Ads

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

  • 1575
  • More
  • 1027
  • More
  • 924
  • More
  • 906
  • More
  • 889
  • More
  • 937
  • More
  • 919
  • More
  • 945
  • More
  • 978
  • More
  • 913
  • More
Comments (0)
Login or Join to comment.
Added a post 
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுடுள்ளது.முன்பதாக புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் , ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன.அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.அதன் அடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது000
  • 23
Added a post 
சாவகச்சேரியில் இருந்து நாவற்குழி நோக்கி சென்று கொண்டிருந்த லான்ட் மாஸ்ரரின் (இரு சக்கர உழவியந்திரம்) பின்புறமாக கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் மோதியதில் மேற்படி விபத்துச் சம்பவித்துள்ளது.இதில் லான்ட் மாஸ்ரரில் பயணித்த கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ம.சதீஸ்குமார் என்பவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.மேலும் விபத்தில் லான்ட் மாஸ்ரர் சாரதி உட்பட லான்ட் மாஸ்ரரில் பயணித்த மூவர் மற்றும் ஹயஸ் வாகனத்தில் பயணித்த பெண் ஒருவருமாக மொத்தம் நால்வர் படுகாயமடைந்த நிலையில் சிகிட்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது000
  • 23
Added a post 
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பில், அதிகபடியாக ருதுராஜ் கெய்க்வாட் 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.இந்நிலையில், 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 17.5 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது000
  • 23
Added a post 
கல்விப் பொதுத் தராதர உயர்தர  பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.முன்பதாக 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் தோற்றியிருந்தனர்.இவர்களில் 281445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.இதேவேளை சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இதற்கமைய, 4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சாத்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 24
Added a post 
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் (03.05.2024) நிறைவடையவுள்ளது.இதேநேரம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும். அத்துடன் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31ஆம் திகதி முடிவடைகிறது. இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.மூவாயிரத்து 527 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி வரை க.பொ.த சாகதாரண பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 23
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 19 ஆம் தேதி மேஷம் -ராசி: பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்புரிஷபம் ராசி: செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பச்சைமிதுனம் -ராசி: எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் கடன்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்கள் இடத்தில் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். அலுவலகப் பணிகளில் பொறுப்பு மேம்படும். பங்குதாரர்களின் வழியில் சில விரயங்கள் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை கடகம் -ராசி: மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். நெருக்கடியான சூழல்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் கேலி பேச்சுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் சிம்மம் -ராசி:சிக்கலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கன்னி -ராசி: சில விஷயங்களில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்துலாம் -ராசி: குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை அறிவீர்கள். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பழைய வேலையாட்களை மாற்றுவது குறித்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுவிருச்சிகம்- ராசி: செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். குழந்தைகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் புரிதல் உண்டாகும். வாடிக்கையாளர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் தனுசு -ராசி: திட்டமிட்ட பணிகளில் உள்ள தடைகளை வெற்றி கொள்வீர்கள். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மகரம் -ராசி:கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களின் வழியில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சைகும்பம் –ராசி:மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்களை பற்றிய விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் மறதியால் சில பிரச்சனைகள் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : நீலம் மீனம் -ராசி: குடும்பம் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். விமர்சன பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழைய சிக்கல்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 92
Added a post 
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 19 ஆம் தேதி வியாழக்கிழமை 2.5.2024சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.09 வரை சப்தமி. பிறகு இரவு 10.57 வரை நவமி. பின்னர் தசமி.இன்று அதிகாலை 12.28 வரை திருவோணம். பிறகு இரவு 11.03 வரை அவிட்டம். பின்னர் சதயம்.மிருகசீரிடம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 105
Good Morning
  • 107
Happy Workers Day
  • 174
Added a news 
 கனடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளது. நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக அதிகரித்திருந்தது. கடந்த பெப்ரவரி மாதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரியளவு மாற்றங்கள் பதிவாகாது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20 துறைகளில் 12 துறைகளில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
  • 172
  • 230
  • 315
Added a post 
இலைகள்கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, வாழைத்தண்டு, கீரைகள் வாடி போகாமல் இருக்க, அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்க வேண்டும்.பச்சைபட்டாணிஉரித்த பச்சை பட்டாணியை உப்பு சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு, ஒரு நொடியில் எடுத்து, வெளியில் வைத்து தண்ணீர் காய்ந்ததும், காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரீஸரில் வைத்தால், 6 மாதங்கள் வரை கேட்டு போகாமல் இருக்கும்.கத்தரிக்காய்கத்தரிக்காய் வாடிப் போகாமல் இருக்க, அதை ஹாட் பாக்சில் வைத்து மூடி வைத்தால், காயாமல் அப்படியே இருக்கும்.எலுமிச்சைஎலுமிச்சை பழத்தின் பாதியைப் பயன்படுத்தி விட்டு, மீதியை அலுமினிய கவரில் சுற்றி, பிரிட்ஜில் வைத்தால் கெட்டு போகாமல் அப்படியே இருக்கும்.காளான்காளானைப் பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்காமல், பேப்பரைச் சுற்றி வைத்தால், நீண்ட நேரத்திற்கு ஃபிரஷாக இருக்கும்.
