Ads

May 18 Tamil Genocide Remembrance Day

May 18 Tamil Genocide Remembrance Day photos

  • 1985
  • More
  • 1331
  • More
  • 1404
  • More
  • 1575
  • More
  • 1328
  • More
  • 1291
  • More
  • 1421
  • More
  • 1352
  • More
  • 1286
  • More
  • 1321
  • More
  • 1397
  • More
  • 1222
  • More
  • 1264
  • More
Comments (0)
Login or Join to comment.
·
Added a news
டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -எதிர்காலத்தில் அனைத்துக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும் என்றும், 2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் இளநிலைக் கல்விப் பட்டதாரிகளாக இருப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வேகமாக மாறிவரும் அறிவுக்கு ஏற்ப, ஆசிரியர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொரு தொழில் வல்லுநர்களும் தங்கள் அறிவைப் புதுப்பிக்க வேண்டும்.இதற்கிடையில், ஆரம்பக் கல்வியின் அடிப்படையான அழகியல் பாடத்தை ஒருபோதும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாது.மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களை இணைத்து பள்ளி பாடத்திட்டம் ஆக்கப்பூர்வமாக சர்வதேச தர கல்விக்கு உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிடுகிறார்.அதன்படி, 100 பள்ளிகளில் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து அந்த ஆசிரியர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற உரிமம் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 19
·
Added a news
 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தகுதியுடைய வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் மாற்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறு கோரலாம் என ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது.இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அடுத்த மாதம் 1 ஆம் திகதி அல்லது அதற்கு முன், தேர்தல் ஆணைக்குழுவிற்கு படிவங்களை அனுப்ப வேண்டும்.ஒவ்வொரு விண்ணப்பமும் விண்ணப்பதாரரின் குடியிருப்பு பகுதி கிராம அதிகாரிகளால் சான்றளிக்கப்பட வேண்டும், இல்லையெனில் விண்ணப்பங்கள் செல்லாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.000
  • 18
·
Added a news
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளானது வெள்ளிக்கிழமை இரவு பிரான்ஸ் தலைநகரில் தொடக்க விழாவுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741வீரர், வீராங்கனைகள் பங்கெடுக்கின்றனர்.ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் திறந்த வெளியில் நடைபெற்றது.பாரிஸ் நகரின் முக்கிய அடையாளமான சீன் நதியில் பிரம்மாண்டமாக தொடக்க விழா அணி வகுப்பு நடைபெற்றது.சுமார் 100 படகுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அந்தந்த நாடுகளின் கொடியை ஏந்தியபடி 6 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்துச் சென்றனர்.இதன்போது, வர்ணனையாளர்களினால் இலங்கையின் கொடி மிகவும் அழகான ஒன்றாகப் போற்றப்பட்டது.வர்ணனையாளர்கள் இலங்கை தேசியக் கொடியின் துடிப்பான வடிவமைப்பு மற்றும் முக்கியத்துவத்தைப் பாராட்டினர்.வரலாற்று சிறப்பு மிக்க பாரிஸின் பின்னணியில் பறக்கும் இலங்கைக் கொடியின் காட்சி, விளையாட்டுப் போட்டியின் அற்புதமான தொடக்கத்தை உலகமே பார்த்துக் கொண்டிருந்தபோது தேசத்தை பெருமையில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது000
  • 20
·
Added a post
ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87வயதான கணவரிடம் கூறினார்:"இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேரேஜ் லைட் அணைக்கவில்லைன்னு நினைக்கிறேன். நீங்க போய் கேரேஜ் லைட்டை ஆஃப் பண்ணிட்டு வாங்க".முதியவர் மிகவும் சிரமப்பட்டு படுக்கையில் இருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து பார்த்தார், ஐந்தாறு திருடர்கள் தனது கேரேஜ் கதவை உடைக்க முயற்சிப்பதைக் கண்டார்.பெரியவர் அங்கிருந்து அருகில் உள்ள காவல் நிலையத்தை ஃபோனில் அழைத்தார்: "ஹலோ......எனது முகவரியை எழுதிக் கொள்ளுங்கள். வீட்டில் நாங்கள் இரண்டு வயதான கணவன் மனைவி மட்டுமே இருக்கிறோம். இப்போது ஐந்து அல்லது ஆறு திருடர்கள் எங்கள் கேரேஜ் கதவை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு போலீஸ் குழுவை சீக்கிரம் அனுப்புங்கள்."