sivam

  •  ·  Moderator
  • 1864 views
  • More
  • 75
  • 76
·
Added a news
·

மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவை கலைஞருமான கிளாரி புரோஸோ , சிறுவயது முதலே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் தனக்குக் தீராத மன உளைச்சல் நீடிப்பதால், சட்டம் வழங்கும் கருணைக்கொலைக்குத் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மே 2026-இல் அவசர மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி கரிசிமா மாதன், புரோஸோவின் வேதனைகள் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதிலும், சட்ட விலக்கு அளிப்பது சமூகத்திலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை நிராகரித்தார்.

அதேசமயம், 2024-ஆம் ஆண்டு புரோஸோ தாக்கல் செய்த அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை 14 நாட்களுக்குள் தொடங்குமாறு கனடா தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கனடாவில் 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, தீர்க்க முடியாத நோய் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்கள் கருணைக்கொலை கோர முடியும்.

ஆனால், மனநலப் பிரச்சினையை மட்டுமே காரணமாகக் கொண்டு கருணைக்கொலை கோருவதற்கு அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

இத்தடையை நீட்டிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசிய புரோஸோ, "மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களைப் போன்ற சம உரிமையோ, உடல் சார்ந்த சுய உரிமையோ இல்லை என்பதை அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளது.

நான் தொடர்ந்து வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்" என வேதனையுடன் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் உரிமைகளின்படி மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கருணைக்கொலை உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்கான முதன்மை வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக புரோஸோவின் சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  • 82
·
Added a post
·

கத்தார்..

இயற்கை அளித்த கொடை மூலம் வெறும் வளர்ச்சி மட்டுமல்ல; அதன் சிந்தனை முறை. அவர்கள் உணர்ந்து பட்டது

"சிறிய நாடாக இருப்பது எங்கள் பலவீனம் அல்ல; உலகிற்கு எங்களைத் தவிர்க்க முடியாத நாடாக மாற்றுவதே எங்கள் பாதுகாப்பு."

""கத்தாருள் கத்தார் எனப்படுவர்; உலகார்முன் கத்தி நிற்கச் செய்த செல்வம் உடையார்! ""

மணலினுள் மாணிக்கம் போலிருந்த நாடொன்று, எரிவாயுவால் உலக வரைபடம் ஏறியது!

கிணற்றிலே எரிவாயு கண்டார்; கணத்திலே உலக கவனம் கொண்டார்!

நாடு சிறிதென்று நாணவில்லை; லட்சியம் பெரிதென்று உலகம் நாண வைத்தது!

எண்ணெய் கிடைத்தது அதிர்ஷ்டம்; எரிவாயுவை அதிகாரமாக மாற்றியது புத்திசாலித்தனம்!

பாலைவன மணல் இருந்த இடத்தில் இன்று உலக அரசியல் தடம் பதிக்கிறது!

அதற்காக அவர்கள் ஐந்து ஆயுதங்களைப் பயன்படுத்தினர்:

LNG (எரிவாயு)

Al Jazeera (ஊடகம்)

Sports (FIFA, PSG)

Education (Education City)

Diplomacy (இடைத்தரகர் அரசியல்)

இதையே சர்வதேச உறவியல் மொழியில் Soft Power + Economic Statecraft என்று அழைக்கிறார்கள்.

இதே மாதிரி அணுகுமுறையை சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், ஓரளவு தென் கொரியாவும் பின்பற்றியுள்ளன. .

ஆனால் கத்தாரின் தனிச்சிறப்பு என்னவென்றால், மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்தும் உலக அரங்கில் தன்னை அவசியமான நாடாக மாற்றிக்கொண்டது..

கத்தார் – பாலைவனத்திலிருந்து உலக மேடைக்கு

சிறிய நாடு, மிகப் பெரிய லட்சியம்

வெறும் 3 லட்சம் குடிமக்களைக் கொண்ட சிறிய அமீரகமான கத்தார், இயற்கை எரிவாயு (LNG) வளத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் செல்வாக்கு மிக்க நாடுகளில் ஒன்றாக மாறியது.

