Ads

Pure silk half saree Collection

New

  • 1476
  • More
  • 574
  • More
  • 604
  • More
  • 576
  • More
  • 587
  • More
  • 565
  • More
  • 599
  • More
  • 593
  • More
  • 606
  • More
  • 540
  • More
  • 565
  • More
  • 588
  • More
Comments (0)
Login or Join to comment.
  • 108
  • 132
  • 148
  • 171
  • 173
  • 171
  • 172
காலை வணக்கம்
  • 171
Added a news 
 அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.அதன்படி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 3000, பாதுகாப்பு அமைச்சில் 09, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சில் 179, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் 132, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் 161, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் 3,519, மேல் மாகாண சபையில் 34, கிழக்கு மாகாண சபையில் 05, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 17 வெற்றிடங்கள் என மொத்தமாக 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. மேலும் சுயாதீன வழக்கு தொடுனர் அலுவலகம் நிறுவப்படும் போது சட்டமா அதிபர் அல்லது சட்டமா அதிபர் திணைக்களம் ரத்துச் செய்யப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதன்போது, ​​நீதி வழங்கும் பணியில் சட்டமா அதிபர் திணைக்களத்தை விட திறம்பட சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த நிறுவனத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 000
  • 200
Added a news 
புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிக்கையில் குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். ஞாயிறன்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்சக்தி அமைச்சர் குரங்குகள் மீது பழி சுமத்தினார். 33,000 மெகாவோல்ட் கொண்ட மின் பிறப்பாக்கி புலிகளால் தீ வைக்கப்பட்ட போது கூட இவ்வாறு தேசியளவில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை.  அவ்வாறிருக்கையில் ஒரு குரங்கால் முழு நாட்டுக்கும் மின் துண்டிப்பை ஏற்படுத்த முடியுமா?கடந்த அரசாங்கங்களின் குறைக் கூறியே இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தற்போது ஆட்சியிலிருந்து கொண்டும் இதனையே கூறுகின்றனர். நுரைச்சோலை நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கிகள் செயலிழந்தமையால் இந்நிலைமை ஏற்பட்டது எனக் கூறினர். கடந்த காலங்களில் நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த சந்தர்ப்பங்களில், அது தொழிற்சங்க மாபியாக்களின் செயல் என விமர்சித்தனர். அவ்வாறெனில் இந்த அரசாங்கத்துக்கும் அந்த மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதா? இந்த மாபியாக்களின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா? நுரைச்சோலை மின்பிறப்பாக்கிகள் செயலிழக்கப் போவதை அறிந்தே அரசாங்கம் அதற்கு இடமளித்திருக்கிறது. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்றார்.
  • 217
Added a news 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு சிவில் அமைப்பினர் குறிப்பிட வேண்டியதில்லை. வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தேவையுமில்லை. அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மஹிந்த ராஜபக்ஷ வீட்டை விட்டு வெளியேறுவார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப் பெறுவோம். தொகுதி மற்றும் ஆசன மட்டத்தில் தேர்தல் பிரச்சார கூட்டங்களை எதிர்வரும் மாதம் முதல் நடத்துவோம். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை கிராமத்துக்கு கிராமம் எடுத்துரைப்போம்.கடந்த அரசாங்கங்களின் நிர்வாகத்தை விமர்சித்தே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.  ஆகவே இப்போதும் கடந்த காலத்தை போன்று போலியான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல் சிறந்த முறையில் செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.தேங்காய் தட்டுப்பாட்டுக்குக்கும், மின்விநியோக துண்டிப்புக்கும் குரங்குகள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. மின்சாரத்துறை அமைச்சரின் பொறுப்பற்ற கூற்று அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு சிவில் அமைப்பினர் குறிப்பிட வேண்டியதில்லை. வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தேவையுமில்லை. வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மஹிந்த ராஜபக்ஷ வீட்டை விட்டு வெளியேறுவார் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • 229
Added a post 
குரோதி வருடம் தை மாதம் 30 ஆம் தேதி புதன்கிழமை 12.2.2025சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 08.12 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.இன்று இரவு 08.24 வரை ஆயில்யம். பின்னர் மகம்.பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 289
Good Morning...
