தமிழ் திரையுலகில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக வழங்கவிருக்கும் திரைப்படம் 'தாய் கிழவி'. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், மூத்த நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ராதிகாவின் 'பவுன் தாய்' என்ற வட்டிக்கு விடும் அதிரடி கதாபாத்திரத்திற்காகப் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இப்படத்தின் முதல் பாடலான 'தாய் கிழவி வாரா' தற்போது வெளியாகியுள்ளது.
இப்பாடலின் மிக முக்கியமான ஈர்ப்பு என்னவென்றால், இதனை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருப்பதுதான். துள்ளலான இசையில் அவரது குரல் பாடலுக்கு ஒரு தனி ஆற்றலை வழங்கியுள்ளது. இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, கிராமத்து மணமும் நவீன இசையும் கலந்த ஒரு தரமான பாடலை வழங்கியுள்ளார். கருமாத்தூர் மணிமாறன் எழுதியுள்ள வரிகள், 'பவுன் தாய்' கதாபாத்திரத்தின் கம்பீரத்தையும் அந்த ஊரில் அவருக்கு இருக்கும் செல்வாக்கையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.
கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் (Canadian Immigration Minister Lena Diab)தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் வெளியேறுவதைக் கண்காணிக்க டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும் போது அவரது விபரங்களை எல்லைப் பாதுகாப்பு முகவரகம் பதிவு செய்கிறது.
எனினும் விசா காலம் முடிந்ததால் குறிப்பிட்ட நபர் வெளியேறுகிறாரா என்பதைத் தானாகக் கண்டறியும் வசதி இல்லை என கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் (Canadian Immigration Minister Lena Diab) சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை சாதாரண நடைமுறையின் மூலம் சரிபார்க்க அதிக நேரம் எடுப்பதால், அதனை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2026ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் தற்காலிக விசாக்கள் காலாவதியாகவுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பலா விதையில் நிறைய சத்துக்கள் உள்ளன ! வயோதிகம் காரணமாக , இரும்புச்சத்து உடலை பாதிக்கும் அனீமியா உள்ளிட்ட ரத்த குறைபாடுகளை தடுக்கும் . இதில் , வைட்டமின் - ஏ சத்து அதிகம் . இது பார்வை திறனைக் கூர்மையாக்கும் . மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும் ; மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் .
தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவாகி , முடி அடர்த்தியாக வளர உதவும் . இதை சமைத்து உண்பதால் சுருக்கத்தை குறைக்கும் ; சருமத்தை பொலிவாக்கும் ! பலா விதைகளை அரைத்து , தேன் மற்றும் பாலுடன் கலந்து , ' பேஸ் பேக் ' போல் பயன்படுத்தலாம் .
பலா விதையை பொடி செய்து , நீருடன் கலந்து குடித்தால் , செரிமானக் கோளாறுகள் தீரும்
கருஞ்சீரகப் பொடியாக்கி வெந்நீர், தேன் கலந்து பருகலாம்.இதனால் சிறுநீரகக் கற்களும், பித்தப்பை கற்களும் கரையும்.
பொடியை 50 மி.லி.தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் 2 சொட்டு மூக்கில் விட்டால் மூக்கடைப்பு விலகும்.
ஒரு தேக்கரண்டி பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதோடு தேன் சேர்த்து சாப்பிட, நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி அகலும்.
குளியல் பொடிகளில் கருஞ்சீரகப் பொடியை கலந்து பயன்படுத்தலாம்.
கரப்பான், சோரியாசிஸ் போன்ற தோல் நோய்க்கு, கருஞ்சீரகப் பொடியை தேய்த்துக் குளிக்கலாம்.இதனால் நோய் தீவிரம் குறையும்.நோயால் ஏற்பட்ட புண்கள், தழும்புகள் மறையும்.
வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்து பொடியாக்கி, ஒரு டீஸ்பூன் அளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவு நேரத்தில் குடிக்க வேண்டும்.இதற்குப் பிறகு வேறு உணவு சாப்பிடக்கூடாது.இப்படி செய்தால், உடலில் தேங்கியுள்ள நச்சுக்கள் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும். தேவையற்ற கொழுப்பு குறையும்.இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, இரத்த ஓட்டம் சீராகும்.
பொடியை தண்ணீரில் கலந்து குடிக்க, வயிற்றுப் புண்கள் குணமாகும்.
பொடியை மோரில் கலந்து குடித்தால், தொடர்ந்து நிற்காமல் வரும் விக்கல் கூட நின்று விடும்.
