலுக்கு இரண்டு வீட்டிலும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை.ஆனால் மணிகண்ட
- ·
- · sivam
வேல்முருகன் தங்கசாமி மனோகர் (பிறப்பு: மார்ச் 6, 1960) என்பது இவர் இயற்பெயர்.இவர் பிறந்து வளர்ந்த ஊர் கோவில்பட்டி. அங்கே இருக்கும் GVN கல்லூரியில் ரசாயனத்தில் பட்டப் படிப்பு படித்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.."தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு - 1937 முதல் 1967" என்ற தலைப்பில் .lஎம்.ஃபிலுக்கான ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். அக்டோபர் 2019 இல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் "தமிழ் சினிமாவில் நகைச்சுவை" என்ற தலைப்பில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றார்.அவரது கல்லூரி நாட்களில், அவர் சிவாஜி கணேசன், முத்துராமன் மற்றும் நாகேஷ் போன்ற தமிழ் நடிகர்களைப் போல் மிமிக்கிரி செய்து
- ·
- · sivam
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவற்றையும் இழந்து மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். வறுமையால் வெல்லப்பட்டார். ஆழ்கடலில் முத்திருக்க, அலைகளால் கரையில் கொண்டு சேர்க்கப்படும் சாதாரண சிப்பியாக ஒதுங்கினார் மகாலிங்கம். இசைக்கலைஞன் அல்லவே. கீழே விழுந்த மகாலிங்கத்தைத் தூக்கி நிறுத்தினார் கவியரசு கண்ணதாசன். கண்ணதாசன் தான் சொந்தமாகத் தயாரித்த முதல் படமான 'மாலையிட்ட மங்கை'யில் துணிந்து மகாலிங்கத்தை நாயகனாக ஒப்பந்தம் செய்தார்.அந்தப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடியசெந்தமிழ் தேன்மொழியாள் இன்றுவரை செந்தமிழைப் போல ரசிகர்களின் நெஞ்சில் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.உச்சஸ்
- ·
- · sivam
கலைஞர் கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதிக்கு பிறந்த மூத்த மகன் தான் மு.க.முத்து.மு.க.முத்துவின் தயாரான பத்மாவதி பிரபல பாடகரான சிதம்பரம் ஜெயராமனின் சொந்த தங்கை.சிதம்பரம் ஜெயராமனுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் ஒரே சமயத்தில் திருவாரூரில் திருமணம் நடந்தபோது அதை தலைமைத் தாங்கி நடத்தி வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.சிதம்பரம் ஜெயராமனின் சொந்த அக்கா மகளைத்தான் கல்யாணம் செய்திருக்கிறார் மு.க.முத்து.ஆரம்பத்திலிருந்தே பாடுவதில் தேர்ச்சி பெற்றிருந்த மு.க.முத்து, திமுக சார்ந்த நாடகங்களில், திமுக மேடைகளில் பிரச்சார பாடல்களைப் பாடி இருக்கிறார். அதற்கேற்ற குரல் வளம் அவருக்கு இருந்தது.பிறகு அவர் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த முதல் படம், 'பிள்ளையோ பிள்ளை'. அந்தப் படத்தில் மக்கள் திலகம
- ·
- · sivam
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க.முத்து.பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். 77 வயதான அவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்திருக்கிறார். அவரது உடல், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.மு.க.முத்து உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- ·
- · sivam
கேரளாவில் பிறந்த இவர், அந்த மாநிலத்தில் நீண்ட நாள் பதவி வகித்த முதல்வரும் பிரபல மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஈ.கே.நாயனாரின் சொந்தக்காரர். மலையாள சினிமாவுக்குள் முதன் முதலில் கதாசிரியராக அறிமுகமான விஜயனின் கைவண்ணத்தில் உருவான 'சங்கு புஷ்பம்' படம் வசனத்துக்காகவே மலையாளத்தில் ஹிட். அப்படியே நடிப்பு, இயக்கம் என வளர்ந்த விஜயனை தமிழுக்கு அழைத்து வந்தவர், பாரதிராஜா. பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களில் விஜயனை பார்க்கலாம்.1978ல் வெளியான 'கிழக்கே போகும் ரயில்', விஜயனை கேரள கரையில் இருந்து கோலிவுட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது. அடுத்த ஆண்டே 'முள்ளும் மலரும்' இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் 'உதிரி பூக்கள்'. இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்த படம் அதிரி புதிரி ஹிட். படத்தின் ஹீரோ விஜயன். அதாவது
- ·
- · sivam
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி, ஜெயிலர் 2 என இரண்டு பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகின்றன. இதில் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் ரஜினி கைவசம் உள்ள மற்றொரு திரைப்படமான ஜெயிலர் 2 ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். மேற்கண்ட இரண்டு திரைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.சினிமாவில் பிசியாக உள்ள கமல்ஹாசன், அரசியலிலும் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியின் தலைவராக உள்ளார். அக்கட்சி திமுக உடன் கூட்டணி அமைத்த பின்னர், அந்த கூட்டணியில் இருந்து நடி
- ·
- · sivam
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்கிற பழமொழிக்கு சிறந்த உதராணம் நடிகர் கிங் காங் தான். அவர் ஆள் சிறிதாக இருந்தாலும் மிகப்பெரிய திறமைசாலி. நடிப்பு, நடனம் என அனைத்திலும் அசத்தலாக நடித்திடுவார்.கிங் காங்கின் மூத்த மகள் கீர்த்தனாவின் திருமணம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. திருமணம் கோவிலில் சிம்பிளாக நடைபெற்றாலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செம கிராண்டாக நடத்தி இருந்தார். திருமணத்துக்கு முன்னர் பிரபலங்களுக்கு கிங் காங் பத்திரிகை வைத்தது மிகவும் டிரெண்ட் ஆனது. முதல்வர் தொடங்கி நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என ஏராளமான முன்னணி நட்சத்திரங்களையும் நேரில் சந்தித்து அவர் பத்திரிகை கொடுத்தது இணையத்தில் வைரலானது.திருமணம் முடிந்த பின்னர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், வடி
Latest Cinema (Gallery View)