·   ·  24 posts
  • R

    3 members
  • 4 friends

இலங்கையில் வறுமை நிலையில் முதலிடத்தில் உள்ள மாவட்டமாகவும் இதுவரை அடிப்படைத் தேவைகள் கூட நிறைவு செய்யப்படாத ஒரு மாவட்டமாகவும் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் சாதாரணமாக ஒரு சேவையை பெற்றுக் கொள்ளவோ அல்லது ஒரு தேவையை நிறைவு செய்யவும் நாள்கணக்

வடக்கு மாகாணத்தின் வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி திருகோணமலை ஆகிய மாவட்டங்களை எல்லைப் பிரதேசங்களாக கொண்டு 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த முல்லைத்தீவு மாவட்டமானது வடக்கு மாகாணத்தில் அதிகூடிய நிலப்பரப்பு கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது.

குறிப்பாக 2,415 km2 (932 sq mi) நிலப்பரப்பினைக் கொண்ட இப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதி வன்னி இராட்சியமாகும்.

ஏ-09 வீதியின் கிழக்கு மேற்குப் பகுதிகளாக அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் மேற்கு புறத்தில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய அடிப்படை வசதிகளே இல்லாத 35க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் பன்னிரெண்டாயிரத்து 465 இற்கும் மேற்பட்ட மக்களும் அதேபோல மிகவும் பின்தங்கிய போக்குவரத்து வசதிகள் இல்லாத 68 க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய 15 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் ஒன்பதாயிரத்து 641 க்கும் மேற்பட்ட மக்களுமாக சுமார் இருபத்தி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழுகின்ற இந்த பிரதேசங்களில் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாத நிலையிலும் ஒரு சாதாரணமாக போக்குவரத்துகளை மேற்கொள்ள முடியாத நிலையிலும் காணப்படுகின்றது.

இந்த மக்களுக்கு சேவைகளை வழங்க கூடிய வகையில் அமைந்துள்ள மாங்குளம் ஆதார வைத்தியசாலை மல்லாவி ஆதார வைத்தியசாலை என்பன இன்றுவரை அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாத வைத்தியசாலைகளாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றன.

சாதாரணமாக ஒரு பிரதேச வைத்தியசாலை கொண்டிருக்க வேண்டிய ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை காணப்படுகின்றது.

வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் பற்றாக்குறை ஏனைய உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை வாகன வசதிகள் என தேவைப்பாடுகளின் பட்டியல் நீண்டு செல்கின்றதுஇவ்வாறான நிலையில் இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் தமத தேவைகளை நிறைவு செய்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இறந்தவர்களின் உடலங்களை உறவினர்களிடம் கையளிக்க குறித்த பிரதேச வைத்தியசாலைகளில் சட்ட வைத்திய அதிகாரிகளின் இன்மை குறித்த பிரதேசங்களில் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் இன்மை என்பன மிக பெரும் சிரமங்களை ஏற்படுத்துகின்றன.

அதாவது இந்த பிரதேசத்தில் விபத்து அல்லது சந்தேகத்திற்கிடமமாக உயிரிழந்த ஒருவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக 78முதல் 97 கிலோ மீட்டர் தூத்திலுள்ள முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளளும் நிலை கானப்படுகின்றது.

அதன் பின்னர் உறவினர்கள் சடலத்தைப் பெற்று இறுதிக் கிரியை செய்யும் வரை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் அதனை சரியான முறையில் செய்யக்கூடிய மலர்ச்சாலை வசதிகளில்லை அதற்காக வைத்திய சாலையில் இருந்து பொறுப்பேற்ற சடலத்தை சுமார் 110கிலோமீற்றர் துரத்திற்கு அப்பாலுள்ள கிளிநொச்சி அல்லது வவுனியாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இதனால் உயிரிழந்தவரின் உறவினர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதுடன் பெருந்தொகைப் பணத்தையும் செலவு செய்ய வேண்டிய ஒரு நிலை காணப்படுகின்றதுசெலவு செய்யப்பட்டாலும் அதை உரிய காலத்திற்குள் பெற்றுக் கொள்வது என்பது மிகப் பெரும் சவாலாகவே இருக்கின்றது.

நட்டாங்கண்டல் பகுதியில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாக உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் சடலத்தை உறவினர்கள் பெற்று அதனை தூய்மைப்படுத்தி பாதுகாத்து கிரிகைகளுக்காக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் மலர் சாலைகள் இல்லாத நிலையில் மீண்டும் சடலத்தை கிளிநொச்சிக்கு எடுத்து சென்று அங்கு அதனை சீர் செய்து வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டது.இவ்வாறு இத்தனை கிலோமீட்டர்கள் தூரம் அலைந்து இவற்றைச் செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது குறிப்பாக குறித்த பிரதேசத்தில் ஒரு உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகளை கூட சரியாக செய்ய முடியாத ஒரு அவல நிலை காணப்படுகின்றது.

அதாவது மாங்குளம் ஆதார வைத்தியசாலை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுக்கான சட்ட வைத்திய அதிகாரி களை நியமிப்பதற்கு இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை அதே போல மரணவிசாரணை அதிகாரிகளும் இல்லாத நிலை கானப்படுகின்றது.

இந்தப் பிரதேச மக்களுடைய இது போன்ற தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் சட்ட வைத்திய அதிகாரிகளையும் திடீர் மரண விசாரணை அதிகாரிகளையும் நியமிக்க வேண்டிய பொறுப்பை உரியவர்கள் செயற்படுத்தி சேவைகளை பெற்றுக் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்பது அவசியமாகும்.

(சு. பாஸ்கரன்)

  • 487
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்