பொடியை வெந்நீரில் அருந்தி வர மலச்சிக்கல் தீரும்.
தேவையற்ற உடல் எடையைக் குறைக்கவும் கருஞ்சீரகம் உதவுகிறது.
கருஞ்சீரக எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளிக்க, தலைமுடி கொட்டுவது குறைந்து, முடி வளர்ச்சி அடையும்.
பொடியை பாலில் கலந்து முகத்தில் பூசி வர, முகப் பருக்கள், கொப்புளங்கள், புண்கள் மறையும்.
கருஞ்சீரகப் பொடியோடு கொத்துமல்லி பொடி சேர்த்து வெந்நீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர, செரிமானக் கோளாறுகள் மற்றும் வாயுத்தொல்லை நீங்கும்.
கருஞ்சீரகம் சிலருக்கு வெகு அரிதாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.வயிறு வலி, வாந்தி அல்லது மலச்சிக்கலை உண்டாக்கும்.எனவே பயன்படுத்தும் போது இத்தகையத் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்று பரிசோதித்து விட்டு, பயன்படுத்துவது நல்லது.
தகவல் : இணையத்தில் இருந்து எடுத்தது.
இந்திய ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் ஒரு முறை பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலை சந்தித்தார். சாப்பிடுவதற்கு முன்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் கைகளை கழுவி, உணவு பரிமாறப்பட்டவுடன், அவர் தனது கைகளை சாப்பிடுவதற்கு பயன்படுத்தினார்.
சர்ச்சில் இந்திய ஜனாதிபதியிடம், “நீங்கள் ஏன் உங்கள் கைகளைப் பயன்படுத்துகிறீர்கள்? ஸ்பூன் மற்றும் முட்கரண்டிகளை பயன்படுத்துங்கள், அவை மிகவும் சுகாதாரமானவை ”.என்றார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் உடனே , "இதற்கு முன் யாரும் சாப்பிட என் கைகளைப் பயன்படுத்தாததால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய எந்த கரண்டியையும் விட என் கைகள் மிகவும் சுகாதாரமானவை." என்று பதிலளித்தார்.
இந்தியாவில் உணவை கையால் சாப்பிடுவது தான் பாரம்பரிய வழக்கம். ஒருவர் உணவை கையால் சாப்பிடும் போது, உணவு, உடல், மனம், மற்றும் ஆன்மா என அனைத்தையும் ஒன்றிணைக்கிறது. மேலும் இது சாப்பாட்டு இங்கிதத்தை மென்மையாக்குகிறது.
உண்ணுதல் என்பது உணர்வு மற்றும் பேரார்வத்தைத் தூண்டும் ஒரு உணர்வுபூர்வமான அனுபவமாகும். ஆயுர்வேதத்தின் படி, கையில் உள்ள ஒவ்வொரு விரலிலும் ஐந்து கூறுகள் இருக்கிறதாம்.
அதில் பெருவிரல் - ஆகாயம், ஆள்காட்டி விரல் - காற்று, நடுவிரல் - நெருப்பு, மோதிர விரல் - தண்ணீர், சுண்டு விரல் - நிலம் ஆகும். கையால் உணவை சந்தோஷமாக சாப்பிடும் போது, இந்த ஐந்து கூறுகளும் தூண்டப்பட்டு, நீங்கள் சாப்பிட வேண்டிய உணவை உற்சாகத்துடன் சாப்பிட உதவுகிறது.
ஒருவரது உடலில் இந்த ஐந்து கூறுகளும் சமநிலையில் இருந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஐந்து கூறுகளும் ஒருவரது சுறுசுறுப்பை அதிகரிக்கும். அதாவது கையால் உணவை உட்கொள்ளும் போது, உணவின் சுவை, தோற்றம் மற்றும் மணம் போன்றவை மேம்பட்டு இருக்கும்.
உணவை உட்கொள்ளும் முன் கையை நீரில் கழுவிய பின் சாப்பிடுவதால், கையில் கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை. மேலும் நாம் ஒரு நாளைக்கு பலமுறை கைகளை நீரில் கழுவுவோம்.
ஆனால் ஸ்பூன், போர்க் மற்றும் இதர பொருட்கள் அடிக்கடி கழுவப்படுகிறதா என்பது நமக்கு சரியாக தெரியாது. மேலும், அது மிகவும் சுத்தமானவையாக இருக்கும் என்றும் உறுதியாக கூறவும் முடியாது
எனவேதான், பெரும்பாலான இந்தியர்கள் வெறும் கையில் உண்ணுகிறார்கள். ஆனால் , இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிக்கும் சில மேல்தட்டு மக்கள் கரண்டிகளைத்தான் தற்போது உணவு உண்ண பயன்படுத்துகிறார்கள்.