  • 290
Lehenga Choli $59.00 +Lehenga Fabric : Tussar Silk Lehenga Work : Kalamkari With Foil Work
+5
  • 319
Soft Georgette Satin Patta Saree's With Blouse $ 21.00+
  • 327
Soft Georgette Satin Patta Saree's With Blouse $ 21.00+
  • 339
Soft Georgette Satin Patta Saree's With Blouse $ 21.00+
+3
  • 339
Soft Georgette Satin Patta Saree's With Blouse $ 21.00+
+1
  • 347
Soft Georgette Satin Patta Saree's With Blouse $ 21.00+
+1
  • 357
Soft Georgette Satin Patta Saree's With Blouse $ 21.00+
+1
  • 378
 Lehengha saree 🦋#Package Details: 1 Choli / 1 Lehengha saree🦋Blouse Details:Fabric : Foux Gorgette Work.  : thread with Sequence Size    :  Un Stich Upto 44Inner  : micro🦋 LEHENGHA SAREE DetailsFabric : Foux Gorgette Inner  :  Micro Work  : thread wirh Sequence with fancy lace broderStiching type   : Reday to wear upto 42 with elastic with side zip
  • 380
+7
  • 381
Added a post 
25 வருடங்கள் முன்னர் எங்கள் ஊரில் ஒத்தக்கை தேவர் என்று ஒருவர் இருந்தார் பெண்ணொன்று , பையன்ஒன்றுஇரண்டு பேரையும் அவ்வளவு அருமையாக வளர்த்தார் பையன் குதிரை பூட்டிய வண்டி ஓட்டி வரும் பொழுது ஊரே வேடிக்கை பார்க்கும்அதற்கு இணையாக அந்தப் பெண் சைக்கிள் ஓட்டுவதும் ,இருசக்கர வாகனம் ஓட்டுவதும் ,குதிரை வண்டி ஓட்டுவதும், சிலம்பு சுற்றுவது என பார்ப்பவர்களை கவரும் வண்ணம் ஆக படிப்பும் சேர்த்து சொல்லிக் கொடுத்து வளர்த்தார் .அந்த பெண் பருவமடைந்த பின் அவர்கள் சொந்தத்திலேயே பையன் ஒருவன் ஒருவனுடன் காதல் உண்டாயிற்று .அவர்கள் இருவரும் சாரட்டு வண்டியில் செல்லும் பொழுதும் ,இருசக்கர வாகனத்தில் அந்த காலத்தில் அந்தப் பெண் ஒட்டி அந்த பையன் பின்னால் அமர்ந்து செல்வதும் வேடிக்கை பார்க்காதவர் பாக்கி இல்லை18 வயதைத் தாண்டியதும் முறைப்படியே ஊரறிய 20 ஆடுகளுக்கு மேல் வெட்டி ,சமையல் செய்து பெரிய அளவில் திருமணம் நடந்ததுஐந்து நாட்கள் கழித்து அவர்கள் மணமகன் ஊருக்குப் போகும்போது வருத்தப்படாத ஜனம் இல்லை . அந்த பெண் அனைவரிடம் சிரித்தவாறு தெரிந்தவர், தெரியாதவர் அனைவருக்கும் டாட்டா காண்பித்து சென்றது இன்றும் கண்களில் இருக்கிறதுஅங்கே சென்று இரண்டாம் நாள் இருவரும் கிணற்றுக்கு குளிக்க சென்றிருக்கிறார்கள்.பெண் மேலே இருக்க அந்த பையன் கிணற்றில் விழுந்து குளித்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டார்அந்த பெண் செய்வதறியாமல் துடித்து, கத்தி பின்னர் மின்சாரத்தை துண்டித்து அவனை வெளியே கொண்டு வருவதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டதுஅன்று ஊரே அந்த பெண்ணுக்கு அழுதது .அந்த பெண்ணின் அழகு ,அவ்வளவு சந்தோசங்கள் அழகு எல்லாமே பட்டுபோய் விட்டதுஒரு மாதம் முன்னர் தெரிந்த ஒருவருக்கு பஸ்ஸ்டாண்ட் அருகில் வெள்ளரிப்பிஞ்சு வாங்கிக் கொடுப்பதற்காக வாகனத்தை நிறுத்தினேன் .அப்போது ஒரு பெண் அண்ணா !இங்க வாங்க ,அண்ணா! இங்க வாங்க, 50 ரூபாய்க்கு மொத்தமாக தரேன் என்று செம்பட்டை முடியும், தோளில் துண்டும் ,வியர்த்த முகமாக அழைத்தார்.சரி ,என்று ஐம்பது ரூபாய் கொடுக்கும் போது மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல் .முகத்தை மறுபடியும் ஒருமுறை பார்த்து பொறி தட்டியது போல, நீங்கள்ஒத்தக்கை தேவர் மகள் தானே ?