  • 325
  • 326
Added a post 
தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல் படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன் காரணமாக நேற்று (30.04.2024) தென் சீனக் கடலில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சீனாவின் கடலோரக் காவல்படை தென் சீன கடலில் சென்று கொண்டிருந்த எங்களது பிலிப்பைன்ஸ் கப்பலைநேற்று காலையில் நீர் பீரங்கிகளால் 8 முறை தாக்குதல் நடாத்தியது.கப்பலின் உபகரணங்கள் சேதமாகி உள்ளது. சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என சீன கடலோர காவல் படை மிரட்டி வருகிறது.சீன கடலோரக் காவல் படையின் துன்புறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கதக்கது என கூறியுள்ளார்.000 
  • 399
Added a post 
நெருக்கடி நிலையில் நாடு இருக்கும் தருணத்தில் அனுபவமற்றவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து நாட்டைச் சீரழிக்க வேண்டாம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.கம்பஹா, உடுகம்பல பிரதேசத்தில் நேற்று (30.04.2024) நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேற்குறித்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மொட்டுக் கட்சியின் தலைவர்களே ரணிலை ஜனாதிபதி ஆக்கத் தீர்மானித்தார்கள். நாங்கள் அதற்கு ஆதரவளிக்க மட்டுமே செய்தோம்.ஆனாலும் நாடு தற்போதைக்கு நெருக்கடி நிலையொன்றை எதிர்கொண்டிருக்கும் தருணத்தில் ரணில் தான் சரியான தீர்வாக இருப்பார். அதன் காரணமாகவே நாட்டு மக்கள் ஒரு ஆசுவாசத்தை உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது.அவ்வாறான நிலையில் அனுபவமற்றவர்களின் கையில் ஆட்சிப் பொறுப்பை கொடுத்து நாட்டை மீண்டும் நெருக்கடி நிலைக்குள் தள்ளிவிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 395
Added a post 
 கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சந்திகள் மற்றும் சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பகுதியில் யாசகம் பெறுவோருக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.யாசகர்களுக்கு பணம் வழங்குவதால் போக்குவரத்து நெரிசல், வாகங்களுக்கு சேதம், வீதி விபத்துகள் ஊடாக யாசகர்கள் காயமடையும் நிலை காணப்படுவதாக போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சந்திகள் மற்றும் சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பகுதியில் யாசகம் பெறுவோரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நடவடிக்கைகளுக்காக சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் குறித்தப் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திக தெரிவித்துள்ளார்.பிரதான இடங்களில் யாசகம் பெறுவோரை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என தெரிவித்த அவர், வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் பணம் வழங்குவதை தவிர்க்கும் நிலையில், யாசகர்களை ஒழிக்க முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், நளொன்றுக்கு 2500 முதல் 3000 ரூபா வரை வருமானம் ஈட்டக்கூடிய தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்ட போதிலும், அதனை நிராகரித்த யாசகர்கள் நாளொன்றுக்கு 15,000 முதல் 20,000 வரை வருமானம் ஈட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த வாரத்தில் 94 யாசகர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை நீண்ட நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க முடியாததன் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.பெரும்பாலான யாசகர்கள் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையாகியுள்ள நிலையில், யாசகம் பெறுவதனை முழுநேர தொழிலாக சிரல் ஈடுபட்டு வருவதாகவும், அவ்வாறான நபர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 385
Added a post 
பிரதம நீதியரசர் பதவிக்கான பரிந்துரைகள் தவிர, உயர்நீதிமன்றத்தின் ஏனைய நீதியரசர் பதவிகளுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை, உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.இந்த தீர்மானத்துக்கு எதிராக சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை பரிசீலிப்பதற்கு தீர்மானித்த உயர்நீதிமன்றம், இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
  • 391
Added a post 
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இந்நிலையில், 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.000
  • 395
Added a post 
