Ads

மீசாலை ஒன்றுகூடல் 2023

மீசாலை ஒன்றுகூடல் 2023 Photogallery

  • 898
  • More
  • 54
  • More
  • 56
  • More
  • 58
  • More
  • 53
  • More
  • 46
  • More
  • 55
  • More
  • 53
  • More
  • 55
  • More
  • 52
  • More
  • 42
  • More
  • 42
  • More
  • 44
  • More
Comments (0)
Login or Join to comment.
·
Added a news
பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கிப் பயணித்த ஏதிலிகள் படகு விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். சட்டவிரோதமான முறையில் ஆங்கில கால்வாய் ஊடாக பயணிக்கும் ஏதிலிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது காயமடைந்த 6 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சூடான், சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 59 பேர் குறித்த படகில் பயணித்துள்ளனர்.இதேவேளை, கடந்த 2 நாட்களில் மாத்திரம் ஆங்கில கால்வாயை 200க்கும் அதிகமான ஏதிலிகள் கடக்க முயன்றதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.000
  • 628
·
Added a news
சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 43 பேரும், பொதுநலவாய நாடுகளை சேர்ந்த 22 பேரும் கூடுதலாக, தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து 6 பேரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை அண்டை நாடுகளைச் சேர்ந்த 7 பேர் இந்த செயற்பாட்டில் மேலும் இணைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.மேலும் 34 ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் மற்றும் 3 கூடுதல் ANFREL பிரதிநிதிகள் எதிர்வரும் நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை, 22 தேர்தல் தொகுதிகளிலும் விரிவான கண்காணிப்பை உறுதி செய்வதற்காக பார்வையாளர் குழுக்கள் தங்களது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.000
  • 631
·
Added a news
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் (Pafrel) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சட்டத்தை மீறும் நிறுவனத் தலைவர் நீதிமன்றத்தின் முன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு இலட்சம் அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் தமக்கு தெரிவிக்குமாறும் பணியாளர்களை Pafrel அமைப்பு கோரியுள்ளது.அதன்படி, அரச அதிகாரிகளின் சிறப்பு விடுமுறையாக ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்ல குறைந்தபட்ச நேரத்தை 4 மணி நேரம் என்று குறிப்பிடுகின்றது.இருப்பினும், எழுத்துப்பூர்வ உத்தரவில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இதுபோன்ற சிறப்பு விடுமுறைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதால், வாக்களிக்க ஊழியர்களுக்கு முதலாளிகள் விடுமுறை அளிப்பதில்லை என்று முறைப்பாடு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதன்படி, தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிக்கச் செல்வதற்கும் வருவதற்கும் அனுமதிக்கும் தூரம், நேரம் தொடர்பிலான அறிவிப்பினை மனித உரிமைகள் ஆணைக்குழு உருவாக்கியுள்ளது.இதற்கமைய, பணியிடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு 40 கிமீ அல்லது அதற்கும் குறைவான தூரத்தில் உள்ளவர்களுக்கு அரை நாள் விடுமுறைபணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கான தூரம் 40 கிமீ முதல் 100 கிமீ வரை - ஒரு நாள் விடுமுறை பணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கான தூரம் 100 கிமீ முதல் 150 கிமீ வரை - 1 1/2 நாட்கள் விடுமுறைபணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு 150 கிமீ - 2 நாட்களுக்கு மேல் விடுமுறை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.இருப்பினும், பணியாளர்கள் எழுத்துப்பூர்வமாக விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு முதலாளியும் சிறப்பு விடுப்புக்கு விண்ணப்பித்த நபர்கள் மற்றும் விடுப்பு வழங்கப்படும் காலம் ஆகியவற்றைக் காட்டும் ஆவணத்தைத் தயாரித்து பணியிடத்தில் காண்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
  • 632
·
Added a news