2 முந்திரி பருப்பு, 1ஸ்பூன் கசகசாவை அரைத்து பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
வீடு சென்று வெளியே திரும்பும் போது முகத்தில் அதிகப்படியான அழுக்குகள் ஒட்டிக்கொள்வதோடு பருக்களை உண்டாக்குகிறது.
எவ்வளவு தான் கடைகளில் விற்கும் விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும்போதிய அளவில் தீர்வு கிடைப்பதில்லை .அப்படியே தீர்வு கிடைத்தாலும் நமது முகத்தில் இருக்கும் தசைப்பகுதிகள் மென்மை தன்மையை இழந்துவிடுகிறது இதனால் எப்போதும் முகம் இறுக்கத்துடன் காணப்படுகிறது. அப்பழுக்கற்ற சருமத்தை பெற சில எளிய வழி முறைகள் உங்களுக்காக.....
பருக்களை கண்டவுடன் நாம் அதனை கிள்ளத் தொடங்குகிறோம் நாளடைவில் அது கரும்புள்ளிகளையும், தழும்புகளையும் உண்டாக்கி விடுகிறது. இதனால் முகம் பொலிவிழந்து காணப்படுவதோடு அசிங்கமாகவும் தெரிகிறது. வெளியே செல்லும் பலரும் தங்களது தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர் எனவே தன்னம்பிக்கைக்கு அழகு என்பது மிகப்பெரிய தேவையாக அமைகிறது.
ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்:
ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை மிகச் சிறந்த ஒன்றாகும்.இதனை சருமத்தில் தடவி மசாஜ் செய்யும் போது அதிக பலனை நாம் பெறலாம்.இதனை ஆண் பெண் என இருபாளறும் பயன்படுத்தலாம்.அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது.
பொதுவாகவே நாம் எண்ணெய் தடவி மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து சருமம் மென்மயாக காணப்படும். அதிலும் குறிப்பாக ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் ஒன்றாக கலந்து அக் கலவையை இரவில் படுக்கும் முன்பு நன்கு மசாஜ் செய்து காலையில் எழுந்து முகத்தை கழுவ வேண்டும். இதனை வாரம் மூன்று முறை அல்லது தினம் தோறும் கூட பின்பற்றலாம்.
இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு புதிய செல்கள் உற்பத்தியாகின்றன.மேலும் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயில் அதிக அளவு ஆன்டி ஆக்சைடு மற்றும் சருமத்திற்கு தேவையான இரும்புத் சத்து, மக்னீியம் போன்ற சத்துகள் நிறந்துள்ளன.
இந்த செயல் முறையை நாள் தோறும் பின்பற்றுவதால் முகம் ஈரப்பதத்துடனும், வழவழப் பாகவும் ,பொலிவோடும் காணப்படுகிறது. தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைகின்றன.பருக்களை கொண்ட சருமத்திற்கு இந்த கலவை ஏற்றதாகும்.
கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக இருந்து வருகிறது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைகிறது.
இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கோவக்காய் நல்ல மருந்தாக இருந்து வருகிறது.
கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. புற்று நோய் வராமல் இருக்க உணவில் அடிக்கடி கோவக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும்.
இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு செல்லவும், இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வரவும், கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதய நோய்களையும் தவிர்க்கிறது.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். மேலும் சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறுவதை தடுக்கிறது.
உடலில் செரிமான அமிலங்கள் குறைவதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே வாரத்திற்கு இரு முறை கோவக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால் செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனை நீங்கும்.
கொழுப்பை கரைக்கக்கூடிய கோவக்காய் அனைத்து உணவுகளிலும் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறைக்கும் முயற்சிக்கு நல்ல பலன் தரும். மேலும் சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றுகிறது. தொடர்ந்து கோவக்காய் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக உறுப்புகள் மற்றும் உடல் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும்.
சண்டிகேஸ்வரரை வணங்கும் முன் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஆன்மிக ரகசியங்கள்!
விரிவான – திருத்தப்பட்ட ஆன்மிகக் கதை வடிவ பதிவு
சிவாலய வழிபாட்டில் பலரும் அதிகம் கவனிக்காமல் செல்லும் தெய்வம் ஒருவர் உண்டு. அவர்தான் சண்டிகேஸ்வரர்!
