Ads

$25.00 CAD பூந்தமிழ் புடவைகள்

Poonthamil Silk SareesA type of Banaras art silk,Grand border on double side,Chit Pallu,Complete 3d embossed, Running blouse.

  • 789
  • More
  • 321
  • More
  • 356
  • More
  • 325
  • More
  • 401
  • More
  • 311
  • More
  • 336
  • More
  • 320
  • More
  • 300
  • More
  • 360
  • More
  • 308
  • More
  • 311
  • More
  • 381
  • More
Comments (0)
Login or Join to comment.
Added a news 
இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த தகவல்.பலரும் பரவலாக அறிந்திருக்க சந்தர்ப்பம் இருக்காது. இங்கு சொல்லப்படும் கருப்பொருளை மனக்கண்ணில் கொண்டுவரும்போது இலகுவாக புரிந்துகொள்ளலாம்.சந்திகளில் பொருத்தப்பட்டிருக்கும் "வீதி ஒழுங்கு ஒளி சைகை" (Traffic signal light) என்பது பொதுவாக குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஒருமுறை மாறி மாறி வீதியில் வாகனம் செலுத்துபவர்களுக்கு சைகைகளை வழங்கி வழிகாட்டி கொண்டேயிருக்கும் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.முக்கியமான பெரிய சந்திகளில் இரு பக்கமும் சம நேரங்களில் இவ் ஒளி சைகைகள் மாறிக்கொண்டேயிருக்கும்.ஆனால், இங்கு சமநிலையற்ற நிலைமையில் அதாவது ஒரு பக்கம் மட்டும் நீண்ட நேரம் பச்சை நிற சைகையாகவும் தொடர்ந்து மறுபக்கம் நீண்டநேரம் சிவப்பு நிற சைகையாகவும் இருக்கும் சந்திகளையும் வாகனம் செலுத்துபவர்கள் எவரும் எதிர்கொள்ளாமல் இருந்திருக்க மாட்டார்கள். உதாரணமாக, உள் வீதி ஓன்று வந்து தொடுக்கும் பிரதான வீதி சந்திகளை இங்கு குறிப்பிடலாம். அநேகமாக முச்சந்திகள் போல் காணப்படும் இடங்களினை இங்கு குறிப்பிடலாம்.  உள் வீதியால் அந்த முச்சந்தி உள்ள இடத்தினை நோக்கி வந்துகொண்டிருக்கும் வாகனங்களின் செறிவு குறைவாக இருக்கும் என்பதால் அந்த பக்கம் நீண்ட நேரம் சிவப்பு நிற ஒளி சைகையாகவும், மறுபக்கம் வாகன செறிவு அதிகமாக உள்ள பிரதான வீதி என்பதால் நீண்டநேரம் பச்சையாகவும் இருக்கும் வகையில் அங்கு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.அப்படியாயின் உள் வீதியால் வாகனம் செலுத்திவந்து பிரதான வீதியில் இடது பக்கம் திரும்புவருக்கு நீண்டநேரம் தொடர்ந்து இருக்கும் சிவப்பு ஒளி சைகை பச்சை ஒளியாக மாறிகொடுக்க சற்று அதிக நேரம் எடுக்குமல்லவா? இதற்கு தொழில்நுட்பவியலாளர் ஓர் தொழில்நுட்பத்தினை கனடாவில் கையாள்கின்றனர்.இப்படியான இடங்களில் மின் காந்த தூண்டல் இணைப்பு நிலத்தின் கீழ் கண்ணுக்கு தெரியாதமாதிரி பதிக்கப்பட்டிருக்கும். இந்த மின்காந்த தூண்டல் இணைப்பின் செயல்பாடு என்பது வாகனம் அந்த இடத்தில் வந்து நின்று சில நொடிகளில் சைகை சிவப்பிலிருந்து பச்சைக்கு மாற்றிக்கொடுக்கும். வாகனம் அந்த இடத்திற்கு வரவில்லையானால் அந்த பக்க சிவப்பு ஒளி சைகை மாறாமல் தொடர்ந்திருக்கும்.(Inductive Metal loop has been embedded in the pavement without visible )இதேபோல் வாகனசெறிவு அதிகமாக இருக்கும் பெரிய சந்திகளில் நேரே வரும் வாகனங்களை மின்னொளி சைகையால் நிறுத்திவிட்டு, விசேட அம்புக்குறி சைகையால் (Left turn arrows), இடது பக்கம் திரும்பும் பல வாகனங்களுக்கு............தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள கீழ்க்காணும் வீடியோவைப் பாருங்கள்.https://youtu.be/MqGIj-N6j0Ihttps://youtu.be/MqGIj-N6j0I
  • 4
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 6 ஆம் தேதி மேஷம் -ராசி: வாகன பயணத்தில் கவனம் வேண்டும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். வியாபாரம் சார்ந்த முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். சக ஊழியர்களால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். புதிய துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைரிஷபம் ராசி: உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில பணிகளில் காலதாமதம் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பரமான விஷயங்களால் குழப்பங்கள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஆலோசனைகளால் நம்பிக்கை உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்மிதுனம் -ராசி: மனதளவில் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பயணங்களால் நன்மை ஏற்படும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபார ரீதியான பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பயம் மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்கடகம் -ராசி: பேச்சுக்களில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் குறித்த சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். முதலீடு தொடர்பான செயல்பாடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஊதாசிம்மம் -ராசி:குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். ஆதரவு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் கன்னி -ராசி: பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். வியாபாரம் ரீதியான பயணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்துலாம் -ராசி: சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உடன் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திடீர் பயணங்களால் மாற்றம் உண்டாகும். மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். கலைத்துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் மேம்படும். கோபம் விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சைவிருச்சிகம்- ராசி: தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் தெளிவு ஏற்படும். பெருமை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் தனுசு -ராசி: செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் உதவியால் நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமகரம் -ராசி:குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் திருப்தியின்மையான சூழல் அமையும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய நபர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்கும்பம் –ராசி:வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்மீனம் -ராசி: வியாபாரத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் ஒத்துழைப்பு உண்டாகும். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நற்செய்தி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 105
Added a post 
குரோதி வருடம் சித்திரை மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 19.4.2024. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 10.28 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று பிற்பகல் 01.18 வரை மகம். பின்னர் பூரம். மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 110
"என்னங்கய்யா வேணும்.... டீ சாப்பிடுறீங்களா ?" "சூஸ்... சூஸ்... வாங்கி தா கண்ணு.. ஆசையா இருக்கு" "என்ன ஜூசுங்க ஐயா வேணும்?" "ஆப்பிள் சூசு" கடையில் சுற்றி நிற்பவர்கள் கேலியுடன் "பார்ரா" என்கிறார்கள். சிரித்தவாறு ஜூஸ் வாங்க உள்ளே போகிறார் அந்த முகம் தெரியாத மனிதர். அந்த கேப்பில் அந்த முதியவரை நானொரு படமெடுத்துக் கொண்டேன்.உள்ளே போனவர் பெரிய கப் நிறைய ஜூஸுடன் வெளியே வந்தார். பெரியவர் ஆசையாசையாக இரு கைகளிலும் ஜூஸ் கப்பை ஏந்தி, ஸ்ட்ரா வழியாக மெல்ல உறிகிறார். அவர் கண்கள் சொக்கிப்போகிறது. முகத்தில் அப்படி ஒரு திருப்தி. அளவு பார்த்து பார்த்து பாதி ஜூஸை குடித்துவிட்டு மெல்ல அங்கிருந்து நகர்ந்தார். வாங்கிக்கொடுத்தவர் பதறிப்போய்... "ஐயா... அந்த டம்ளரை கொடுத்துட்டு போங்க" என்று அழைக்க... கையால் சைகை காட்டிவிட்டு முன்னாள் சென்றார். அங்கே அவர் மனைவி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்க. அவர் கையில் மீதி ஜூஸை கொடுத்து குடிக்க சொல்கிறார். "ஏது?" என்று அந்த அம்மா கேட்க... வாங்கிதந்தவரை நோக்கி விரல் நீட்டுகிறார். "குடி... இனிப்பா இருக்கு..." என்று ஆசையாய் அவர் சொல்ல, பாட்டி கண்ணில் காதல் மின்னுகிறது.. வாங்கிக்கொடுத்தவர் சிரித்துக்கொள்கிறார். அழகு...இதுவல்லவா காதல்....