"Small country, big ambition" என்பதே அதன் கொள்கை..

.அல் தானி (Al Thani) அரச குடும்பத்தின் பங்கு

கலீஃபா – சுதந்திரத்தை அறிவித்தார்.

ஹமத் – எரிவாயு வளத்தைப் பயன்படுத்தி நாட்டை உலகின் பணக்கார நாடாக மாற்றினார்.

தமீம் – கத்தாரை உலக அரசியல், விளையாட்டு, கலாச்சாரம் ஆகியவற்றின் மையமாக மாற்ற முயன்றார்..

LNG புரட்சி

North Field எனும் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளத்தை மிகப்பெரிய முதலீட்டில் பயன்படுத்தியது.

இதன் மூலம் கத்தார் உலகின் மிகப்பெரிய LNG ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உருவானது..

Soft Power (மென் அதிகாரம்)

கத்தார் தனது செல்வத்தைப் பயன்படுத்தி:

Al Jazeera ஊடகம்

FIFA World Cup 2022

PSG கால்பந்து கிளப்

உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள்

வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்கள்

கலை மற்றும் விளையாட்டு

ஆகியவற்றில் முதலீடு செய்து உலக செல்வாக்கைப் பெற்றது..

பாரம்பரியமும் நவீனமும்

பெடோயின் (Bedouin) பாரம்பரியம், ஃபால்கன் வேட்டை போன்றவை பாதுகாக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் உலகத் தர நகரங்கள், மெட்ரோ, ஆடம்பர வாழ்க்கை ஆகியவை வளர்க்கப்பட்டுள்ளன..

செல்வம் – ஆனால் சமத்துவமின்மை

கத்தார் குடிமக்களுக்கு:

இலவச மருத்துவம்

இலவச கல்வி

அரசு வேலை

மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட பல நலன்கள்.

ஆனால் மக்கள்தொகையில் 90% வெளிநாட்டு தொழிலாளர்கள்.

அவர்களுக்கு குடியுரிமை கிடைப்பது அரிது..

தொழிலாளர் சர்ச்சைகள்

FIFA உலகக் கோப்பைக்கான கட்டுமானங்களில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின.

Kafala முறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

பின்னர் சில தொழிலாளர் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டாலும், அமலாக்கம் முழுமையில்லை என விமர்சனங்கள் தொடர்கின்றன..

பெண்களின் முன்னேற்றம்

ஷேக்கா மோஸா கல்வி மற்றும் சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

அவரது மகள் ஷேகா மயாசா உலகின் முக்கிய கலை நிர்வாகிகளில் ஒருவராக உருவானார்.

அதே நேரத்தில் ஷரியா சட்டத்தின் தாக்கம் இன்னும் சமூகத்தில் உள்ளது..

வெளிநாட்டு அரசியல்

Arab Spring காலத்தில் Muslim Brotherhood-ஐ கத்தார் ஆதரித்தது.

இதனால் சவுதி அரேபியா, UAE போன்ற அண்டை நாடுகளுடன் உறவு மோசமடைந்தது.

இருப்பினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் உறவைத் தொடர்ந்து பேணியது..

கத்தாரின் அடிப்படை உத்தி

"கத்தார் தனது பணத்தை மட்டும் பயன்படுத்தவில்லை; தனது செல்வத்தை உலகளாவிய அரசியல், ஊடகம், விளையாட்டு, கலை, கல்வி மற்றும் இராஜதந்திர செல்வாக்காக மாற்றியது."

"எரிவாயு வளத்தை வெறும் பொருளாதாரமாக அல்ல; உலகளாவிய அதிகாரமாக மாற்றிய நாடே கத்தார்."

ஒரு புறம்: அதிவேக வளர்ச்சி, செல்வம், கல்வி, கலை, உலக செல்வாக்கு..

மறுபுறம்: முடியாட்சி, குடியுரிமை ஏற்றத்தாழ்வு, புலம்பெயர் தொழிலாளர் சுரண்டல், மனித உரிமை விமர்சனங்கள்..