மறுபக்கத்திலிருந்து காவல் அதிகாரியின் குரல் வந்தது: "உங்கள் முகவரியை குறித்துக் கொண்டோம். எங்களிடம் தற்போது காவலர்கள் யாரும் இல்லை. நாங்கள் ஒரு போலீஸ் டீமுடன் தொடர்பு கொண்டவுடன், அவர்களை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறோம்."இதைக் கேட்டு, பெரியவர் ஏமாற்றம் அடைந்தார், ஆனால் மறுபுறம், கேரேஜின் பூட்டை உடைக்கும் பணியில் திருடர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, பெரியவர் மீண்டும் காவல் நிலையத்தை அழைத்தார்: "அய்யா.....இப்போது யாரையும் அனுப்ப வேண்டியதில்லை. ஐந்து திருடர்களையும் சுட்டு விட்டேன்" என்று நிதானமாகக் கூறினார்.போலீஸ் ஸ்டேஷனில் ஒரே பரபரப்பு. ஐந்து நிமிடங்களில், ஒரு போலீஸ் குழு, ஒரு ஹெலிகாப்டர், ஒரு துணை மருத்துவர், மூன்று டாக்டர்கள் மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்களுடன், முதியவரின் வீட்டை அடைந்தது.ஐந்து திருடர்களும் கைது செய்யப்பட்டனர்.பின்னர் போலீஸ் குழுவின் தலைவர் பெரியவரை அணுகி கேட்டார், "நீங்கள் அந்த ஐந்து திருடர்களையும் சுட்டுக் கொன்றதாகச் சொன்னீர்கள், ஆனால் நாங்கள் அவர்களை உயிருடன் பிடித்துள்ளோமே?"முதியவர் பதிலளித்தார்: "நீங்கள் கூடத்தான் சொன்னீர்கள் போலீஸ் டீம் எதுவும் இல்லை என்று".மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்.
  • 30
·
Added a post
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ஒரு பவுன் தங்கசெயினுக்கு 1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...! இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், 8 கிராம்தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்.இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள். ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...! இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்.1 கிராம் தங்கம் ரூ. 4760/-8 கிராம் தங்கம் ரூ. 38,080/-1 கிராம் செம்பு - 4.801.5 கிராம் செம்பு - 7.20 or 7/-6.5 கிராம் தங்கம் - 30940/-6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அடக்கவிலை-30940+7.2=30947.2/-1 பவுனுக்கு தங்கத்தில் - 38080 - 30940லாபம்= 7140சேதாரம் 1.5 கிராம் = 7140/- 1 பவுனுக்கு மொத்த லாபம் 14280 என்ன தலை சுத்துதா ? எனக்குள் இது ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும். விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள உள்ளங்களே ................ உங்கள் ஆதங்கத்தை காட்ட உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தவறாமல் share செய்யவும்.
  • 52
·
Added a post
பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.ஊர்மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல் நின்று கொண்டுதங்கநாணயத்தைத் திரண்டு நின்று கொண்டு இருந்த மக்கள் வீது அள்ளி வீசினான். அங்கு நின்று கொண்டு இருந்த கடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும்வரை வீசி கொண்டே இருந்தான்.அப்போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின் குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார், மன்னர் ஆண்குழந்தை பிறந்த சந்தோசத்தை மக்களிடம் தங்க நாணயங்களைக் கொடுத்து அதனை தெரிவித்து மகிழ்கிறார் என்று சொன்னான்.உடனே மன்னன் குறுக்கிட்டு, " இல்லை இல்லை எனக்கு ஆண் மகவு பிறந்ததற்காக நான் தங்க நாணயங்கள் கொடுக்கவில்லை. எனக்கு பாடம் நடத்தி என்னை நல்லவனாகவும் ,புத்திசாலியாகவும் ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும்போது என் மகன் பிறந்து விட்டான்.அவர் என் மகனையும் மிக பெரும் அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கி தருவார் என்ற மகிழ்ச்சியில் தான் இந்த பொற் காசுகளைஅள்ளி அள்ளித் தூவுகிறேன் என்று சொன்னான்.  பிலிப் மன்னன் சொன்னபடி பிற்காலத்தில் மிகப் பெரும் அறிவாளியாக உருவெடுத்த வந்தான் பிலிப் என்ற மன்னனின் மகன் மாவீரன் அலெக்சாண்டர்.சிறந்த ஆசிரியரால் மட்டுமே ஒருவனை மிகச்சிறந்த ஒருவனாக மாற்றமுடியும் என அன்றே பிலிப் மன்னன் நம்பினான்.ஆசிரியர் அரிஸ்டாட்டிலும் அவன் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் அவன் நம்பிக்கையைக் காப்பாற்றினார். 
