Cinema
Latest Cinema
சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம்
  •  · 
  •  ·  sivam
’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒரேகட்டமாக இதன் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.இதில் நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாயகி விவகாரம் தகவலாக இருந்ததை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.‘சேயோன்’ படத்தில் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடிக்கவுள்
திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி விபத்தில் மரணம்
  •  · 
  •  ·  sivam
ராஜாஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், இன்று (மே 5) பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். கடைசியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக ‘மாரீசன்’ படம் வெளியானது. இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.தமிழில் புது வசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, செங்கோட்டை, மிஸ்டர் ரோமியோ, லவ் டுடே (1997), சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், பூமகள் ஊர்வலம், நீ வருவாய் என, ஆனந்தம், திருப்பாச்சி, ஈ, ஜில்லா உள்ளிட்ட
பாண்​டி​ராஜ் இயக்​கத்தில் ஜெயராம், ஊர்​வசி
  •  · 
  •  ·  sivam
‘தலை​வன் தலை​வி’ படத்​தின் வெற்​றிக்​குப் பிறகு இயக்​குநர் ‘பசங்க’ பாண்​டி​ராஜ் இயக்​கும் படத்​துக்கு ‘பரிமளா அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.ஜெய​ராம், ஊர்​வசி, சந்​தோஷ் சோபன், சஞ்​சனா கிருஷ்ண​மூர்த்​தி, சாண்​டி, அனந்​திகா சனில்​கு​மார் உள்பட பலர் நடித்​துள்​ளனர். யோகி​பாபு, மிஷ்கின், சிங்​கம்​புலி ஆகியோ​ரும் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர்.லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் சுபாஸ்​கரன், தமிழ்க்​குமரன் புரொடக்‌ஷன்ஸ் மற்​றும் பசங்க புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்​கின்​றன. ஜார்ஜ் சி.​வில்​லி​யம்ஸ் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இதன் முதல் தோற்​றம் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.“இப்​படத்​தின் கதை, வித்​தி​யாச​மான குடும்​பத்​தைச் சுற்றி நகர்​கிறது. அந்த குடும்​பத்​தில் உள்ள மனிதர்​களின் தனித்​து​வ​ம
‘ஜனநாயகன்’ பட லீக் விவகாரம் - 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
  •  · 
  •  ·  sivam
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழு முன் ஆய்வில் உள்ள நிலையில், ஏப்ரல் 3-ஆம் தேதி சட்டவிரோதாமாக இணையதளத்தில் வெளியானது.பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், 21 பேர் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகியோர், ஜாமீன் கோ
28 வருடங்​களுக்​குப் பிறகு நாகார்ஜுனா படத்​தில் நடிகை தபு நடிக்கிறார்
  •  · 
  •  ·  sivam
நடிகர் நாகார்​ஜு​னா​வின் 100-வது படத்தை அவரது அன்​னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிக்​கிறது. இப்​படத்​தை, ‘நித்​தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரி​யா’ ஆகிய படங்​களை இயக்​கிய ரா.​கார்த்​திக் இயக்​கு​கிறார். இந்​தப் படத்​தில் தபு முக்​கிய வேடத்​தில் நடிக்கிறார்.இரு​வரும் 28 வருடங்​களுக்​குப் பிறகு மீண்​டும் இணைந்து நடிக்கின்​றனர். 1996ம் ஆண்டு இரு​வரும் நடித்து வெளி​யான ‘நின்னே பெல்​லாட​டா’ என்ற தெலுங்கு திரைப்​படம் பிரம்​மாண்ட வெற்​றி​ பெற்றது. கடைசி​யாக 1998-ல் வெளி​யான ‘ஆவிடா மா ஆவிடே’என்ற படத்​தில் நடித்​திருந்​தனர்​.இப்​போது மீண்​டும் சேர்ந்து நடிக்​கின்​றனர். இதன் படப்​பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் தொடங்​கி​யுள்​ளது. அதில் இணைந்​துள்​ளதை சமூக வலை​தளப் பக்​கம் மூலம் தெரி​வித்​துள்​ளார் தபு.
வறுமையில் வாடிய நடிகர்
  •  · 
  •  ·  sivam
திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடிய நடிகர்!நடிகர் நெல்லை சிவா கோலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்தவர். நடிகர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமானார். நகைச்சுவை நடிகர் மற்றும் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்சின்ன வேடத்தில், சில நிமிடங்கள் வந்து சென்றாலும், தன்னுடைய நெல்லை ஸ்லாங்கில் அழகாக பேசி, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சிவா. ஆண்பாவம் படத்தில் இவர் அறிமுகம் ஆனார்.வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் நெல்லை தமிழில் பேசியது
தெலுங்கில் சேர்ந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி
  •  · 
  •  ·  sivam
தமிழ், தெலுங்​கில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டியும் கீர்த்தி சுரேஷும் தெலுங்​கில் இணைந்து நடிக்​கின்​றனர்.தெலுங்​கில் பால​கிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி, வெங்கடேஷ் நடித்த சங்​க​ராந்​திக்கு வஸ்​துனம், சிரஞ்​சீவி நடித்த மன சங்​கரவர பிர​சாத் காரு உள்பட சில படங்களை இயக்​கிய​வர் அனில் ரவிபுடி. இவர் அடுத்து இயக்​கும் படத்​தில் வெங்​கடேஷ், கல்​யாண் ராம் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.இப்​படத்​தில் கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி நாயகி​களாக நடிக்​கின்​றனர். சீனியர் நடிக​ரான வெங்​கடேஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்​கிறார். கமர்​ஷி​யல் மசாலா படமான இதன் படப்​பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்​கிறது.