அதாவது, கத்தார் என்பது "மிகப் பெரிய வெற்றிக் கதை" மட்டுமல்ல; "முரண்பாடுகள் நிறைந்த வெற்றிக் கதை"

  • 82
·
Added a post
·

உங்க பிள்ளை கிட்டே,நான் எதை சொன்னாலும் அவபேச்சைகேட்காதேடான்னு தினமும்,மந்திரம் போல ஓதி சொல்லி அனுப்புறீங்களே…உங்களுக்கு வெக்கமாஇல்லை….

அவன் என் பிள்ளை…. என் பேச்சை தான் கேப்பான்….இதிலே என்ன வெக்கம்

சரியான அம்மா…நீங்க. வெட்கம்…மானம் ..சூடு…. சொரணை எதுவும் இல்லை உங்களுக்கு…. நான் எதை சொல்ல வாயை தொறந்தாலும் ரெண்டு காதையும் பொத்திக்கிறாரு….. எதையும் பேச முடியலே…

அடியே ரொம்ப ஓவாரா பேசறே….. ஒரு மாமியாரை பேசும் பேச்சா இது….

மாமியார்…….பெரியமாமியார்கொஞ்சம் கூட இங்கிதம்இல்லை…. படிப்பறிவு இருந்தா தானே……

அப்ப……என்னை அறிவுகெட்டவள் ன்னுசொல்றியா…. எல்லாம் நீ வேலைக்கு போற திமிரு…. இப்படி எல்லாம் பேச சொல்லுது உன்னை…..

பொண்டாட்டி சொல்லறதை கொஞ்சமாவது ஒரு ஆம்பிளை கேக்கணும்…. அது தான் குடும்பத்துக்கு அழகு…..

ஒரு நாளைக்கு கொஞ்சம் பேசுவே….. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா… பேசி தலையணை மந்திரம் ஓதி….அவனை எங்களிடமிருந்து பிரிப்பே…. இந்த காலாத்துபொட்ட புள்ளைங்க பத்தி தெரியாதா எனக்கு….

பாவி….. பாதகி மாமியார்…நீ…..இந்த குடும்பம் உருபடவே படாது….. ஒரு பொம்பளைக்கு இவ்வளவுஆணவம் இருக்க கூடாது…

நீ தாண்டி ஆணவகாரி…. அகந்தை எல்லாம் கலந்து வளர்த்தாங்க உங்க வீட்டுலே….

நீங்கமட்டும் உங்க பிள்ளை யை எப்படி வளர்த்தீங்கலாம்…. பொண்டாடடிஎன்ன சொல்ல வறா….. நல்லதா…. கெட்டதா…ன்னு காதை கொடுத்து கேக்கணும்…

என்னடி பெருசா நல்லது சொல்ல போறே……அந்த எண்ணம் கூட இருக்கா உனக்கு……

இந்தபாழடைந்தவீட்டுலேஇருபதாயிரம் வாடகை கொடுத்துக்கினேஇருங்க காலத்துக்கும்…. அதுவும் நீங்க படுக்குற கூடத்திலே இன்னைக்கோ நாளைக்கோ சுவர் இடிஞ்சி உங்க தலையிலே விழுற மாதிரி இருக்கு….

ஆமா.. நீ ஆபத்பாண்டாவ….நீ தான் காப்பாத்தபோறீயா…. அதான் நல்லவீடா பாக்கறேனே…. கிடைக்கலயே…

ஏன் வாடகை வீட்டுக்கு இனி போகணும்….. குடும்பத்தோடநாம எல்லாம் சொந்த வீட்டுக்கு போலாம் ன்னு பார்த்தா….. அவர் கிட்ட பேச விடாமே செஞ்சிட்டியே…

என்னடி சொல்றே….. சொந்த வீடா…..

