Ads

New Arrival

New arrival in February

  • 572
  • More
  • 324
  • More
  • 341
  • More
  • 337
  • More
  • 338
  • More
Comments (0)
Login or Join to comment.
Added a post 
விசுவாசம், நம்பகத்தன்மை மற்றும் நீடித்த பந்தங்களுக்குப் பெயர் பெற்ற ராசிக்காரர்கள் யார் மற்றும் அவர்கள் ஏன் நட்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.கடகம்கடக ராசிக்காரர்கள் உணர்ச்சி ஆழம் மற்றும் இரக்கம் கொண்டவர்கள். அவர்களின் அக்கறையான இயல்பு குடும்ப உறவுகளைத் தாண்டி அவர்களின் நட்பு வரை நீள்கிறது, குடும்ப உறவுகளைப் போலவே நட்பிலும் அவர்கள் அசைக்க முடியாத ஆதரவையும் புரிதலையும் வழங்குகிறார்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் உறுதியான மற்றும் நம்பகமான நண்பர்களாக இருப்பார்கள். தங்கள் அடையாளத்தை குறிக்கும் உறுதியான காளை போல, ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் விசுவாசத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் பெயர் பெற்றவர்கள். நீங்கள் ஒரு ரிஷப ராசிக்காரருடன் நட்பு கொள்ளும்போது, ​​அவர்கள் உங்களுடன் வாழ்நாள் முழுவதும் நண்பராக இருப்பார்கள் என்று நீங்கள் நம்பலாம். வாழ்க்கைக்கான அவர்களின் எதார்த்த அணுகுமுறை அவர்கள் தங்கள் நட்புக்கு முன்னுரிமை அளிப்பதையும், வரவிருக்கும் ஆண்டுகளில் அவர்களை பாதுகாப்பதற்கு தேவையான நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்வதையும் உறுதி செய்கிறார்கள்.கடகம்கடக ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களின் தேவைகளை எதிர்பார்க்கும் மற்றும் கடினமான காலங்களில் ஆறுதலான இருப்பை வழங்குவதற்கான உள்ளுணர்வு திறனுக்காக அறியப்படுகிறார்கள். அவர்களின் அனுதாபம் நிறைந்த இதயத்தால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் இணைப்புகளை உருவாக்குகிறார்கள்.துலாம் துலாம் ராசியில் பிறந்தவர்கள், தங்கள் உறவுகளில் நல்லிணக்கத்தை உருவாக்கும் உள்ளார்ந்த திறனைக் கொண்டுள்ளனர். துலாம் ராசிக்காரர்கள் அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்த்து, தங்கள் நட்பில் அமைதியையும் சமநிலையையும் பேணுவதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். இராஜதந்திரம் மற்றும் கருணையுடன் மோதல்களைத் தீர்ப்பதில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள், அவர்களின் பிணைப்புகள் வலுவானதாகவும், நீண்ட காலம் நிலைத்திருப்பதாகவும் இருப்பதை உறுதிசெய்கிறது. உங்கள் பக்கத்தில் ஒரு துலாம் நண்பர் இருந்தால், நீங்கள் கருணை மற்றும் பரஸ்பர மரியாதையுடன் வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை எளிதாக சமாளிக்கலாம். மீனம் மீன ராசிக்காரர்கள், கருணை மற்றும் பச்சாதாப குணத்திற்கு பெயர் பெற்றவர்கள். இந்த உள்ளுணர்வு மிக்க ஆத்மாக்கள் தங்கள் நண்பர்களுடன் ஆழமான உணர்ச்சித் தொடர்புகளை உருவாக்குகிறார்கள், அவர்கள் தங்கள் நண்பர்களின் உள்ளார்ந்த எண்ணங்களையும், உணர்வுகளையும் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். மீன ராசிக்காரர்கள் எப்போதும் காது கொடுத்து கேட்பவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் நண்பர்கள், இது அவர்களை வாழ்க்கைப் பயணத்திற்கு விலைமதிப்பற்ற தோழர்களாக மாற்றுகிறது.