  • 59
·
Added a post
ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியை பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுவார்!! இதை அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு இளைஞனுக்கோ ஒரே குறு குறுப்பு!!அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது?! பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!! ஒருவேளை மாயாஜாலக் கண்ணாடியாக இருக்குமோ!! அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எதற்கும் அந்த பெரியவரிடமே விசாரித்து விடுவோம், என்ற முடிவிற்கு வந்தான்.பெரியவரை நெருங்கினான்......ஐயா... குரல் கேட்டுத் திரும்பிய பெரியவர், "என்ன தம்பி வேண்டும்", என்றார்."உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே"?"ஆமாம்.... அதிலென்ன சந்தேகம்"?!"அதில் என்ன தெரிகிறது"?"நான் பார்த்தால் என் முகம் தெரியும்…. நீ பார்த்தால் உன் முகம் தெரியும்"!!“அப்படியானால் சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடிதானே அது"?“ஆமாம்"!!“பிறகு ஏன் அதையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்"?!பெரியவர் புன்னகைத்தார். "சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய"!!"பாடமா?! கண்ணாடியிடமா!! அதனிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்"?!"அப்படிக் கேள்"....“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்கு கண்ணாடி போன்றவர்கள்!! எத்துணை ஆழமான உவமை இது"!!"இந்த உவமையில் என்ன இருக்கிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லை"!!“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படி சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது”.“எப்படி"?“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையை கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி அப்படியே காட்டுகிறது அல்லவா?“ஆமாம்”அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்தஅளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்!!எதையும் மிகையாகவோ அல்லது ஜோடித்தோ சொல்லக்கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது!! இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!!"அடுத்து…?”“நீ கண்ணாடிக்கு முன்னால் நிற்கும் போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா?”“அட!! ஆமாம்"!!“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!!”"அப்புறம்"?"ஒருவருடைய முகக் கறையை கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”“இல்லை ஐயா!! மாறாக, அந்தக் கண்ணாடியை பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். "இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்"!!“ஐரயா, அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா!! அப்பப்பா!! யோசித்தால் இன்னும் கூட பல விளக்கங்கள் கிடைக்கும் போலிருக்கிறதே!! என்று அந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு, அவரை வணங்கி சென்றான்....நண்பர்களே...... இனி கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை பார்க்கும்போது எல்லாம் இந்த அறிவுரைகளை மறந்து விடாதீர்கள்..இவைகள் உங்களின் மனத்தை அலங்கரிக்கும், உங்களை மேலும் சிறந்தவராக பட்டைத் தீட்டும்!
