Feed Item
Added a post 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசன் தற்போது நடைபெற்று வருகின்றது, இந்தப் போட்டியில் 12 பேர் எலிமினேட் ஆகிவிட்ட நிலையில் தற்போது ரியோ, ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி ஆகியோர் மட்டுமே உள்ளனர்.  இறுதி நிகழ்சிக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது பிக் பாஸ் பண பெட்டிகளை வீட்டுக்குள் அனுப்பி இருக்கிறார். அதனை போட்டியாளர்கள் விருப்பப்பட்டால் எடுத்துக்கொண்டு இப்போதே வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது.

முதலில் ஒரு லட்சம் வந்த நிலையில், அதை யாரும் எடுக்காத காரணத்தால், அதனை தொடர்ந்து இறுதியில் 5 லட்சம் ருபாய் வந்தது.  அதனை உடனடியாகச் சென்ற கேப்ரியல்லா பணப்பெட்டியுடன் வெளியே செல்ல முனைந்தார்.  அப்போது ஓடிவந்த ரியோ தான் பணப்பெட்டியுடன் வெளியே செல்ல நினைப்பதாகக் கூற, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகின்றது. அதனால் மனமுடைந்த கேப்ரியல்லா ஒருபுறம் அழுக சனம் மற்றும் ஆஜித் அவரைச் சமாதானம் செய்ய முயல்கின்றனர்.  

இறுதியில் தெளிவான முடிவு எடுத்து பணப்பெட்டியுடன் வெளியேறியுள்ளார் கேப்ரியல்லா.  இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் எப்படியும் ஜெயிக்க மாட்டோம் என்பதைக் கருத்தில் கொண்டு மற்ற போட்டியாளர்கள் வெறும் கையோடு வீடு திரும்ப உள்ள நிலையில் கேபியின் இந்த முடிவு குறித்து பிக் பாஸ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

  • 583