ஆமா…நான் வேலை செய்யுற பாங்க்குலேஹௌசிங் மேளாநடந்தது.,. எழுபதுலட்சம்ரூபாய் வட்டியி ல்லாகடன் கொடுப்பாங்க…அதை வாங்கி சொந்தமாஒரு வீடுவாங்கலாமுன்னுஅவர் கிட்ட…..டிஸ்கசன்பண்ணலாமுன்னு., பத்து நாளா ட்ரை பண்றேன்….. அவர் என்னடான்னா.. காதை மூடிக்கிறாரு…

அய்யோ ராமா…இதை என் கிட்ட மொதலில் சொல்லியிருக்ககூடாதா செல்லம்…அவனை ஏன் கேக்குறே…. நீ வாங்கு…மருமகளே…..

இப்ப முடியாது…. டைம் பார் ஆயிடிச்சி…. இனி அடுத்த வருஷ ஹௌசிங் மேளா தான்….

நான்.. பாவிடி,தங்கமே….. உன் நல்ல எண்ணத்தை புரிஞ்சிக்காமே….. என்னென்னமோ செய்துட்டேன்…. பேசிட்டேன்…..

அட விடுங்க அத்தை…. அடுத்த வருஷம் லோன் வாங்கி வீடு வாங்கினா போகுது…..

  • 84
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: இங்கிதமானப் பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். கூட்டுத்தொழிலில் போட்டிகள் குறையும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும்.

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்காதீர். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். தடைகள் உடைபடும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும்.

மிதுனம்: பிள்ளைகளின் படிப்பு, வேலை தொடர்பாக அலைச்சல், டென்ஷன் வரலாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியா பாரத்தில் புது முடிவு எடுக்க வேண்டாம். பயணங்கள் அலைச்சல் தரும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டி வரும்.

கடகம்: மனப்போராட்டம் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர். பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். புதுவழி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

கன்னி: தொட்டது துலங்கும். தடைகள் யாவும் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனடியாக நிறைவேறும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களின் உதவியை நாடுவீர்கள்.

துலாம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். வியா பாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். தம்பதிக்குள் மனக்கசப்புகள் வரக் கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது. வியாபார போட்டிகள் அதிகரிக்கும். பாக்கி வசூலாகும்.

தனுசு: பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தருவதை தவிர்க்கவும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயல்வீர். அலுவலகத்தில் உங்களின் ஆளுமைத் திறன் கூடும்.

மகரம்: திட்டமிட்ட வேலையை முடிக்க, வேகத்தை கூட்டுவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கும்பம்: பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்த வேண்டாம். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.

மீனம்: முன்பு செய்த உதவிக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்வு கிட்டும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்.

  • 134
·
Added a post
·

தொலைந்த வாழ்வை மீட்டெடுக்கும் ‘திருத்தொலைவில்லிமங்கலம்’! இரட்டைத் திருப்பதியின் ஆன்மீக அதிசயம்

வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்துவிட்டு, மீண்டும் ஒரு புது விடியலைத் தேடி அலைபவரா நீங்கள்? உங்களுக்கான அருமையான ஆன்மீகத் திருத்தலம் தான் தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீ அரவிந்த லோசனர் திருக்கோயில்!

‘திருத்தொலைவில்லிமங்கலம்’ - பெயர் வந்த சுவாரஸ்யப் பின்னணி!

முன்னொரு காலத்தில் சுப்ரபர் என்ற மகரிஷி யாகம் செய்வதற்காக நிலத்தைச் சீரமைத்த போது, அங்கே ஒரு வில்லும் (Dhanus) தராசும் (Tula) கிடைத்தன. அவர் அதைத் தொட்ட கணத்தில், குபேரனின் சாபத்தால் பொருளாக மாறியிருந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் சாபம் நீங்கி, மீண்டும் தேவ உருவம் பெற்றனர்!

தொலைந்துபோன வாழ்வும், நன்மைகளும் மீண்டும் மீட்டெடுக்கப்பட்ட இடம் என்பதால் தான் இத்தலத்திற்கு ‘திருத்தொலைவில்லிமங்கலம்’ என்று பெயர் வந்தது.

செந்தாமரைக் கண்ணனின் அற்புதத் தரிசனம்!

