sivam

  •  ·  Moderator
  • 293 views
  • More
  • 68
  • 70
·
Added a news
·

வட கொரியாவில், தென் கோரியா உள்ளிட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ அல்லது பகிர்ந்தாலோ மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து (செப்டம்பர் 12) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வட கொரிய அரசு, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள், அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளன.

தென்கொரியாவின் பிரபல 'கே-டிராமாக்கள்' (K-Dramas) உட்பட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களை விநியோகித்ததற்காக, பல வட கொரியர்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர் என வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் ஜேம்ஸ் ஹீனன் தெரிவித்தார்.

இந்த 14 பக்க அறிக்கை, 2014 முதல் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வட கொரிய அரசாங்கம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்த அறிக்கைக்கு அனுமதியளித்த ஐ. நா பேரவையின் தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் வட கொரியா தெரிவித்துள்ளது. 

  • 82
·
Added a post
·

ஒரு முறை கருட பகவான் ஓய்வாக ஒரு மரக்கிளையில் போய் அமர்ந்தார். அந்த மரத்தின் எதிரே இருந்த ஒரு மரத்தில், குருவி ஒன்று அமர்ந்து கிளைக்கு கிளை தாவி விளையாடிக் கொண்டிருந்தது.

அந்தக் குருவியின் விளையாட்டில் லயித்துப் போய் இருந்த கருட பகவானுக்கு, அந்தக் குருவியை யாரோ, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரியவே, சுற்றும் முற்றும் தன்னுடைய பார்வையை சுழற்றினார். அப்போது குருவி இருந்த மரத்தின் அருகே இருந்த மற்றொரு மரத்தில் இருந்து எமதர்மன், அந்தக் குருவியையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இப்போதுவரை மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கும் இந்தக் குருவிக்கு, எமதர்மனின் பார்வையால் கேடு காலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். சற்றும் யோசிக்காத கருட பகவான், உடனடியாக பறந்து, குருவியை தன்னுடைய காலால் பற்றிக்கொண்டு, நொடிப் பொழுதில் பல்லாயிரம் மைல்கள் கடந்து, பசுமை போர்த்தி நின்ற பழங்கள் நிறைந்த ஒரு மரத்தின் கிளையில் போய் வைத்தார்.

‘அப்பாடா.. குருவியை, எமதர்மனிடம் இருந்து காப்பாற்றிவிட்டோம்’ என்று கருடபகவான் நினைத்துக் கொண்டிருந்த அதே தருணத்தில், குருவி அமர்ந்திருந்த கிளையின் அருகில் இருந்த ஒரு மரப்பொந்தில் இருந்து வெளிப்பட்ட பாம்பு ஒன்று, சட்டென்று அந்த குருவியைக் கவ்வி விழுங்கியது. அதைப் பார்த்து திகைத்துப் போன கருட பகவான், ‘குருவியை காப்பாற்ற நினைத்து, அதற்கு தானே எமனாக மாறிப்போய் விட்டோமே’ என்று எண்ணி வருந்தினார்.

அப்போது அங்கு வந்து சேர்ந்தார், எமதர்மன். அவரைப் பார்த்ததும் கருடன் தன்னுடைய தலையை தாழ்த்திக்கொண்டார். எமதர்மன் கருடனை பார்த்து “கருட தேவா.. நான் அந்தக் குருவியை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, நான் அதைக் கொல்லப் போகிறேன் என்று நீங்கள் கருதி விட்டீர்கள். அதனால்தானே.. அதை காப்பாற்றும் விதமாக இங்கு தூக்கி வந்தீா்கள்?” என்று கேட்டார்.

அதற்கு ‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்தார் கருடன்.