  • 60
அன்னை மகாசக்தி ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அருள்பாலிக்கிறாள். அந்த வகையில் குலசேகரன் பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது. "பாண்டி நாடு முத்துடைத்து" என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள் என்பது ஒரு கருத்து. பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள். கிராமங்களில் அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்து கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்துநோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் என அழைக்கப்படுகிறாள். சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக் கிறது. உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பது போல உலக உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து பிரித்து ஜுவ முக்தர்களாக மாற்றுகிறாள். இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. இப்படி முத்தாரம்மன் பெயர் தோன்றியதற்கு பல கதைகள் உள்ளன. குலசேகரப் பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர். அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர். உருவத்தை காட்டி சிலை செய்ய சொன்ன முத்தாரம்மன் குலசேகரப் பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர். அப்போது அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, அவளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று அவ்வூர் பக்தர்களுக்கு ஆவல் ஏற்பட்டது. அம்பாளிடம் இதற்காக மனமுருகி அவர்கள் வேண்டினர். அப்போது ஒருநாள், கோவில் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றினாள். "எனது திருவுருவைக் காண நீங்கள் அனைவரும் ஆவலாக இருப்பது தெரிகிறது. கன்னியாகுமரி அருகே மைலாடி என்றொரு சிறிய ஊர் உள்ளது. அங்கு செல். அனைத்தும் நிறைவேறும்" என்று கூறினாள். மைலாடி பகுதியில் அதிகளவில் பாறைகள் உண்டு. இதனை வெட்டி எடுத்து கலை நுணுக்கத்துடன் கடவுள் சிலைகளை நிறைய பேர் செய்து வருகின்றனர். இப்படி பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப, கற்களில் அற்புதமாக சிலை வடிவமைத்து கொடுத்து ஆற்றலை சுப்பையா ஆசாரி என்பவர் பெற்றிருந்தார். அவரது கனவிலும் குலசை முத்தாரம்மன் தோன்றினாள். குலசேகரன் பட்டினத்தில் தான் சுயம்புவாக விளங்கி இருப்பது பற்றி விரிவாக கூறினாள். அது மட்டுமல்லாமல், தன் உருவத்தை காண அங்குள்ள பக்தர்கள் அனைவரும் ஆவலாக இருப்பதையும் ஆசாரிக்குத் தெரியப்படுத்தினாள்.பின்னர், தனது மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் ஆசாரிக்கு காட்சியளித்த அன்னை, தங்களை நன்று உற்று நோக்குமாறும், தென் திசையிலும் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள்.தங்கள் சிலைகளை செய்து, தாங்கள் சுயம்புகாக முளைத்துள்ள இடத்திற்கு அருகாமையில் அந்த கற்சிலையை நிறுவ வேண்டும் என்றும் அந்தக் கனவில் ஆசாரிக்கு கட்டளையிட்டு முத்தாரம்மன் மறைந்தாள். இந்த கனவு கலைந்ததும் திடுக்கிட்டார் ஆசாரி, கனவில் முத்தாரம்மன் தனக்கு ஆணை பிறப்பித்ததை உணர்ந்தார்.குலசேகரபட்டினம் எங்கு இருக்கிறது என்பது பற்றி பலரிடமும் விசாரித்து அறிந்து கொண்டார். அதன் பிறகு தான் மனதில் திடமாக பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை அப்படியே கற்களில் சிலையாக வடித்தார். முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர், அவ்வூரை சேர்ந்த சிலருடன் மைலாடி சென்றார். சுப்பையா ஆசாரி யார் என்று விசாரித்து அறிந்து அவரை சந்தித்தார்கள். சுப்பையா ஆசாரி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்தார்.அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சி பெருக்குடன் பெற்றுக்கொண்டு அவர்கள் குலசேகரப்பட்டினம் திரும்பினர். முத்தாரம்மனின் விருப்பப்படியே அந்த சிலை, சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அன்னைதான் குலசேகரன் பட்டினத்தில் இன்றும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள்.முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பாகும். இதுபோல் அம்பாளும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், சுவாமி, அம்பாள் ஆகிய இருவருமே வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இத்தகைய காட்சியை காண இயலாது. மேலும் அம்பாளுக்கும், சிவனுக்கும் ஒரே நேரத்தில் பூஜை நடைபெறுகிறது என்பதும் முக்கிய விஷயமாகும். இந்த கோவிலின் தலமரமாக வேம்பு விளங்குகிறது.
