Feed Item
Added article 

ஈஷா ரெப்பா ஓய் படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

ஈஷா ரெப்பாவிற்கு மிகப்பெரிய நடிகையாக வேண்டும் என்றுதான் ஆசை. அதற்காகத்தான் சினிமாவிற்குள் வந்துள்ளார். இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மற்ற நடிகைகள் அனைவருக்கும் அதிகப்படியான படவாய்ப்புகள் கிடைக்க நமக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என பலமுறை யோசித்து உள்ளார்.

நடிகைகளை பொருத்தவரை தொடர்ந்து வாய்ப்பு வருவது சந்தேகம்தான். ஆனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பிரபலமாகி விட்டால். அதற்கு அடுத்து பத்து வருஷத்திற்கு இவர்கள்தான் அனைத்து கதாநாயகர்களுக்கும் கதாநாயகியாக நடிப்பார்கள். அப்படித்தான் ஏராளமான நடிகைகள் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சில நடிகைகள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறுவார்கள். அதன் மூலம் ஏராளமான நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதனைத்தான் ஈஷா ரெப்பா பின்பற்றியுள்ளார். 

ஈஷா ரெப்பா அவரது சமூக வலைதள பக்கத்தில் தண்ணீரில் அமர்ந்து சுற்றியும் பூக்கள் தூவியபடி புகைப்படம் எடுத்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம ஈஷா ரெப்பாவா இவ்வளவு அழகாக உள்ளார் என்கின்றனர்.

  • 346