“நீங்கள் என்னை தவறாக புரிந்துகொண்டீர்கள். அந்தக் குருவியின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்பது உண்மைதான். ஆனால் ஒரு சில நொடியிலேயே அது வீற்றிருந்த மரக்கிளையில் இருந்து, பல ஆயிரம் மைல்கள் தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் பொந்தில் இருக்கும் பாம்பினால், அதற்கு ஆயுள் முடியும் என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் பறவை பறந்து சென்றால், பாம்பு இருக்கும் இடத்தை அடைய ஒரு சில நாட்களாவது பிடிக்கும். வேறு எந்தப் பறவை தூக்கிச் சென்றாலும் கூட அவ்வளவு காலம் தேவைப்படத்தான் செய்யும். ஆனால் அதன் ஆயுள் முடியப் போவதோ சில நொடிகளுக்குள் ஆயிற்றே என்ற ஆழ்ந்த சிந்தனையில்தான், அந்தக் குருவியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் விதிப் பயன் எப்படியும் நிறைவேறியேத் தீரும் என்பதை நான் உடனடியாகவே புரிந்துகொண்டேன். ஏனெனில் காற்றை விட வேகமாக பறக்கும் நீங்கள், அந்தக் குருவியை காப்பாற்றுவதாக நினைத்து, சில நொடிகளிலேயே, அதை பல ஆயிரம் தூரத்திற்கு கொண்டு சென்று வைத்துவிட்டீர்கள். அதனால் விதிப்படியே அனைத்தும் நடந்தேறி விட்டது” என்று சொல்லி முடித்தார்.

ஆம்.. நம்முடைய வாழ்க்கையில் எது நடக்க வேண்டுமோ அது நடந்துதான் தீரும். அதுகுறித்து கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், இப்போது செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர செய்ய முடியாது. எனவே வாழ்வின் முடிவை விதிவசம் ஒப்படைத்து, செய்வதை சிறப்புடன் செய்வோம்.

  • 87
·
Added article
·

வெற்றிலை-பாக்கு-சீவலை வாயில் போட்டு மென்று கொண்டே பந்தா இல்லாமல் ரொம்ப கேஷுவலாக பேசக்கூடியவர்.

  • எப்பவுமே அந்த தலை கலைந்துதான் கிடக்கும். சரியாக வாரியதுகூட இல்லை. அதேபோல எப்பவுமே கேஷூவல் டீ-ஷர்ட்தான். ஒருவேளை ஷர்ட் போட்டு கொண்டால் அதற்கு ஐயர்ன்கூட பண்ணிக்காமல், சுருக்கம் சுருக்கமாகவே போட்டுக் கொண்டு நடமாடுவார்.
  • என்ஜீனியரிங் பட்டதாரி, எழுத்து திறமை இருந்தாலும், சூப்பராக ஓவியம் வரைவார். இது வெளியே நிறைய பேருக்கு தெரியாது. சாமி படத்தை வரைந்தால் அப்படியே கண்ணில் ஒத்திக்கலாம்.
  • காலையில சாப்பிட ரசம் சாதம் இருந்தால்கூட போதும், அதைவிட என்ன வேண்டும் ஒருவனுக்கு என்று கேட்கும் எளிமைவாதி.
  • சின்ன வயசுல இருந்தே நாய், பூனைனா பயமாம். அதுங்களைப் பார்த்தாலே ஸ்ட்ரெஸ் வந்துடும்னு சொல்லுவார் கிரேஸி.
  • யார்கிட்டயும் கடனும் வாங்க மாட்டார். யாருக்கும் கடனும் கொடுக்க மாட்டார். பணம் கிடைச்சாலும் சரி, செக் தந்தாலும் சரி, நேரா கொண்டு போய் அப்பாகிட்ட தந்துடுவார். செக், எந்தப் பணம் கிடைச்சாலும், அதை நான் எங்க அப்பாகிட்டேயே கொடுத்துடுவேன். அவ்வளவு எதுக்கு, எந்த கிரெடிட் கார்டு, டெபிட் கார்டும் வெச்சிக்கிட்டதே இல்லையாம்.
  • இவர் பாட்டுகூட பாடுவார். மீனாட்சி அம்மன் குறித்து நூற்றுக்கணக்கான வெண்பாக்களை பாடிய கவிஞானி.
  • முகம் சுளிக்காத வகையில் வசனங்களை கடைசிவரை எழுதியவர். உடல் சேஷ்டை என்பதே இவர் ஏற்றுக் கொள்ளாத கொள்கை, அது தேவையும் இல்லை என்பது இவரது ஆழ்ந்த கருத்து.
  • யாரையும் காப்பி அடிக்காத, யாருமே காப்பி அடிக்க முடியாத ஒரு நேர்த்தியான கலைஞன்தான் கிரேஸி மோகன்.
  • இவ்வளவு திறமை, குணங்களை பெற்றிருந்தாலும் மிக முக்கியமான ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். இவரது தோற்றம், பேச்சு மேட்டுக்குடிக்கான இயல்புகளை தந்திருந்தாலும், இவரது வசனம் அனைத்து தரப்பு மக்களையுமே சிரிக்க வைத்ததே கிரேஸியின் வெற்றி.. அதனால்தான் பாரபட்சம் பார்க்காமல் அத்தனை பேரையும் அழ வைத்துள்ளது கிரேஸியின் மரணம்.
  • 95
·
Added a post
·