இந்த மீலாத்துன் நபி தினம் அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமைய பிரார்த்திப்பதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறப்பை நினைவுகூரும் வகையில் மீலாதுன் நபி தினத்தை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்துடன் இலங்கை முஸ்லிம்கள் சகோதரத்துவத்துடன் கொண்டாடுகின்றனர்.மற்றவர்களிடையே நம்பிக்கையை வளர்த்த முஹம்மது நபியவர்கள், அல்-அமீன் என்று (நம்பிக்கையானவர்) அழைக்கப்பட்டார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் காத்து வந்த நற்பண்புகளுக்காகவும் மனித நேயத்திற்காகவும் செய்த தியாகங்கள் அளவிட முடியாதவை. பரஸ்பர புரிதல், நேர்மை, நல்லிணக்கம் மற்றும் மற்றவர்களை வெறுத்து ஒதுக்காதிருத்தல் போன்றவை இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் அடிப்படை போதனைகளின் மையக்கருவாக அமைந்திருந்தன.நேர்மையான மனிதர்களுக்கு இறைவன் உதவி புரிகிறார் என்பதையும், அத்தகையவர்கள் இறைவனால் பொருத்தமான, உயர்ந்த இடங்களுக்கு உயர்த்தப்படுவதையும் முஹம்மது நபி அவர்களுடைய வாழ்க்கை மற்றும் தத்துவத்தைப் பற்றி ஆராய்ந்தால் புரிந்துகொள்ளலாம்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தினத்தில் அவர்கள், எடுத்துக் காட்டிய விழுமியங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அனைத்து வகையான அடிப்படைவாதத்தையும் முறியடித்து சிறந்த, முன்னேறிய உலகை உருவாக்குவதற்கான உறுதியுடன் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் கைகோர்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.இந்த மீலாத்துன் நபி தினம் அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமைய பிரார்த்திக்கிறேன்.000
  • 638
·
Added a news
இந்தியாவுடன் சமீப காலமாக எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்த மாலைதீவு அரசாங்கத்தின் நடவடிக்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலைதீவில் கருத்துத் தெரிவித்த இரண்டு பேர் பதவி விலகினர். இந்நிலையில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்தியாவுடன் முன்னர் நட்புப் பாராட்டிய நாடுகளில் மாலைதீவும் ஒன்று. இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், சீனாவுக்கு நெருக்கமான முகமது மூயிஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அப்போது தொடக்கம் அவர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார். பதவியேற்ற குறுகிய காலத்திலேயே, அவர் மாலைதீவில் இருந்த இந்திய இராணுவப் படையை வெளியேற்றினார்.அதேநேரம் அந்த நாட்டின் இரண்டு அமைச்சர்களான மரியம் ஷிவுனா, மல்ஷா ஷெரிப் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் சமூகவலைதளங்களில் கருத்துகளை முன்வைத்தனர்.கடல்சார் கண்காணிப்புக்காக இந்திய இராணுவம் அதிநவீன ஹெலிெகாப்டர்கள், நவீன விமானம் உள்ளிட்டவற்றை மாலைதீவுக்கு வழங்கியிருந்தது. இந்தக் கருவிகளை இயக்குவதற்காக சுமார் 100 இந்திய இராணுவ வீரர்கள் மாலைதீவில் இருந்தனர். அவர்களை வெளியேற்றியதால், இந்தியா௲ மாலைதீவு இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. இந்திய இராணுவத்தை வெளியேற்றிவிட்டு, மாலைதீவு அரசாங்கம் சீனாவிடம் இராணுவ உதவி கேட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டது.இந்தியா-மாலைதீவு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு மாலைதீவு அதிபர் முகமது முய்சுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பதவியேற்பு விழாவில் முகமது மூயிஸ் கலந்து கொண்டார். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த மாதம் மாலைதீவு சென்றிருந்தார். அப்போது முதலே மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன.அதன் தொடர்ச்சியாக மோடி குறித்து விமர்சித்த, இரண்டு அமைச்சர்கள் தங்களின் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இதுவும் இருநாட்டு உறவை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று தகவல் வெளியானது. இந்நிலையில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு, முதல்முறையாக அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா வரவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.முகமது முய்சு, அடுத்த வாரமே டெல்லி வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைதீவில் பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்த அமைச்சர்கள் இருவரும் இராஜினாமா செய்த அதே நாளில், அந்த நாட்டு ஜனாதிபதி முகமது முய்சுவின் இந்தியப் பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா௲ மாலைதீவு நாடுகள் இடையே மீண்டும் இணக்கமான சூழல் உருவாகியுள்ளது.இது ஒருபுறமிருக்க, மாலைதீவுடன் இலகுவாக வர்த்தகம் செய்ய FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான விரிசல் இப்போது படிப்படியாக நீங்கி வருவதாகத் தெரிகிறது. அதாவது மாலைதீவுடன் எளிமையாக வர்த்தகம் செய்வதற்கு ஏதுவாக FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக மாலைதீவு அமைச்சர் முகமது சயீத் தெரிவித்துள்ளார்.இதற்கான பேச்சுவார்த்தை இப்போது நடந்து வருகிறது.இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டதால் மாலைதீவின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது. மாலைதீவுக்குச் சுற்றுலா செல்வதைப் பல இந்தியர்கள் புறக்கணிக்க ஆரம்பித்தனர். இதனால் மாலைதீவு பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதன் பின்னரே மாலைதீவு தனது போக்ைக மாற்றியது. சமீபத்தில் கூட அந்நாட்டின் அமைச்சர், “இந்தியர்கள் மாலைதீவுக்குச் சுற்றுலா வர வேண்டும்” என வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு நாட்டு உறவு இப்படி இருக்கும் இந்த நேரத்தில்தான் மாலைதீவுடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அதேசமயம் சமீபத்தில் நடந்த மாலைதீவு சுதந்திரதின விழாவில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டின் அதிபர் முய்சு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.மாலைதீவு இந்தியாவுக்கு அளிக்க வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சில தளர்வுகளை இந்தியா அறிவித்துள்ள நிலையில், அதற்கு மாலைதீவு அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும், இந்தியா மாலைதீவு இடையே உறவுகள் வலுவாக இருக்கும் என்றும், இரு நாடுகளும் விரைவில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் நம்பிக்கை இருப்பதாக முய்சு தெரிவித்துள்ளார்.000
  • 643
·
Added a news
அரசாங்கத்துக்கு சொந்தமான மில்கோ நிறுவனத்தின் நாளாந்த உற்பத்தி அதிகரித்துள்ளதையடுத்து, தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள 200,000 மெற்றிக் தொன் பால்மாவை கொள்வனவு செய்வதற்கு, 200 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக விவசாய மற்றும்பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் என்ற ரீதியில் தானும் இணைந்து நேற்று முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ச.தொ.ச ஊடாக ஹைலண்ட் பால்மாவை விற்பனை செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். முன்னர் நட்டத்தில் இயங்கி வந்த அரச நிறுவனமான மில்கோ நிறுவனம், தற்போது அது மாற்றமடைந்து இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், நாளாந்த பால் சேகரிப்பு 50,000 லீற்றரிலிருந்து இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ளதாகவும் நேற்றைய (13) அமைச்சரவைக் கூட்டத்தில் தாம் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். குறிப்பாக, பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் உற்பத்தி, பால் கொள்முதல் செய்து வந்த பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது பால் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டதனால், பால் பண்ணையாளர்களுக்கு சொந்தமான பாலை மில்கோ நிறுவனமே கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக, மில்கோவின் தினசரி உற்பத்தியும் அதிகரித்துள்ளதோடு, இரண்டு இலட்சம் மெற்றக்தொன் ஹைலேண்ட் பால் மா நிறுவனத்திடம் கையிருப்பிலுள்ளது. மில்கோ நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் ஹைலண்ட் பால் மாவின் விலையும் கடந்த வாரம் முதல் 400 கிராம் பாக்கெட் ஒன்றின் விலை 75 ரூபாவாலும் 01 கிலோ பக்கற் ஒன்றின் விலை 190 ரூபாவாலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.000
  • 642
·
Added a post
பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப்பொருள் தவுன். ஆண்டில் ஒருசில மாதங்களில் மட்டுமே உண்ணக் கிடைக்கும் தவுண், மிகுந்த மருத்துவ குணமிக்கது.மரங்களில் கர்ப்பகதருகு என அழைக்கப்படும் பனைமரம், தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனை மரத்தின் வேர் முதல் மரத்தின் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன் தரும். வறட்சியான பகுதியில் தானாக வளரக்கூடிய பனையின் ஆயுள் 100 ஆண்டுகள். 90 அடி உயரம் வளரக்கூடியது.பனங்காய்களில் இருந்து குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும். காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும், முற்றிய பனங்காயிலிருந்து சதைப் பகுதியை வேகவைத்து உண்ணலாம்.பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும். பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும். கொட்டைக்குள் உருவாகும் சீப்பை (தவுன்) குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். கொஞ்சநாள் விட்டால், பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.பனங்கொட்டையிலிருந்து கிடைக்கும் தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை.பனை பழத்தின் கொட்டைகளை குறிப்பிட்ட பருவத்துக்கு (60 நாள்கள்) மண்ணில் புதைத்து, பின்னர் அவற்றை வெட்டி எடுத்து பெறமுடியும்.
