·   ·  8247 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கர்ப்பிணிகளுக்கு ரூ.14000 - தமிழகத்தில் அமலுக்கு வரும் புதிய மாற்றம்

கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சார்ப்பில் நிதியுதவி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இந்த திட்டத்தில் பெண்களுக்கு மகப்பேறு காலம் தொடங்கி குழந்தை பிறந்த பின்னர் வரை தவணை முறையில் ரூ.14,000 பணமும், ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கப்படுகிறது. தற்போது இந்த தவணை முறை திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 5 தவணைகளாக வழங்கப்பட்ட நிதியுதவி இனிமேல் 3 தவணைகளாக வழங்கப்படும்.

அதன்படி, கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த 9 வது மாதத்தில் ரூ.2000 என வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

  • 1124
  • More
Comments (0)
Login or Join to comment.