Feed Item

பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதமானோர் கையடக்க தொலைப்பேசி பாவனைக்கு அடிமையாகி இருப்பதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தென் மாகாணத்தில் உள்ள நானூறு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தி வைத்தியர்கள் குழுவொன்று ஆய்வொன்றை நடத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சமூக நிபுணர் வைத்தியர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார். 

இதில் பல சிறுவர்கள் இரவில் சரியாகத் தூங்காமல் எப்போதும் சோர்வாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தொலைப்பேசி பாவனைக்கு அடிமையான சிறுவர்களுக்குச் சக்கரை நோய் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டாய தேவை கருதி தொலைப்பேசி பாவிக்க வேண்டிய தேவை ஏற்படுமாயின் எந்தவொரு சிறுவர்களுக்கும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் தொலைப்பேசி பாவிக்க அனுமதிக்குமாறு பெற்றோர்களை வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • 948