·   ·  8247 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்

2022 ஆம் ஆண்டில் முதல் ஐந்து நாட்களுக்குள் 1,227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், டெங்கு நோயைப் பரப்பும் பிரதான 4 வகையான வைரஸ் வகைகளின், மூன்றாவது வைரஸ் வகையினால் தொற்றுக்குள்ளாகிய டெங்கு நோளாயர்களும் இலங்கையில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின், சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவரீதியில் டெங்டகு ஒழிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

இந்த வேலைத் திட்டம் ஜனவரி 04 முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறும். இதற்காக முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்தினபுரி ஆகிய, டெங்கு அவதானம் கூடிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • 894
  • More
Comments (0)
Login or Join to comment.