Cinema
Latest Cinema
கனகாவுடனான சந்திப்பு ஏன்? - நடிகர் ராமராஜன்
  •  · 
  •  ·  sivam
நடிகை கனகாவுடனான சந்திப்பு ஏன் என்பது குறித்து நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார். கரகாட்டக்காரன் 2 படம் குறித்தும் இருவரும் பேசியதாக சொல்லப்படுகிறது. இவர்களின் சந்திப்பு குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.தமிழ் திரையுலகின் பொற்காலம் என அழைக்கப்படும் 1980-90களில், சில படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அவற்றில் ஒன்று, 1989 ஜூன் 16 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'கரகாட்டக்காரன்' திரைப்படம். ராமராஜன் மற்றும் கனகா நடித்திருந்த இந்தத் திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லைப் பதித்தது.முத்தையா கேரக்டரில் ராமராஜனும், காமாட்சி என்ற கதாபாத்திரத்தில் கனகாவும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி சுமார் 37 ஆண்டுகள் ஆன போதும் இந்த நட்சத்திர ஜோடி, இன்றளவும் ரசிகர்களால் கொண்டா
சந்திரபாபு பற்றி எம்.எஸ். விஸ்வநாதன் கூறியவை....
  •  · 
  •  ·  sivam
என் அம்மாவைத் தன் அம்மா மாதிரி நினைச்சவன் சந்திரபாபு.நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் என் வீட்லயே கிடப்பான். திடீர்னு நடுராத்திரியில வந்து நின்னுட்டு, 'எனக்கு உப்புமா வேணும், ரவா தோசை வேணும்’னு உரிமையாக் கேட்பான். எனக்கும் அவனுக்கும் அவ்வளவு நட்பு.டேய் விசு... நீ எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ரொம்ப அருமையா டியூன் போடுறே. எனக்குத்தான் சுமாரா போடுறே’னு சண்டை போடுவான். அவனுக்கு நான் போட்ட பாட்டுல எனக்கு ரொம்பப் பிடிச்சது, 'பிறக்கும்போதும் அழுகின்றான்... இறக்கும்போதும் அழுகின்றான்’ பாட்டு. இந்தப் பாட்டைப் பத்திச் சொல்றப்ப ஒரு சம்பவத்தைச் சொல்லணும்.இந்தியா - பாகிஸ்தான் யுத்த நிதி கொடுக்குறதுக்காக, தமிழ் சினிமா உலகத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் சிவாஜி தலைமையில் டெல்லிக்குப் போயிருந்தோம். சந்திரபாபுவும் வந்
'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை சான்வே மேகனா
  •  · 
  •  ·  sivam
குடும்பஸ்தன் படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படம் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தில் ஆந்திர இறக்குமதியான சான்வே மெக்ஹானாவின் நடிப்பு அற்புதமாக இருந்தது. அந்த படத்தில் எதார்த்தமான ஒரு சாதாரண குடும்பத்து மனைவியாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, நடிகை மேகனாவை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரின் இன்ஸ்டாகிராமை தேடி கண்டுபிடித்து, அவரின் போட்டோக்களுக்கு லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர். சுருட்டை முடி, வசீகரிக்கும் அழகு என தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த படி இருக்கும் நடிகை சான்வே மேகனா, குடும்பஸ்தன் படத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருக்கிறார். ஆனால், தெலுங்கில் இவர், 'Anaganaga Oka Raju' என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம்
‘வா வாத்தியார்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட உயர் நீதிமன்றம் நிபந்தனை
  •  · 
  •  ·  sivam
‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் பெற்ற 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், அர்ஜுன்லால் சொத்துகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட சொத்தாட்சியர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்
தனது கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் பூனம் பாஜ்வா
  •  · 
  •  ·  sivam
அழகான நடிகையான பூனம் பாஜ்வா, 'சேவல்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு 'துரோகி', 'தெனாவட்டு', 'ஜெயிக்கிற குதிர' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும், பின்னர் தமிழில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், நீண்ட காலமாக ஹீரோயின் வேடங்களிலேயே நடிக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் மலையாள சினிமாவை அதிகம் கவனம் செலுத்தி வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, வேறுவழியில்லாமல் 'ஆம்பள' திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததன் மூலம் தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் 'ரோமியோ ஜூலியட்', 'அரண்மனை 2', 'முத்தின கத்திரிக்கா', 'குப்பத்து ராஜா' போன்ற படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்தார். தற்போது தமிழிலும் சில படங்களில் ஒப்பந்த
‘ஜனநாயகன்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
  •  · 
  •  ·  sivam
