Feed Item
Added a news 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000த்தை நெருங்கியுள்ளது. தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், படிப்படியாக குறைந்து வந்த தொற்றின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இன்று 3,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,11,110ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,821 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,824 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரத்து 546ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரையில் தமிழகத்தில் மொத்தம் 27,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • 423