ஆனால் உண்மையில் சிவாலய வழிபாடு முழுமை பெற வேண்டுமென்றால், சண்டிகேஸ்வரர் தரிசனம் மிக அவசியம்.
சிவ பக்தியின் உச்சத்தை அடைந்து தெய்வப் பதவி பெற்ற பெருமைக்குரியவர் சண்டிகேஸ்வரர்.
பக்தியின் மேன்மையால் எம்பெருமானின் அருளைப் பெற்ற 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படும் இவர், அனைத்து சிவாலயங்களிலும் கோயில் சொத்துக்களின் காவலராகவும், தலத்தின் தனத்துக்கு அதிபதியாகவும் விளங்குகிறார்.
சண்டிகேஸ்வரரை எப்படி வணங்க வேண்டும்?
சிவாலயத்தில் சண்டிகேஸ்வரர் எப்போதும் ஆழ்ந்த தியான நிலையில் இருப்பார்.
அவரை தரிசிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறை:
சண்டிகேஸ்வரர் முன்பு மெல்ல மூன்று முறை கைதட்ட வேண்டும்.
“சிவ தரிசன பலன் முழுமையாக கிடைக்க வேண்டும்” என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
பிறகு கைகளை விரித்து காட்டி, “கோயிலில் இருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை” என்பதை அவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
இதற்கு காரணம் என்ன தெரியுமா?
சண்டிகேஸ்வரர்தான் சிவாலயத்தின் சொத்துக்களுக்கான காவலர்.
அதனால் கோயிலில் இருந்து எந்த பொருளையும் எடுத்துச் செல்லக் கூடாது என்பதை உணர்த்தும் மரபே இந்த வழிபாட்டு முறை.
மேலும் ஒரு முக்கியமான விஷயம்:
சண்டிகேஸ்வரரை வலம் வந்து வணங்கக் கூடாது. சென்ற வழியே திரும்பி வர வேண்டும். அவரை தரிசித்த பிறகே, சிவ தரிசன பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது ஆகம விதி.
பல்வேறு கோயில்களில் சண்டிகேஸ்வரரின் பெயர்கள்
ஒவ்வொரு ஆலயத்திலும் சண்டிகேஸ்வரர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்:
சிவன் கோயிலில் – தோனிச் சண்டிகேஸ்வரர்
முருகன் கோயிலில் – சுமித்ர சண்டிகேஸ்வரர்
விநாயகர் கோயிலில் – கும்ப சண்டிகேஸ்வரர்
சூரியனார் கோயிலில் – தேஜஸ் சண்டிகேஸ்வரர்
அம்பாள் கோயிலில் – யமுனா சண்டிகேஸ்வரர்
சண்டிகேஸ்வரருடன் தொடர்புடைய முக்கிய தலங்கள்
1. கங்கைகொண்ட சோழபுரம்
இங்குள்ள சோழீஸ்வரர் கோயிலில் மகேஸ்வரன் உமா மகேஸ்வரியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
ஈசனின் திருவடியில் கூப்பிய கரங்களுடன் சண்டிகேஸ்வரர் அமர்ந்திருப்பது தனிச்சிறப்பு.
2. திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்)
இங்கு மாணிக்கவாசகருக்கே சிவபெருமான் சண்டிகேஸ்வரர் பதவி வழங்கியதால்,
இந்த ஆலயத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனிச்சன்னிதி இல்லை என்பது ஆன்மிக விசேஷம்.
3. திருநாரையூர் சௌந்தரேசுவரர் கோயில்
இந்தத் தலத்தில் இரட்டை சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.
ஒரே இடத்தில் இரு சண்டிகேஸ்வரர்களை தரிசிப்பது அபூர்வமான அனுபவம்.
4. திருச்செந்தூர் முருகன் கோயில்
பொதுவாக முருகன் கோயில்களில் சண்டிகேஸ்வரர் சன்னிதி இருக்காது.
ஆனால் திருச்செந்தூரில் தனிச் சன்னிதி அமைந்துள்ளது.
இங்கு முருகனுக்கு அணிவித்த பூமாலையை சண்டிகேஸ்வரருக்கு அணிவிப்பது தனித்துவமான மரபு.
5. சேங்கனூர் – சண்டிகேஸ்வர நாயனார் அவதார தலம்
காவிரி வடகரையில் அமைந்துள்ள
41வது திருமறைத்தலமான சேங்கனூர் சக்திகிரீஸ்வரர் கோயில்,
சண்டிகேஸ்வர நாயனார் அவதாரம் எடுத்த தலமாக போற்றப்படுகிறது.
