sivam

  •  ·  Moderator
  • 711 views
  • More
·
Added a post
·

சின்னம்மை, பெரிய அம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிறு ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதே போன்று காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில்

பாசிப்பயிறு சிறந்த மருத்துவப் பொருளாக பயன்படுகிறது.

மனத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து சாப்பிட்டால் வெயில் கால உஷ்ணக்கோளாறுகள் குணமடையும். குறிப்பபாக ஆசனவாய் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு. இது சிறந்த பருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் வைத்து சாப்பிட்டால் பித்தமும் மலச்சிக்கலும் குணமாகும்.

பாசிபருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து

உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்..

குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக பாசிப்பயிறு மாவு தேய்த்து குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சிகைக்காய்ப்போல தேய்த்து குளித்தால் பொடுகுத் தொல்லை போகும்.

  • 48
·
Added a post
·

உடலின் ஒவ்வொரு அங்கமும், ஒவ்வொரு உறுப்புக்களும் அவசியமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு உறுப்பை அகற்றினாலும் அதன் பின்விளைவுகள் இருந்தே தீரும். இதில் பற்களும் உள்ளடங்குகிறது.

பற்கள் என்பதும் கூட உடல் சமநிலையை பேணும் ஒரு அங்கம் ஆகும். அதனால் தான் இரண்டும் பக்கமும், மேல் கீழும் சம அளவில் பற்கள் காணப்படுகின்றன. பற்களை பிடுங்கும் பொழுது அந்த சமநிலை அற்று போகும். சிலருக்கு வெர்டிகோ என்ற பிரச்சினை உள்ளது. அதாவது தலை சுற்றுவது போன்ற ஒரு உணர்வு. பற்களின் பிரச்சினையால் கூட இது ஏற்பட வாய்ப்புண்டு.

ஆகவே பற்களை பேணுங்கள். அலட்சியம் வேண்டாம்.

பற்பசையை பாவிக்காது விட்டாலேயே பற்கள் மிக ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை மூலிகை பொடிகளை பாவியுங்கள்.

என்றும் பல் தூரிகை தெரிவு செய்யும் பொழுது மென்மையான (SOFT) தூரிகையை தெரிவு செய்யுங்கள். அழுத்தி பல்லை விளக்க வேண்டாம். நீண்ட நேரம் விளக்கவும் வேண்டாம்.

குளிரான, சூடான உணவுகளை உண்ணாதீர்கள்.

பழங்கள், பச்சைகாய்கறிகளை அடிக்கடி மெல்லுங்கள்.

கடையில் விற்கும் குளிர்பானங்கள் மற்றும் சகல தீங்கான உணவுகளை உண்ணாதீர்கள். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் முதலில் தாக்குவது பற்களையே.

இரவில் உறங்கப் போகும் பொழுது மஞ்சள் மற்றும் கல் உப்பு கலந்த நீரை சிறிது நேரம் நன்கு வாயில் வைத்தே கொப்பளித்து பின்னர் துப்பி விட்டு அப்படியே விட்டு விட்டால் சொத்தை பல் வலி குறையும்.

எண்ணெய்க்கு பதில் கற்றாழை சாறு கொண்டு "ஆயில் புல்லிங்" பண்ணலாம். இது கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.

  • 48
·
Added a post
·

கொய்யா (Guava) ஒரு ஆரோக்கியமான பழமாகும், இதில் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் உள்ளன. இதனை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதே நேரத்தில், சிலருக்கு இது தகுந்த முறையில் இருக்காவிட்டால் சில தீமைகளையும் ஏற்படுத்தக்கூடும்.

கொய்யா கனியின் நன்மைகள்:

உடல் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு:

கொய்யாவில் அதிக அளவிலான C வைட்டமின் உள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும்.

கூழ்மிகுந்த ஆரோக்கியம்:

கொய்யாவில் நார்ச்சத்து (fiber) அதிகம் உள்ளது, இது செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தல்:

இது தமனி நோய் (diabetes) உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பயன்படும்.