  • 1369
·
Added a post
விமானம் க்ளீன் செய்யும் பணியாளர் ஒருவன் விமானத்தை துடைத்து கொண்டு இருந்தார்!அப்பொழுது விமானியின் அறையில் ஒரு புத்தகம் இருந்தது!எளிதாக விமானத்தை ஓட்டுவது எப்படி!ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தான்!விமானம் இஞ்சின் ஸ்டார்ட் ஆக முதலில் பச்சை பட்டனை அமுக்கவும்.அப்படியே செய்தான் ! விமான என்ஜின் ஸ்டார்ட் ஆனது!ஓடு தளத்தில் ஓட நீல நிற பட்டனை அழுத்தவும்! என்று இருக்க அவன் அதை செய்ய ஓடு தளத்தில் வேகமாக ஓடியது.அப்புறம் அடுத்து கருப்பு நிற லிவரை கீழே தள்ளினால் விமானம் மேலே பறக்கும் என்று எழுதி இருக்க!அதையே செய்தான் !இப்பொழுது விமானம் உயரமாக பறக்க ஆரம்பித்தது.அரை மணி நேரம் மகிழ்ச்சியாக பறந்த பின் சரி விமானத்தை தரை இறக்கலாம் என்று புத்தகத்தின் அடுத்த பக்கத்தை திருப்ப !" விமானத்தை எப்படி இறக்குவது என்பதற்கு எங்கள் புத்தகத்தின் இரண்டாவது பாகத்தை வாங்குங்கள் என்று இருந்தது!நீதி - எதையும் முழுதுமாக தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்க கூடாது!
  • 1401
·
Added a post
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ” என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது. ” புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்! ".பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது. ”சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்! ".
  • 1428
·
Added article
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட காலத்தில்- தன் கையால் சமைத்துப் போட்டு -மாம்பலம் கிளப் ஹவுஸில் அவ்விருவரையும் காப்பாற்றியவர் ஸ்ரீகாந்த்.வாலியும் நாகேஷும் இணைபிரியா நண்பர்கள்.ஓர் அறையில் இருவரும் தங்கியிருந்தார்கள். ‘டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு’ என்பார் நாகேஷ். அவரும் கழற்றித் தருவார். பிறகு அந்த வாட்ச் அடகுக்கடைக்குச் சென்று பணமாகி, ஹோட்டலுக்கும் சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும். நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால், அது வாலிக்கானது. இப்படித்தான் இருந்தார்கள்.சினிமா தேவதை, நாகேஷை இருகரம் கொண்டு வரவேற்றாள். படங்கள் வரத்தொடங்கின. நாகேஷின் நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கே.பாலசந்தர், தன் முதல் படத்தை இயக்கும்போது, நாகேஷை நாயகனாக்கினார். ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷின் பண்பட்ட நடிப்பைக் கண்டு பாராட்டாதவர்களே இல்லை.இதைத் தொடர்ந்து பாலசந்தர் தன் படங்களில், விதம்விதமான பாத்திரங்களைக் கொடுத்தார் நாகேஷுக்கு. அது சின்ன கேரக்டரோ... பெரிய கேரக்டரோ... ஆனால் அங்கே அசத்தலான நடிப்பில் நம்மையெல்லாம் அசரடித்திருப்பார் நாகேஷ்.எம்ஜிஆருக்கு நண்பன், சிவாஜிக்கு நண்பன், ஜெமினிக்கு நண்பன், முத்துராமனுக்கு நண்பன், பிறகு ஜெய்சங்கருக்கு நண்பன் என்றெல்லாம் நடித்து வந்த நாகேஷ், ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிக்கு நண்பனாகவும் ‘பாமா ருக்மணி’ படத்தில் பாக்யராஜுக்கு நண்பனாகவும் கூட நடித்திருப்பார்.அந்தக் காலத்தில், ஏவிஎம் படமாக இருந்தாலும் சரி, தேவர் பிலிம்ஸ் கம்பெனியாக இருந்தாலும் சரி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலுவாக இருந்தாலும் சரி... ஏபி.நாகராஜனாக இருந்தாலும் சரி... முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். பிறகுதான் நடிகர்களுக்கு கதை சொல்லுவார்கள். ‘நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிட்டீங்களா. அப்ப படத்தோட வெற்றிக்கு நாப்பது சதவிகிதம் கியாரண்டி’ என்று எம்ஜிஆரே சொல்லிப் புகழ்ந்த சம்பவங்கள், வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத புகழாரம்.