  • 106
Added a poem 
ஊண்டுகோல்ஒதுங்கி கொண்டதுவயது போனதுஅன்புகுறையவில்லைஇவர்களின்ஒற்றுமை கண்டுஊண்டுகோல்ஒதுங்கி கொண்டது.
  • 97
Good Morning...இன்று (ஏப்ரல் 19) இந்தியப் பொதுத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்குகிறது!
  • 102
  • 149
  • 154
  • 153
  • 183
  • 218
Added a post 
காலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தேன். அப்போ ஒரு பெரியவர் லிப்ட் கேட்டார். அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டேன்."எங்கய்யா போனும்?""தமிழரசன் கல்யாண மண்டபத்துக்குப் பின் புறம் தான் என் வீடு"."சரி வாங்க போலாம்". "திடீர்னு எலப்பு வந்திருச்சி அதான் ஆஸ்பத்திரி வந்து ஊசி போட்டேன். பஸ்ஸுக்கு நின்னு நின்னு பார்த்தேன் பஸ் வரல. உடம்புக்கு வேற முடியல அதான் லிப்ட் கேட்டேன். யாரும் நிறுத்தல நீங்க தான் நிறுத்திருக்கீங்க". "சரி ஐயா, உங்களுக்குப் பசங்க இல்லையா?""இல்ல தம்பி! நாலு பொண்ணுங்க தான். ஒன்னு செத்து போச்சி, மூன்று பேத்துக்கு கல்யாணத்தை முடிச்சிட்டேன். பொண்டாட்டியும் இறந்துட்டா. இப்போ நான் மட்டும் தனியாத் தான் இருக்கேன்". "எப்படி தனியா இருக்கீங்க?""ஒரு பொண்ணு மாசம் ஆயிர ரூவா கொடுப்பா, ஒரு பேரன் 500 ரூவா கொடுக்கான். அதை வச்சிட்டு மதியம் அம்மா உணவகத்தில் சாப்ட்ருவேன். காசு இருந்தா நைட் சாப்பாடு. இல்லனா தண்ணிய குடிச்சிட்டுப் படுத்துக்கிட வேண்டியது தான்". "முதியோர் பென்சன் வாங்கறீங்களா?""அதுக்கு அப்ளை பண்ணேன். அவன் 5000 ரூவா கேட்டான். என்னிடம் மூவாயிரம் ரூவா தான் இருக்குன்னு சொன்னேன். அதுக்கு அவன் 3000 ரூவா உயரதிகாரிகளுக்கே சரியாப் போயிடும். எனக்கு வேண்டாமானு கேட்கறான்". "காசெல்லாம் ஒண்ணும் தர வேண்டாம். நான் ஒரு நம்பர் தர்றேன், மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை நம்பர். அதுக்கு போன் பண்ணி புகார் கொடுங்க. அப்புறம் அவங்க சொல்றபடி செய்யுங்க. மத்ததை அவங்க பார்த்துப்பாங்க". "தம்பி நான் எப்படி அவங்ககிட்ட பேச?", (தயக்கத்தோடு).பின் நானே அவர் செல்லில் இருந்து போன் பண்ணி புகார் பண்ணேன். அந்த பெரியவரிடமும் பேச வைத்தேன். இன்றைக்கே நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்."ரொம்ப நன்றி தம்பி! ஏன் வண்டிய திருப்பறீங்க? நீங்க இந்த பக்கம் போகலையா?""இல்லை ஐயா, உங்களை வீட்டில் விடறதுக்கு தான் வந்தேன். என் வீடு ரொம்ப முன்னாடியே இருக்கு!". என்றேன்.
  • 213
Barrie தமிழ் மகன் ஒரு மில்லியன் பணத்தினை லாட்டரி மூலம் வென்றுள்ளார்.
