திரு எஸ்.ரங்காச்சாரி என்று ஒரு டாக்டர். 1939 இல் சென்னையில் அவருக்கு மட்டும் தான் வெள்ளைக்காரன் ஆட்சியிலேயே சிலை வைக்கப் பட்டது. இன்றும் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் காணலாம்.
சைக்கிளில் சென்று மருத்துவம் பார்த்தவர், நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டும் என்று ரோல்ஸ் ராய்ஸ் வாங்கி பின் puss moth என்ற சிறு ரக விமானம் வாங்கி அதில் சென்று மருத்துவம் பார்த்தார். அனுதினம் 18 மணி நேர உழைப்பு.
எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் இந்தியாவின் முதல் டெபுடி சுப்பரின்டென்டென்ட் ஆக இருந்தவர். அரசு மருத்துவராக இருந்த வரை ஒரு பைசா கூட சம்பளமாக வாங்காதவர். அப்படி ஒரு சேவை மனப்பான்மை.
சர்ஜரிக்காகவே பிறந்தவர் என்று சொல்லலாம். நீண்ட விரல்களும், க்ஷண நேரத்தில் உயிர்காக்கும் முடிவுகளை எடுக்கும் திறமையும் கொண்டு பல அசாத்தியமான அறுவை சிகிச்சைகளை செய்தவர். தான் மிகவும் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டதையெல்லாம் மற்றவர்களுக்கு எளிமையாக சொல்லிக் கொடுத்தவர். யாரையும் கடிந்து கொள்ளாத பண்பாளர். திருச்சி கல்யாணராமன் ஒரு உபன்யாசத்தில் Presence of mind என்பதற்கு இவரை தான் உதாரணம் காட்டினார்.
எவ்வளவு படித்திருந்தாலும் தேவையான நேரத்தில் மூளை வேலை செய்யல சார் என்று சொல்வோர் உண்டு. சிலதெல்லாம் படிப்பு சொல்லிக் கொடுக்காது. கடவுள் அருள் தான் அந்த நேரத்தில் நாம் சரியான நடவடிக்கை எடுக்க உதவும்.
அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. ஒரு நாள் நடந்து போகும் போது பெரிய கூட்டம்.. தரையில் ஒரு பெண். அவள் கணவன் அழுது கொண்டிருக்கிறான். இவர் விசாரித்தார். ரங்காச்சாரி போன்ற பெரிய மருத்துவரிடம் போக வசதியில்லை ஐயா என்று இவரிடமே சொன்னான் அந்த கணவன். நான் பார்க்கட்டுமா என்று கேட்டுவிட்டு என்னவென்று பார்த்தால் ஒரு நிறைமாத கர்ப்பிணி.. குழந்தை கால் வெளியில் வந்துவிட்டது. கொஞ்சம் தாமதித்தாலும் இரு உயிர்களுக்கும் ஆபத்து.
சட்டென்று தன் கையிலிருந்த சிகரெட்டின் முனையை குழந்தையின் காலில் வைத்து அழுத்தினார். இப்போது ஸ்மார்ட் போனில் ரொட்டேட் என்று இருக்கிறதே அது போல குழந்தை சூடு தாங்காமல் காலை உள்ளே இழுத்துக்கொண்டு ரொட்டேட் ஆகி சுகப்பிரசவம் ஆகிவிட்டது. தாய் சேய் இருவரும் நலம். அதற்காக எல்லா பிரசவத்தையும் சிகரெட் வைத்து பார்க்கவும் முடியாது. அந்த நேரத்தில் அப்படி ஒரு ஐடியா கடவுளையன்றி வேறு யார் கொடுக்க முடியும். இவர் சீடர் knife ramaswamy என்று இவரால் பாராட்டப்பட்ட அறுவை மருத்துவர் பழமார்நேரி Dr PS Ramaswami ஆவார்.இவர் புகழ் பெற்ற வயலின் மேதை பழமார் நேரி ஶ்ரீ சுவாமிநாத அய்யரின் மூத்த மகன் ஆவார்.
இவர்களைப் பற்றி எந்தப் பாடப்புத்தகத்திலாவது மாணவர்கள் படிக்கிறார்களா?
இப்படிப்பட்ட மகான்கள் வாழ்ந்த தேசம் இந்தியா..
திருவிழாச் சந்தையில் வெய்யிலில் புரண்டு விளையாடச் செல்வது ஞாயமா ?
என்ற வரியை மனப்பாடம் செய்து கொள்ளவும் :
தி என்பது திங்கட்கிழமை 7.30-9.00 மணி.
ச என்பது சனிக்கிழமை 9.00-10.30 மணி
வெ என்பது வெள்ளிக்கிழமை 10.30-12 மணி
பு என்பது புதன்கிழமை 12.00-1.30 மணி
வி என்பது வியாழக்கிழமை 1.30-3.00 மணி
செ என்பது செவ்வாய்கிழமை 3.00-4.30 மணி.
ஞா என்பது ஞாயிற்றுக்கிழமை 4.30-6.00 மணி.
ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தினைக் கொண்டு கிழமையையும் ராகுகால நேரத்தையும் அறிய எளிய வழியாகும்.
மேஷம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
மிதுனம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். அலுவலகத்தில் மேலதி காரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேற்றம் இருக்கும்.
கடகம்: மனக்குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும். தாயார் வழி உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
சிம்மம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். தந்தைவழியில் இருந்த மனஸ்தாபம் விலகும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
கன்னி: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை அசத்துவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பிரபலங்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். நண்பர்கள் உதவுவர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவுண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.
விருச்சிகம்: விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி விலகும். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.
தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய பணிகளை முடிப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கி வந்து சேரும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். மதிப்பு உயரும்.
கும்பம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலக மேலதிகாரிகளுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் சிக்கல்கள் வரலாம். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
மீனம்: எதிர்பார்த்தபடி சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 7.6.2026.
இன்று இரவு 11.12 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று அதிகாலை 04.47 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
இன்று காலை 07.12 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.
இன்று காலை 11.13 வரை பத்திரை. பின்னர் இரவு 11.12 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று அதிகாலை 04.47 வரை சித்தயோகம். பின்னர் அதிகாலை 05.51வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை.