பல லட்சக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்.
  •  · 
  •  ·  sivam
இது 1987 ல் நடந்த சம்பவம்.அதிகாலை 6 மணி.நடிகர் இயக்குனர் பாண்டியராஜன் வீட்டு டெலிபோன் ஒலித்தது. பக்கத்திலேயே அமர்ந்திருந்த பாண்டியராஜன் ரிசீவரை கையில் எடுத்தார்.(அது லேண்ட்லைன் ஃபோன் காலம்)மறுமுனையில், "நான் எம் ஜி ராமச்சந்திரன் பேசுகிறேன்."உட்கார்ந்திருந்த பாண்டியராஜன் தன்னை அறியாமல் எழுந்து நின்று விட்டார். பதட்டத்தில் வார்த்தைகள் வரவில்லை பாண்டியராஜனுக்கு."தலைவரே... வணக்கம்...சொல்லுங்க தலைவரே..."இதை நடிகர் பாண்டியராஜன் அவர்கள் சொல்ல, நான் அவருக்கு அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். "எதற்காக சார் எம்ஜிஆர் அந்த நேரத்தில் கூப்பிட்டார் ?""அது வந்து ஜான் சார், அப்போதான் எனக்கு முதல் பையன் பிறந்திருந்தான்.""சரி.""முந்தின நாள் இரவு பிரசவம்.நான் அதிகாலையில்தான் வீட்டுக்கு வந்து, லேண்ட் லைன
பாரதிராஜாவின் வீடியோ சொல்லும் கசப்பான உண்மை
  •  · 
  •  ·  sivam
சமீபத்தில் நடிகை ராதிகா, 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவைச் சந்தித்து நலம் விசாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் "தாய்க்கிழவி படம் பார்த்தீர்களா?" என்று சிரித்துக்கொண்டே கேட்கிறார். ஆனால், அந்த வீடியோவில் பாரதிராஜாவை அந்த நிலையில் பார்ப்பதற்கே மிகவும் மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது.​வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை உடையில் மிகவும் தளர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரை, அவர் தனிப்பட்ட முறையில் ஓய்வெடுக்கும் போது இப்படி வீடியோ எடுத்து வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தன் கட்டளைக்குக் கீழ் வைத்திருந்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவரது முதிர்ச்சியான காலத்தில் நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா?​நலம் விசாரிக்கச் செல்வது நல்
பாடகி சரளா
  •  · 
  •  ·  sivam
யார் இந்த சரளாம்மா?எந்த வி.ஐ.பி-யின் பிறந்தநாள் வந்தாலும், தொலைக்காட்சியில், ‘நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வளர்க... ஊராண்ட மன்னர் புகழ்போலே... உலகாண்ட புலவர் தமிழ்போலே...’ என்று பின்னணியில் ஒலிக்கிற மூவர் குரல்களில் ஒரு குரல் இவருடையது. ‘பேசும் தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பாடிய சரளா இப்போது எப்படியிருக்கிறார்?‘`பக்கவாதம் வந்து ஒரு வரி பாடறதுக்கே இன்னிக்குப் படாதபாடு பட்டுக்கிட்டிருக்குற நான், 50 வருஷத்துக்கு முன்னாடி வாழ்வாங்கு வாழ்ந்தவம்மா. பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர், கண்ணதாசன், வாலின்னு என் குரலைப் பாராட்டாத வி.ஐ.பி-க்களே இல்லை. அந்த அளவுக்குக் குரலால் கொடிகட்டிப் பறந்தவ நான்’’ என்கிற சரளாம்மாவின் குரலில் இப்போதும் இருக்கிறது கம்பீரம்.‘`மயிலாப்பூரில் பிறந்தேன
பாரதிராஜா கார் பஞ்சர் ஆனதால் கிடைத்த வாய்ப்பு
  •  · 
  •  ·  sivam
ரஜினிக்கு மனைவியாகவும் மன்னன் படத்தில் நடித்திருந்தார். இவர் அறிமுகம் ஆனது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் தான்.விதி சில நேரங்களில் எவ்வளவு அழகாகத் தன் விளையாட்டைத் தொடங்குகிறது என்பதற்கு உதாரணமாக தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். எதிர்பாராமல் நடக்கும் ஒரு சிறு தற்செயல் நிகழ்வு, ஒருவரின் வாழ்க்கைப் பாதையையே எப்படி மாற்றியமைக்கிறது என்று கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா, கார்த்திக், ராதா, ராதிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் அவர் அறிமுகம் செய்த முன்னணி நடிகை ஒருவர் தான் விஜயசாந்தி. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப
பிரபல திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
  •  · 
  •  ·  sivam
இந்திய திரையுலகின் ஈடு இணையற்ற இசை மேதைகளில் ஒருவரான ஆஷா போஸ்லே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நம்மை விட்டு மறைந்துள்ளார்.. 92 வயதாகும் இந்தப் புகழ்பெற்ற பாடகிக்கு ஏற்பட்ட திடீர் பாதிப்பு, இந்திய இசை ரசிகர்களைப் பெரும் கவலையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.கடந்த சில நாட்களாகவே அவருக்கு லேசான உடல்நல பாதிப்புகள் இருந்த நிலையில், நேற்று அவரது நிலைமை சற்று மோசமடைந்துள்ளது.. உடனடியாக மும்பையில் உள்ள ஒரு உயர்தர தனியார் மருத்துவமனையில் ஆஷா போஸ்லே அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இது குறித்து ஆஷா போஸ்லேவின் பேத்தி விளக்கம் தந்திருந்தார்.. அதில், ஆஷாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று (Ch
Latest Cinema (Gallery View)
13-24