இதயம் ஆரோக்கியமாக்கல்:

கொய்யா பிளவுகளும், விதைகளும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தடிப்பு மற்றும் எடை குறைப்பு:

குறைந்த கலோரி கொண்ட இதை சாப்பிடுவதால் எடை குறைப்பு சுலபமாக்கும்.

மலச்சிக்கலுக்கு தீர்வு:

கொய்யாவின் நார்ச்சத்து மலச்சிக்கலை சரிசெய்ய உதவும்.

சரும சுறுசுறுப்பு:

கொய்யாவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.

கொய்யா கனியின் தீமைகள்:

கடுமையான சடசடியான வயிற்று பிரச்சனை:

அதிக அளவில் கொய்யாவை சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி அல்லது சத்தம் ஏற்படலாம்.

சீரிய உணவுக் கொள்கை பிரச்சனைகள்:

சிலருக்கு கொய்யா உணவில் மொத்தமாக செரிமானம் ஆகாமல், மலம் கடினமாகும் நிலை ஏற்படலாம்.

அதிக அளவில் பீஜங்களை சாப்பிடுவது:

கொய்யா விதைகள் அதிகமாகச் சாப்பிடுவது சிறுநீரக கற்களை உருவாக்கக்கூடும் என்ற ஆய்வுகள் சில கூறுகின்றன.

அலர்ஜி (Allergy):

சிலருக்கு கொய்யா சாப்பிடுவதால் தோல் அல்லது அலர்ஜி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

மிகப்பெரிய பரிந்துரை:

தினசரி அளவில் மிதமாக கொய்யா கனியை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானதாகும்.

எந்தவொரு காய்கறி அல்லது பழத்தையும் போலவே, உங்கள் உடல் கொய்யாவை எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதை கவனித்து சாப்பிடவும்.

  • 63
·
Added a post
·

ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரா்,ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தபோது, அவரைக் கண்ட ஏழை விவசாயி ஒருவன். கல்லோடு ஆயினும் சொல்லி அழு..!! என்ற கேள்வியைக் கேட்டான்.

ஆதிசங்கரா் அவனிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" என்றாா்.

அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான். சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தாா். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தாா்.

அதற்கு அவன்,"எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றான்.

" ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?"

"மரப் பாலத்தை கடக்கிறபோது, திடீா்னு வழுக்கி விழுந்தால், பிடிச்சுக்கத்தான் சுவாமி!"

"உன் கேள்விக்கும் அதுதான்பா விடை!..

அவரவர் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும். ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, ஆண்டவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றாா் ஆதிசங்கரா்.

ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவா்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை.

நாம் வழிபடவும்,வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள்; நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவா் வேண்டும்.

எனவே தான்

"கல்லோடு ஆயினும் சொல்லி அழு"

என முன்னோா்கள் சொல்லியிருக்கிறாா்கள்.!

  • 66
·
Added article
·

ஊடகங்களின் தவறான வதந்தியால் ஜனகராஜ்க்கு வாய்ப்புகள் பறி போனது...

தன்னைப்பற்றி தவறான வதந்திகள் பரவி வருவது தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாக பழம்பெரும் நடிகர் ஜனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடியில் கலக்கி கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு இணையாக காமெடியில் அசத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனகராஜ். 1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜனகராஜ், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

ரஜினி கமல் முதல் புதுமுக நடிகர்கள் வரை பலருடன் இணைந்து காமெடியில் கலக்கிய ஜனகராஜ் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.

200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜனகராஜ், 80 ல் தொடங்கி 90-களின் இறுதிவரை பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாத ஜனகராஜ் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல் வெளியானது.

ஆனாலும், ஜனகராஜ் தற்போது சென்னையில் தான் இருக்கிறார், சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் நான் அமெரிக்காவிற்கே போனது இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு விசாவே கிடையாது. போகாத ஒரு நாட்டுக்கு நான் போனதாக சொல்கிறார்கள். இது பற்றி எத்தனை பேருக்கு விளக்கம் கொடுக்க முடியும்.

