Feed Item
Added a news 

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களிடம்  அன்பளிப்புகள் என்ற பெயரில் கட்டாயப்படுத்தி உதவிகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்ற நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் நன்கொடைகள் என்ற பேரில் கட்டயப்படுத்தி உதவிகள் பெறப்படுகின்றன .அண்மையில் ஒருவரிடம் சுமார் ஆறு லட்சம் ரூபா நிதி பெறப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.இவ்வாறு வைத்தியசாலையின் தேவை கருதி கொடையாளர்கள் தாமாக முன் வந்து நன்கொடைகளை வழங்குவதற்கு மாறாக அவர்களிடம் கட்டாயப்படுத்தி உதவிகளை பெற்றுக் கொள்ளுகின்ற நிலைமை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படுகின்றது.குறிப்பாக கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப் படும் நோயாளர்கள் அவர்களது உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இவ்வாறு கட்டாயப்படுத்தி இந்த உதவிகள் பெறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • 568