Feed Item
Added a news 

நாட்டில் சூழ்ந்துள்ள இன்றைய பொருளாதார நெருக்கடி எல்லோரையும் வெகுவாக பாதித்திருக்கின்றது.  ஏராளமான குடும்பங்கள் அடுத்த வேளை உணவிற்கு அல்லற் படும் அவல நிலை தொடர்கின்றது.ஏ-09 வீதியில் அமைந்துள்ள திருமுருகண்டி பிள்ளையார் கோவில் சூழலில் அன்றாடம் வாழ்வாதார தொழில் மேற்கொண்டு வாழும் பலரது வாழ்வும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏ-09 வீதியுடான போக்குவரத்துக்கள் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.   தற்போது போக்குவரத்து செய்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. இதனால் தமது வாழ்வாதாரம் முற்றாகவே பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்பு களைகட்டி காணப்பட்ட இப் பிரதேசம் இன்று மக்கள் நடமாட்டம் அற்ற  ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது. அதாவது    வடக்கிலிருந்து தெற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் பயணிக்கும் பயணிகளில் ஒவ்வொருவரும் முருகண்டி ஆலயத்தை தரிசிக்காது அல்லது அங்கே இளைப்பாறாது சென்றதாக வரலாறுகள் இல்லை.  ஆனால் இன்று  வெறிச்சோடி காணப்படுகின்ற பிரதேசமாக காணப்படுகிறது.  

இதனால் இந்த பிரதேசத்தில் தங்களுடைய வாழ்வாதார தொழிலாக  வியாபாரத்தை மேற் கொண்டு வாழ்ந்து வரும் ஏராளமான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் அவர்களைச் சார்ந்து வாழுகின்ற குடும்பங்களும் தங்களுடைய வருமானங்களை இழந்த நிலையில் காணப்படுகின்றன.

  • 330