  • 235
Added article 
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை பொறுத்தவரை அவர்களின் குரல் வளம் மங்காத வரையில் அவர்கள் ஜொலித்துக்கொண்டே இருப்பார்கள். வயதானாலும் பல பாடகர்களில் குரல் இளமையாகவே இருக்கும். பாடகர்களை பொறுத்தவரை வயது ஒரு பொருட்டே கிடையாது.ஆனால் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் இதயத்தை குளிர்வித்த குரல், திடீரென காணாமல் போவது என்பதை பலரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒன்று. அவ்வாறு தமிழ் இசை ரசிகர்களை தனது குரலால் கட்டிப்போட்டு பின்னாளில் திடீரென மாயமாய் மறைந்த பாடகிதான் ஜென்சி.கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜென்சி, தனது சிறு வயதிலேயே மேடை கச்சேரிகளில் பாடத்தொடங்கினார். அப்போது பிரபல பாடகர் ஜேசுதாஸுடன் இணைந்து பாடுவதற்கான வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது. அந்த காலகட்டத்தில் மலையாள திரைப்படங்களில் இடம்பெற்ற பல பாடல்களை ஜென்சி பாடியிருந்தார்.இதனை தொடர்ந்து ஜேசுதாஸ் ஒரு முறை இளையராஜாவிடம் ஜென்சியை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து தமிழில் பல ஹிட் பாடல்களை பாடினார் ஜென்சி. குறிப்பாக “முள்ளும் மலரும்” படத்தில் இடம்பெற்ற “அடி பெண்ணே”, “ப்ரியா” படத்தில் இடம்பெற்ற “என்னுயிர் நீதானே”, “ஜானி” படத்தில் இடம்பெற்ற “என் வானிலே”, “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் இடம்பெற்ற “காதல் ஓவியம்” போன்ற காலத்துக்கும் ரசிக்கப்படும் பாடல்களை உதாரணமாக கூறலாம்.இளையராஜா இசையில் பல கிளாசிக் பாடல்களை பாடிய ஜென்சி, திடீரென இனி பாடல்கள் பாடப்போவதில்லை என முடிவெடுத்ததாக கூறப்பட்டது. மேலும் கேரளாவில் ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினாராம் ஜென்சி.ஜென்சி வளர்ந்து வந்த காலகட்டத்தில் “கேரளாவை விட்டு சென்னை வந்து செட்டில் ஆனால் மிகப்பெரிய பாடகியாக புகழ் பெறலாம்” என இளையராஜா கூறினாராம். ஆனால் ஜென்சியின் தந்தை சென்னைக்கு மாற்றலாவதற்கான ஒப்புதலை ஜென்சிக்கு தரவில்லையாம்.மேலும் ஜானகி, பி.சுசிலா போன்ற முன்னணி பாடகிகள் இருக்கும்போது நமக்கெல்லாம் எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஜென்சி பாடுவதை நிறுத்திக்கொண்டார் என கூறப்படுகிறது. ஆனால் ஒரு முக்கியமான விஷயம் இதில் என்னவென்றால், தமிழ் நாட்டில் நம் குரலுக்கு இத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதே ஜென்சிக்கு தெரியாதாம். அவர் பாடும் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படத்தை கூட அவர் பார்த்ததில்லையாம். 1980களில் கேரளாவில் தமிழ் திரைப்படங்களை அவ்வளவாக திரையிடும் வழக்கம் இல்லை என்பதுதான் இதற்கு காரணமாம். இவ்வாறு ஜென்சி பாடுவதை நிறுத்தியதற்கான காரணமாக பல கூறப்படுகிறது.இது குறித்து தனது வீடியோவில் பேசிய பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் “ஜென்சியின் பயணம் தடை பட்டதற்கு இவைகள்தான் காரணம் என்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஜென்சி ஒரு காலகட்டத்தில் திரைப்படங்களில் பாடுவதில்லை என்ற முடிவை எடுத்தார் என்று கூறப்பட்டபோது அவர் நிஜமாகவே அப்படி கூறினாரா இல்லையா என்பதை இங்குள்ள இசையமைப்பாளர்கள் கேட்டுத் தெரிந்துக்கொண்டிருக்கலாமே? அவரை தொடர்புகொள்ள முடியாத அளவிற்கு அவர் வெகு தூரத்தில் எல்லாம் இல்லை. கேரளாவில் கொச்சி பகுதியில்தான் குடியிருந்தார்.இதை எல்லாம் நினைத்துப்பார்க்கும்போதுதான் ஜென்சி தமிழ் சினிமாவில் ஓரங்கட்டப்பட்டதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய மர்மம் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. அந்த மர்மம் என்ன என்பதை அறியாதவராக ஜென்சியும் இருப்பதுதான் இதில் வேடிக்கை” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • 244
Added a news 
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுகவினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் கழகத்தினர் கவனத்திற்கு… நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18-ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது.இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து கட்சியினர் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.மார்ச் 22-ஆம் தேதி தீரர் கோட்டமாம் திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம், ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கட்சியினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும்.தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள்.இதில் வாக்குச்சாவடி பாக முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான பயிற்சியினை நமது கட்சி சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன்.காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும்.அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும்.விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
  • 265
Added a news 
