Cinema
Latest Cinema
ஏப்ரலில் ‘கருப்பு’ வெளியீடு
  •  · 
  •  ·  sivam
சூர்யாவின் ‘கருப்பு’ படம் ஏப்ரலில் வெளியாகும் என்று அதன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட போது ‘கருப்பு’ வெளியீடு குறித்து பேசியிருக்கிறார்.அதில் சாய் அபயங்கர், “ஏப்ரல் மாதத்தில் ‘கருப்பு’ வெளியாகும். இப்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் வெறித்தனமாக போய்க் கொண்டிருக்கிறது. அப்படத்தில் கருப்பசாமி உள்ளிட்ட சில விஷயங்கள் இருக்கிறது. அதனை முன்வைத்து நிறைய விஷயங்களை செய்து வருகிறோம். தமிழ் கலாச்சாரத்தை உயர்த்து விதத்தில் எனது பின்னணி இசை இருக்கும் என கருதுகிறேன்” என்று தெரி
போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ ரிலீஸ் தேதி மாற்றம்
  •  · 
  •  ·  sivam
யாஷ் கதாநாயகனாக நடிக்கும் ’ டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’ படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் என பலர் நடித்துள்ளனர். கன்னடம், ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.இப்படத்தை விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்துள்ள கேவிஎன் புரொடக் ஷன்ஸ் நிறுவனம் யாஷின் மாஸ்டர்மைண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் மார்ச் 19-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கி இருந்தன.இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாகப் படத்தின் ரிலீஸ் தேதியை, ஜூன் 4-ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளனர். இதுப
ஓடிடியில் மார்ச் 6-ல் வெளியாகிறது ‘வித் லவ்’
  •  · 
  •  ·  sivam
மார்ச் 6-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘வித் லவ்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘வித் லவ்’. செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் ‘வித் லவ்’. இப்படத்தின் மூலமாக நாயகனாகவும் அறிமுகமானார் ‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இப்படத்தின் வெற்றியினால் தற்போது நாயகனாக நடிக்க பல்வேறு வாய்ப்புகள் அபிஷனுக்கு வந்து கொண்டிருக்கிறது.25 நாட்கள் த
டார்க் ஹியூம​ராக உரு​வாகும் ‘மாஸ்டர் பிளான்’
  •  · 
  •  ·  sivam
தருண் விஜய், சாயாதேவி நாயகன் நாயகி​யாக நடிக்​கும் படம், ‘மாஸ்டர் பிளான்’. உத்ரா புரொடக் ஷன்​ஸ், டிஜே இன்​டர்​நேஷனல் தயாரிப்​பில், செ.ஹரி உத்ரா எழுதி இயக்கு​கிறார்.திவ்யா ஜெகத், அப்​பு​குட்​டி, கூல் சுரேஷ், சென்ட்​ராயன், வினோத் சாகர், அருண் மைக்​கேல் டேனியல், சம்​பத் ராம் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்கின்றனர். அபி அத்விக் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்படத்துக்கு ஏ.ஜே.அலி மிர்​சாக் இசை அமைக்​கிறார்.“அரசி​யலைச் சேர்ந்​தவர்​களால் ஏற்​படும் பிரச்​சினை​யில் நாயகன் நாயகி​யின் குடும்​பம் சிக்​கிக் கொள்​வதும், அதிலிருந்து எவ்​வாறு மீண்டு வரு​கிறார்​கள் என்​ப​தை​யும் டார்க் ஹியூமர் வகை​யில் இப்​படம் பேசும்” என்​றது படக்​குழு.ஏப்​ரல் இறு​தி​யில் தொடங்க இருக்​கும் இப்​படத்​தின் பூ
இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த ராஷ்மிகா மந்தனா
  •  · 
  •  ·  sivam
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விஜய் தேவரகொண்டா குறித்தும் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது.ராஷ்மிகா மந்தனாவின் இந்த திருமண பதிவு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பதிவு (போஸ்ட்) சாதனையை முறியடித்துள்ளது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, விராட் கோலி வெளியிட்ட பதிவு 20 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை புரிந்தது.தற்போது ராஷ்மிகாவின் திருமணப் பதிவு 25 மில்லியன் லைக்குகளை பெற்று பெரும் சாதனை புரிந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த கிஷோர் மோண்டல் வெளியிட்டு, வைரலான ரீ
நடிகை காந்திமதி
  •  · 
  •  ·  sivam
பிரிக்கப்படாத அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரைதான் இவர் பிறந்த ஊர்.மானாமதுரையில் கோவில் திருவிழாக்களில் போடும் வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம் போன்ற தெருக்கூத்து நாடகங்களை பார்த்து ரசித்து தன் நடிப்பு திறனை வளர்த்துக்கொண்டார், அடுத்த நாள் அது போலவே நடித்துக்காட்டுவாராம் இவர். எஸ்.வி சகஸ்ரநாமம் நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றி பின்பு சினிமாவுக்கு வந்துள்ளார்.தமிழில் மனோரமா- மற்றும் காந்திமதி எண்ணற்ற தமிழ்படங்களில் பாட்டி, அம்மா கதாபாத்திரம் செய்தவர்கள். இதுபோல கதாபாத்திரம் செய்ததில் இவர்கள் phd பட்டம் பெற்றவர்கள் என சொல்லலாம். அவ்வளவு தத்ரூபமாக நம்ம வீட்டு பாட்டி மாதிரியும், அம்மா மாதிரியும் தத்ரூபமாக நடிப்பார்கள்.எந
தடைகளைத் தாண்டி வர நான் தயார்: சிவகார்த்திகேயன்