என்றதும் , ஆமாம் அண்ணா ,சரியாச் சொன்னே. இத்தனை வருஷத்துல கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டே, என்று சிரித்தவாறு இன்னும் இரண்டு மூன்றுபிஞ்சுகள் சேர்த்து போட்டாள்நான் கேட்க வந்த கேள்வியும், அந்த பெண் இருந்த நிலையும் ,முன்னொருகாலத்தில் பட்டாம்பூச்சி போன்று சிறகடித்த அவளின் அழகும் ,சிரிப்பும் ,பளீரென அவளின் சிரிப்பும், சிலம்பம் சுற்றும் கண்ணுக்குள் மின்னல் அடிக்க நல்லா இருக்கியாமா ?என்று உதட்டளவில் கேட்டுவிட்டு மனதளவில் மிகவும் வருத்தப்பட்டு வந்துவிட்டேன்அண்ணா !பிஞ்சு வெள்ளரிக்கண்ணா ,ரொம்ப பிஞ்சுங்கண்ணா , வாங்க அண்ணா என்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததுவாழ்க்கை சில பேருக்கு அழகாக இல்லை. பல பேருக்கும் கூட
  • 406
Added a video 
சீனாவின் சகோதர பாசம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் 10.02.2024 நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் பிரதீபன் மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் பிரதேச செயலகர்கள் துறைசார் அதிகாரிகள் என கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வின்போது 1070 குடும்பங்களுக்கு தலா 6490 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  • 407
Added a post 
மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீக சொத்துகளை கையகப்படுத்துவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய மனக்கவலையை மாற்றுவீர்கள். உறவினர்களை விருந்துக்கு அழைத்து மரியாதை செய்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.அதிர்ஷ்ட எண்: 9 7 6 1ரிஷபம் எதிர்பார்த்த வங்கிக் கடன்களை தடையின்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் உருவாக்குவீர்கள். கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிக்கு வைத்தியம் பார்ப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 6 1 2 9மிதுனம் சகோதர உறவுகளால் மன சஞ்சலம் அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் பயனடைய மாட்டீர்கள். வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு மருந்து மாத்திரை சாப்பிடுவீர்கள். பண வரவுகளை பக்குவமாகக் கையாளுவீர்கள். வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்ல மறக்காதீர்கள். கால்நடை வளர்ப்பிலும் கோழிப்பண்ணையிலும் மிகச் சிறந்த லாபம் பார்ப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 5 9 4 3கடகம் உயிர்த்தொழில் என்று சொல்லக்கூடிய பயிர்த் தொழிலை பக்குவமாக செய்வீர்கள். விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவீர்கள். தொழிற்சாலையில் பொருள் உற்பத்தியை பெருக்கி முன்னேற்றம் அடைவீர்கள். கடல் கடந்து தொழில் செய்வதில் உள்ள இடையூறுகளை விலக்குவீர்கள். புதிய தொழில் தொடங்க ஆயத்தமாவீர்கள். பிள்ளைகள் நலனிலும் வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 2 3 8 5சிம்மம் எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொழிலில் இழப்பை எதிர்கொள்வீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் சிலர் விபத்துக்களில் சிக்குவீர்கள். கடனை அடைக்காமல் சிரமப்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 1 7 6கன்னி நம்பியவர்கள் கைவிட்டதால் ஏமாற்றம் அடைவீர்கள். பணியிடங்களில் வீண் பழியை சுமப்பீர்கள். டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையால் தடுமாற்றம் அடைவீர்கள். ரியல் எஸ்டேட்டில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். பங்கு சந்தையில் பக்குவமாக முதலீடு செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 