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது.1886 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் கூடிய தொழிலாளர்கள் வேலை நேரத்தை 8 மணித்தியாலங்களாக வரையறுக்குமாறு கோரி முழக்கமிட்டனர்.பணிப்பகிஷ்கரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேராட்டத்தில் முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்ததுடன் மூன்றாவது நாளில் அந்த எண்ணிக்கை 65,000 ஆக அதிகரித்தது.முதலாளிமாரின் வழிநடத்தலில் ஆயுதம் தாங்கிய காவல்துறை தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து மே மாதம் 4ஆம் திகதி தொழிலாளர்கள் ஹேமார்கட் சதுக்கத்தில் அணி திரண்டனர்.காவல்துறையினருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்ற போது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்தார்.இந்தப் போராட்டம் மோதலாக உருவெடுத்ததுடன் ஆறு காவல்துறை உத்தியோகத்தர்கள் பலியானதை அடுத்து அது மேலும் உக்கிரமடைந்தது. இந்த மோதலில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கையை இன்றும் உறுதியாக கூற முடியாது.8 மணித்தியால கடமை நேரத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்தவர்களை எப்போதும் நினைவுகூர வேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு 1889 ஆம் ஆண்டு தீர்மானித்தது.அதற்கமைய ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது000
  • 406
Added a post 
அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் பயனாளிகளை கண்டறிய விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இது தொடர்பான சுற்றுநிருபம் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.அத்துடன், போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்பட்டால், அவ்வாறான தரப்பினருக்கான கொடுப்பனவு இடைநிறுத்தப்படும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.எனவே அஸ்வெசும கொடுப்பனவிற்கு பொருத்தமான சரியாக தகவல்களை மாத்திரம் பதிவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 397
Added a post 
கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 368 ரூபாவாகும்.ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.அதேபோல், ஒரு லீற்றர் லங்கா டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டவுள்ள நிலையில் அதன் புதிய விலை 333 ரூபாவாக குறைவடையவுள்ளது.சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 215 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 409
Added a post 
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புபட்டதாக மண்சரிவுகளோ அல்லது வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளோ இதுவரை பதிவாகவில்லை. மழையுடன் ஏற்படும் சிறிய நீரூற்றுக்களை காண்பித்து மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக மின்சக்தி மற்றும் வல சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் தெரிவித்துள்ளார்.இதேநேரம் உமா ஓயா பிரதேசத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விரிசல்கள் மற்றும் நீர்க் கசிவுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக பூகற்பவியலாளர்கள் குழுவொன்று இன்று  (01) அப்பகுதிக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நெற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இதனைத் தெரிவித்திருந்தார்.மேலும் மழைக்கு பின் தோன்றும் சிறிய அருவிகளை காட்டி இந்த வளர்ச்சி திட்டத்தை சீர்குலைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால் இந்த திட்டத்துடன் தொடர்புடைய மண்சரிவு அல்லது வேறு எந்த சம்பவமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எவ்வாறாயினும், உமா ஓயா பிரதேசத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விரிசல்கள் மற்றும் நீர்க்கசிவுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக இன்று (01) பூகற்பவியலாளர்கள் குழுவொன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.அங்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கெல்லாம் தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகள் உள்ளன என்பதை அரசாங்கம் என்ற வகையில் நாங்களும் பொறுப்புடன் கூறுகிறோம்.அப்படி இருந்தால், அதை எப்படி தடுப்பது என்பது பற்றிய அனுபவம் உலகம் முழுவதும் உள்ளது. கடந்த காலங்களில் சிலரின் நாசவேலைகளால் நாடு இவ்வாறான பல அபிவிருத்தித் திட்டங்களை இழந்தது. இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் அமைக்க முன்மொழியப்பட்டது, ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகளால் அது இழக்கப்பட்டது.மேலும், கெரவலபிடிய LNG ஆலை மற்றும் பல்வேறு சிறிய மின் உற்பத்தி நிலையங்கள் போராட்டங்கள் மூலம் இழக்கப்பட்டன. இவ்வாறாக பொதுமக்களை அச்சுறுத்தும் மற்றும் தூண்டிவிடக்கூடிய செய்திகள் மூலம் பல அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டிற்கு இல்லாமல் போய்விட்டன. எனவே, உண்மை தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.