  • 93
  • 108
  • 118
Added a post 
காலையில் எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் சேகர், அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்க்காக மிக வேகமாக சமைத்து கொண்டு இருந்தாள்.. ஆனால் தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாக புறப்பட்டான், இதை பார்த்த மனைவி "ஏன் இவ்வளவு சீக்கிரம் போகிறீர்கள்" என்று வினவினாள்.அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி கொண்டே கிளம்பினான்..., "நேற்றே சொல்லி இருந்தால் இன்னும் விரைவாக சமைத்து இருப்பேனே, கொஞ்சம் பொறுங்கள் சமையல் முடிய போகிறது" என்றால் மனைவி."எல்லாம் உன்னிடம் சொல்லி கொண்டே இருக்க வேண்டுமா..? எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கிறது, ஒரு நாள் சாப்பிடாமல் போனால் ஒன்றும் செத்து விட மாட்டேன், போய் நீ நன்றாக சாப்பிடு.." என சொல்லி விட்டு விருட்டென்று வாகனத்தை எடுத்து சென்றான்.மனைவி ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று, சமையலை முடித்து இறக்கி வைத்து விட்டு தானும் சாப்பிடாமல் துணிகளை துவைக்க சென்று விட்டாள்...("சேகர்" ஒரு தபால் அலுவலகத்தில் வேலை செய்கிறான், அவனுடைய மனைவி வீட்டில் தான் இருக்கிறாள், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்... வீட்டில் பெற்றோர்கள் சம்மதம் கிடைக்க வில்லை, அதனால் பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு, தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து வாங்கி கொண்டு தனியாக வந்து விட்டான்..இருவருக்கும் திருமண ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, இது பெரிய மன உளைச்சல் ஆகவே இருந்தது "சேகருக்கு")அலுவலகம் முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தான் சேகர், அலுவலகத்தில் சில வேலைகளை தவறாக செய்ததால் "மேலதிகாரி" சேகரை எல்லோர் முன்னும் ரொம்ப திட்டி விட்டார்.. அதை நினைத்த படியே வீடு வந்து சேர்ந்தான்..மனைவி ஆவலோடு தான் சமைத்த உணவை எடுத்து வந்து பரிமாற துவங்கினாள், இவனும் சாப்பிட உட்கார்ந்தான், சாப்பிட ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தட்டை எடுத்து தூக்கி சுவர் மீது அடித்தான்..அவள் அப்படியே உறைந்து போய் நின்றாள்..! "உணவில் காரம் எவ்வளவு போட்டு இருக்கிறாய், உனக்கு சமைக்க தெரியாத" என்று கத்தி பேச தொடங்கினான். (உணவு அவ்வளவு காரம் இல்லை, ஆனால் அவன் அலுவலகத்தில் நடந்ததை நினைத்து கொண்டே சாப்பிடவும் தான் அது அவ்வளவு காரம் ஆகிவிட்டது)"உன்னால் ஒரு காரியம் ஒழுங்கா செய்ய முடியாத எல்லாம் என் "விதி" உன்னோடு வாழ வேண்டும் என்பதற்காக என் உறவுகள் எல்லாம் தூக்கி எறிந்த்தேன், உன்னால் ஒரு குழந்தை பெற்று எடுக்கும் பாக்கியம் கூட இல்லை, உன்னை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து இருக்கலாம், என் பெற்றோர் பேச்சை அப்பொழுதே கேட்டு இருக்கலாம், உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி "இருளாக" மாறி விட்டது, அலுவலகத்திலும் இவ்வளவு ஆண்டு வேலை செய்து உனக்கு தானே கொட்டுகிறேன், என்ன பண்ணுவது காதலித்து விட்டேன் அல்லவா.. இன்னும் நிறைய சம்பாதித்து கொட்டுகிறேன்.. நன்றாக கொட்டிக்கொள்"என அடிக்கி கொண்டே போனான்... அறை கதவை வேகமாக மூடி விட்டு உள்ளே சென்று விட்டான்...மனைவி கண் கலங்கிய படி "தானும் எல்லோரையும் விட்டு தானே வந்தேன்" என மனதில் நினைத்து கொண்டே கண்ணீர் தரையில் விழுந்த படி வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.. மனைவியும் சாப்பிடாமல், அப்படியே தரையில் படுத்து உறங்கி விட்டாள்..மறுநாள் காலையில் எழுந்து மறுபடி அவளது பணியை செய்ய ஆரம்பித்தாள்.. சேகர் எதுவும் பேசாமல் செய்து வைத்த சமையலை எடுக்காமல் விருட்டென்று கிளம்பி போய் விட்டான்...அலுவலகம் சேர்ந்த பிறகு தனது பணியை ஆரம்பித்தான்.. அப்பொழுது ஒரு "வயதான முதியவர்" தலையில் பழக் கூடையை சுமந்தபடி,வியர்வை சொட்ட, சொட்ட வந்தார். (மதிய நேரம் உச்சி வெயில் வேறு) பழ கூடையை இறக்கி வைத்து விட்டு, அலுவலகத்தின் உள்ளே வந்தார்.... தனது சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்து மேசையில் வைத்தார். (பணம் அவரது வேர்வையில் நனைந்து இருந்தது). இதைக் கண்ட சேகருக்கு ஒரே ஆச்சரியம்.. இவ்வளவு வயதான காலத்தில் யாருக்கு இப்படி உழைக்கிறார் என்று.. அதை மனதில் நினைத்து கொண்டே "உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் ஐயா" என்று அவரிடம் வினவினான்.அந்த முதியவர் கடந்த மாதம் பணம் அனுப்பிய ரசீதை காண்பித்து "இதே முகவரிக்கு பணம் அனுப்ப வேண்டும்" என்று சொல்லிவிட்டு, அதோடு ஒரு கடிதத்தையும் கொடுத்தார்.