5 1 2 9துலாம் தாறுமாறாக பணப்புழக்கம் அதிகரித்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவீர்கள். அரசு, தனியார்துறை பணியாளர்கள் சிரமமின்றி வேலை பார்ப்பீர்கள். காதலியின் உதவியால் முக்கிய கடனை அடைப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை. அதிர்ஷ்ட எண்: 6 9 4 3விருச்சிகம் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு பிரகாசமாக இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை ஒவ்வொன்றாக விலக்குவீர்கள். குடும்ப நலனுக்காக பெண்களின் சேமிப்பை பெறுவீர்கள். நீங்கள் தொழிலில் செய்த முதலீட்டால் பல மடங்கு லாபத்தை காண்பீர்கள். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயர்ந்து நல்ல விலைக்கு விற்பீர்கள். ஆரோக்கியத்தில் மேம்பாடு காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம். அதிர்ஷ்ட எண்: 9 3 8 5தனுசு அலுவலகப் பணி தொடர்பாக அலைய வேண்டிய கட்டாய நிலைக்க ஆளாவீர்கள். மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். மேம்போக்காக இருந்த நீங்கள் சேமிப்பில் நாட்டம் கொள்வீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வீர்கள். வேலையாட்களின் உதவி யால் வியாபாரத்தை நல்ல முறையில் நடத்துவீர்கள். சந்திராஷ்டமம். எதிலும் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு. அதிஷ்ட எண்: 3 7 6 1மகரம் உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவதால் மன உளைச்சல் அடைவீர்கள். கூட இருந்து குழி பறிக்கும் முயற்சியில் இறங்கும் உறவினர்களை தவிர்க்க முடியாமல் தடுமாறுவீர்கள். ஐந்தாம் படையினரை அடையாளம் கண்டு வெற்றி பெறுவீர்கள். வாங்கிய கடனை மிகவும் சிரமப்பட்டு திருப்பிச் செலுத்துவீர்கள். சந்திராஷ்டம நாள். சங்கடங்களைச் சந்திக்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 8 1 2 9கும்பம் உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். உங்களைத் தேடி வரும் அரசாங்க பதவியில் உட்காருவீர்கள். கட்டுமான தொழிலில் புதிய முத்திரை பதிப்பீர்கள். நகைகள் வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 8 9 4 3மீனம் நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தப்பாகப் புரிந்து கொள்வதால் மனக்கவலை அடைவீர்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையாமல் கைக்காசை செலவழிப்பீர்கள். செய்யாத குற்றத்திற்கு நீங்கள் தண்டனை பெறுவீர்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 3 8 5
  • 438
Added a post 
போதையில் பேசினாலும் அவன் தெளிவா தான் பேசி இருக்கான் எனக்கு தான் சரியா விளங்க வில்லை!இரயில்வே ஸ்டேஷனில் நண்பனுக்காக காத்‌திருந்தேன்,பச்ச லுங்கியோட ஒரு குடிமகன் வந்தார்.கு.ம : சார்…! கொஞ்சம் போன் தரீங்களா வீட்டுக்கு பேசணும்.நான் : வீட்டுக்கு தான் பேசுறீங்களான்னு எப்புடி தெரியும் ?கு.ம : ஸ்பீக்கர் போட்டு குடுங்க சார்....(தெளிவாத்தான் இருக்கார். நம்பர் போட்டு ஸ்பீக்கர் போட்டு குடுத்தேன்)கு.ம : ஹலோ...!அங்குட்டு : அலோ...! என்னங்க நீங்கதானா?கு.ம : நாந்தான் சொல்லு.அங்குட்டு : கெளம்பிட்டீங்களா ?கு.ம : இல்லடி... நாளைக்கு வாரேன்.அங்குட்டு : புள்ள நோட்டு கேட்டுச்சே?கு.ம : நாளைக்கு வரும்போது வாங்கிட்டு வாரேன். பேலன்சு இல்ல அப்புறம் பேசுறேன்.நான் (குறுக்க) : பேலன்ஸ்ல்லாம் இருக்கு பேசுங்க.அங்குட்டு : இருங்க வச்சுறாதீக…! புள்ள பேசனுமாம்.கு.ம : டி __________ நாந்தான் பேலன்ஸ் இல்லன்னு சொல்றேன்ல.நான் (குறுக்க மறுபடியும்) : பேலன்ஸ்ல்லாம் இருக்கு பேசுங்கண்ணே.புள்ள : நைனா, கோடு போட்ட நோட்டு வாங்கிகினியா?கு.ம : ஏ லூசு...! பேலன்சு இல்ல காலைல பேசுறேன், சார் போன பிடி சார்.நான் : பரவால்ல பேசுங்கன்னு சொல்றதுக்குள்ள பயபுள்ள ப்ளாட்பாரத்துல உழுந்துகிடக்கு.அவன் தெளிவாத்தான் பேசிருக்கான், நாந்தான் குழம்பிட்டேன். பேலன்ஸ் இல்லைங்குறது அவனுக்கு (போதையில)