இதேநேரம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரங்களைப் பெற்று ஆலைகளை தொடங்காமல் காலதாமதம் செய்து, அந்த அனுமதிப் பத்திரங்களை அதிக தொகைக்கு ஏனைய தரப்பினர்களுக்கு விற்பனை செய்யும் மாபியாவையும் கண்காணித்து வருகின்றோம். எனவே, மின் உற்பத்தி நிலையங்களை விரைவுபடுத்துவதற்கான புதிய திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளோம். அதன்போது புள்ளி முறைமை மூலம் அனுமதி வழங்கி, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சரியான நேரத்தில் விரைவாக சேகரிக்கும் செயற்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், 05 முதல் 500 மெகாவோர்ட் வரையிலான மேற்கூரை சோளார் பெனல் திட்டங்களால் கடந்த காலத்தில் மாதத்திற்கு சுமார் 22 மெகாவோர்ட்களை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் இந்த நிலை குறித்து முறையான ஆய்வுகளைச் செய்த பிறகு மார்ச் மாதத்துக்குள் அந்த அளவை 40 மெகாவோர்ட்டாக உயர்த்த முடியும்” என்று மின்சக்தி மற்றும் வல சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 394
  • 418
  • 434
  • 434
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 18 ஆம் தேதி மேஷம் -ராசி: உறவினர்களிடத்தில் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடிவரும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதாரிஷபம் ராசி: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழல் உண்டாகும். சகோதரர்களின் வழியில் காரிய அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைமிதுனம் -ராசி: எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பற்றிய விமர்சனங்களை தவிர்க்கவும். வியாபார ஒப்பந்தங்களில் காலதாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் அளவுடன் இருப்பது நல்லது. வித்தியாசமான கனவுகளால் குழப்பம் ஏற்படும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம் -ராசி: கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் படிப்படியாக குறையும். உறவினர்களின் வருகை ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்பு உயரும். மாற்றம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் சிம்மம் -ராசி:பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். ஆன்மிகம் சார்ந்த பயணங்கள் சென்று வருவீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை கன்னி -ராசி: குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பிற மொழி பேசும் மக்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வேலையாட்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பணி நிமிர்த்தமான புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். சிக்கல் மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்துலாம் -ராசி: ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பாராத பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்புவிருச்சிகம்- ராசி: குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களின் வழியில் நன்மை ஏற்படும். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைகூடும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். மனை விருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். தேர்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் தனுசு -ராசி: உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தனவருவாயில் இருந்துவந்த ஏற்ற, இறக்கமான சூழல் குறையும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : நீலம் மகரம் -ராசி:எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தனவருவாயில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தெய்வீக காரியங்களில் மனம் ஈடுபடும். இயந்திரப் பணிகளில் சற்று கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மனதில் மாற்றம் பிறக்கும். மனக்கவலை விலகும் நாள்.   அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்புகும்பம் –ராசி:கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணங்கள் செல்வதற்கான சூழல் ஏற்படும். உறவினர்களிடத்தில் பொறுமையை கையாளவும். நயமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த சில பணிகள் முடிவதில் காலதாமதம் ஏற்படும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். எதிர்ப்பு குறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : நீலம் மீனம் -ராசி: மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். ஆர்வம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 454
Added a post 
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 18 ஆம் தேதி புதன்கிழமை 1.5.2024இன்று அதிகாலை 03.10 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று அதிகாலை 01.42 வரை உத்திராடம். பின்னர் திருவோணம். ரோகிணி மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்..
  • 459