குமரி முதல் இமயம் வரை உள்ள அனைத்து சிவத்தலங்களையும் தரிசித்த புண்ணிய பலனை,
👉 சேங்கனூரில் சண்டிகேஸ்வர நாயனாரை தரிசித்தாலே பெறலாம்
என்பது ஐதீகம்!
ஏன் சண்டிகேஸ்வரரை வலம் வரக்கூடாது?
சண்டிகேஸ்வரர் சன்னிதி பெரும்பாலும்
நிர்மால்ய தீர்த்தம் (சிவ அபிஷேக நீர்) வெளியேறும் கோமுகியின் அருகில் அமைந்திருக்கும்.
ஆகம விதிகளின்படி:
கோமுகியைத் தாண்டக் கூடாது
அந்த பகுதியை சுற்றி வரக்கூடாது
என்பதால் சண்டிகேஸ்வரரை வலம் வராமல், சென்ற வழியே திரும்ப வேண்டும்.
யுகங்களுக்கு ஏற்ப சண்டிகேஸ்வரர்
சிவாகம புராணங்களின்படி ஒவ்வொரு யுகத்திற்கும் தனித்தனி சண்டிகேஸ்வரர் உள்ளனர்:
கிருத யுகம் – நான்கு முகங்கள்
திரேதா யுகம் – மூன்று முகங்கள்
துவாபர யுகம் – இரண்டு முகங்கள்
கலி யுகம் – ஒரு முகம்
இப்போது நாம் வழிபடுவது கலியுக சண்டிகேஸ்வரரையே.
சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம்
சண்டிகேஸ்வரருக்கென தனிப்பட்ட காயத்ரி மந்திரம் உள்ளது:
“ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
சிவ பக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்”
வழிபாட்டு முறை & பலன்கள்
தினமும் காலை இந்த மந்திரத்தை 27 முறை ஜபிக்கலாம்
பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில்
சண்டிகேஸ்வரருக்கு நெய் தீபம் ஏற்றி
இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்தால்
பலன்கள்:
மன உறுதி அதிகரிக்கும்
தடைகள் விலகும்
இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்
வாழ்வில் அமைதி ஏற்படும்
முடிவுரை
சிவ வழிபாட்டில் சண்டிகேஸ்வரரை மறந்து செல்லக்கூடாது.
அவரது அருளோடு செய்யப்படும் சிவ தரிசனமே முழுமையான தரிசனம்.
அடுத்த முறை சிவாலயம் செல்லும்போது,
சண்டிகேஸ்வரரை முறையாக வணங்கி அவரது அருளையும் பெறுங்கள்
ஒரு நாள் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள். சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்; குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.
"குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன?" எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் என்றான். குரு சீடனுக்கு பதிலை எப்படி விளக்குவது என்று சற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது.
குரு, அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். குளத்தில் நிறைய மீன் கிடைக்கிறது என்றான்.
குருவோ, எனக்கு வேண்டாம் தம்பி என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்து விட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பி விட்டான்.
ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை குரு பார்த்து விட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப் பார்த்தார்; அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதை தெரிந்து கொண்டார். அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன.
குரு, அவரிடமும் பேச்சு கொடுத்தார். என்ன பெரியவரே! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்று சற்று முன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார். பெரியவரும், ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன் என்றார். அவரிடம் பேசி முடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார்.
பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் "மீனென்றால் உயிர்" என்று கூறும் போதே தெரிந்திருக்கும். அந்த இளைஞன், மீன்களை "ருசி" என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான். ஆனால்., அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது, ஆனால்., இருவரின் நோக்கம் வேறு. மொத்தத்தில்,
*அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை; சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது, நிரந்தரமானது* என்று
குரு சீடனுக்கு புரிய வைத்தார்.
1. எந்த தலைபோகும் அவசரமாக இருந்தாலும் – ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையைச் செய்யுங்கள்.