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை அடுத்த வேம்பனி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மத்திய ரிசர்வ் போலீஸில் பணிபுரிந்து வருகிறார். காவல்துறையினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு தபால் வாக்குகள் செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் செய்து தந்திருக்கிறது. அதன்படி தனக்குரிய தபால் வாக்கை செலுத்திய சதீஷ்குமார், அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை வாக்களித்த வீடியோவுடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவுக்கு அவர் வாக்களித்தது வெளிப்படையாக தெரிய வந்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையும் பாஜக தரப்பிலிருந்து மற்றவர்களுக்கு செய்தியாக பரப்பி வருகின்றனர். 'தலைவர் அண்ணாமலை தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்ததை வீடியோவாக வெளியிட்ட காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அனைத்து உறவுகளும் உணர்ச்சிவசப்படாமல் வாக்களிக்க வேண்டுகிறோம். மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் என்று பாஜகவினர் ஒருவருக்கொருவர் செய்திகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
  • 259
Added article 
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரபலங்கள் பலரும் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாது வாக்களிக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில், 'வாக்களிக்கும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். 2024 மக்களவைத் தேர்தலில் அதிகமான இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். எனவே, வாக்களிக்க தகுதி உள்ள இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களித்து சாதனை படைக்க வேண்டும்.அனைத்து மக்களும் குறிப்பாக, இளைஞர்கள் அனைவரும் தங்களது வாக்காளர் அட்டையை பெற்று உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை கொண்டாடும் பணியில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறியுள்ளார்.ஏ.ஆர் ரகுமானின் ’வாக்களிக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வு பதிவை பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
  • 262
Added a news 
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்க உள்ளது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக, தேமுதிக பிரமுகர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். முக்கியமாக, விஜய பிரபாகரன் தாயாரும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் சில நாட்கள் விருதுநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது மக்களிடையே பேசிய அவர்,"வேட்பாளர் விஜய பிரபாகரன் என் பிள்ளை இல்லை; இனி அவர் உங்கள் வீட்டு பிள்ளை. அனைத்துத் தாய்க்குலத்தின் பிள்ளை. அவருக்கு இன்னும் திருமணம்கூட நடைபெறவில்லை. உங்களுக்காகவே உழைக்க வந்திருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றதும் உங்கள் தலைமையில்தான் அவரின் திருமணத்தை நடத்திவைப்பேன்" என்று உருக்கமாக கூறியிருந்தார். தாய் பிரேமலதாவை தொடர்ந்து, அவரது சகோதரர் சண்முகப் பாண்டியனும் விஜயபிரபாகரனுக்காக விருதுநகர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.வீதி வீதியாக சென்று தனது சகோதரருக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.விருதுநகரில் அவரது சகோதரர் விஜயபிரபாகரனுக்காக அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சண்முக பாண்டியன் உட்பட அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • 268
Added a news 
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணம் தாலுகாவில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் நேற்று மாலை ஐஸ் கிரீம் விற்க ஒருவர் வந்துள்ளார். அவரிடம் ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஐஸ் கிரீம் வாங்கியுள்ளனர். அவர்கள் ஐஸ் கிரீம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மூன்று பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.ஐஸ் கீரிம் சாப்பிட்ட ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகளான பூஜா, பிரசன்னா வீட்டிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது தாய் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரேகெரே காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து, உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அவர்களது தாய் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஐஸ் கிரீம் விற்க வந்த நபரை தேடி வருகின்றனர். ஐஸ் கிரீம் சாப்பிட்ட இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • 265
Added a news 
