Cinema
Latest Cinema
தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர்
  •  · 
  •  ·  sivam
அமெரிக்​கா​வில் கடந்த 2004-​முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்​களாக வெளி​யான சின்​னத்​திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்​வைவல் கைடு’.இதில் மார்ட்​டின் என்ற கேரக்​டரில் நடித்து ரசிகர்​களின் அன்​பைப் பெற்​றவர் டெய்​லர் சேஸ். பின்​னர் ‘எவ்​ரிபடி ஹேட்ஸ் கிறிஸ்’ என்ற நகைச்​சு​வைத் தொடரிலும் தோன்​றிய அவர், 2007-ம் ஆண்டு ஜேம்ஸ் பிராங்​கோ​வின் ‘குட் டைம் மேக்​ஸ்’ என்ற ஹாலிவுட் படம் மூலம் சினி​மா​விலும் அறி​முக​மா​னார். அதில் யங் ஆடமாக நடித்திருந்​தார். கடைசி​யாக ‘லா நோயர்’ என்ற வீடியோ கேமில் பணி​யாற்​றி​னார்.சின்​னத்​திரை​யில் புகழ்​பெற்ற நடிக​ரான இவர், ஒரு​கட்​டத்​தில் நடிப்​ப​திலிருந்து வில​கி​னார். பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்​லை. இந்​நிலை​யில் அவர் கலி​போர்​னி​யா​வில் வசிக்க வீடி
‘ஜெயிலர் 2’ அப்டேட்
  •  · 
  •  ·  sivam
‘ஜெயிலர் 2’ படம் குறித்து சில விஷயங்களை பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் சிவராஜ்குமார்.நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனிடையே இப்படம் குறித்து சிவராஜ்குமார் பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.அதில், “’ஜெயிலர் 2’ படத்தில் ஒரு நாள் நடித்து முடித்துவிட்டேன். அடுத்து ஒரு நாள், ஜனவரியில் 3 நாட்கள் என கொடுத்துள்ளேன். ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாகவே இக்கதையினை உருவாக்கியிருக்கிறார்கள். முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது எனது கதாபாத்திரம் இன்னும் அதிக நேரம் வரும்” என்று தெரிவித்துள்ளார் சிவராஜ்குமார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘ஜெயிலர்
அரசியல் த்ரில்லராக உருவாகும் ‘கராத்தே பாபு'
  •  · 
  •  ·  sivam
கணேஷ் கே பாபு இயக்​கத்​தில் ரவி மோகன் நடித்து வரும் படம். இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் சுந்​தர் ஆறு​முகம் தயாரிக்​கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்​களுக்கு பிறகு மூன்​றாவது முறை​யாக ரவி மோக​னுடன் இந்​நிறு​வனம் இணைந்துள்​ளது.சாம் சிஎஸ் இசை அமைக்​கிறார். எழில் அரசு ஒளிப்​ப​திவு செய்​கிறார். அரசி​யல் கதையை கொண்ட இந்​தப் படத்​தில், தமிழ்​நாடு காவல்​துறை முன்​னாள் தலைமை இயக்​குநர் சங்​கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகி​யாக அறி​முக​மாகிறார். கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்​கிய வேடங்களில் நடிக்கின்றனர்.படம் பற்​றிய பேசிய இயக்​குநர் கணேஷ் கே பாபு, “அரசி​யல்​வா​தி​கள் குறித்து எத்​தனையோ திரைப்​படங்​கள் வந்​திருந்​தா​லும் அவர்களின் தனிப்​பட்ட வாழ்க்​கை, உ
இசைத் துறையில் ஏ.ஐ. டெக்னாலஜி ஆதிக்கம் - சாம் சி.எஸ் தகவல்
  •  · 
  •  ·  sivam
இசைத்​துறை​யில் ஏ.ஐ டெக்​னாலஜி அதிக ஆதிக்​கம் செலுத்துவதாக இசை அமைப்​பாளர் சாம் சி.எஸ் சொன்​னார். இது பற்றி செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர் கூறிய​தாவது: நான் இசை அமைத்​துள்ள ‘ரெட்ட தல’, மோகன்​லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்​கள், டிச. 25 ம் தேதி வெளிவரு​கின்​றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்​சம் அதி​க​மாக உழைத்​திருக்​கிறோம்.இசைக்கு முக்​கி​யத்​து​வம் உள்ள படம் இது. இதில் அருண் விஜய் நடித்​துள்ள இரண்டு கேரக்​டர்​களுக்​கும் வித்​தி​யாச​மான முறையில் இசை அமைத்​திருக்​கிறேன். இதில் சித்தி இட்​னானி நடித்​துள்ள பெண் கதா​பாத்​திரத்​துக்​கும் முக்​கி​யத்​து​வம் உண்​டு. இந்​தப் படம் நம் வாழ்க்​கையை பிர​திபலிப்​ப​தாக இருக்​கும். இதில் ஒரு பாடலை தனுஷ் பாடு​வதற்கு முன் அவர் குரலில் ட்ராக் போல ஏ.ஐ.-யில் எடுத்​தோம