அந்த ரசீதை கண்ட சேகருக்கு ஒரே அதிர்ச்சி...(அது ஒரு முதியோர் இல்லத்தின் முகவரி). சேகருக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது..!"இது எதற்க்காக, ஏன் அனுப்புக்குறீர்கள்" என்று கேட்க வேண்டும் என்கிற ஆவல் அவனை பிடித்து கொண்டது. தயங்கிய படியே "ஐயா இதை கேட்க கூடாது தான் இருந்தாலும் என் மனம் கேட்க வேண்டும் என்று துடிக்கிறது,உங்களிடம் ஒன்று கேட்கலாமா..? என்று குரல் தாழ்த்தியபடி கேட்டான்.அவரும் "சொல்லுங்கள் தம்பி" என்றார்."நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்கள்.. எதற்காக... உங்கள் மனைவிக்காகவா... என்றான். அந்த முதியவர் ஆச்சரியமாக சேகரை பார்த்தார்.."சேகருக்கு ஒன்றுமே புரியவில்லை தவறாக கேட்டு விட்டோமோ..? என்று நெஞ்சம் படபடத்தது"..!"நான் இருக்கும் போது என் மனைவியை அப்படி விட்டு விடுவேனா..? தம்பி" என்று சற்று கம்பீரமாக அந்த முதியவர் சொன்னார். சேகர் அமைதியாக அவர் சொல்வதை கேட்க ஆரம்பித்தான்... முதியவர் சொல்ல ஆரம்பித்தார்..."நான் இந்த முதியோர் இல்லத்திற்கு கடந்த 10 ஆண்டாக பணம் அனுப்புகிறேன், இன்று வரை யாரும் இந்த கேள்வியை கேட்டது இல்லை. முதல் முறையாக நீங்கள் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது." என்று சற்று உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தார்."எனக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகின்றன,என் மனைவி என் கூட தான் இருக்கிறாள், எங்களுக்கு குழந்தைகள் இல்லை.என் மனைவிக்கு வாய் பேச முடியாது, எங்கள் திருமணம் ஒரு சுவாரசியமான நிகழ்வு தம்பி" என்று கூறியவர் கொஞ்சம் தண்ணீர் கேட்டார் சேகரிடம்.மிக விரைவாக ஓடி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் சேகர்.. சேகர் நாற்காலியின் நுனியில் அமர்த்த படி " உங்களின் திருமணம் எப்படி நடந்தது, உங்கள் மனைவி எப்படி தெரியும், அதையும் சொல்லுங்கள் ஐயா.." எனக்கு ஆவலாக இருக்கிறது" என்று முதியவர் தண்ணீர் குடித்து முடிப்பதற்குள் சொல்லி முடித்தான்.முதியவர் சற்று சிரித்த படி மேலே சிந்திய நீரை துண்டினால் துடைத்த படி மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்.. "என் மனைவியை சிறு வயதிலேயே தெரியும், எங்கள் வீட்டின் அருகில் தான் குடும்பமாய் இருந்தார்கள், அவர் வீட்டில் இவள் ஒரே பிள்ளை தான், அவளுக்கு 10 வயதாக இருந்த பொழுது அவளுடைய தந்தையோடு வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் வாகனம் மோதி அவர் தந்தை இறந்து விட்டார், தன் கண் முன்னே தந்தை இறந்து போனதை கண்ட அவளுக்கு பேச்சு வராமல் போய் விட்டது.... அதன் பிறகு அவளுடைய தாய் பல வீட்டு வேலைகளை செய்து அவளை வளர்த்தார், இவளும் வளர்ந்து பெரியவளாகி விட்டாள்.அவளுடைய குறையை பார்த்த யாருக்கும், அவளின் அன்பு தெரியவில்லை, அவளுக்கு எல்லோரும் தன்னிடம் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும் ஆனால் யாரும் பேச தான் மாட்டார்கள்.. அவளின் தந்தை மரணத்திற்கு பிறகு உறவுகள் எல்லாம் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். திருமண வயது வந்தது, ஆனால் பேசமுடியாத காரணத்தால் அவளை திருமணம் செய்ய யாரும் முன் வரவில்லை...,பிறகு எங்கள் பெற்றோர்கள் பேசி இருவருக்கும் திருமணம் நடந்தது. பிறகு காலங்கள் கடந்தது எங்களை பெற்றவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள்.. எங்களுக்கும் வயது ஆகி விட்டது. ஆனால் என் மனைவி ஒரு குழந்தை மாதிரி......தம்பி" என்று சொன்னவர் குரலில் ஒரு தடுமாற்றம். (கையில் வைத்து இருந்த துண்டை எடுத்து கண்களை லேசாக துடைத்தார்).(சேகரின் உள்ளத்தில் ஏதோ ஒன்று குத்த ஆரம்பித்தது)தன்னை நிதானித்து கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்.. "அவளுக்கு உலகமே நான் மட்டும் தான், என்னை தவிர வேறு யாரையும் தெரியாது... ஒரு முறை நான் உடல் நலம் பாதிக்க பட்டு படுத்த படுக்கையாக இருந்தேன்..வேலைக்கு செல்லாமல் கையில் பணம் வேறு இல்லை. அப்பொழுது மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக அவள் அம்மா நினைவாக வைத்து இருந்த ஒரு தங்க குண்டு மணியை எனக்காக கடையில் விற்று விட்டாள். பிறகு அந்த பணத்தை கொண்டு மருத்துவரிடம் சென்று "என் கணவனை எப்படியாவது காப்பாற்றுங்கள்" என்று வாய் பேச முடியாத நிலையிலும்,செய்கையை காண்பித்து மருத்துவரிடம் கெஞ்சி புழுவாக துடித்து போய் விட்டாள்..!