Feed Item
Added a news 

இலங்கையில் நேற்றைய தினம் (7) அடையாளம் காணப்பட்ட 221 கொரோனா தொற்றாளர்களில் ஆகக்கூடுதலான 54 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக கொவிட் -19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவத்துள்ளது.

களுத்துறையில் 12 பேரும், கண்டியில் 16 பேரும், இரத்தினபுரியில் 29 பேரும், காலியில் 8 பேரும், மாத்தறையில் 5 பேரும் கொரோனா தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

கேகாலை, மட்டக்களப்பு மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் தலா ஒரு நோயாளர் வீதமும், கம்பஹா, குருநாகல், அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இரு தொற்றாளர்கள் வீதம் பதிவாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 46 பேரும், மொனராகலையில் 3 பேரும், கிளிநொச்சியில் 06 பேரும், வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்த 31 பேரும் கொவிட் தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

  • 429