  •  · 
  •  ·  sivam
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதா, இல்லையா என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. இதனிடையே இப்படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்படத்தின் ஓடிடி உரிமை இன்னும் கையெழுத்தாகவில்லை. இதனால் வெளியீட்டு தேதியினை முடிவு செய்ய முடியாமல் இருக்கிறது படக்குழு.ஜனவரி 23-ம் தேதி வெளியீடு என்றால் இப்போதே விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் இப்படத்தின் வெளியீடு ஜனவரியில் இருக்காது என்பது தெளிவாகிறது. மார்ச் 19-ம் தேதி வெளியிடலாம் என்ற முடிவுக்கு படக்குழு வந்திருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து படமும் தயாராகி விடும்.‘கருப்பு’ விளம்பரப்படுத்தும் பணிகள்
கவர்ச்சி நடிகை குயிலி
  •  · 
  •  ·  sivam
இப்போ கூட கவர்ச்சி நடிகைகளில் பார்த்தால் பாவம் தோணுற நடிகைன்னா அது நம்ம குயிலி தான். குல்நார் என்கிற இயற்பெயர் கொண்ட குயிலி ஆரம்ப காலத்தில் ஸ்டார் ஹோட்டல்களில் இசைக்கு நடனமாடித்தான் வாழ்க்கை நடத்தி இருந்தார். அதைப் படித்ததினால் எனக்கு அப்படி தோணுச்சோன்னு தெரியல. குயிலி பூவிலங்கு படத்தில் நடிச்ச சில காலங்களில் அவரோட சட்டையில்லாத முதுகுப்பக்கப் படத்தை திரைச்சித்ரா அப்படிங்கிற பத்திரிக்கை வெளியிட்டது. அதனாலயான்னும் தெரியல. அல்லது அந்த இடுங்கிய கண்களான்னு தெரியல. குயிலியுடைய முகத்துல ஒரு சோகம் இருக்கும். எதுனாலயோ அவரிடம் ஒரு பரிதாபம் தோணும்.பாலச்சந்தர் பொய்க்கால் குதிரையில் சிறிய ரோல் கொடுத்தாலும், கல்யாண அகதிகளில்நடித்தாலும் 'பூவிலங்கு' படம் ரிலீசான போது முதல் காட்சியே பார்த்ததும் படம் பிடிச்சி
மலேசியா வாசுதேவன் பாடுவதை நிறுத்தியதற்கு காரணம்
  •  · 
  •  ·  sivam
மலேசியா வாசுதேவன் பாடுவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணமா?.. ஆச்சரியம் ஆனால் அதுதான் உண்மைரஜினி நடித்த மனிதன் மனிதன் என்ற பாடல் ரஜினி என்ற அந்த உச்ச நட்சத்திரத்தையும் தாண்டி மலேசியா வாசுதேவனை நினைவுபடுத்துகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட வசீகரக்குரல் திடீரென நின்று போனது ஏன்? இவரது வெண்கலக் குரலில் தண்ணீ கருத்துருச்சி, ஆகாய கங்கை, ஆசை 100 வகை, கூடையிலே கருவாடு, பட்டு வண்ண சேலைக்காரி ஆகிய பாடல்கள் இன்றும் இனிப்பவை.சந்திரபோஸ் இசையில் மனிதன் படத்தில் மனிதன் மனிதன் பாடல் ரெக்கார்டிங் ஆகி ஓடிக்கிட்டு இருக்கு. இது ரஜினிக்கே தெரியாது. இந்தப் பாட்டை நம்ம படத்துல வைத்தால் என்னன்னு கேட்கிறார் ரஜினி. அதன்பிறகு தான் அவருக்கே தெரிந்தது இது நம்ம படத்தோட பாட்டு தான் என்று. முதலில் இந்தப் பாட
நடிகர் சசிகுமார் பேட்டி
  •  · 
  •  ·  sivam
நடிகர் சசிகுமார் அவர்களின் பேட்டி ஒன்றை சமீபத்தில் பார்த்தேன்.சொந்தமாக படம் எடுத்து நஷ்டப்பட்டு ஏகப்பட்ட கடன்களில் அகப்பட்டு இருக்கிறார்.நண்பர்தான் அனைத்து வரவு செலவுகளும் அவரும் உயிரை மாய்த்துக்கொள்ள நடுக்காட்டில் தவிப்பது போல் தடுமாறி உள்ளார்.முதல் படத்திலே தமிழ் திரையுலகை தன் திரைக்கதை புதுமையால் புரட்டிப்போட்டவர் எதிர்காலமே சூனியமாகி நின்றிருக்கிறார்.பின் அயராத உழைப்பார் கடன்களை கொஞ்ச கொஞ்சமாக அடைத்து மீண்டு இருக்கிறார்.அவரின் பேட்டியில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால்,"எனக்கே ஏற்பட்ட இக்கட்டிற்கும்,கடனுக்கு யார் காரணமும் இல்லை முழுக்க முழுக்க நானே காரணம்!கடன் வந்துவிட்டது யார் மேலேயும் பழி போட்டு தப்பிக்க கூடாது.முதலில் நமது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் பிறகு நம் மனம் சோர்ந்து வி
