Added a poem
உண்மையாய் நேசித்த உறவுகள்தான்
முதலில் உதைத்து
காயப்படுத்துகிறார்கள்
வலிகளின் இறக்கைகள்
பூட்டி
வேதனை வானத்தில்
அலைய விடுகிறார்கள்
மண்ணை துளைத்க்கும்
மழை துளியாய்
மனதை துளைத்து
புண்ணாக்கி விடுகிறார்கள்
அவர்களால் எப்படி
முடிகிறது
கடுகளவும் கருணையில்லாமல்
கழுத்தருக்காமலே
கொலை செய்வதற்கு
உரிமை என்று பேசியவர்கள்
எல்லாம் சரியாகி விட்டதும்
எல்லை கோடுகள் போட்டு
நம்மை தூரமாய் தூக்கி
வீசி விடுகிறார்கள்
தூசி படிந்த
அவர்கள் இதயத்தில்
பாசி படிந்து கிடைக்கும்
நம் நினைவுகள்
சில வசதிகளுக்காக
சிதைக்கப்பட்டு
சவக்குழிக்குள்
சங்கமித்து விடுகிறது
ஆனாலும்
நம் மீது
குற்றம் சொல்வதற்காக
போலியான ஆதாரங்களை
தேடிக் கொண்டிருக்கிறார்கள்
- 964