Feed Item
Added a news 

இனம்தெரியாத கும்பலால் வீட்டுடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று 22 அதிகாலை இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பகுதியில் 4 பேர் கொண்ட குழுவினர் வீட்டின் பிரதான வாயிலை அடித்து உடைத்து சேதம் ஆக்கி பின்னர் வீட்டின் முன் கதவினை முற்றுமுழுதாக சேதப்படுத்தியுள்ளனர்.வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டி மேசை கதிரை என பெறுமதிமிக்க பல பொருட்களையும் சேதமாக்கியதுடன், வீட்டுக்கதவைத் பெற்றோல் ஊற்றி எரிக்க முயற்சிக்க பட்டுள்ளது.யுத்தம் காரணமாக தனது கணவனை இழந்த நிலையில் 5 ஜந்து பிள்ளைகளுடன் வசித்து வந்த குடும்பதிற்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக தருமபுரம் போலிசார் நேரில் சென்று பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 467