Feed Item
Added a post 

ஒருமுறை அவ்வைப்பாட்டி நடந்தே கயிலாயம் சென்றாள். களைப்பு தீர சிவ பார்வதியின் முன் கால்நீட்டி அமர்ந்தாள்.

சிவன் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பார்வதி கோபித்தாள். “சுவாமி! அகில உலகிற்கும் தலைவரான தங்களை நோக்கி இந்த பாட்டி கால் நீட்டுகிறாளே” என்றாள்.

“நீயே கேள்” என சிவன் சொல்ல, “அவ்வையே! நீ செய்வது சரிதானா? கயிலைநாதரை நோக்கி கால் நீட்டலாமா” எனக் கேட்டாள்.

அவ்வையோ, “தாயே! என் அப்பன் ஈசன் எத்திசையில் இல்லை என்று சொன்னால் அத்திசையில் நீட்டுகிறேன்” என பதிலளித்தாள்.

பார்வதியும் நாலா புறமும் திரும்பி பார்க்க எங்கும் சிவனின் அருள் வடிவம் இருப்பது தெரிந்தது.

எங்கும் சிவமயமாக இருப்பதை உணர்த்த சிவன் நிகழ்த்திய திருவிளையாடல் இது...

  • 583