Feed Item
Added a news 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பயணம் செய்து வரும் சசிகலா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ஆட்சிக்கு வந்துவிட்டால் 5 ஆண்டுகள் யாரும் எதையும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் திமுக செயல்பட்டு வருகிறது என்றும் திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் திமுகவின் அராஜகத்தை எதிர்த்து குரல் கொடுப்பதில்லை என்றும் கூறினார்

 

மேலும் பூ விற்கும் வரும் பெண்களிடம் கூட திமுகவினர் மாமுல் வாங்குகின்றனர் என்றாலும் சென்ற இடங்களிலெல்லாம் திமுகவினர் மாமுல் கேட்கிறார்கள் என்ற புகார்களை என்னிடம் தெரிவிக்கின்றனர் என்றும் ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்ற புகார்கள் எதுவும் கிடையாது என்றும் அவர் கூறினார்

 

பெண்களுக்கு பட்டப்பகலிலேயே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தான் தற்போது தமிழகத்தை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

  • 259