  •  · 
  •  ·  sivam
திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார் என்று ‘தாய் கிழவி’ விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார்.சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இதில் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிவிட்டு சிவகார்த்திகேயன், “இயக்குநர் சிபிக்கு நன்றி. தலைவர் ரஜினி பட இயக்குநர் நீங்கள், இவ்வளவு நேரம் இருந்து விழாவை சிறப்பித்தற்கு நன்றி. நாம் இருவரும் தான் சுதனுடன் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தது. என்னை விட்ட
  •  · 
  •  ·  sivam
‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரத்துக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு விஷால் பதிலளித்துள்ளார்.தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தலைவராக ஜி.கே.எம் தமிழ்குமரன் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் ரஜினி, விஷால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாக்களித்துள்ளனர்.விஷால் வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவரிடம் ”‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரத்துக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை” என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஷால், “ஒருவர் குரல் கொடுப்பது முக்கியமல்ல. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1519 பேரும் தணிக்கை அலுவலகத்தில் போய் நின்றால் என்ன நடக்கும். அது விரைவில் நடக்கும்.அதற்காகவே தோற்பவர்
 ‘ஜெய் ஹனுமான்’ படப்பூஜையுடன் தொடக்கம்
  •  · 
  •  ·  sivam
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘ஜெய் ஹனுமான்’ படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.‘ஹனுமான்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் இந்திய அளவில் பேசப்படும் இயக்குநராக மாறினார் பிரசாந்த் வர்மா. அதற்குப் பிறகு பல்வேறு படங்கள் அறிவிக்கப்பட்டாலும், எதுவுமே தொடங்கப்படாமல் உள்ளது. இறுதியாக ரிஷப் ஷெட்டி நடிக்க ‘ஜெய் ஹனுமான்’ படப்பிடிப்பை படப்பூஜையுடன் தொடங்கியுள்ளார் பிரசாந்த் வர்மா.டி-சீரிஸ் நிறுவனம் வழங்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் ‘ஜெய் ஹனுமான். ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. ’காந்தாரா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ரிஷப் ஷெட்டி நாயகனாக நடிக்கும் படம் இது. இதில் ஹனுமான் கத
ரஷ்மிகா–விஜய் தேவரகொண்டா ரகசிய திருமணத்தின் பின்னணி என்ன?
  •  · 
  •  ·  sivam
டாலிவுட் நட்சத்திரங்களான ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. வழக்கமான பிரபலங்களின் ஆடம்பரத் திருமணங்களைப் போலல்லாமல், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நம்பகமான நண்பர்களுக்கு மட்டுமே இந்த விழாவில் அனுமதி.தகவல்களின்படி, உதய்பூரில் உள்ள ஒரு பெரிய ஆனால் ஒதுக்குப்புறமான இடத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் ரகசியமாக கையாளப்பட்டுள்ளன. முழு விவரங்களும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் என்று கூறப்படுகிறது, இது சமீப காலங்களில் மிகவும் பாதுகாக்கப்படும் பிரபலங்களின் திருமணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.இந்த ஜோடியின் நோக்கம் தெளிவாக உள்ளது - சமூக ஊடகங்களின் பரபரப்பிலிருந்து விலகி, தங்கள் சிறப்பு நாளை அம
தயாரிப்பு நிறு​வனம் தொடங்கினார் நித்யா மேனன்
  •  · 
  •  ·  sivam
தமிழில், 180, மாலினி 22 பாளை​யங்​கோட்​டை, காஞ்​சனா 2, ஓ காதல் கண்​மணி, மெர்​சல், திருச்​சிற்​றம்​பலம் உள்பட பல படங்​களில் நடித்​திருப்​பவர், நித்யா மேனன். தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடப் படங்​களில் நடித்து வருகிறார்.‘திருச்​சிற்​றம்​பலம்’ படத்​தில் நடித்​தற்​காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற அவர், இப்​போது தயாரிப்பு நிறு​வனத்​தைத் தொடங்​கி​யுள்​ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்ள இவர், தனது தயாரிப்பு நிறு​வனத்​துக்கு ‘கியூரி புரொடக் ஷன்’ என்று பெயர் வைத்​துள்​ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘அண்டர் 18’
  •  · 
  •  ·  sivam
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘அண்டர் 18’ பட அறிவிப்பை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் புதிய படத்துக்கு ‘அண்டர் 18’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள்சாமி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பை வெற்றிமாறன் வெளியிட்டார்.க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதுகின்றனர். இப்படத்தை எஸ்ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜெகதீஸ் தயாரிக்க உள்ளார்.
Latest Cinema (Gallery View)
49-60