Feed Item
Added a news 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீனமாக செயற்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய புதிய அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இடம்பெறவுள்ளனர்.

மேலும், ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு முழு ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு உறுதியளித்துள்ளது.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய அமைச்சரவை 20 அமைச்சர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • 360