‘ஜனநாயகன்’ படத்தை திட்​ட​மிட்​டபடி வெளி​யிட அனைத்து முயற்​சிகளை​யும் மேற்​கொண்ட போதி​லும், கட்​டுப்​பாட்​டுக்கு அப்​பாற்​பட்ட சில காரணங்​களால் சொன்ன தேதி​யில் ரிலீஸ் செய்​ய​ முடிய​வில்​லை.கடந்த 33 ஆண்​டுகளாக நடிகர் விஜய் தனது ரசிகர்​களிட​மிருந்து பெற்ற அன்​பு, திரைத்​துறைக்கு ஆற்றிய பங்​களிப்புக்காக அவருக்கு ஓர் அற்​புத​மான பிரி​யா​ விடை அளிக்​கப்பட வேண்​டும். அதற்கு அவர் அனைத்து வகை​யிலும் தகு​தி​யானவர். நீதித்​துறை நடை​முறை​கள் மீது நம்​பிக்கை இருக்​கிறது. விரை​வில் படம் வெளி​யாகும்” என்று வெங்கட் நாராயணா கூறியுள்​ளார்.இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக் காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவன
‘வா வாத்தியார்’ பிரச்சினைக்கு முடிவு
  •  · 
  •  ·  sivam
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினால் இப்படம் வெளியாகாமல் இருந்தது. ரூ.21 கோடி செலுத்திவிட்டு படத்தினை வெளியிடலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது.தற்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இப்பணத்தினை தயார் செய்துவிட்டார் என்கிறார்கள். இதனாலேயே தைரியமாக ஜனவரி 14-ம் தேதி வெளியீடு என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஜனவரி 12 உயர் நீதிமன்றத்தில் பணத்தினை செலுத்தி தடையினை நீக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் ஜனவரி 14-ம் தேதி வெளியீட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என படக்குழு சார்பில் விநியோகஸ்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பராசக்தி’யில் ரவி மோகன் தான் நம்பர் ஒன் - கெனிஷா
  •  · 
  •  ·  sivam
‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் தான் நம்பர் ஒன்” என்று அவரது தோழி கெனிஷா கருத்து தெரிவித்துள்ளார்.சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பராசக்தி’. இப்படத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். இன்று காலை படக்குழுவினர் வெவ்வேறு திரையரங்குகளில் ‘பராசக்தி’ படத்தை கண்டுகளித்தனர்.சென்னை - காசி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்தார் ரவி மோகன். அவருடன் அவரது தோழியான கெனிஷாவும் வந்திருந்தார். படம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் கெனிஷா பேசும்போது, “அவர் வில்லனாக நடித்தால் என்ன, ஹீரோவாக நடித்தால் என்ன... அவரால் படம் ஓடும். இந்த கதாபாத்திரத்துக்காக 6 மாதங்கள் கடுமையாக உழைத்தார். என் கண்ணுக்கு அவரை தவிர வே
இரவில் தூக்கம் வரவில்லையா?
  •  · 
  •  ·  sivam
"ஹரிவராசனம்" “நீயும் பொம்மை.. நானும் பொம்மை.. நெனச்சுப் பார்த்தா எல்லாம் உண்மை", "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா" என இசை பிரியர்களின் காதில் தேனை கடந்த பல ஆண்டுகளாக பாய்ச்சிக் கொண்டிருக்கும் தேவக்குரலோன் கே.ஜே. யேசுதாஸ் இன்று தனது 85வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.கண்ணே கலைமானே என தமிழ் ரசிகர்களை தாலாட்டிய கே.ஜே. யேசுதாஸ் கேரள மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐயப்ப பக்தர்களுக்கும் ஹரிவராசனம் பாடல் மூலம் ஆன்மிகத்தை அள்ளித் தெளித்துள்ளார். 1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கொச்சியில் பிறந்த கே.ஜே. யேசுதாஸ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஏகப்பட்ட இந்திய மொழிகளில் தனது காந்தக் குரலை பதிவு செய்துள்ளார்.கே.ஜே. யேசுதாஸ் இசைத்
'ஆண்கள் மேல ஆசை இல்லை' - நடிகை ஸ்ரீலீலா
  •  · 
  •  ·  sivam
'பெல்லி சண்டடி' மூலம் டோலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீலீலா, தனது அழகாலும் நடிப்பாலும் பிரபலமானார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக 'பராசக்தி' படத்தில் நடிக்கிறார். சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா முரளி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.இப்படத்தின் விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் பங்கேற்ற நடிகை ஸ்ரீலீலா, படம் குறித்தும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். சமீபத்திய பேட்டியில், தனது திருமணம் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.தனது திருமணம் பற்றி பேசிய ஸ்ரீலீலா, சில சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார். தனக்கு இப்போது 24 வயது என்றும், 30 வயதுக்கு மேல்
‘பராசக்தி’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை
  •  · 
  •  ·  sivam
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது.இந்த நிலையில், நாளை திரைக்கு வரவுள்ள ‘பராசக்தி’ திரைபடத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடைவிதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பட தயாரிப்பு நிறுவனம் சார
ஜனநாயகன் படம் ஜன.9-ஆம் தேதி வெளியாகுமா?
  •  · 
  •  ·  sivam
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாளுக்குள் (ஜன.9) தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்ததுஇந்த வழக்கை இன்று நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். தணிக்கை வாரியத்தின் சார்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேஷனும், படக்குழு சார்பில் சதிஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.தணிக்கை குழு சார்பில் வைக்கப்பட்ட
Latest Cinema (Gallery View)
229-240