  • 66
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆடி மாதம் 11 ஆம் தேதி மேஷம் -ராசி: நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். உடன்பிறப்புகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபார முயற்சிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சாம்பல் ரிஷபம் ராசி: நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்மிதுனம் -ராசி: தனவரவு தாராளமாக இருக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். பொருளாதார நிலை உயரும். அனுபவம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்கடகம் -ராசி: குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் பதற்றமின்றி செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புசிம்மம் -ராசி:உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வரவுகளில் கவனம் வேண்டும். பணி பொறுப்புகளால் கோபம் தோன்றி மறையும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். செய்யும் முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் கன்னி -ராசி: உயர் அதிகாரிகளால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலை உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை துலாம் -ராசி: தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் விருச்சிகம்- ராசி: குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்கும் பொழுது கவனம் வேண்டும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். இனிமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு தனுசு -ராசி: வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். சமூகப் பணிகளில் ஆதரவு கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். சிலரின் சந்திப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் சாதகமான சூழல் அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைமகரம் -ராசி:நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உங்கள் மீதான அவப்பெயர்கள் விலகும். தம்பதிகளுக்குள் நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். தன வரவுகள் திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள்கும்பம் –ராசி:வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுபவம் மேம்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். சோதனை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : நீலம்மீனம் -ராசி: கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 69
ஸ்ரீ குரோதி வருடம் ஆடி மாதம் 11 ஆம் தேதி சனிக்கிழமை 27.7.2024இன்று அதிகாலை 03.08 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று மாலை 05.27 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி. பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 87
·
Added a news
முழு நாட்டினதும், பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வித இடையூறுமின்றி நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.நாடாளுமன்றில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை உப குழு நேற்று கூடிய போதே, அவர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிககைகளையும் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.இதன்போது, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.நாட்டின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.000
  • 95
·
Added a news
மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.தம்புள்ளையில் நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.இந்த நிலையில் 141 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. துடுப்பாட்டத்தில் சமரி அத்தபத்து 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.இதற்கமைய 2024 ஆம் ஆண்டுக்கான மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 97
·
Added a news
நாட்டின் மொத்த மருந்துத் தேவையில் 90 சதவீதத்தை எதிர்வரும் ஆண்டிலிருந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டில் பயன்படுத்தப்படும் 200இற்கும் மேற்பட்ட மருந்து வகைகள் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்த தொகை மொத்த மருந்து தேவையில் 25 சதவீதமாகும்.இதற்கிடையில் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 96
·
Added a news
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஜூலை 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மில்லியனை (1,095,675) தாண்டியுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இதன்படி, இந்த நிலைமை தொடர்ந்தும் பேணப்பட்டால், போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறையின் உச்சநிலையை பதிவு செய்த 2018 ஆம் ஆண்டின் மட்டத்தை விஞ்சலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.2022 ஆம் ஆண்டில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏழு இலட்சம் (719,978) ஐத் தாண்டியது, மேலும் 2023 இல் அது இரு மடங்காக பதினான்கு இலட்சமாக (1 487,303) அதிகரித்துள்ளது.இதன்படி, கடந்த இரண்டு வருடங்களை விட இந்த வருட இறுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சு கணித்துள்ளது.2018 ஆம் ஆண்டில் 23 இலட்சத்திற்கும் அதிகமான (2,333,796) மக்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இது போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாவின் உச்சத்தை எட்டியுள்ளது.இதன் விளைவாக, அந்த ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் மட்டும் 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்நாட்டு அரசு சாதனை படைக்க முடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.000
  • 98
·
Added a news
 உடலில் விஷம் கலப்பதனால் இலங்கையில் வருடத்திற்கு சுமார் 1000 பேர் வரை உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த விடயத்தை தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, உடலில் விஷம் கலந்ததன் காரணமாக வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்படுபவர்களைக் காப்பாற்ற வைத்தியர்கள் முயற்சிக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.எனினும் உடலில் கலந்த விஷம் என்னவென்பது தொடர்பில் அறியாததன் காரணமாக அவர்களுக்குரிய சிகிச்சைகளை உடனடியாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.எனவே இதன் காரணமாக அவர்கள் உயிரிழப்பதாக விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 100
Good Morning...
