Feed Item
Added a news 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 98 லட்சத்து 80 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 1 கோடியே 95 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

ஜூலை மாத ஒதுக்கீடாக தமிழகத்துக்கு 71 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க முடிவு செய்தது. ஆனால் இதுவரை சுமார் 50 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே வழங்கி உள்ளது.

இந்தநிலையில் புனேவில் இருந்து வந்த விமானத்தில் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 34 பெட்டிகளில் 4 லட்சத்து 8 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் சென்னை வந்தன. விமான நிலையத்தில் இருந்து அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் மத்திய தொகுப்பில் இருந்து ஜூலை மாத ஒதுக்கீட்டில் 54 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன.

அதேநேரத்தில் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு இதுவரை 2 கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன.

  • 604