சுப்ரபர் மகரிஷி தினமும் ஆயிரம் செந்தாமரை மலர்களால் பெருமாளை அர்ச்சித்து வழிபட்டார். அவரின் தூய பக்தியில் மகிழ்ந்த பெருமாள், தாமரை மலர்களின் நடுவே பேரழகோடு, செந்தாமரை மலர் போன்ற கண்களோடு காட்சி தந்தார். அதனால் தான் அவருக்கு ‘அரவிந்த லோசனர்’ (செந்தாமரைக் கண்ணன்) என்று திருநாமம் ஏற்பட்டது!

அவருக்கு அருகில் அருள்மிகு கருந்தடங்கண்ணி நாச்சியார் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலின் தனித்துவமான சிறப்புகள்:

இரட்டைத் திருப்பதி: ஒரே கிராமத்தில், வெறும் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு திவ்ய தேசங்கள் (தேவபிரான் மற்றும் அரவிந்த லோசனர்) அமைந்திருக்கும் அரிய அதிசயம்!

கேது தோஷ நிவர்த்தி: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம், நவத்திருப்பதிகளில் ‘கேது’ பகவானுக்குரிய சிறப்புத் தலமாக வழிபடப்படுகிறது.

நம்மாழ்வாரின் பாசுரம்: நம்மாழ்வாரால் மனமுருகி மங்களாசாசனம் செய்யப்பட்ட புனிதத் தலம்.

வழிபாட்டுப் பலன்கள்:

வாழ்க்கையில் முன்னேற்றமின்றித் தவிப்பவர்கள், கேது தோஷம், திருமணத் தடை அல்லது தீவிர மனக்குழப்பத்தில் இருப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து அரவிந்த லோசனரைத் தரிசித்துச் சென்றால், தொலைந்த நிம்மதியும் நல்வாழ்வும் நிச்சயமாக மீண்டும் கிடைக்கும் என்பது ஐதீகம்!

இந்த வார இறுதியில் தாமிரபரணி கரையில் அமைந்திருக்கும் இந்த அற்புதத் திருத்தலத்திற்குச் சென்று அந்தச் செந்தாமரைக் கண்ணனின் அருளைப் பெற்று வாருங்கள்!

  • 134
·
Added a post
·

220 ஆண்டுகளாக பூட்டப்படாத கதவுடன் கூடிய வீட்டில் எட்டு தலைமுறையாக வாழ்ந்து வரும் குடும்பத்தினர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் 7 கிலோமீட்டர் தொலைவில் காவிரி கிளை ஆறான குடமுருட்டி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள நடுக்காவேரி கிராம மக்கள் பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்டுள்ளன. தற்போது இங்குள்ள பல வீடுகள் சேதமடைந்ததால் அதனை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் ஒருசில வீடுகள் மட்டுமே பழமையோடு நிமிர்ந்து நிற்கின்றன. இதில் 1798 ஆம் ஆண்டு புண்ணாக்கு என்ற பெண்மணியால் கட்டப்பட்ட வீடுதான் யோகபுலி நாட்டார் பரம்பரை வீடு. சுண்ணாம்பு காரைகொண்டு இரண்டு அடி அகலத்தில் சுட்ட கல்லால் கட்டப்பட்ட இந்த வீடு முன்புறம் பின்புறம் என இரண்டு முக்கிய நிலைகளை கொண்டுள்ளது.