நான் அமெரிக்காவில் இருக்கிறேன் என்று சொல்வதால், எனக்கான சினிமா வாய்ப்பும் வராமல் போகிறது. அதேபோல் நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், ரஜினி சார் என்னை

வந்து பார்த்ததாகவும், சொல்கிறார்கள். இதெல்லாம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. இதையெல்லாம் கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறது. கொரோனா வந்ததிலிருந்து எனக்கு ஒரே அழுத்தம், மன உளைச்சலாகத்தான் இருந்தது. ஒரு வழியாக கோவிட் முடிந்தது. அதற்கு பிறகும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.

  • 70
·
Added a post
·

ஒரு அடியார் குடும்பம், காசிக்குச் சென்று ஈசன் திருவிளையாடலால் அங்கேயே தங்க நேரிடுகிறது. கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள்.

மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. ”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே” என்று,

ஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா.. நான் இறைவன் ஈசன் சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம்” என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட “அம்மா.. நீ பெண்.

தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்” என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும்

"காசி விஸ்வநாதர் மீது ஆணை.. என்னை தொந்தரவு செய்யாதீர்கள்" என்று கூறி ஒதுங்கி விடுகிறாள். பிறகு, வேறு வழியில்லை என்பதால், தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, “அம்மா ஒரு வேளை நான் இறந்து போய்விட்டாலும், இந்த செல்வத்தைக் கொண்டு, பிறரை நாடாமல், கையேந்தாமல் வாழ்ந்து கொள்” என்று ஏற்பாடு செய்து, ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு, சில காலங்களில் இறந்தும் விடுகிறார்.

“தந்தை எனக்கு சில விஷயங்களை போதித்தார், அவற்றை செயல்படுத்தினால் என்ன?” என்று மகளுக்கு ஒரு ஆசை. எனவே, பல ஊர்களில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக, தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும், உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க, காலம் செல்லச் செல்ல இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார் என்று அறிந்து பலர், மருத்துவ உதவி, கல்வி உதவி வேண்டும் என்று கேட்க, இவளும் செய்து கொண்டே வருகிறாள்.

உலகிற்கே படியளக்கும் ஈசன் சும்மா இருப்பானா, அவன் திருவுள்ளம், இந்தப் பெண்ணை, சோதிக்க எண்ணியது. அந்தக் காசி மாநகரம் முழுவதும், இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து, தந்து, ஒரு கட்டத்தில், வறுமை இவளை சூழ்ந்து கொண்டது.

இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க, வேறு வழியில்லாமல், அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே, அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல், ”முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு” என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள்.

இரவில் படுத்தால், இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால், அச்சமும் ஆட்கொண்டுவிட்டது. இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி “எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ, இப்படிக் கடனாக என்னை இடர்படுத்துகிறது. இறைவா.... நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால், என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும், கடனை, திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்றுதான் கேட்கிறேன்” என்று மனம் உருகி, இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.

ஒரு நாள், ஒரு பழுத்த மகான், இவளைத் தேடி வருகிறார். ”மகளே.. கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே, மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார் அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும்” என்று அந்த மகான் கூறுகிறார். “எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?” என்ற அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும், துறவி கூறியதால், அன்று மாலை அந்த செல்வந்தர் இல்லத்திற்குச் செல்கிறாள். அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை. இருந்தாலும் கூட, மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால், அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார்.

அவரைச் சுற்றி ஊர்ப்பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையிலே ”பெண்ணே! உனக்கு என்ன வேண்டும்? எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?” என்று செல்வந்தன் கேட்க, இவள் தயங்கி, தயங்கி, தனக்கு ஏற்பட்டுள்ள கடன், மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறி, “ஐந்து லட்சம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால், எல்லோரும் இடர் படுத்துகிறார்கள். எனவே, நீங்கள், ஐந்து லட்சம் தந்தால், காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு, சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களோ, மிகப்பெரிய செல்வந்தர். ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார்” என்று தயங்கி, தயங்கி கூறுகிறாள். அந்த செல்வந்தர் யோசிக்கிறார். இவள் மிகப் பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லட்சம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். தர முடியாது என்றால் இவள் மனம் வேதனைப்படும். நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும் என்று எண்ணி, அந்த செல்வந்தர் மிக சாமர்த்தியமாகப் பேசுகிறார்.

