sivam

  •  ·  Moderator
  • 1075 views
  • More
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். நண்பர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நிதானம் வேண்டும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையறிந்து செயல்படவும். எதிர்பாராத சில செய்திகள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

ரிஷபம்

புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமும் மகிழ்ச்சியான தருணங்களும் உருவாகும். வரவுகளில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். திறமையான பேச்சுக்கள் மூலம் காரிய சித்திகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மிதுனம்

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். வரவுகளில் இருந்து வந்த இழுபறியான சூழல் குறையும். தனிப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். பேச்சுக்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஈர்ப்புகள் ஏற்படும். சிரமம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்

எதிர்கால சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்த குழப்பம் நீங்கும். வித்தியாசமான அனுபவங்கள் மூலம் சில புரிதல்கள் உண்டாகும். பணியில் மாற்றமான சூழல்கள் அமையும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வர்த்தக வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி

சிம்மம்

நினைத்த பணிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி

பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். எண்ணங்கள் போக்கில் மாற்றம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். விளையாட்டு செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

துலாம்

உத்தியோக ரீதியான வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். துரிதமான செயல்பாடுகள் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சுக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் அனுகூலம் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். சில பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

தனுசு

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். வெளியூர் பயணங்களில் இருந்த இடையூறுகள் விலகும். ஆடம்பரமான பேச்சுக்களை நம்பி புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மகரம்

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தை வழியில் இருந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். முதலாளி வகையில் ஒத்துழைப்புகள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்

உடன் இருப்பவர்கள் பற்றியும் உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் மேம்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். சமூக தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். பயம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மீனம்

பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். சமூக தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்க இயலும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். அலுவலகத்தில் மரியாதைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வருத்தம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

  • 7
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.4.2026

இன்று மாலை 03.05 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று அதிகாலை 02.21 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று மாலை 03.27 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.

இன்று அதிகாலை 02.26 வரை கௌலவம். பின்னர் மாலை 03.05 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=475&dpx=2&t=1775534653

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 8

Good Morning...

  • 7
·
Added article
·

சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய்குமார், கயல் ஆனந்தி நடிக்கும் படம், ‘அறிவு’. மோட்டிவ்ட்ரோன் புரொடக் ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, மூணாறு பகுதிகளில் நடைபெற்றது. அங்குள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு நடந்தபோது, அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாதது தெரியவந்தது.

தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். அதன்படி, பள்ளி முழுவதும் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன. இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்கிறார்.

  • 194
·
Added a post
·

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. விருத்தாசலத்தில் தான் இருக்கிறது.

கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது.

தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.

இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரை பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு. திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.

கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.

நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.

தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்.

நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார். இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.

பல்லடம் மாணிக்கம் அவர்கள், நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார். வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.

பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காப்பகம் தான்.

  • 221
·
Added a post
·

அணையாத தீபம் - ஜுவாலாமுகி கோயில்!

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஜுவாலாமுகி அம்மன் கோயில், மற்ற கோயில்களைப் போல சில வழிபாட்டுத் தலம் அல்ல.

இங்கு சிலைகளுக்குப் பதிலாக "புனிதச் சுடர்களே" தெய்வமாக வணங்கப்படுகின்றன.

பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த மர்மம் இன்றும் பக்தர்களையும் விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

எரிபொருள் இல்லாத சுடர்!

இந்தக் கோயிலின் கருவறையில் பாறைகளின் பிளவிலிருந்து ஒன்பது தீபச் சுடர்கள் (ஜுவாலாக்கள்) நீல நிறத்தில் எரிந்து கொண்டிருக்கின்றன. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தீபங்கள் எரிவதற்கு எந்தவிதமான எண்ணெய், நெய் அல்லது திரிகளோ பயன்படுத்தப்படுவதில்லை. பூமியின் ஆழத்திலிருந்து வரும் இந்தச் சுடர்கள் பல நூற்றாண்டுகளாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றன.

தோற்றுப்போன பேரரசர் அக்பர்!