  • 1434
·
Added a post
இல்லறவாசி ஒருவர் அருகிலுள்ள ஊருக்குப் புறப்பட்டார். அவரால் மறுநாள்தாள் திரும்பி வரமுடியும். எனவே, அவரது மனைவி மதியமும் இரவும் சாப்பிடுவதற்காக அவருக்கு உணவுப் பொட்டலங்களை ஒரு பையில் போட்டுக் கொடுத்தாள். காட்டு வழியே அவரது பயணம் அமைந்தது.நடுக்காட்டில் ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை உண்டார். பின்னர் பையை எடுத்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தார். நினைத்ததை விட விரைவில் தனது வேலைகளை முடித்துக் கொண்டார். ஊரை நோக்கிப் புறப்பட்டார். விரைவிலேயே புறப்பட்டதால், வீட்டிற்குச் சென்ற பின் இரவு உணவைச் சாப்பிடலாம் எனத் தீர்மானித்தார்.திரும்பும் வழியில் ஒரு துறவி அமர்ந்திருப்பதை கண்டார். அந்த துறவி இவரிடம், "இன்று நீ உன் வீடு திரும்பினால் உன் மனைவி இறந்து விடுவாள். திரும்பா விட்டால் நீ இறந்து விடுவாய் என்று கூறி தியானத்தில் ஆழ்த்தார். இதைக் கேட்ட இல்லறவாசி திடுக்கிட்டார். துறவிகளின் வார்த்தைகள் பொய்க்காது என்பதை அறிந்த அவர், தம் மனைவியின் உயிரைக் காப்பதற்காக அன்று வீடு திரும்புவதில்லை என்று முடிவு செய்தார்.காட்டில் விலங்குகள் எந்த நிமிடமும் தன் மீது பாய்ந்து கொல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் மெதுவாக, கவனமாக நடந்தார். சிறிது தூரம் நடந்தபிறகு, ஒரு மரத்தடியில் சில துறவிகள் அமர்ந்திருக்க தலைமைத் துறவி அருளுரை நிகழ்த்துவதைக் கண்டனர். அந்தத் தலைமைத் துறவி புத்தர் என அறிந்து கொண்டார். ஆர்வத்துடன் அவரது அருளுரையைக் கேட்டார். உரை நிறைவுற்ற பின்னர் புத்தரை வணங்கினார். வழியில் நிகழ்ந்ததை விளக்கமாக கூறி. தன்னைக் காக்குமாறு வேண்டினார்.புன்னகை புரிந்த புத்தர், எனக்குப் பசியாக இருக்கிறது. ஏதாவது சாப்பிட இருக்கிறதா? என்று கேட்டார். இல்லறவாசி அளவற்ற மகிழ்ச்சியுடன் பையைத் திறக்க முற்பட்டார். ஆனால் புத்தர் அந்தப் பையை அப்படியே தன்னிடம் தருமாறு கேட்டார்.இல்லறவாசியும் பையை கொடுத்தார். புத்தர் மெதுவாக பையைத் திறந்து, அதன் உள்ள இருந்த சிறிய விஷப்பாம்பை வெளியில் எடுத்தார். அதைக் கண்ட இல்லறவாசி திடுக்கிட்டார். மதியம் உணவருந்த பையைத் திறந்து மரத்தடியில் வைத்திருந்த போது விஷப்பாம்பு பைக்குள் சென்றிருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டார்.துறவி சொன்னதன் பொருள் அவருக்குப் புரிந்தது. மரணத்தை வென்றவர் என்று இதுவரையில் யாரும் இல்லை. வாழும் வரை நல்லவர்களோடு தொடர்பில் இருப்போம். மனித நாகரீகத்தோடு செயல்படுவோம்.