(என்று சொன்னவர் கண்கள் இரண்டும் சிவந்து போய் விட்டது)"பிறகு நான் குணமாகி என் வேலையை செய்ய ஆரம்பித்தேன்"என்று தன்னை திட படுத்தி கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.."அப்பொழுது தான் எனக்கு ஒரு சிந்தனை வந்தது, எனக்கு முன்பு அவள் இறந்து விட்டாள் பரவாயில்லை கடைசி வரை அவளை பார்த்து கொண்ட மன நிறைவு இருக்கும் ஆனால் அவளுக்கு முன்பே எனக்கு இறப்பு வந்தால் என் மனைவியின் நிலை என்ன என்று.. அதற்கு தான் இந்த "பணம்" ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை அனுப்பி விடுவேன்.. அதில் பாதி அந்த முதியோர் இல்லத்தில் கணவன் இல்லாமல் இருக்கும் மற்றவர்களுக்கும், மீதி பாதி தொகையை என் மனைவிக்காக சேர்த்து வைத்து கொண்டு வருகிறேன்.. அந்த பணத்தோடு ஒரு கடிதம் கொடுத்தேன் அல்லவா.. அதை திறந்து படித்து பாருங்கள் தம்பி".. என்றார்.சேகர் நெஞ்சில் ஒரு உறுத்தல்... கைகள் நடுங்கிய படி கடிதத்தை பிரித்து பார்த்தான்... அவன் கண்கள் இரண்டும் கலங்கிய படி இருந்தது. அதில்....."நானும், என் மனைவியும் நலமாக உள்ளோம்... இந்த மாதம் என்னால் இயன்ற தொகை அனுப்பி உள்ளேன்.அடுத்த மாதம் இதே போல் கடிதமும், பணமும் வரவில்லை என்றால்.. நான் இறந்து போய் இருப்பேன்...நீங்கள் வந்து என் மனைவியை அழைத்து சென்று பத்திரமாக குழந்தை போல் கடைசி வரை பாத்து கொள்ளுங்கள்".இதுவே என் கடைசி ஆசை.."..........இதை படித்த சேகருக்கு நெஞ்சில் பாரம் கூடியது கை, கால் நடுக்க ஆரம்பித்தது.. கலங்கிய கண்களோடு அந்த முதியவரை பார்த்தான்..."சரி தம்பி எனக்கு நேரம் ஆகி விட்டது அதை அனுப்பி விடுங்கள், ஒரு உதவி செய்ய வேண்டும்" என்றார் அந்த முதியவர். என்ன செய்ய வேண்டும் ஐயா என ஆவலோடு கேட்டான்."வெளியில் நான் வியாபாரம் செய்யும் பழ கூடை இருக்கிறது அந்த பழ கூடையை கொஞ்சம் தூக்கி விட முடியுமா" என்றார்.நெஞ்சில் ஒரு பெரிய பாரத்தோடு அவன் அமர்ந்து இருந்த அலுவலக கூண்டை விட்டு வெளியே வந்தான்..வெளியே வந்து பார்த்த சேகருக்கு பெரிய அதிர்ச்சி....அந்த முதியவருக்கு இடது கை இல்லை...(இவ்வளவு நேரம் அவருக்கு கை இல்லாததை சேகர் கவனிக்கவே இல்லை.. அவ்வளவு ஆர்வமாக அவர் சொன்னதை மட்டும் தான் பார்த்து கொண்டு இருந்தான்). கண்கள் கலங்கிய படி அந்த கூடையை தூக்கி அவர் தலையின் மீது வைத்தான்... அது கொஞ்சம் சுமை அதிகமாகவே இருந்தது."மனைவி மீது இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறீர்கள்.. உங்களுக்கு ஒரு குழந்தையும், கொஞ்சம் சொத்தும் இருந்து இருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும்... நீங்கள் உங்கள் மனைவிக்காக இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லையே" என்று குரலில் ஒரு நடக்கத்தோடு சொன்னான்.இதை கேட்ட முதியவர் சற்று சத்தமாய் சிரித்தார்... ஆ...ஆ...ஆ."என் மனைவி நம்பி வந்தது என்னை தான்.. சொத்தையோ... அல்லது பிள்ளையையோ இல்லை...அவளுக்காக சுமகின்ற இந்த சுமையும் ஒரு சுகமே...." என்று சொல்லி கொண்டே உச்சி வெயிலில் உற்சாகமாக பழ கூடையை தலையில் வைத்த படி ஒரு கையால் பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தார் அந்த முதியவர்.சேகரின் கண்களில் கலங்கி நின்ற நீர் பெருந்துளியாய் தரையில் விழுந்தது. தரையில் விழுந்தது கண்ணீர் துளி மட்டும் அல்ல... அவனின் சுபாவமும்...கொண்டு செல்ல ஒன்றும் இல்லை இவ்வுலகில்................... கொடுத்து செல்வோம் உண்மையான அன்பை..!
  • 128
Added a post 
1902 – பியேர், மேரி கியூரி ஆகியோர் இரேடியம் குளோரைடைத் தூய்மைப்படுத்தினர்.1914 – ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.1922 – சோவியத் அரசு தெற்கு ஒசேத்திய தன்னாட்சி வட்டாரத்தை ஜோர்ஜிய சோவியத் சோசலிசக் குடியரசில் அமைத்தது.1939 – இட்லரின் 50வது பிறந்தநாள் செருமனியில் தேசிய விடுமுறை நாளாகக் கொண்டாடப்பட்டது.1945 – வடக்கு செருமனியில் நியூரென்காம் வதை முகாமில் மருத்துவப் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 20 யூத சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் செருமனியின் லைப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்குக் கையளித்தனர்.1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லைப்சிக் நகர முதல்வர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.1945 – இட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.1946 – உலக நாடுகள் சங்கம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டு, அதன் பெரும்பாலான அதிகாரங்கள் ஐக்கிய நாடுகள் அவைக்கு வழங்கப்பட்டன.1961 – பனிப்போர்: கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட பன்றிகள் விரிகுடா படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.1967 – சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் உயிரிழந்தனர்.1968 – தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் உயிரிழந்தனர்.1972 – அப்பல்லோ திட்டம்: யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது.1978 – தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.1986 – இலங்கை, கிழக்கு மாகாணத்தில் கந்தளாய் அணை உடைந்ததில் 120 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.1998 – கொலம்பியாவில் பொகோட்டா நகரில் ஏர் பிரான்சு போயிங் விமானம் மலை ஒன்றுடன் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 53 பேரும் உயிரிழந்தனர்.1998 – 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.1999 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.2007 – அமெரிக்காவின் இயூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.2012 – பாக்கித்தான், இஸ்லாமாபாத் நகரில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் குடிமனைகள் உள்ள பகுதியில் விமானம் வீழ்ந்ததில் 127 பேர் உயிரிழந்தனர்.2013 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.6-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 150 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.2015 – சோமாலியா, புந்துலாந்து பகுதியில் ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்படனர்
  • 133
  • 130
  • 144
  • 144
காலை வணக்கம்
  • 146
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 7 ஆம் தேதி மேஷம் -ராசி: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உறவினர்களின் வழியில் மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புரிஷபம் ராசி: தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். நண்பர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தெளிவு ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்மிதுனம் -ராசி: விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். உறவினர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். வியாபாரம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். தனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கடகம் -ராசி: கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : நீலம்சிம்மம் -ராசி:சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை காக்கவும். சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை கன்னி -ராசி: கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். ஆடம்பரப் பொருட்களால் சேமிப்பு குறையும். உறவினர்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புதுலாம் -ராசி: இலக்குகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். புது தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். சேமிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் விருச்சிகம்- ராசி: மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் உண்டாகும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிவீர்கள். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஊதா தனுசு -ராசி: கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில தனவரவுகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் விவேகம் வேண்டும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். சுபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மகரம் -ராசி:செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்துச் செயல்படவும். நெருக்கமானவர்களால் அலைச்சல் ஏற்படும். தனம் சார்ந்த உதவிகளில் தாமதம் உண்டாகும். விவேகத்துடன் நடந்து கொள்வது நன்மதிப்பை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்லவும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்கும்பம் –ராசி:வாழ்க்கைத் துணைவரின் வழியில் அனுகூலம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பால் உற்சாகம் உண்டாகும். சகோதரர்களின் வழியில் ஆதாயம் அடைவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பச்சைமீனம் -ராசி: தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள். 
  • 225
Added a post 
குரோதி வருடம் சித்திரை மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை 20.04.2024. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று முழுவதும் துவாதசி. இன்று மாலை 03.50 வரை பூரம். பின்னர் உத்திரம். பூராடம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 223