  • 110
·
Added a news
உலகம் முழுவதும் பெரும்பாலானோர் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் மேப்ஸ் தற்போது நேரடியாக வெப் பிரவுசரில் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த பீட்டா வெர்ஷன் விரைவில் பயனாளர்களுக்கு பயனாளிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.இந்த ஆப்பிள் மேப்ஸ் என்பது கூகுள் மேப்ஸ்க்கு சவாலை தரும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் மேப் பீட்டா பதிப்பை கூகுள் குரோம் மற்றும் ஆப்பிள் சபாரி பிரவுசரில் பயன்படுத்தலாம் என்றும் இப்போதைக்கு ஆங்கில மொழியில் மட்டும் பயன்படுத்த முடியும் என்றும் பின்னாளில் உலகம் முழுவதும் பல மொழிகளில் இது அறிமுகம் செய்யப்படும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமாக மேப்ஸ் இல்லை என்ற நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனமே ஆப்பிள் மேப்ஸ் என்ற அதிகாரப்பூர்வமான சொந்த மேப்பை வெளியிட்டுள்ளது.beta.maps.apple.com என்ற இணையதளத்தின் மூலம் ஆப்பிள் மேப்ஸை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கூகுள் மேப்பில் இருப்பது போலவே டிரைவிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உள்ளது என்றும் வரும் நாட்களில் இன்னும் சில புதிய அம்சங்கள் இதில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 250
·
Added article
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை துவங்க வேண்டும் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்தது.இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஷால், இது உங்கள் குழுவில் உள்ள கதிரேசனை உள்ளடக்கிய கூட்டு முடிவு என்பதும், அந்த நிதியானது தயாரிப்பாளர் சங்கத்தின் நலிந்த, மூத்த உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு, நலப்பணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான கல்வி உள்ளிட்ட நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.திரையுலகில் நிறைய வேலை உள்ளது என்றும் அதில் முறையான கவனத்தை செலுத்துங்கள் என்றும் இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என தெரிவித்துள்ள அவர், இதற்கு முன் திரைப்படங்களை தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்காமல் வெறும் ‘தயாரிப்பாளர்கள்’ என சொல்லிக் கொள்பவர்களே, முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள் என்று சவால் விடுத்துள்ளார். ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி யோசியுங்கள் என நடிகர் விஷால் குறிப்பிட்டுள்ளார்.
  • 248
·
Added article
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அந்த வகையில் உருவான திரைப்படம் தான் ‘போட்’ . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.சுதந்திரத்திற்கு முன்பு அதாவது 1943 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் குண்டுகளை வீசும் போது அதிலிருந்து தப்பிக்க யோகி பாபு மற்றும் சிலர் படகில் கடலுக்குள் செல்கின்றனர். அப்போது ஏற்படும் அனுபவங்கள் சில சண்டைகள் பிரச்சனைகள் விபரீதங்கள் ஆகியவைதான் இந்த படத்தின் கதை.
  • 248
·
Added a post
விந்தணுக்கள் குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்கள் கூறும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் சில உணவுகளை தவறாமல் எடுத்துக் கொண்டால் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பச்சை காய்கறிகள், கீரைகள் குறிப்பாக முருங்கைக்கீரை சாப்பிட்டால் விந்தணுக்கள் அதிகரிக்கும். அதே போல் பாதாம், பிஸ்தா, ஏலக்காய் ஆகியவையும் ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் ஆகியவை சாப்பிட்டால் விந்தணுக்கள் அதிகரிக்கும்.காய்கறி பழங்கள் என எதுவாக இருந்தாலும் பச்சை மஞ்சள் ஆரஞ்சு நிற காய்கறி, பழ வகைகளை எடுத்துக் கொண்டால் விந்தணுக்கள் அதிகரிக்கும் .அதே போல் பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கு இந்த உணவுகள் பயனளிக்கும். குறிப்பாக வாழைப்பழம் ஆரஞ்சு போன்ற பழங்களை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறக்கும் சில நாட்களுக்கு முன்பு புரதம் கார்போஹைட்ரேட் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிட வேண்டும்.