  • 461
Added a post 
கிருஷ்ணரின் இறுதி காலம் வரை அவருடனேயே பயணித்தவர், உத்தவர். கிருஷ்ணருடன் அதீத நட்புடன் பழகியவர்கள் இருவர். ஒருவர் வசுதேவரின் சகோதரி குந்தியின் மகனான அர்ச்சுனன். மற்றொருவர் வசுதேவரின் சகோதரர் தேவபகாரின் மகனான உத்தவர். மகாபாரத போரின் போது கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு செய்த உபதேசம் ‘பகவத்கீதை’ என்று அழைக்கப்படுவது போல, தன்னுடைய இறுதி காலத்தில் உத்தவருக்கு கிருஷ்ணர் செய்த உபதேசம் ‘உத்தவ கீதை’ என்று புகழப்படுகிறது.ஒரு முறை கிருஷ்ணரிடம் சில சந்தேகங்களைக் கேட்டறிந்தார், உத்தவர். அதில் ஒரு சந்தேகத்திற்கான பதிலை இங்கே பார்க்கலாம்.“கண்ணா.. குருசேத்திரப் போருக்கு முன்பாக, பாண்டவர்களுக்காக நீங்கள் அஸ்தினாபுரம் சென்று கவுரவர்களிடம் தூது போனீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் தங்குவதற்காக தனது பிரமாண்ட அரண்மனையில் மிகப் பெரிய அறை ஒன்றை துரியோதனன் ஏற்பாடு செய்திருந்தான். பல வகை உணவுகளோடு பிரம்மாண்டமான விருந்தும் தயார் செய்து வைத்திருந்தான். அனைவரும் பிதாமகர் என்று அழைக்கும் பீஷ்மரும் கூட உங்களை அங்கு வந்து தங்கும்படி அழைத்தார்.ஆனால் நீங்களோ, துரியோதனனின் அரண்மனையையும், விருந்து உபசாரத்தையும் உதறித் தள்ளிவிட்டு, விதுரரின் குடிசையில் போய் தங்கினீர்கள். அதோடு அவர் மனைவி தயார் செய்து வைத்திருந்த மோரை மட்டுமே அருந்தி பசியாறினீர்கள். துவாரகைக்கு மன்னராக இருக்கும் தாங்கள், அரண்மனையில் தங்காமல், விதுரரின் குடிசையை மனம் உவந்து ஏற்றுக்கொண்டதன் காரணம் என்ன?” என்று கேட்டார், உத்தவர்.அதற்கு பதிலளித்த கிருஷ்ணர், “என் மனதிற்கு நெருக்கமான உத்தவரே.. தடபுடலான விருந்து, தங்குவதற்கு பிரமாண்ட அறை இருந்தும், விதுரரின் குடியில் இருந்த ஒன்று... துரியோதனனின் அரண்மனையில் இல்லையே” என்றார்.அதைக் கேட்ட உத்தவர், “கிருஷ்ணா.. விதுரரின் குடிசையில் அப்படி என்னதான் இருந்தது? அது ஏன் துரியோதனனின் அரண்மனையில் இல்லை?” என்று கேள்வி எழுப்பினார்.“உத்தவரே.. விதுரரின் குடிசையில் இருந்ததும், துரியோதனனின் அரண்மனையில் இல்லாததும் ‘பக்தி’தான். துரியோதனன் எனக்காக நிறைய ஏற்பாடுகளை செய்ததோடு, நல்ல விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தாலும், ‘இதோ பார்.. நான் உனக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறேன்’ என்று நினைக்கும் ஆணவம் அவனிடம் மிகுந்திருக்கிறது. அதுவே பக்தியை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு எனக்காக, விதுரரும், அவர் மனைவியும் அளித்த மோர், என் மனதை குளுமைபடுத்துவதாகவும், என் பசியை போக்குவதாகவும் இருந்தது. எப்போதும் உண்மையான பக்தியிடம்தான் நான் திருப்தி அடைகிறேன்” என்று கூறினார், ஸ்ரீகிருஷ்ணர்.
  • 446
Added a post 
குரோதி வருடம் தை மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11.2.2025சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 07.50 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.இன்று இரவு 07.31 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 450