Good Morning...
  • 247
அழகான பெண்
  • 278
Added a celebrity 
வடதேசத்திலிருந்து வந்து திருவண்ணாமலை அருகில் முல்லந்திரம் மற்றும் பிற கிராமங்களில் குடியமர்ந்த கௌட பிராமண குடும்பத்தில் பிறந்தவர் அருணகிரிநாதர். அவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்தார். அருணகிரிநாதர் புராணத்தில் அருணகிரிநாதரின் ஜன்மதினமாக புரட்டாதி உத்தரமும் தனுர் லக்னமும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நாள் பிறந்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனிப் பூரணையையும் அருணகிரிநாதர் விழாவாக இலங்கையில் கொண்டாடி வருகிறார்கள். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர்.(Note:அருளாளர் அருணகிரி நாதரின் போற்றத்தக்க வாழ்க்கை வரலாற்றை அகச்சான்றுகள் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில்)
  • 297
Added a video 
கார் வைத்திருப்பவர்கள் கவனம் ....காரை லாக் செய்து விட்டோம் பாதுகாப்பாக உள்ளது என எண்ண வேண்டாம்.
  • 302
Added a post 
முலாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளமானவை. வைட்டமின் ஏ, சி மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்தது: நோய் எதிர்ப்பு சக்தி, பார்வை மற்றும் செல் ஆரோக்கியத்திற்கு அவசியம். பொட்டாசியம் நிறைந்தது: இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்தது: செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது: செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: ஜலதோஷம் மற்றும் சளி போன்ற நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் போராட உதவுகிறது. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வைட்டமின் ஏ பார்வையை மேம்படுத்தவும், கண் நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது.  நார்ச்சத்து செரிமானத்தை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் பசியை கட்டுப்படுத்தவும், எடை இழக்கவும் உதவுகிறது. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் தோல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், வயதான தோற்றத்தைத் தாமதப்படுத்தவும் உதவுகிறது. அதிக நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளடக்கம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • 317
Added a news 
தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களை எடுத்து இலங்கை மகளிர் அணி வெற்றி இலக்கை கடந்தது.இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்து இந்த போட்டியில் 195 ஓட்டங்களை பெற்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • 309
Added a news 
பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குடிநீர், கோலா பானங்கள் முதல் பல்வேறு ரகத்திலான உணவுப்பொருட்கள் வரை பூச்சிக்கொல்லி அதிகம் இருப்பதாக புகார்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்திய தயாரிப்பான பிரபல மசாலா நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லியின் அளவு அதிகம் இருப்பதாகக் கூறி, சிங்கப்பூரில் அதற்கு தடை விதித்துள்ளனர்.இது தொடர்பாக இன்றைய தினம் சிங்கப்பூரில் வெளியான அறிக்கை, ’இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மசாலா தயாரிப்பு நிறுவனமான எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பூச்சிக்கொல்லி இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது. எத்திலீன் ஆக்சைடு என்னும் பூச்சிக்கொல்லி மனித நுகர்வுக்குப் பொருந்தாத அளவில் இருப்பதை சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு ஏஜென்சி கண்டறிந்துள்ளது.பூச்சிக்கொல்லி மருந்தை எந்த வகையிலும் உணவில் பயன்படுத்த அனுமதி இல்லை என்று உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களின் மீதான நுண்ணுயிர் தாக்கத்தை தடுக்க ரசாயன கலவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். எனினும் சிங்கப்பூர் சட்டங்களின்படி, உணவுப்பொருட்களில் இவற்றின் சேர்க்கை தடை செய்யப்பட்டிப்பதாகவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.எத்திலீன் ஆக்சைடை உட்கொள்வது நீடித்த காலத்துக்கான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 
  • 318
Added a news 
தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், இன்று வேலூர், கரூர் பரமத்தியில் தலா 107 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம், திருச்சி, திருத்தணியில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை நகரம், தருமபுரியில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தியது.இந்த சூழலில், சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (20.04.2024) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.04.2024 முதல் 23.04.2024 வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்புஅடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3°-5° டிகிரிசெல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை (20.04.2024) அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.19.04.2024 முதல் 23.04.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 ஆகவும் மற்றும் கடலோர பகுதிகளில் 50-85%ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
  • 323
Added a news 
என் மனைவிக்கு மட்டும் ஏதாவது நடந்தால் அதற்கு ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனீர் தான் காரணம் என்றும் அவரை நான் சும்மா விடமாட்டேன் என்றும் இம்ரான் கான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகிய இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் தற்போது சிறையில் உள்ளனர்.இந்த நிலையில் இம்ரான் கான் தனது மனைவி புஷ்ரா பீவி சிறையில் அடைக்கப்பட்டதற்கு ராணுவ தளபதி அசீம் முனீர் தான் காரணம் எனவும், மனைவியை குற்றவாளி என தீர்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் நீதிபதி இருந்திருக்கிறார் அந்த தீர்ப்பில் ஜெனரல் அசை முனீர் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றும், என் மனைவிக்கு மட்டும் ஏதாவது நேர்ந்தால் நான் உயிருடன் இருக்கும் வரை அசீம் முனீரை சும்மா விடமாட்டேன். அரசியல் சட்டத்திற்கு விரோதமான அவரது நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே அவர் தனது மனைவி புஷ்ரா பீவிக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்ய முயற்சி நடந்ததாக குற்றம் காட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இம்ரான் கானின் இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை ராணுவ தரப்பிலிருந்து எந்த பதிலும் வெளிவரவில்லை.
  • 341
Added article 
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்கு நம் உரிமை என்பது போல வாக்களிப்பது நம்முடைய கடமை. முதல்முறை வாக்களிக்கப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள். நீங்கள் அதுகுறித்து உங்கள் வீட்டில் கூட ஆலோசிக்க வேண்டியதில்லை. உங்களுக்கு யாரை பிடிக்கிறதோ, அவர்களுக்கு வாக்களியுங்கள். ஆபிரகாம் லிங்கன் சொன்னது போல, ஒரு புல்லட்டை விட வலிமையானது நம் வாக்கு. எனவே அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.கண்டிப்பாக அனைவரும் போய் வாக்களிக்க வேண்டும். அதுதான் நம் கடமை. ஆட்சி குறித்த நம்முடைய கருத்துகளை எடுத்து வைப்பதற்கு முன்பு நாம் முதலில் ஓட்டு போட்டிருக்க வேண்டும். அதைத்தான் நான் என்னுடைய ரசிகளுக்கும் சொல்ல விரும்புகிறேன்.தேர்தல் ஆணையம் மிக அழகான முறையில் ஒருங்கிணைப்பு செய்திருக்கிறார்கள். அதிகபட்சம் 15 நிமிடம்தான் வாக்களிக்க ஆகிறது. அதுமட்டுமின்றி இன்று அனைத்து நிறுவனங்களும் விடுமுறை அளித்துள்ளனர். எனவே அனைவரும் சென்று வாக்களிக்க வேண்டும்” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
  • 342
Added article 
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார். வெள்ளை நிற சட்டையும், கருப்பு நிற கூலிங் கிளாசும் அணிந்தபடி வந்த அஜித்தை காண அங்கு ஏராளாமானோர் கூடினர்.தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (April.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
  • 345
Added article 
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் மற்றும் அரசியல், திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர். பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது.நடிகர் விஷால் சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக, அவர் கருப்பு டி-சர்ட் அணிந்து கொண்டு, சைக்கிளில் சென்று வாக்களித்தார். அவர் சைக்கிளில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய் திடீரென சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்தார். இது பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை குறிக்கும் வகையில் அவர் இப்படி செய்ததாக பலரும் கூறிய நிலையில், அதற்கு அறிக்கை வெளியிட்டு விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்தது. தற்போது விஷாலும் விஜய் பாணியில் சைக்கிளில் சென்று வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • 345
