Feed Item
Added a news 

முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (22) பி.ப 2.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு , போதைப் பொருள் ஒழிப்பு, சிறுவர்களின் நன்னடத்தை மற்றும் மறுவாழ்வு சார் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதனை விட சுகாதாரம், போசனை, கல்வி, போதைப்பொருள், சமூக எதிர்ப்பு நடவடிக்கைகள், சிறுவர் உள பிரச்சினைகள், தற்கொலைகள், சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அரச சார்பற்ற நிறவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ம.கி.வில்வராஜா, மாவட்ட பிரதேச செயலாளர்கள், மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் பணிமணை அதிகாரிகள், முல்லைத்தீவு உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸார், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், உளவள ஆற்றுப்படுத்துனர்கள், என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

  • 251