இக்கோயிலின் மகிமையைக் கேள்விப்பட்ட முகலாயப் பேரரசர் அக்பர், இது வெறும் ஏமாற்று வேலை என்று கருதி அதை அணைக்க முயன்றார். கோயிலைச் சுற்றி கால்வாய் அமைத்து அதன் மேல் நீரை ஊற்றினார். ஆனால், அத்தனை நீராலும் அந்தச் சுடர்களை அணைக்க முடியவில்லை. இறுதியில், அந்த அற்புதத்தைக் கண்டு வியந்த அக்பர், அம்மனுக்குத் தங்கக் குடை ஒன்றை காணிக்கையாக வழங்கினார் என்பது வரலாறு.

எட்டாத ரகசியம் - அறிவியல் தோல்வி!

பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பல நிலத்தடி ஆய்வாளர்கள் இதற்குக் காரணம் நிலத்தடியில் இருக்கும் இயற்கை எரிவாயுவாக இருக்கலாம் என்று கூறி வந்தனர். ஆனால் பலமுறை தோண்டியும், ஆய்வு செய்தும் அத்தகைய எரிவாயு சேமிப்பு எங்குள்ளது என்பதைக் கண்டறிய முடியவில்லை.

இவ்வளவு சிறிய பிளவிலிருந்து பல நூறு ஆண்டுகள் அணையாமல் எரியும் அளவுக்கு எரிவாயு வர வாய்ப்பே இல்லை என்பதே உண்மை.

ஒன்பது சுடர்களின் தத்துவம்!

இங்கு எரியும் ஒன்பது சுடர்களும் மஹாசக்தி, மஹாவிஷ்ணு, கணபதி உள்ளிட்ட ஒன்பது தெய்வங்களின் அம்சமாக கருதப்படுகின்றன. இதில் பிரதான சுடர் 'மஹாசக்தி' என்று அழைக்கப்படுகிறது.

பூமிக்குக் கீழே இருந்து வெளிப்படும் இந்த தெய்வீக நெருப்பு, இயற்கையின் மர்மமா அல்லது இறையருளா? விடை தெரியாத இந்த அற்புதத்தை ஞானத்தால் மட்டுமே உணர முடியும்.

  • 197
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்கள் மூலம் மனதளவில் புதிய மாற்றங்கள் உருவாகும். தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்து செல்லவும். செல்லப்பிராணிகள் வழியில் விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ரிஷபம்

சுபகாரிய பேச்சுக்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். அதிகாரிகள் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிதுனம்

வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்விகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பொறுப்புகள் கிடைக்கும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்

வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வியாபாரப் பணிகளில் வெளியூர் தொடர்புகள் மூலம் நன்மைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : கருசிவப்பு

கன்னி

பேச்சு வன்மையினால் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பாகப்பிரிவினை குறித்த சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

துலாம்

விவாதங்கள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் முன்னேற்றம் காணப்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். வியாபார பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் நிலையில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளவும். தேவைக்கேற்ப வரவுகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

தனுசு

நினைத்த சில பணிகளை முடிப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். திடீர் பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். வித்தியாசமான மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். தம்பதியர்களுக்குள் நெருக்கம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமான விஷயங்களுக்கு முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தம் தோன்றி மறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். இழுபறியான சில விஷயங்கள் முடியும். ஆராய்ச்சி பிரிவில் முன்னேற்றம் ஏற்படும். ஆக்கபூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 269
·
Added a post
·

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை 6.4.2026.

இன்று பிற்பகல் 01.48 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று முழுவதும் அனுஷம்.

இன்று பிற்பகல் 02.55 வரை வஜ்ரம். பின்னர் வியதீபாதம்.

இன்று அதிகாலை 12.50 வரை பவம். பின்னர் பிற்பகல் 01.48 வரை பாலவம். பிறகு கௌலவம். இன்று காலை 06.08 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=474&dpx=2&t=1775453495

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 267
·
Added a post
·

விபத்தில் அப்பா, அம்மா இருவரையும் இழந்த எனக்கு, அக்கா தாயாகவும், மாமா நிழலாகவும் மாறினார்கள் . ஆனால் நான் வளர வளர மாமாவின் நிழல் எனக்குச் சுட்டெரிக்கத் தொடங்கியது. "சும்மா ஊர் சுத்துறதுக்கு பதிலா ஏதாவது வேலைக்கு போடா, அக்கா கஷ்டப்படுறது கண்ணுக்குத் தெரியலையா?" என்று மாமா ஊர் முன்னிலையில் என்னைக் கேலி செய்வா.