இந்த வீட்டில் கடந்த 220 ஆண்டுகள், எட்டு தலைமுறையாக ஒன்றாக வாழ்ந்து வரும் மக்கள், தங்கள் முன்னோர்கள் எப்படி இந்த வீட்டை வைத்திருந்தார்களோ அப்படியே இன்னும் பராமரித்து வருகின்றனர். காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த வீட்டினுள் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் வரலாம் என்ற எச்சரிக்கையோடு எட்டடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த வீட்டின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் வீட்டில் உள்ள யாரும் வீட்டை காலி செய்துவிட்டு ஒட்டுமொத்தமாக வெளியே சென்றுவிடக் கூடாது என்ற நோக்கத்திலும், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் என்ற எதிர்பார்ப்போடு முன்புறம் மற்றும் பின்புறமுள்ள கதவுக்கு தாழ்ப்பாள் போடுவதே இல்லை.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், தங்கள் முன்னோர்கள் வசித்த வீட்டில் எதற்காக கதவுகளுக்கு தாழ்ப்பாள் இல்லாமல் கட்டினார்களோ அதேபோல இதுவரை தாழ்ப்பாள் இல்லாமல் அந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அந்த வீட்டில் வசித்த பல தலைமுறையினர் சென்னை, பெங்களூர் வெளிநாடு என வேலைக்கு சென்று விட்ட போதிலும் அந்த வாரிசுகளில் எவரேனும் ஒருவர் அங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த பழமையான வீட்டினுள் நெல் கொட்டும் குதிர், உரல் உலக்கை, பெரிய அளவிலான கருங்கல்லால் ஆன ஆட்டுக்கல் அம்மிக்கல் போன்ற பழமையாக பொருட்கள் இன்றும் உள்ளன. மேலும் இந்த வீட்டை யாரும் பாகப்பிரிவினை செய்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் ஒருபுறத்தில் படுக்கைஅறையும் மறுபுறத்தில் சமையலறையும் அமைத்துள்ளதாக கூறுகின்றனர். பெண்மணிகள் ஒரே குடும்பமாக ஒற்றுமையோடு வாழும் இந்தவீடு பழமையை பறைசாற்றும் வரலாற்று நிஜமாகவே பார்க்கப்படுகிறது.

  • 131
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 5.9.2026.

இன்று இரவு 09.21வரை நவமி. பின்னர் தசமி.

இன்று இரவு 09.44 வரை மிருகசீரிடம் பின்னர் திருவாதிரை.

இன்று பிற்பகல் 01.42 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

இன்று காலை 10.34 வரை தைத்துூலம். பின்னர் இரவு 09.21வரை கரசை. பின்பு வணிசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=640&dpx=2&t=1788582442

நல்ல நேரம்:

காலை : 08.00 முதல் 09.00 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 131
  • 135
·
Added a post
·

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பழமையான வைணவத் திருத்தலம் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் கோயில்.

கஜேந்திர யானையை மகாவிஷ்ணு காப்பாற்றிய கஜேந்திர மோட்ச நிகழ்வுடன் தொடர்புடைய தலம் என்று இத்தலம் சிறப்பிக்கப்படுகிறது.

மூலவர்:

இத்தலத்தின் மூலவர் ஸ்ரீ ஆதிமூலப் பெருமாள் / கஜேந்திர வரதர். ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மேலும் பிருகு மகரிஷி, மார்க்கண்டேய மகரிஷி ஆகியோருக்கும் இத்தலத்தில் பெருமாள் தரிசனம் அளித்ததாக தலவரலாறு கூறுகிறது.

கஜேந்திர மோட்ச வரலாறு:

இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்திய முனிவரின் சாபத்தால் யானையாகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது. கஜேந்திரன் என்ற பெயரில் யானைகளின் தலைவனாக வாழ்ந்த அவன், பெருமாளின் தீவிர பக்தனாக இருந்தான்.

ஒருநாள் தாமரைக் குளத்தில் இறங்கி, பெருமாளுக்குச் சமர்ப்பிக்க தாமரை மலரைப் பறித்தபோது, ஊர்த்துவன் என்ற கந்தர்வன் முதலை வடிவில் அவனது காலை பற்றிக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது.

நீண்ட நேரம் போராடியும் விடுபட முடியாத கஜேந்திரன், துதிக்கையில் தாமரை மலரை ஏந்தி “ஆதிமூலமே!” என்று பெருமாளை அழைத்தான். பக்தனின் அழைப்பைக் கேட்ட மகாவிஷ்ணு கருட வாகனத்தில் விரைந்து வந்து சக்கராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு அருள் செய்தார்.

இதனால் இத்தலம் “ஆனை காத்த நயினார் கோவில்” என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.

