Feed Item
Added a post 

image_transcoder.php?o=bx_froala_image&h=75&dpx=1&t=1609997826

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 553 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் 2 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அமீரகத்தில் தற்போது பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 199 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 4 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 689 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 22 ஆயிரத்து 553 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அமீரகத்தில் இதுவரை மொத்தம் 2 கோடியே 20 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • 635