Feed Item
Added a news 

பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லைக்குட்பட்ட கார்கில் பகுதியை ஆக்கிரமித்ததால் 1999ல் இருநாடுகளுக்கிடையே போர் மூண்டது. இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற கார்கில் யுத்தத்தில் இந்தியா வெற்றிப்பெற்றதை தொடர்ந்து போர் முடிந்தது. போரில் இந்தியா வென்ற ஜூலை 26ம் தேதி கார்கில் நினைவு தினமாக கொண்டாடப்படுகிறது. 

22 வது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி லடாக்கின் த்ராஸ் பகுதியிலுள்ள நினைவுச் சின்னத்தில் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த 559 வீரர்களை நினைவுகூறும் வகையில் 559 விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஸ்ரீநகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ட்ராஸ் சென்றார். அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.கார்கில் வெற்றிவிழா அங்கு நடத்தப்படுகிறது. அதில் ராணுவ தளபதிகள், அதிகாரிகள், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக்கில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை அவர் ஸ்ரீநகர் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை மனோஜ் சின்கா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். நேற்று கவர்னர் மாளிகையில் தங்கினார். ஜனாதிபதி வருகையையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • 542