ஒரு பெண்ணின் கணவர் ஒருவர் தற்செயலாக ஒரு உளவியல் நிபுணரை சந்தித்தார்.அப்போது நடந்த உரையாடல்.

நிபுணர்: நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்..?

கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.

*உங்கள் மனைவி..?

*அவள் வேலைக்கு செல்வது கிடையாது.வீட்டில் சும்மாதான் இருக்கிறாள்

*நிபுணர்: ஓ..அப்ப குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?

*என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லை சும்மாதானே இருக்கா.

*தினமும் காலை உணவு சமைப்பதற்கு உங்கள் மனைவி எப்போது எழுவார்?

*அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!

*உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?

*என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்கு தான் வேலையில்லையே.

*பள்ளியில் விட்டுவந்த பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?

*மார்க்கெட்டுக்கு செல்வார், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பார், துணி துவைப்பார். உங்களுக்கு தெரியுமா... அவளுக்குத்தான் வேலையில்லையே..

*மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

*நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.

*பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?

*இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.

நிபுணர்: உங்கள வாக்குமூலப்படி அதிகாலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை...என ஓடும் பெண் அவள். அவளை 'வீட்டுல சும்மாதானே இருக்கா' என்று பேசுவது எவ்வளவு கொடுமை? அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது.

ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள, இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.

''நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?'

என்று ஒரு பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் தந்த பதிலை பாருங்கள்.

*நான் ஒரு மகள்

*நான் ஒரு மனைவி

*நான் ஒரு மருமகள்

*நான் ஒரு தாய்

*நான் ஒரு அலாரம்

*நான் ஒரு சமையல்காரி

*நான் ஒரு வேலைக்காரி

*நான் ஒரு ஆசிரியர்

*நான் ஒரு செவிலியர்

*நான் ஒரு பணியாளர்

*நான் ஒரு ஆயா

*நான் ஒரு பாதுகாவலர்

*நான் ஒரு ஆலோசகர்

*நான் ஒரு நலன் விரும்பி

*எனக்கு பகலிலும் விடுமுறை இல்லை. *இரவிலும் என்னை விடுவதில்லை. *உடல்நிலை சரியில்லை என்றாலும் லீவு எடுக்க முடியாது.

ஆனால் எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் அம்பு, 'நாள் பூரா வீட்டுல சும்மாதானே இருக்கேன்?'

*ஆண்களே உங்கள் மனைவியை மதியுங்கள். மனோரீதியாக

*அவளுக்கு ஓய்வும் கொடுங்கள்..

*இதில் இன்னும் மோசம்..! வேலைக்கு

செல்லும் பெண்களின் நிலை.

பெண்மையை போற்றுவோம்.

  • 102
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பழைய நினைவுகளால் செயல்களில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். வியாபார பணிகளில் மாற்றமான சிந்தனைகள் ஏற்படும். கலைத்துறையினருக்கு பொருளாதார சிக்கல் குறையும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மற்றும் தெளிவுகள் பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

ரிஷபம்

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத வரவும் அதற்கான செலவும் சிலருக்கு ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் பிடிவாத குணம் மேம்படும். வீண் விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. தந்தையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மிதுனம்

கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். அணுகுமுறைகளில் சில மாற்றம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வீடு மற்றும் வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் புரிதல் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கடகம்

