Feed Item
Added a news 

உணவருந்திய பின்னர் கை கழுச் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர், அரசடியைச் சேர்ந்த அ.கிரிதரன் (வயது-54) என்வரே உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு வழமை போன்று இரவு உணவு அருந்திவிட்டுக் கை கழுவச் சென்றுள்ளார். அப்போது அவர் மயங்கி வீழ்ந்துள்ளார். உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பயணின்றி உயிரிழந்தார்.  இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

  • 1368