பிரபல பாதாள குழு தலைவர் கனேமுல்லா சஞ்சீவ சுட்டுக் கொலை

கொழும்பு, அளுத்கடை நீதவான் நீதிமன்ற   கட்டடத்தொகுதியின் அறை இலக்கம் 5 இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில், கனேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்ற பாதாள குற்றக் கும்பலின் தலைவன் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டு தாக்குதலுக்குள்ளான அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கணேமுல்ல சஞ்சீவ, வழக்கு ஒன்றிற்காக அளுத்கடே நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட போதே இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கொலையாளி வக்கீல் போல் மாறுவேடமிட்டு வந்துள்ளதுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரிவால்வரும் அருகிலேயே கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

00

  • 787
  • More
 ·   ·  28 videos
  •  ·  1 friends
  • 2 followers
Comments (0)
Login or Join to comment.