·   ·  3049 news
  •  ·  1 friends
  • 2 followers

2015 ஆம் ஆண்டுமுதல் 2020 ஆம் ஆண்டு வரை 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

 

இலங்கையில் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இரட்டை குடியுரிமைக்காக 63,917 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் 2015 இல் 16184 நபர்களும், 2016 இல் நபர்களும், 2017 இல் 8881 நபர்களும்,  2018 இல் 8747 நபர்களும், 2019 இல் 7405 நபர்களும், 2020 இல் 3154 நபர்களுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

000

  • 522
  • More
Comments (0)
Login or Join to comment.