Feed Item
Added article 

நடிகர் அஜித்குமார் இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவுக்கு சென்றுள்ளார். அவர் அங்கு இந்திய பாதுகாப்பு படையினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வலிமை பட ஷூட்டிங் முடிந்த கையோடு, நடிகர் அஜித் தனது பைக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டார். அதன்பின், யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் அஜித் நேற்று இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாப் மாநிலம் வாகாவுக்கு பைக்கில் சென்றுள்ளார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படையினருடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தனது கையில் தேசியக் கொடியை ஏந்தியவாறு வாகா எல்லையில் நடிகர் அஜித் குமார் நின்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

  • 474