‘ரெட் லேபிள்’ படத்தில் மிளிரும் பாடல்
  •  · 
  •  ·  sivam
இயக்குநர், நாயகன், நாயகி என்று பலரும் அறிமுகமாக இருக்கும் படங்களின் பாடல்களோ, டிரெய்லரோ வெளியானால், அவை சட்டென்று கவரும் வகையில் இருந்தால் தவிர ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது. அந்த ஆதரவை ‘ரெட் லேபிள்’ படத்தின் ‘மிளிரா’ என்கிற பாடல் இணையத்தில் பெற்றுள்ளது. மலையாளத்தில் 30 படங்களுக்கு மேல் இசையமைத்த கைலாஷ் மேனன் தமிழில் இசையமைத்துள்ள முதல் படம்.ஒரு பொறியியல் கல்லூரியில் கதை நடக்கிறது. கல்லூரியின் மாணவர் தலைவராக இருக்கும் நாயகன் மீது விழும் கொலைப்பழியின் பின்னாலி ருக்கும் பிளாஷ்பேக் கதையை எழுதி யிருக்கிறார் பொன்.பார்த்திபன். கே.ஆர்.வினோத் இயக்கத்தில், ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் இப்படத்தைத் தயாரித்து நாயகனாக அறிமுகமாகிறார் லெனின். அவருக்கு ஜோடியாக மலையாளத்திலிருந்து அஸ்மின் அறிமுகமா கிறார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோ-பிக்கில் சாய் பல்லவி
  •  · 
  •  ·  sivam
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோ-பிக்கில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.உலகளவில் பிரபலமான கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக் கலைஞர் இவர்தான். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமொன்றை உருவாக்க இருக்கிறார்கள். இதனை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோ-பிக்கை இயக்குநர் கெளதம் தின்னூரி இயக்கவுள்ளார். இவர் ‘ஜெர்சி’, ‘மல்லி ராவா’ மற்றும் ‘கிங்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி
நடிகர் பிரசாந்த்
  •  · 
  •  ·  sivam
பிரசாந்த் அஜீத், விஜய் வரிசையில் இருந்திருக்க வேண்டிய முன்னணி கதாநாயகன். காலமும் சூழலும் யாரை எங்கே தள்ளும் என்பதற்கு உதாரணமாகி எங்கே இருக்கிறார் என்றுகூடத் தெரியாத அளவுக்கு மாறினார் பிரசாந்த். திரைவாழ்வில் தோல்வி… திருமண வாழ்வில் ஏமாற்றம்… உடல் பருமன் என பிரசாந்துக்கு அடுக்கடுக்கான பிரச்னைகள். படங்களில் அல்ல, பட விழாக்களில்கூட பிரசாந்தை பார்க்க முடியாத நிலை. மகனுக்கு ரீ என்ட்ரி கொடுக்க ஒரே துணையாய் உற்ற உறவாய் நின்றவர் அவர் தந்தை தியாகராஜன் தான்.அந்தாதூன் படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கிய தியாகராஜன் பிரசாந்தை அதில் நடிக்க வைத்தார். ஜோதிகாவை வைத்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய பெட்ரிக் தான் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், பிரசாந்துக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை. அடுத்து இன்னொ
எம்.ஆர்.ராதா சொன்ன வார்த்தை
  •  · 
  •  ·  sivam
ஒரு முறை நடிகவேள் M R ராதா தனது விலை உயர்ந்த காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார்அந்த வழியாக ஓடிச்சென்ற தெரு நாய்ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது.இதைப் பார்த்த நடிக வேள் M R ராதா சிரித்தார்இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது உதவியாளர் " ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து விரட்டி விடாமல் சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் " என்று ஆச்சரியத்துடன் கேட்டார்அதற்கு அவர் மிகவும் சாந்தமாக,அந்த நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது. அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. அதைப் பற்றி சொன்னாலும் அதற்குப் புரியாது "என்று சிரித்துக் கொண்டே கூறினார்கேள்வி கேட்டவர் இப்படிஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லஇது போலத் தான் உங்கள் வாழ்விலும் உங்கள் மதிப்பை அறியாதவர்கள் உங்களை அவமானப்படு
Latest Cinema (Gallery View)
253-264