வெளிவட்டாரத்தில் மதிப்புகள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதில் இருந்த கவலைகள் குறையும். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேம்படும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்கிறீர்கள். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பணி புரியும் இடத்தில் இருந்த பொறுப்புகள் குறையும். அரசு சார்ந்த செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். மனை சார்ந்த தொழிலில் லாபம் அடைவீர்கள். தனவரவுகள் தேவைக்கு இருக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

கன்னி

வெளியுலக அனுபவங்களால் மாற்றம் பிறக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. சுப காரியம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும். நினைத்த பணிகள் சாதகமாக முடியும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் செயல்படவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

துலாம்

நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வியாபார விஷயங்களில் எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

விருச்சிகம்

எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பாடங்களில் இருந்த குழப்பங்கள் மறையும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

தனுசு

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். செயல்பாடுகளில் இருந்த ஆர்வமின்மை குறையும். உத்தியோகத்தில் புதுமையான சூழல்கள் உருவாகும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மகரம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். மேல்நிலைக் கல்வி குறித்த எண்ணங்கள் ஏற்படும். நண்பர்கள் வழியில் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தின் எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். பணி புரியும் இடத்தில் சில மாற்றமான சூழல்கள் அமையும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

கும்பம்

விவசாய பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பால் சில பணிகளை முடிப்பீர்கள். பாடங்களில் இருந்த தெளிவின்மை விலகும். ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மீனம்

பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்கள் மூலம் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 229
·
Added a post
·

விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை 13.9.2025.

இன்று காலை 11.34 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று பிற்பகல் 02.49 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.

இன்று மாலை 03.30 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.

இன்று அதிகாலை 12.48 வரை கரசை. பின்னர் காலை 11.34 வரை வணிசை. பிறகு இரவு 10.25 வரை பத்தரை. பின்பு பவம்.

இன்று காலை 06.02 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=258&dpx=1&t=1757736392

நல்ல நேரம் :

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 248

வாழ்க்கையில் முன்பே தயார் செய்து வைத்திருக்கும் தீர்வுகள் என்றும் புதிதாக வரும் பிரச்னைகளுக்குப் பொருத்தமாக இருப்பதில்லை.

  • 262
  • 264
·
Added a news
·

கனடாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிமோனியாவுக்காக அவசர சிகிச்சை பிரிவுகளுக்குச் சென்ற நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது என கனடிய சுகாதார தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த காய்ச்சலினால் அதிகம் பாதிக்கப்பட்டது 5 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என ஆய்வு கூறுகிறது. கோவிட் தொற்றுக்குப் பின்னர் நிமோனியாவுக்கான அவசர சிகிச்சை வருகைகள் இவ்வளவு அதிகரித்தது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகின்றது.

மிகவும் லேசான அறிகுறிகளுடன் நிமோனியா காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது பொதுவாக இருமல், காய்ச்சல், சோர்வு போன்ற லேசான அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

பலர் தானாகவே குணமடைகிறார்கள்; ஆனால் சிலருக்கு நரம்பியல் பிரச்சினைகள், தோல் பொடுகுகள் போன்ற தீவிர விளைவுகளும் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நீடித்த இருமல், காய்ச்சல், சோர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  • 413
·
Added a news
·

கனடாவில் இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் சுமன் குல்பே தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது நிரூபிக்கப்பட்ட நிலையில் அவரது மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையின்போது நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததை இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் சுமன் குல்பே ஒப்புக்கொண்டார்.

அதே சமயம், தன் மீதான குற்றச்சாட்டுகளில் பல்வேறு தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக சுமன் குல்பே கூறியுள்ளார். அவரது பயிற்சியாளர் ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், அந்த சமயத்தில் இருவரும் காதலித்து வந்ததாகவும் சுமன் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையின்போது “நான் இந்திய குடும்பத்தில் மிகுந்த கலாசார மதிப்புகளுடன் வளர்க்கப்பட்டவள்” என்றும் சுமன் குல்பே தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாக்டராக பணிபுரிந்த சுமன் குல்பே, தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதும், மற்ற இருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரது மருத்துவ லைசென்ஸை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

  • 414