ஒருநாள் சோறு தொண்டையில் இறங்காமல் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறினேன். "நிச்சயம் ஒருநாள் பெரிய ஆளாகி, இந்த மனுஷன் முன்னாடி கார்ல வந்து நிப்பேன்" என்று சபதம் எடுத்தேன். என் உழைப்பு வீண் போகவில்லை. நான்கு ஆண்டுகளில் ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்தது .

புது கார் வாங்கினேன். கெத்தாக வீட்டு வாசலில் வந்து நின்றேன். மாமா அங்கே திண்ணையில் அமர்ந்திருந்தார். அவரைத் திரும்பி கூட பார்க்காமல் அக்காவிடம் சென்றேன். "அக்கா, இதோ என் சம்பளம். இனி நம்ம வேற வீட்டுக்கு போயிடலாம். யாரோட வசையும் இனி நமக்குத் தேவையில்லை" என்று மாமாவைப் பார்த்துக் கத்திக் கூறினேன் .

மாமா மெலிதாக புன்னகைத்துவிட்டு, ஒரு பழைய காகிதத்தை என்னிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். "இத்தனை நாள் அசிங்கப்படுத்தினது பத்தாதுன்னு இப்போ என்ன கொடுக்கிறாரு?" என்ற கோபத்துடன் அதைத் திறந்தேன் .

அது ஒரு வங்கிக் கணக்குப் புத்தகம் (Bank Passbook). அதில் கடந்த 15 ஆண்டுகளாக மாமா உழைத்த ஒவ்வொரு ரூபாயும் என் பெயரில் சேமிக்கப்பட்டிருந்தது. கடைசிப் பக்கத்தில் ஒரு கடிதம் இருந்தது: "தம்பி, நீ அப்பா இல்லாதவன் என்ற உணர்வு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே உன்னைச் செல்லமாக வளர்த்தேன். ஆனால் நீ ஊதாரித்தனமாகச் சுற்றியபோது எனக்குப் பயம் வந்தது. நான் ஒரு டிரைவர், நாளைக்கே ஏதாவது விபத்தில் நான் செத்துப்போனால் உன்னை யார் காப்பாற்றுவார்? அதனால்தான் உனக்கு வைராக்கியம் வர வேண்டும் என்று உன்னைக் காயப்படுத்தினேன். என் மேலிருந்த கோபம்தான் உன்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. நீ பெரிய ஆளாகிவிட்டாய், இனி நான் நிம்மதியாகச் சாவேன்."

படித்து முடித்ததும் என் கால்கள் நடுங்கின. ஓடிப்போய் மாமாவின் கால்களைக் கட்டிக்கொண்டு கதறினேன். "மாமா, என்னை மன்னிச்சிடுங்க மாமா. உங்களை நான் 'அந்த ஆளு'ன்னு தப்பா பேசிட்டேன்" என்று அழுதேன்.

அவர் என் தலையை வருடி, "பரவாயில்லைடா தம்பி, ஒரு அப்பாவா தோற்று, ஒரு மாமாவா ஜெயிச்சுட்டேன்" என்றார். ரத்த பந்தத்தையும் தாண்டி, ஒரு மாமாவின் கண்டிப்புக்குள் ஒளிந்திருந்த அந்தப் பேரன்பு புரிந்தபோது, அன்றுதான் நான் உண்மையான மனிதனாக மாறினேன் .

அன்பு என்பது எப்போதும் கொஞ்சுவதில் மட்டும் இல்லை, சில நேரங்களில் கண்டிப்பு எனும் போர்வையில் நம்மை செதுக்குவதிலும் இருக்கிறது என்பதை அன்று எனக்கு சொல்லிக் கொடுத்தது,

  • 270

இந்தியாவில் - ராகவ் சத்தா “ரைட் டு ரிகால்” என்ற மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன் பொருள், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ., அல்லது கவுன்சிலர்கள் தங்கள் வேலை சரியாக செய்யவில்லை என்றால், மக்களுக்கு அவர்களை பதவிக்காலம் முடிவதற்கு முன்பே நீக்கும் உரிமை கிடைக்கும்.

இந்த யோசனை, மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

  • 266

Good Morning...

  • 268

நீங்கள் செய்யும் தர்மம்

ஒரு போதும்

உங்கள்

செல்வத்தைக் குறைக்காது.

  • 270