அத்தாளநல்லூர் என்ற பெயர்:

“அத்தி” என்பது யானையைக் குறிக்கும். யானையை ஆட்கொண்டு காத்ததால் அத்தியாளநல்லூர் → அத்தாளநல்லூர் என பெயர் மருவியதாகக் கூறப்படுகிறது. கல்வெட்டுகளில் இவ்வூர் அத்தாணி நல்லூர், கரிகாத்தபுரம், பொய்மாம் பூம்பொழில் போன்ற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ளன.

கோயிலின் சிறப்புகள்:

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருத்தலம்.

பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

கோயிலின் பின்புறம் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஒரு தூண் நரசிம்மராக வழிபடப்படுகிறது.

அந்தத் தூணுக்கு பக்தர்கள் சந்தனம் மற்றும் மல்லிகைப் பூக்களால் “சட்டை சாற்றுதல்” என்ற நேர்த்திக்கடனைச் செய்கின்றனர்.

கோயிலில் பல காலகட்டங்களின் கட்டிடக்கலைத் தடங்களும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. சோழர், பாண்டியர் உள்ளிட்ட அரசர்களின் காலத்தில் நிலதானங்கள் மற்றும் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதற்கான கல்வெட்டு செய்திகள் உள்ளன.

தாமிரபரணி தீர்த்தம்:

தாமிரபரணி நதி இத்தலத்தின் மிக முக்கியமான புனிதச் சிறப்பாகும். நதிக்கரையில் அமைந்திருப்பதால் இத்தலம் தீர்த்தப் பெருமை பெற்ற பரிகாரத் தலமாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறது.

வழிபாட்டின் நம்பிக்கை:

கஜேந்திரனின் அழைப்பைக் கேட்டவுடன் பெருமாள் விரைந்து வந்து காப்பாற்றிய தலம் என்பதால், ஆபத்து, தடைகள், மனக்கவலை போன்றவற்றிலிருந்து விடுபடவும், பெருமாளின் அருள் கிடைக்கவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகள் மிகவும் சிறப்பான நாட்களாகக் கருதப்படுகின்றன; கருட சேவையும் நடைபெறுவதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

முக்கிய விழாக்கள்:

புரட்டாசி சனிக்கிழமைகள்

புரட்டாசி கடைசி சனிக்கிழமை

ஆவணி கிருஷ்ண ஜெயந்தி

மார்கழி வைகுண்ட ஏகாதசி

தைப்பூசத் திருவிழா

கருட சேவை

தரிசன நேரம்:

தற்போதைய உள்ளூர் பட்டியலில் கோயில் நேரம் பொதுவாக:

காலை: 5:30 – 11:00

மாலை: 5:00 – 9:00

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Sri Bhoomi Neela Samedha Aadhimoola Perumal (Gajendra Varadhar) Temple

விழா நாட்களில் நேரம் மாறக்கூடும் என்பதால், தொலைதூரத்திலிருந்து செல்லும் பக்தர்கள் முன்கூட்டியே உறுதி செய்வது நல்லது.

முகவரி:

அருள்மிகு ஸ்ரீ பூமி நீளா சமேத ஆதிமூலப் பெருமாள் (கஜேந்திர வரதர்) திருக்கோயில்,

அத்தாளநல்லூர்,

திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு – 627416. இந்தியா

அருகிலுள்ள இடம்: வீரவநல்லூர்.

வீரவநல்லூரிலிருந்து முக்கூடல் செல்லும் வழியில் அத்தாளநல்லூர் அமைந்துள்ளது. வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில் வசதியாக குறிப்பிடப்படுகிறது.

ஏன் இந்தத் தலத்தை தரிசிக்க வேண்டும்?

“ஆதிமூலமே!” என்று அழைத்த பக்த யானையின் குரலுக்கு உடனடியாகச் செவிசாய்த்து காப்பாற்றிய பெருமாள் இங்கு அருள்பாலிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. பக்தனின் அழைப்புக்கு இறைவன் நிச்சயம் செவிசாய்ப்பார் என்ற நம்பிக்கையை எடுத்துரைக்கும் அற்புதமான தலமாக அத்தாளநல்லூர் விளங்குகிறது.

  • 146
  • 145