Added a post 
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலக வளாகத்தில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.இந்நிலையில், உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் ரவிச்சந்திரன் என்ற 34 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.000
  • 381
Added a post 
யாழ். போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் தவறே காரணம் என உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் நேற்று (18.4.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பெண்ணின் சகோதரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.கிளிநொச்சி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் பாக்கியசெல்வி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுரேஷ்குமார் பாக்கிய செல்வி எனும் எனது சகோதரிக்கு கடந்த 08ஆம் திகதி போதனா வைத்தியசாலையில்சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இந்தச் சம்பவத்திற்கு தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.000
  • 348
Added a post 
இலங்கை கல்வி நிர்வாக சேவை (Sri Lanka Education Administrative Service) ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.கடந்த வருடம் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளே இன்று (19.4.2024) வெளியாகி உள்ளன.இந்நிலையில், பரீட்சையில் சித்தியடைந்த 735 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்கள (Department of Examinations - Sri Lanka) இணையதளத்தில் சேர்க்கப்பட்டது.பரீட்சாத்திகள் முடிவுகளை https://www.doenets.lk என்ற இணையதளத்தின் மூலம் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் தகுதியான 440 பேர் நேர்முகத்தேர்வு நடத்தி கல்வி நிர்வாக சேவையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.000
  • 360
Added a post 
தற்போதும் சுண்ணக்கல் தினசரி அகழப்பட்டு இரகசியமான முறையில் திருட்டுத் தனமாக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (18.04.2024) இடம்பெற்றுள்ள நிலையிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், “காங்கேசன்துறையில் இயங்கிய சீமெந்து ஆலைக்காக சுண்ணக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்னமும் மூடப்படாமல் உள்ளது. ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே இந்த குழிகள் உள்ளனஇந்தநிலையில் தற்போது புத்தூர், மாதகல், இளவாலைப் பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுண்ணக்கல்லை அகழ்ந்து மூடி பார ஊர்திகளில் எடுத்துச் சென்றுள்ளனர்.இவ்வாறு தினமும் 10 முதல் 15 வரையான பார ஊர்திகளில் கற்கள் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்தத் திணைக்களமாவது அனுமதி வழங்கியுள்ளதா” எனவும் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்நிலையில் அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என புவிச்சரிதவியல் திணைக்களத்தைச் சேர்ந்த ஒருவர் பதிலளித்துள்ளார்.
  • 368
Added a post 
ஈரான் நகரம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தாக்குதலின் பின்னர் அணுமின் நிலையங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை ஈரானின் அரச ஒளிபரப்பு நிறுவனமான IRIB தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலினால் இன்று குறி வைக்கப்பட்ட இஸ்பஹான் நகரம், ஈரானிய இராணுவத்திற்கான ஒரு பெரிய விமான தளத்தையும் அதன் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய தளங்களையும் கொண்டுள்ளது. நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டல் மையம் உட்பட பல ஈரானிய அணுசக்தி நிலையங்களை இஸ்பஹான் மாகாணம் கொண்டுள்ளது. இந்தநிலையில் இஸ்ரேலிய தாக்குதலுக்கு 'உடனடி' பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.இதற்கிடையில் ஈரானின் முக்கிய நகரங்களான இஸ்ஃபஹான், ஷசிராக்ஸ் மற்றும் தெஹ்ரான் ஆகியவற்றில் வணிக விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.இதேநேரம் ஓமானின் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரான் மீது இஸ்ரேல் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகமான ஐ.ஆர்.என்.ஏ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 368