“பெண்ணே! நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது. உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும், நீர்த்தடங்களை அமைப்பதும், கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன். ஆனால், உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? சரி.

உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி, தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா?சரி.. நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும், இப்படி தர்மம் செய்த நீயே, நடு வீதிக்கு வந்து விட்டாய். எப்படி உன்னால், என்னிடம் வாங்கிய கடனை, திருப்பித் தர முடியும்? அடுத்ததாக, நான் கடன் கொடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய்.எதை நம்பி, நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது?” என்று அந்த செல்வந்தர் கேட்கிறார். இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி,

”அய்யா! நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதோ ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை. உங்களிடம் கோடி, கோடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர்மக்கள் சொல்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக, சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள்” என்று கேட்கிறாள்.

“மன்னித்து விடு பெண்ணே.. அடமானம் இல்லாமல், நான் எதுவும் தருவதற்கு இல்லை” என்று செல்வந்தர் கூற, அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு, ”அய்யா.. உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளீர்கள். நானும், என் தந்தையும் ஆங்காங்கே, பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று.

தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட, அடியேன் கட்டியதுதான். இந்த நீரை, தினமும், ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா.. என்றாலும், இந்த பொதுக் குளத்தை, எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை.

இருப்பினும், எனக்கு உடன்பாடில்லை என்றாலும், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்த திருக்குளத்திலே, நாளைக் காலை, சூரிய உதயத்தில் இருந்து, யாரெல்லாம் நீர் பருகிறார்களோ, அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன். ஐந்து லட்சத்திற்கு உண்டான அசல், வட்டிக்கு சமமான புண்ணியம், எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ, அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன்” என்று கேட்க, அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே, ”பெண்ணே! ஏதாவது ஒரு பொருளைத்தான் அடமானம் வைக்க முடியும். பாவ புண்ணியங்களை அல்ல. ஒரு பேச்சுக்கு, நீ கூறியபடி, நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம், என் கணக்குக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும், புண்ணியம் அரூபமானது. கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து, புண்ணியம், என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று கேட்கிறார்.

“அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன்.

என்னுடன் வாருங்கள் என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி, ”எம்பிரானே! அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன். ஈசனே, இந்த திருக்குளத்தின் அடியில் நீ இருக்க வேண்டும். எப்பொழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும், வட்டியுமான புண்ணியம், இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ, அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும். "ஈஸ்வரா" என்று கூறி, பல முறை பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி, அடியாட்களின் துணை கொண்டு, அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி, திருக்குளத்தின் நடுவே இடுகிறாள். சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு, அந்த செல்வந்தரைப் பார்த்து, ”அய்யா.. நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாக்ஷாத் சவபெருமான் தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ, எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால், எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ, அப்பொழுதே, இந்த சிவலிங்கம் மேலே வந்து மிதக்கும்”என்று கூறுகிறாள்.

செல்வந்தரோ நகைத்து, ”அம்மா! சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே” என்றார் கிண்டலாக. இளம் பெண்ணோ.. “இல்லை. நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும். இதைக் கல் என்று பார்க்காதீர்கள். பகவான் என்று பாருங்கள்” என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள். செல்வந்தர் யோசிக்கிறார்.

'இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து, பணம் தர மாட்டேன் என்றால், நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். மேலும், இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது, இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால், இவள் புண்ணியவதி என்பதை நானும், ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால், இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும்' என்று எண்ணி, அவள் கேட்ட தொகையைத் தருகிறார்.

அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார், யாருக்கு தர வேண்டுமோ, அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு “இறைவா! உன்னை நம்பித்தான், இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே” என்று வேண்டிக் கொண்டு நிம்மதியாக சிவனை நினைத்து உறங்கச் செல்கிறாள்.

இங்கே செல்வந்தரோ, ”அவசரப்பட்டு விட்டோமோ? ஏமாந்து பெருந்தொகையை கொடுத்து விட்டோமோ?” என்று உறக்கம் வராமல், எப்பொழுது விடியும்?

என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து, ”நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு, கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு, ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன என்று குறித்துக் கொண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும்” என்று ஏற்பாடு செய்து விட்டு, அன்று விடிந்ததும் வீட்டின் மேல்விதானத்தில் அமர்ந்து கொண்டு, குளக்கரையை பார்வையிட துவங்குகிறார்.

விடிந்து, காலை மணி ஆறு ஆகிறது. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று, குளத்து நீரை அருந்தி விட்டு மறுபக்கம் செல்கிறது. அவ்வளவு தான். குபுகுபுவென தூப, தீப, சாம்பிராணி, குங்கும சந்தன மணத்தோடு மேளத்தாளத்தோடு, உடுக்கை ஒலிக்க எம்பெருமான் சிவலிங்கம் மேலே வந்து மிதக்கிறார்

அவ்வளவுதான்.....

அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கி நிலைகுழைந்து தரையில் அமர்ந்து விட்டார். “ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே, ஐந்து லட்சத்திற்கு சமம் என்றால், அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால், என் செல்வம் அத்தனையும் வீண்”

என்பதை புரிந்து கொண்டு, என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே.. செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள்.” என்று கூற, ஊரே சென்று பார்த்தது.

அதன் பிறகு, தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து, அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு, தானும் கடைசிவரை தர்மம் செய்து வாழ்ந்தார். இது 300-400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்

தர்மங்களை செய்கிறோம்? இருப்பினும் நம் வாழ்க்கை சிறக்கவில்லையே? ஒரு வேளை நாம் முட்டாள்தனமாக வாழ்கிறோமா? மற்றவர்கள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக வாழ்கிறார்களே? நாமும் அது போல வாழவில்லையே? தனத்தை சேர்த்து வைக்கவில்லையே? என்ற எண்ணம் வரும் போதெல்லாம், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தால், மனதிற்கு கட்டாயம் உற்சாகம் கிடைக்கும்.

  • 117
·
Added a post
·

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 26.12.2025

வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று காலை 06.34 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.

இன்று பிற்பகல் 11.41 வரை சித்தி. பிறகு வியதீபாதம்.

இன்று காலை 10.37 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.59 வரை கரசை . பிறகு வனிசை.

இன்று காலை 06.25 வரை மரண யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=370&dpx=2&t=1766741980

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 159

Good Morning....

  • 153
·
Added a news
·

கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடுமையான நெஞ்சு வலியுடன் சிகிச்சைக்காக சுமார் 8 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்த இந்தியர் உயிரிழநண் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சை கிடைக்காத நிலையில் 44 வயதுடைய இந்திய வம்சாவளி நபர், மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.

பிரசாந்த் ஸ்ரீகுமார் என்ற குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி பணியில் இருந்தபோது, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் எட்மண்டனில் உள்ள 'கிரே நன்ஸ்' மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவின் காத்திருப்பு அறையில் அமர வைக்கப்பட்டார்.

அவர் தொடர்ந்தும் கடுமையான வலி இருப்பதாக கூறியபோதிலும் அவருக்கு இ.சி.ஜி (ECG) பரிசோதனை செய்த ஊழியர்கள், அதில் ஆபத்தான அறிகுறிகள் ஏதுமில்லை என்று கூறி மீண்டும் காத்திருக்கச் கூறியதாக அவரது குடும்பத்தார் கூறுகின்றனர்.