  • 249
·
Added a news
தமிழ்நாடு முழுவதும் குற்றவாளிகள், விசாரணை கைதிகளை அடைத்து வைக்க 9 மத்திய சிறைச்சாலைகள், 5 மகளிர் சிறைச்சாலைகள், 14 மாவட்ட சிறைச்சாலைகள், 106 கிளை சிறைச்சாலைகள் உள்ளன. இதில் பல சிறைச்சாலைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டவை. இதில் சில பழுதடைந்து பாதுகாப்பற்றதாக உள்ளது.இவ்வாறாக பழுதடைந்த நிலையிலும், போதிய வசதிகள் இல்லாமலும் உள்ள சிறைச்சாலைகளை மூட உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மதுராந்தகம், திருத்தணி, ஆரணி, போளூர், செய்யாறு, கீரனூர், மேட்டுப்பாளையம், ராசிபுரம், கடலூர், பரமத்தி வேலூர், மணப்பாறை, முசிறி, திருமயம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள 18 கிளைச் சிறைச்சாலைகளை மூடவும், அங்குள்ள கைதிகளை மாவட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றவும் சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.இந்த பழுதடைந்த சிறைச்சாலைகள் இடிக்கப்பட்டு புதிய கிளைச்சிறைச்சாலைகள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 253
·
Added a news
இலங்கையில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக இருக்கும் நிலையில் அவரது பதவி காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை அடுத்து செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் இலங்கைக்கு அதிபர் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இலங்கை தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் ஏற்கனவே அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் அவரை எதிர்த்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
  • 256
·
Added article
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இந்நிலையில்அவர் மொழி, பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் சட்னி சாம்பார் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். பிரபல ஓட்டல் நிறுவனம் ஒன்று கையேந்தி பவன் கடை வைத்திருக்கும் யோகி பாபுவிடம் அவரின் சட்னி ரெசிப்பி கேட்டு கூட்டு சேர முயற்சிப்பதும், அதற்கு யோகி பாபுவின் ரியாக்‌ஷன் என்ன என்பதுமே டீசரில் ஜாலி மூடில் இந்த தொடரில் சொல்லப்பட்டுள்ளது.இந்த தொடரின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் தற்போது இந்த சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
  • 252
·
Added a news
நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது.குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் செலுத்த முடியும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது000 
  • 306
·
Added a news
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான நீதி நடவடிக்கைகள் எத்தகைய தடைகள் வந்தாலும் தடுக்கப்படாது என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளாரா என வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் நீதி நடவடிக்கைகளின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களை காப்பாற்றவும் கைதுகளை தடுக்கவும் பலர் முயற்சித்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்மேலும் பொலிஸ் மா அதிபர் பதவியில் இல்லாவிட்டாலும் நீதித் திட்டம் நிறுத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
  • 307
·
Added a news
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார்.அதன்படி பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானதும் அரசியலமைப்புக்கு உட்பட்டது மற்றும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது என தெரிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்000
  • 311
·
Added a news
 இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.மேலும், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது00
  • 312
·
Added a post