பெங்களூரு விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் படம் பிடித்து சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டதாக யூடியூபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வருமானம் கொழிக்கும் தொழில்களில் யூடியூப் சேனல் நடத்துவதும் ஒன்றாகி விட்டது. படித்தவர் முதல் படிக்காதவர் வரை பலர் யூடிப் துவங்கி பார்வையாளர்களின் எண்ணிக்கையை கூட்டி அதன் மூலம் பெறப்படும் விளம்பரங்களில் கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்து வருகின்றனர்.இதற்காக அதிர்ச்சி தரும் வகையிலும், சட்டவிரோதமாகவும் காட்சிகளைப் படம் பிடித்து பலர் போலீஸாரிடம் சிக்கிக் கொள்கின்றனர். அப்படி பெங்களூருவில் சிக்கிக் கொண்ட யூடியூபர் பெயர் விகாஸ் கவுடா.அப்படி இவர் என்ன செய்து விட்டார் என்று நீங்கள் நினைக்கலாம். பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் விகாஸ் கவுடா வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், விமான நிலைய ஓடுபாதையை படம் பிடித்துள்ளார்.அத்துடன் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் விகாஸ் கவுடா வெளியிட்டுள்ளார். தடை செய்யப்பட்ட விமான நிலைய பகுதிக்குள் சென்று வீடியோ எடுத்து அதை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட தேவனஹள்ளியைச் சேர்ந்த விகாஸ் கவுடாவை , விமான நிலைய போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.அவர் விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் சுமார் நான்கரை மணி நேரம் இருந்து வீடியோ எடுத்தது தற்போது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் புகுந்து யூடியூபர் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • 288
Added a news 
ஜப்பான் அரசு வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளை சேர்த்துள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளை தவிர, பிற கரடிகளை இலையுதிர் காலத்தில் வேட்டையாட அரசு அனுமதி அளித்துள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதால் இந்த பட்டியலில் அவை சேர்க்கப்படவில்லை.அரசு மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. கருப்பு கரடிகளைத் தவிர பிற கரடிகள் 'வனவிலங்கு மேலாண்மை' பட்டியலில் சேர்க்கப்படுமென ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. கரடிகளின் எண்ணிக்கை பெருகி மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற கரடிகள் வாழ்கின்றன. அதேபோல் ''சுகினோவாகுமா'' எனும் ஆசிய கருப்பு கரடிகள் நாட்டின் 47 மாகாணங்களில் 33 மாநிலங்களில் வாழ்கின்றன. 2023ஆம் ஆண்டில் 219 பேர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினர். இது இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்சமாகும். அத்துடன் கரடிகள் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டில் பிடிபட்ட கரடிகளின் எண்ணிக்கை 9,319 ஆக உயர்ந்தது.
  • 297
Added a news 
இஸ்ரேல் சிறிய அளவிலான படையெடுப்பில் ஈடுபட்டாலும், அதற்கு பெரிய மற்றும் பயங்கரமான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி எச்சரித்துள்ளார்.ஹமாஸ் அமைப்புக்கு உதவி செய்வதாக கூறி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ம் தேதியன்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. அதில் இரண்டு ராணுவ உயரதிகாரிகள் உள்பட ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்படையினர் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் கடந்த சனிக்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை முறியடித்தது இஸ்ரேல். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு ஜி-7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்தச் சூழலில், ”இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துக்கொள்ள வேண்டும்” என்று ஈரான் சமீபத்தில் எச்சரித்தது. “இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும்” என்றும் அந்த நாடு எச்சரித்துள்ளது.ஈரானின் தெஹ்ரான் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த அணிவகுப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் நீண்ட தொலைவு சென்று தாக்கக் கூடிய பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவ சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ராணுவ தளபதிகள், உயரதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை பார்வையிட்ட பின்னர் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து கொள்ள வேண்டும். சிறிய அளவிலான படையெடுப்பில் இஸ்ரேல் ஈடுபட்டாலும், அதற்கு பெரிய அளவில் மற்றும் பயங்கர பதிலடி கொடுக்கப்படும்" என்று எச்சரித்தார். இந்தநிலையில் ஈரான் தாக்குதலில் ஈடுபடாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி ஐரோப்பிய நாடுகள் கேட்டு கொண்டுள்ளன. இதேபோன்று, இஸ்ரேலின் கூட்டணி நாடுகளும் நெதன்யாகுவிடம் தாக்குதலை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆனால், ”கூட்டணி அரசுகளின் கோரிக்கை ஒருபுறம் இருந்தபோதும், தற்காப்புக்காக இஸ்ரேல் தன்னுடைய சுய முடிவை எடுக்கும்” என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதனால், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. 