வலியால் துடித்த பிரசாந்திற்கு 'டைலனோல்' (Tylenol) மாத்திரைகள் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது இரத்த அழுத்தம் மிகக் கடுமையாக உயர்ந்தும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுமார் 8 மணிநேரத்திற்கும் மேலான நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பிரசாந்த் சிகிச்சை அறைக்குள் அழைக்கப்பட்டார்.

அங்கு சென்ற 10 வினாடிகளிலேயே அவர் தனது நெஞ்சைப் பிடித்தபடி சரிந்து விழுந்துள்ளார். அவருக்கு முதலுதவி அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவருக்கு ஏற்பட்ட 'மாரடைப்பு' (Cardiac Arrest) மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்த பிரசாந்த் ஸ்ரீகுமாருக்கு 3, 10 மற்றும் 14 வயதுகளில் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், நோயாளியின் தனிப்பட்ட விபரங்களை வெளியிட முடியாது எனத் தெரிவித்துள்ள போதிலும், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.   

  • 360

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

சாந்தியும் சமாதானமும் தேவதூதனின் பெருங்கருணையும் உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்துவழியட்டும்.

நினைத்ததெல்லாம் முன்னிலும் எளிதாக நிறைவேறட்டும்.

வளம் கொழிக்க நல்வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்

  • 399
  • 398
·
Added a post
·

ஆஞ்சநேயர் கோவிலுக்கு நாம் செல்லும் போது அங்குள்ள சுவற்றில் "அஞ்சிலே ஒன்றை" என்ற பாடல் இருக்கும்...

அதன் அர்த்தம் எவ்வளவு அழகாக தமிழில் கவிச் சக்கரவர்த்தி கம்பர் எழுதியிருக்கிறார் என்பதை காண்போம்!!!.

ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன். அவரைப் பற்றிய தமிழ் ஜால கம்பரின் அருமையான பாடல்.

அஞ்சிலே ஒன்று பெற்றான்!!! அஞ்சிலே ஒன்றைத் தாவி!!!

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி!!!

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்!!!

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்!!!

அழகு தமிழின் பொருள்:-

(அஞ்சி =ஐந்து)

அஞ்சிலே ஒன்று பெற்றான் (ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இவற்றில் காற்றுதன்மையாகிய வாயு பகவான் பெற்றெடுத்த பிள்ளை)

அஞ்சிலே ஒன்றைத் தாவி (ஐம்பூதங்களில் ஒன்றான நீர் தன்மையாகிய சமுத்திரத்தை தாண்டி ஆகாய மார்க்கமாக )

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர்காக்க ஏகி (ராமன்,இலக்குவன்,பரதன், சத்ருக்ணன் சகோதரர்கள் நான்கு பேர் இருக்க இராமரால் கட்டி தழுவப் பட்ட குகன் ஐந்தாம் சகோதரனாகி, அந்த ஐந்து சகோதரர்களுக்கு ஆறாவதாக சேர்ந்தவர் இவர். இவர் தனது உயிருனும் மேலான இராம பிரானின் உயிர் காக்க சீதையை தேடி சென்றவர்)

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு (ஐம்பூதங்களில் ஒன்றான நிலதன்மையாகிய பூமித் தாய் பெற்றெடுத்த பெண் சீதை, அணங்கு: பெண் அந்த சீதையை கண்டுபிடித்து வந்தவன்)

அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் (அயலார்: மற்றவர்; ) இலங்கையில் ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பு தன்மையாகிய அக்கினியை வைத்து அந்த ஊரையே தீக்கிரையாக்கியவர்)

அவன் எம்மை அளித்துக் காப்பான் இத்தகு பெருமைகள் உடையவர்.

பாடலில் யார் இவர் என்று குறிப்பிடவில்லை என்றாலும், இது அனுமரே!.

அந்த அனுமர் பெருமான் நமக்கு வாழ்வு அளித்து காப்பார்.ஆஞ்சநேயர் கோவிலுக்கு நாம் செல்லும் போது இந்த பாடலை பாடியவாறு வலம் வருவோம்.

  • 404