ஆரோக்கியமான தென்னிந்திய உணவு என்று வரும்போது, விருப்பங்கள் மிக அதிகம். இருப்பினும், உப்புமா, இடியாப்பம், பொங்கல், உத்தப்பம், ஆப்பம் மற்றும் காய்கறி குண்டு ஆகியவை தென்னிந்திய காலை உணவின் பொதுவான சில உணவுகள்.தென்னிந்திய காலை உணவு செரிக்க எளிதானது மட்டுமல்ல, ஏராளமான ஊட்டச்சத்து நன்மைகளையும் கொண்டுள்ளது.இது நல்ல வளர்சிதை மாற்றத்திற்கும் பங்களிக்கிறது. மேலும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், வளர்சிதை மாற்ற நோய்க்குறி அல்லது கொமொர்பிடிட்டிகளைத் தடுக்கவும் உதவுகிறது.தென்னிந்திய உணவில் ஈடுபடும் பொருட்கள் மற்றும் நொதித்தல் செயல்முறை உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், மறைமுகமாக எடை இழப்புக்கு உதவுகிறது. உங்கள் குறிக்கோள் எடை இழப்பு அல்ல, ஆனால் ஒட்டுமொத்த ஆரோக்கியம் என்றால், தயாரிக்க எளிதான, சுவையான மற்றும் நிலையான, சிறந்த காலை உணவு விருப்பத்தை நீங்கள் கண்டுபிடிக்க மாட்டீர்கள் என்று நாங்கள் பந்தயம் கட்டுகிறோம்.இட்லி, தோசை மற்றும் உத்தப்பம் போன்ற பல தென்னிந்திய உணவுகளின் அடித்தளம் அரிசி மற்றும் பருப்பு – பொருத்தமான ஜோடி. அரிசி உடலுக்கு அத்தியாவசிய கார்போஹைட்ரேட்டுகளை வழங்குகிறது. இது உங்கள் நாளைத் தொடங்கத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.பயறு, மறுபுறம், தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும், இது தசை பழுது மற்றும் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த கலவையானது புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் சீரான உட்கொள்ளலை உறுதி செய்கிறது. இது ஒரு சிறந்த காலை உணவாக அமைகிறது.தென்னிந்திய உணவு வகைகளின் ஒரு தனித்துவமான அம்சம் நொதித்தல் செயல்முறை ஆகும். இட்லி, தோசை போன்ற உணவுகள் இரவு முழுவதும் புளித்த மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. புளித்த உணவுகள் புரோபயாடிக்குகளாக செயல்படுகின்றன. ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஊக்குவிக்கின்றன. இது செரிமானத்திற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.மஞ்சள், சீரகம், கடுகு விதைகள் மற்றும் பெருங்காயம் ஆகியவை தென்னிந்திய சமையலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் சில. இந்த மசாலாப் பொருட்கள் வெறுமனே சுவையை அதிகரிப்பவை மட்டுமல்ல; அவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுடன் வருகின்றன. உதாரணமாக, மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது. சீரகம் மற்றும் பெருங்காயம் செரிமானத்திற்கு உதவும், அதே நேரத்தில் கடுகு விதைகள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும்.தென்னிந்திய காலை உணவில் பெரும்பாலும் பலவிதமான காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் அடங்கும், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உணவில் சேர்க்கப்படுகின்றன. செரிமான ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து அவசியம் மற்றும் இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவும்.ஆவியில் வேகவைத்தல் மற்றும் வதக்குதல் ஆகியவை விருப்பமான சமையல் முறைகள், இட்லி மற்றும் உப்புமா போன்ற உணவுகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருக்கும். சமையலுக்கான இந்த அணுகுமுறை பொருட்களின் ஊட்டச்சத்து ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறது. அதே நேரத்தில் உணவு செரிக்க எளிதானது என்பதை உறுதி செய்கிறது.தென்னிந்திய உணவு வகைகளில் புளி, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் பயன்பாடு ஆக்சிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்களின் கூடுதல் ஊக்கத்தை வழங்குகிறது. இந்த பொருட்கள் உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றனநாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. தேங்காய், குறிப்பாக, நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் (எம்.சி.டி) நிறைந்துள்ளது. இவை ஆற்றல் அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றவை.தென்னிந்திய காலை உணவு உணவுகள் குறைந்த கலோரி விருப்பங்களின் கலவையை கூடுதல் சுவையுடன் வழங்குகின்றன. இவை எடை இழப்பு அல்லது பராமரிப்புக்கு ஏற்றதாக அமைகின்றன. தென்னிந்திய காலை உணவுப் பொருட்களின் தனிச்சிறப்புகளில் ஒன்று அவற்றின் நொதித்தல் செயல்முறை ஆகும். நொதித்தல் ஊட்டச்சத்துக்களின் உயிர் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துகிறது. இந்த உணவுகள் ஜீரணிக்க எளிதானது மட்டுமல்லாமல் குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.கூடுதலாக, இந்த காலை உணவு விருப்பங்கள் முக்கியமாக கொழுப்பு மற்றும் கலோரிகளில் குறைவாக உள்ளன. ஆனால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம். இது எடை மேலாண்மை மற்றும் எடை இழப்புக்கு உதவும் சீரான உணவை வழங்குகிறது. உதாரணமாக, ராகி தோசை மற்றும் ஓட்ஸ் உத்தப்பம் போன்ற உணவுகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை வழங்குகின்றன. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும் கூர்முனை மற்றும் செயலிழப்புகளைத் தடுக்கிறது.
  • 325