Feed Item
Added a post 

அது ஒரு சிறிய உணவு விடுதி.

கரூர்  ஜவகர் பஜாரிலுள்ள ஒரு முட்டு
சந்தில்..ஹோட்டல் கற்பகம் இருக்கிறது. அந்த ஹோட்டல் பத்து பேர் மட்டும் அமர்ந்து சாப்பிடலாம்.
கற்பகம் ஹோட்டலின் ஓனர் கருப்பசாமி தானே கல்லாவை கவனிப்பார். உணவு பரிமாறுவதில்
இருந்து அனைத்து வேலைகளும் அவரே. சமையல் வேலைக்கு மட்டும் மாஸ்டர் வைத்து கொள்வார்.
கற்பகம் உணவு விடுதி..முட்டு சந்தில்
இருந்தாலும், நாள் முழுவதும் சற்று,
சுறு, சுறுப்புடன் இயங்கி கொண்டு இருக்கும்.
உணவின் சுவை கூடுதலாக மெச்சும்
படி இருப்பதால், மற்ற உணவு விடுதிகளை காட்டிலும், விலைகுறைவாகவும், தரமாகவும், 
சற்று தாராள அளவு உடையது ஆகவும், இங்கு உணவு பொருட்கள்
இருக்கும்.
கற்பக உணவு விடுதி ஓனரின் கல்லா
டேபிளில் ஒரு சிலேடு தொங்கி கொண்டு இருக்கும். அந்த சிலேட்டில்
காலை நேரம் என்றால்..நான்கு இட்லி
ஒரு டீ  ..என்றும் எழுதப்பட்டு இருக்கும்.
அதை பார்த்து யாரோ ஒருவர் உணவு
விடுதிக்கு சென்று இட்லி சாப்பிட்டு,
டீ குடித்து விட்டு.. சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல்" சிலேட்டை"
காட்டி சென்று விடுவார்.
பின், சிறிது நேரம் கழித்து, கருப்பசாமி மீண்டும்..அந்த சிலேட்டில் 
ஏதோ எழுதி தொங்க விடுவார்.
இப்பொழுது, யாரோ,ஒருவர் முன்னம் 
குறிப்பிட்டதுப் போல் சாப்பிட்டு விட்டு,
"சிலேட்டை" காட்டி காசு கொடுக்காமல் சென்று விடுவார்.
யாரும் அவரை ஏன்? என்று கேட்க
மாட்டார்கள்.
இப்படியாக ஒரு நாளைக்கு பதினைந்து, இருபது நபர் வரை சாப்பிட்டு சென்று விடுவார்கள். இது
வாடிக்கையாக கற்பக உணவு விடுதியில் நடக்கும் செயல்.
புதிதாக கற்பக உணவு விடுதியில்,
சாப்பிட வந்த ஒருவர், தான் சாப்பிட்டதற்கு கல்லாவில் பணம் கொடுக்க சற்று காத்திருந்தார்.
அப்பொழுது.. கருப்பசாமி, பரிமாறி விட்டு கல்லாவுக்கு வந்தார்.
காத்திருந்தவரிடம் பணத்தை பெறும்
முன், அவர் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டவர்.. பணம் கொடுக்காமல்
போகிறார்" என்றார் சற்று பதட்டத்துடன்....
கருப்பசாமி தன் முறுக்கு மீசையை
வருடிக் கொண்டு.." அய்யா.. உங்களை போல் சாப்பிட வருகிறவர்கள் தான் சாப்பிட்டதற்கு
பணம் கொடுத்து விட்டு, இதுப் போன்று உணவுக்கு வழி இல்லாதவர்களுக்கும் சேர்த்து பணம்
கொடுப்பார்கள்.அப்படி, அவர்கள்
கொடுக்கின்ற பணத்திற்கு ஏற்ப, 
"சிலேட்டில் " உணவு வகைகளை எழுதி வைப்பேன். அதை பார்த்து விட்டு..சாப்பிட்டு விட்டு" சிலேட்டை"
கை நீட்டி போவார்கள். இது, இங்கு
வாடிக்கையான நடை முறைதான்"
என்றார்.
மேலும் தொடர்ந்தார்...
" அப்படி பணம் யாரும் கொடுக்கவில்லை என்றால், என் பங்குக்கு நானாக எழுதி போடுவேன்.
யாரேனும், சாப்பிட்டு விட்டு போவார்கள்.நான் சின்ன வயதில்,
ஒரு வேளை சாப்பாட்டுக்கு என்ன..
பாடு பட்டிருப்பேன்" என்று தன் ஈரக்
கண்களை அகல விரித்து அவரிடம்
சொன்னார்.
அப்படி, கருப்பசாமி சொன்னவுடன்...
புதிதாக வந்த வாடிக்கையாளர்...
அவசரமாக, தன் சட்டை பைக்குள்
கை விட்டு.. இரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து.. யாருக்குகேனும்
உணவு  பகிருங்கள்" என்று சொல்லி
நகர்ந்தார்.
அந்த முட்டு சந்துக்குள் சர்வ இயல்பாக, சில பைத்தியங்களின்
நடமாட்டம், அவ்வப்பொழுது இருந்து
கொண்டே இருக்கும்.
அவர்களுக்கு மட்டும், உணவு பொட்டலங்கள் கருப்பசாமியிடம் இருந்து கை மாறி விடும். அவர்களுக்கு பிச்சை எடுக்க தெரியாது.. கேட்டு வாங்க தெரியாது..
பசி என்ற உணர்வும் தெரியாது.. ஆனால், கையில் கிடைத்ததை சாப்பிட வேண்டும் என்று மட்டும் தெரியும்.
கருப்பசாமி இப்பொழுது  சிலேட்டில்...
" உறவுகள் மேம்பட சற்று.. உணவிடுங்கள் " என்று எழுதிவிட்டு...
மூவருக்கு மதியம் "சாப்பாடு தயார்"
என்று எழுதி..புன்னகையுடன் கல்லா
டேபிளில் தொங்க விட்டார்.
  • 411