கௌரவ் சாப்ரா என்னும் இந்தியர் கனடாவில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, பொலிசார் ஒருவர் அவரை நிறுத்தியுள்ளார். அப்போது அவரது காருக்குள் windscreenஇல் பொருத்தப்பட்டிருந்த மொபைலில் வீடியோ ஒன்று ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. அவருக்கு 615 டொலர்கள் அபராதம் விதித்துள்ளார் அந்த பொலிசார். ஆனால், இனவெறுப்பு காரணமாக அவர் தனக்கு அபராதம் விதித்ததாகத் தெரிவிக்கும் கௌரவ், அந்த பொலிசார் தனது பர்ஸிலிருந்த பணத்தைப் பார்த்து எதற்கு இவ்வளவு பணம் என்று கேட்டதாகவும் கூறுகிறார்.
அவர் இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகம் ஒன்றில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களைப் பார்த்தவர்கள், கார் ஓட்டும்போது வீடியோ பார்ப்பது சட்டப்படி தவறுதான் என்கிறார்கள்.
கௌரவ் அந்த பொலிசாரிடம் வீடியோ ஓடுவது உண்மைதான். ஆனால், தான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை, சாலையில்தான் கவனம் வைத்திருந்தேன் என்கிறார். அந்த விடயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லலாம், அங்கு அவர் வீடியோ பார்த்தாரா இல்லையா என்பதை முடிவு செய்யலாம் என்கிறார் அந்த பொலிசார்.
இணையவாசிகளும், இது இனவெறுப்பு இல்லை. அவர் தன் கடமையைத்தான் செய்தார் என்கிறார்கள். அது மட்டுமல்ல, புலம்பெயர்ந்தோர் எப்போதுமே தாங்கள் வாழும் நாட்டுக்கு உண்மையாக இருப்பதையே நிரூபிக்க முயல்வார்கள். அந்த பொலிசாரும் ஒரு புலம்பெயர்ந்தோர்தான். ஆக, இது இனவெறுப்பு இல்லை. கனடாவில் கார் ஓட்டும்போது வீடியோ பார்ப்பது தவறுதான் என்கிறார்கள் இணையவாசிகள்!
இந்தோ- சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு புது டெல்லியில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஐரோப்பிய திரைப்பட விழாவை சென்னையில் நடத்துகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் ஃபிரான்சைஸ் வளாகத்தில் நவ.17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கும் இப்பட விழாவில் 6 படங்கள் திரையிடப்படுகின்றன.
நவ.17-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரெஞ்சு காமெடி டிராமா திரைப்படமான ‘ஜிம்’ஸ் ஸ்டோரி’யும், அன்று இரவு 7 மணிக்கு பின்லாந்து படமான ‘ஜேவிடா’வும் திரையிடப்படுகின்றன.. ஒரு பெண்ணின் 3 வெவ்வேறு காலகட்டங்களை விவரிக்கும் படம் இது.
நவ.18-ம் தேதி மாலை 5 மணிக்கு பல்கேரிய த்ரில்லர் படமான ‘த டிராப்’, அன்றிரவு 7 மணிக்கு ருமேனியா நாட்டுத் திரைப்படமான, ‘த்ரி கிலோமீட்டர்ஸ் டு த எண்ட் ஆஃப் த வேர்ல்டு’, நவ.19-ம் தேதி மாலை 5 மணிக்கு ஹங்கேரி படமான ‘ஃபோர் சோல்ஸ் ஆஃப் கொயோட்’, இரவு 7 மணிக்கு ‘டேஞ்சரஸ் ஜென்டில்மேன்’ என்ற போலந்து திரைப்படம் ஆகியவைத் திரையிடப்படுகின்றன. இத்தகவலை இந்தோ-சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் பொதுச் செயலாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
👌👌'#பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!
👎நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!
👌👌 தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!
👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!
👌👌 தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி!
👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!
👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!
👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!
👌👌 சுகப் பிரசவம் என்பது இயற்கையின் விதி!
👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!
👌👌யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!
👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!
👌👌 யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!
👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!
👌👊 பசித்து உண்டால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!
👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!
👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!
👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!
👌👌நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி!
👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!
👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!
👎எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி!
👌👌ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின் விதி.
👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.
👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.
👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.
👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.
👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.
👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!
👎அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி!
👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும், இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !
👎 படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது யார் சதி!
1. உடல் - உணவை கேட்கும் மொழி : பசி
2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி : தாகம்
3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி : சோர்வு, தலைவலி
4. உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி : தும்மல் சளி இருமல்.
5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி : காய்ச்சல்
6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி : வாய் கசப்பு மற்றும் பசியின்மை
7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி உடல் : அசதி
8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி : வாந்தி
9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி : பேதி
10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி : வியர்வை
11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி : உறக்கம்
12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி : சிறுநீர் கழித்தல்
13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி : மலம் கழித்தல்
உடல் மொழி அறிவோம். ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்யவதை தவிர்ப்போம்.
உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால், நோயை இயற்கையாய் தவிர்த்து, ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சிஆகவும் வாழலாம்.
நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம். நாம் நம்மை நேசிப்போம்.
நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளுக்கும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வித்தவர் எம்.ஜி.ஆர்.
அவருக்கு, ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த விருப்பம். ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி"சொல்றேன்' என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார்.
ஒரு முறை சிவாஜி, எம்.ஜி.ஆர் பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர் காமராஜர் வந்திருந்தார்.
காமராஜரை வழியனுப்பும் போது மீண்டும் அழைப்பு விடுத்தார் எம்.ஜிஆர். அப்போதும் அதே புன்னகை மாறாமல் "ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக்கூடாது என்றில்லை. உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அறுசுவை உணவும் இனிப்பு பதார்த்தங்களும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள். நான் மக்கள் ஊழியக்காரன் ரெண்டு இட்லி, தயிர் சோறு தான் எனக்கு சரிப்படும் உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திரும்பவும் அந்த ருசியை நாக்கு தேடும்..அதுக்கு நான் எங்கே போறது' என்று கூற ஆடிப்போனார் எம்.ஜி.ஆர்.
தன்னையும் அறியாமல் காமராஜரை கைகூப்பி வணங்கினார் எம்.ஜி.ஆர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பொறுப்புடன் செயல்படவும். நண்பர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
பணியாட்களில் சில மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். மனை சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அச்சம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
நினைத்து சில பணிகள் தாமதமாக நிறைவு பெறும். உடன் இருப்பவர்களால் ஆதரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் மத்தியமான லாபங்கள் கிடைக்கும். கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். தடைப்பட்ட சில விஷயங்கள் நிறைவு பெறும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் உண்டாகும். வீடு மனை விற்பதில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். உழைப்புக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். சில அனுபவங்கள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். பிரயாணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி
குடும்பத்தின் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் அளவுடன் செயல்படுவது நல்லது. சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம்
கணவன் மனைவிக்கு அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும். சக ஊழியர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தடைகளால் தாமதமும் அலைச்சலும் ஏற்படும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விருச்சிகம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நினைத்த காரியம் கைக்கூடி வரும். சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மன திருப்தியை ஏற்படுத்தும். துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். உறவினர்கள் மத்தியில் முக்கியத்துவம் ஏற்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். விலகி இருந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். சில மாற்றங்கள் மூலம் மேன்மைகளை உருவாக்குவீர்கள். வியாபாரம் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தடைப்பட்ட சில வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கான மதிப்புகள் கிடைக்கும். ஆன்மீக சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
கும்பம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். வீண் செலவுகளால் மனம் சஞ்சலமாகும். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த வரவுகள் தாமதமாக கிடைக்கும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மீனம்
சகோதரர்களின் அரவணைப்பு மேம்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் கணிசமாக உயரும். அலுவலகத்தில் மேன்மையான சூழல்கள் அமையும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். கோபம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை 15.11.2025.
இன்று அதிகாலை 04.55 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று அதிகாலை 01.51 வரை பூரம் . பின்னர் உத்திரம்.
இன்று காலை 10.19 வரை வைதிருதி. பின்னர் விஷ் கம்பம்.
இன்று அதிகாலை 04.55 வரை பத்தரை. பின்னர் மாலை 05.17 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று காலை 06.13 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
ஸ்வீடன் கிரிப்பென் (Gripen) போர் விமான உற்பத்தியாளர் சஹாப் SAAB, கனடா தமது ராணுவத்துக்காக இந்த விமானத்தை தேர்வு செய்தால், 10,000 உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி வேலை வாய்ப்புகள் கனடாவில் உருவாகலாம் என அறிவித்துள்ளது.
கனடிய அரசுடன் விமான உற்பத்தியை நேரடியாக கனடாவில் மேற்கொள்ளும் வாய்ப்பு குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாக SAAB நிறுவனத்தின் தலைவர் மைகேல் யோஹான்சன் உறுதிப்படுத்தினார்.
மொன்றியலில் தலைமையகத்தைக் கொண்ட பொம்பார்டியர் மற்றும் சீ.ஏ.ஈ Bombardier, CAE நிறுவனங்களும் மேலும் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஐ.எம்.பி எரோ ஸ்பேஸ் ஆகியவற்றும் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள கூடிய நிறுவனங்களாக உள்ளன.
“கனடா தன்னுடைய ராணுவ திறன்களை உள்ளூரில் உருவாக்க விரும்பினால்—மேம்படுத்தல், பாகங்கள் உற்பத்தி, இறுதி பொருத்துதல், பரிசோதனை—எல்லாவற்றிற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று யோஹான்சன் தெரிவித்தார். தேவைப்பட்டால் தொழில்நுட்பங்களை கனடாவுக்கு மாற்றி அளிக்கவும் தயாராக உள்ளோம் என குறிப்பிட்டார்.











