Feed Item
Added a news 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் கடந்த சில மாதங்களாக அனல் பறக்க நடந்துக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவத் தொடங்கியது. பிரச்சாரங்களிலும் அரசியல் கூட்டங்களிலும் கூட்டம் கூட்டமாக பங்கேற்ற மக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையை காற்றில் பறக்கவிட்டனர். மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் சுற்றித் திரிந்தது கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்க வழி வகுத்தது. 

திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. துரைமுருகன் தன்னை தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோன உறுதியான துரைமுருகன் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 468