  • 291
Added a news 
மோசடி வழக்கில் தொழிலதிபரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.பிட்காயின் வடிவில் மாதம் 10 சதவீத வருமானம் என தவறான வாக்குறுதி அளித்து கடந்த 2017ம் ஆண்டில் ரூ. 6,600 கோடி நிதியை மக்களிடம் வசூலித்து மோசடி சம்பவம் நடந்தது. இந்த விவகாரத்தில், மறைந்த அமித் பரத்வாஜ், அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ், மகேந்தர் பரத்வாஜ் மற்றும் பலர் மீது மகாராஷ்டிரா, டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தை விசாரிக்க துவங்கியது.இந்த மோசடியின் மூளை என கருதப்படும் மறைந்த அமித் பரத்வாஜிடமிருந்து, தொழிலதிபர் ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களை (ரூ.150 கோடிக்கும் மேல் மதிப்புடையது) பெற்றதாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கில் சிம்பி பரத்வாஜ், நிதின் கவுர், நிகில் மகாஜன் ஆகிய மூன்று பேரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளான அஜய் பரத்வாஜ், மகேந்திர பரத்வாஜ் ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். மேலும், இந்த வழக்கில் ரூ.69 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது. இந்நிலையில் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான ரூ. 97.79 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை தற்போது முடக்கியுள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ஒரு பங்களா, ராஜ் குந்த்ரா பெயரில் உள்ள பங்குகள், ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜூஹுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை உள்ளிட்ட சொத்துகள் பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ), 2002 விதிகளின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
  • 295
Added a post 
மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ் தள பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார். இது எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற அமர்வின்போது சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 283
Added a post 
உயிர்த்த ஞாயிறு தின’ தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.இத்தாக்குதல் தொடர்பிலான கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆன்மீக தரப்பினரின் கவனத்தை ஈர்ப்பதாகவும், அதன்படி 20 ஆம் திகதி பிற்பகல் முதல் 21 ஆம் திகதி காலை வரை கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து சமய ஊர்வலம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியர் தேவாலயத்தில் இரவு முழுவதும் பிரார்த்தனை செய்துவிட்டு,  காலை 8.30 மணியளவில் துவாபிட்டிய தேவாலயத்தை இவ் ஊர்வலம் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 307
Added a post 
தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா இலங்கை மகளிர் அணி ஒன்றுக்கு இரண்டு என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.அதன்படி நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதுஇப்போட்டியில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த தென்னாப்பிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களை எடுத்திருந்ததுஇன்னிலையில் பதிலுக்கு களம் இறங்கிய இலங்கை மகளிர் அணி 44 ஓவர்கள் 3 பந்துகளில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.இதில் இலங்கை சார்பாக இலங்கை அணி தலைவி சாமரி ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர்கள் மற்றும் 26 பவுண்டரிகள் உட்பட 195 ரன்கள் எடுத்திருந்தார்இதன்படி, ஒருநாள் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை பெற்ற மூன்றாவது அதிகபட்ச ஒட்டம் இதுவாகும் என்பதுடன் அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக் கொண்டார்.000 
  • 303
Added a post 
இந்தோனேசியாவின் சுலவெசி தீவில், எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள டானா டோராஜா என்ற இடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 18 பேர் உயிரிழந்தனர்.இந் நிலையில், நேற்று (17) சுலவெசி தீவில், ருவாங் என்ற எரிமலை, ஐந்து முறைகள் வெடித்துச் சிதறியதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.அப்பகுதி முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் 800 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.மேலும், இந்தோனேஷியா விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், எரிமலையை சுற்றி 6 கி.மீ தொலைவுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் இருக்கக் கூடாது எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் சுனாமி தாக்கக்கூடிய ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.சமீபத்திய நிலநடுக்கங்களால் டெக்டானிக் அடுக்குகளில் ஏற்பட்ட தாக்கமே இந்த எரிமலை வெடிப்புக்கு காரணம் என இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000 
  • 302
Good Morning
  • 329