2. பிரச்னையை முழுவதும் புரிந்து கொண்ட பின் செயல்படத் துவங்கவும். பிரச்னை எதுவாக இருந்தாலும் – அதை முதலில் புரிந்துகொள்ளவும்.அடுத்தது அலசி ஆராயவும்.கடைசியில் பிரச்னை முடிச்சை அவிழ்க்கவும். (Understand the problem – Analyse the problem – Attack the problem)
3. காது கொடுத்துக் கேளுங்கள். எதிராளி – (உங்கள் செல்ல பப்லுக்குட்டியோ... உங்கள் ஜெனரல் மானேஜரா) அவர் சொல்ல வந்ததை முழுவதும் சொல்லட்டும். குறுக்கே பேசாமல் உன்னிப்பாக கவனியுங்கள். கேட்பதை மனதில் வாங்கிக்கொண்டு பிறகு பதில் பேசலாம்.
4. கேள்வி கேளுங்கள். மிகவும் அற்புதமாகத் தோன்றும் சந்தேகத்தைக் கூட உதாசீனப்படுத்தாமல் விடை காண முயலவும், ஒர சிறிய கேள்வி வரவழைக்கும் விடைகளால் உங்கள் பிரச்னைக்கு முற்றிலும் ஒரு புதிய பரிமாணமே கிடைத்தாலும் கிடைக்கும்.
5. யாரொருவருடன் பேசும்போதும் அவருடைய கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அடுத்தவர் உங்களிடம் பேசும்போதும் அவர் கண்களையும் முகபாவங்களையும் உன்னிப்பாகக் கவனிப்பது முக்கியம். இதனால் நீங்கள் எதிராளியின் நம்பிக்கையை எளிதில் பெறுவீர்கள்.
6. மாறுதல்களை எளிதாக ஏற்றுக்கொள்ளுங்கள். நேற்று சரியான முறை என்று நாம் நினைப்பது இன்று மாறிவிடுகிறது. திறந்த மனதுடன் புதிய முறைகளை வரவேற்பது உங்கள் வெற்றியைச் சுலபமாக்கும்.
7. தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள். நம்மில் யாருமே ‘சூப்பர் பர்ஃபெக்ட்’ இல்லை. தவறைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ள முற்பட்டால் யாருமே உங்களைத் தாழ்வாக நினைக்க மாட்டார்கள். மாறாக, உங்கள் மதிப்பு உயரக் கூடும்.
8. சொல்ல வந்ததை எளிமையாகச் சொல்லுங்கள். சுற்றி வளைத்த, ஜாடை மாடை பூடகப் பேச்சோ, உங்கள் மொழிப்புலமையை வெளிக்காட்ட உதவும் பல்லை உடைக்கும் சொற்களோ தேவையில்லை.
ஒரு குழந்தை கூடப் புரிந்துகொள்ளக்கூடிய எளிய முறையில் பேசுங்கள். அதற்குத்தான் எதிர்பார்த்த பலன் இருக்கும்.
9. அமைதியாக இருங்கள். வீட்டிலோ - வெளியிலோ – எங்குதான் பிரச்னைகளில்லை? அதுவும் நம் ரத்தக் கொதிப்பை எகிற வைக்கும் விஷயங்களுக்குக் குறைவா, என்ன?
சட்டென்று பதிலடி (வார்த்தைகளால்தான்!) கொடுக்கும் முன் ஒரு நிமிடம் ஆழமாக மூச்சிழுங்கள். பிறகு சொல்ல வேண்டியதை அழுத்தமாகவும் நிதானமாகவும் யோசித்துச் சொல்லுங்கள்.
படபடப்பாய் பொரிந்து தள்ளுவது சுலபம். ஆனால் அது பிரச்னையை திசை மாற்றிவிடும். அதனால் நிகர நஷ்டம் உங்களுக்குத்தான்.
10. கடைசியாக... அடிக்கடி புன்னகையுங்கள்.
காசா பணமா செலவு? ஒரு சிறு புன்னகை பல சிக்கல்களை அவிழ்க்கும். பாதைகளை சீராக்கும். உங்கள் முகத்தையும் கூட இன்னும் அழகாக ஆக்கும்!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பங்குதாரர்களுடன் இருந்த கருத்துமோதல் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.
மிதுனம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்ப உறுப்பினர்களிடம் முன்கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். அலுவலகரீதியான பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டுவீர்கள்.
சிம்மம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
கன்னி: குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்துமோதல்கள் வரலாம். சில வேலைகளை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. பயணங்கள் அலைச்சல் தரும். பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
துலாம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். தெய்வீக ஈடுபாடு கூடும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நன்மை தரும். மேலதிகாரிகள் பாராடுவர்.
தனுசு: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மன வலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்ற முயற்சிப்பீர்கள்.
மகரம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். முன் கோபம் விலகும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
கும்பம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி உண்டு. திடீர் பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.