  • 1448
·
Added a post
ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார். ரொம்ப பெரிய ஞானி. மிகவும் வயதாகி விட்டது .கடைசி காலத்தில் அவரிடம் சில பேர் வந்தார்கள்.உங்கள் குரு யார்? என்று கேட்டார்கள்.அவர் நிமிர்ந்து பார்த்தார்.எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் உண்டு.அவர்கள் பெயர் எல்லாம் சொல்ல வேண்டுமென்றால் காலம் போதாது.ஆனால் முக்கியமான ஒன்றை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.நான் ஒரு சமயம் ஒரு நகரத்துக்கு போனேன்.அங்கே ஒரு குழந்தை எரிகிற மெழுகுவர்த்தி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தது.நான் அந்த குழந்தையை பார்த்து வேடிக்கையாக கேட்டேன்.ஏன் பாப்பா இந்த மெழுகுவர்த்தியை நீயா கொளுத்தினாயா என்று!ஆமாம் என்றது அந்த குழந்தை.சரி இந்த மெழுகுவர்த்தி முதல் எரியாமல் இருந்தது.இப்போது எரிகிறது.இந்த மெழுகுவர்த்திக்கு வெளிச்சம் எங்கே இருந்து வந்தது என்று காட்ட முடியுமா? என்று கேட்டேன்.அதற்கு அந்த குழந்தை சிரித்தது.இந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டது.அதன் பிறகு என்னை பார்த்து கேட்டது.இப்போ இந்த மெழுகுவத்தின் வெளிச்சம் போனதை பார்த்தீர்கள் அல்லவா. அது எங்கே போனது என்று சொல்ல முடியுமா? என்று இப்படி என்னிடம் அந்த குழந்தை கேட்டதும்...எனது ஆணவம் அழிந்தது.நான் படித்ததெல்லாம் அந்த வினாடியில் சுக்கு நூறாகிவிட்டது. எனது முட்டாள்தனத்தை நான் உணர்ந்தேன் என்றார் ஞானி.இதனால் நாம் இன்னாரிடமிருந்து இதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை யாரிடமிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளலாம்.
  • 1455
·
Added a post
கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் நம் உடலில் ஒருவித நேர்மறை ஆற்றல் பரவி, சுறுசுறுப்பு அதிகரிக்கும்,அதானால் நம் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். படிப்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும் பாடல் வரிகளை பாடியவர் தேவராய சுவாமிகள் என்பவராவார். கந்த சஷ்டி பாடல் உருவான கதை மிகவும் சுவாரஸ்யமானதாகும். வாருங்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்,பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு தேவராயர் ஒருமுறை சென்றபோது மலையை சுற்றி கிரிவலம் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மண்டபங்களில் பலரும் பலவிதமான நோய்களால் துன்புறுவதை கண்டு வருந்தியுள்ளார். அவர்கள் அனைவரும் நலமடைய வேண்டும் என மனதில் உறுதி எடுத்துகொண்ட தேவராயர் முருகரை பார்த்து உருகி வேண்டியுள்ளார்,அன்றிரவு அவரது கனவில் தோன்றிய பழனி முருகர், "உன் எண்ணம் ஈடேற அருளினோம். பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகில் உள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடு!'' என ஆசி வழங்கி மறைந்துள்ளார்,பழனி ஆண்டவரை கண்ட தேவராயர் பரவசத்துடன், "அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!'' என ஆடிப்பாடி மகிழ்ந்தார்.முருகன் திருவருளை வியந்து போற்றி பாடல் ஒன்றை உடனடியாக பாடி வழங்கினார். அதுவே 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம் என்னும் புகழ்பெற்ற மந்திரம் ஆகும்.யார் இந்த தேவராய சுவாமிகள்?கந்தர் சஷ்டி கவசம் பாடிய தேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவராவார். அவருடைய தந்தையார் கணக்கர் வேலை செய்த வீரசாமிப்பிள்ளை எனவும் இவர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனவும் சில நூல்களில் குறிப்புகள் உள்ளன.வீராசாமிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லாமல் முருகன் திருவருளால் பிறந்தவரே தேவராயராவார்.நன்கு கல்வி கற்று வியாபார நிமித்தமாக பெங்களூரு சென்று அங்கு தமது வணிகத் தொழிலை மேற்கொண்டார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்ட தேவராயர் தாம் இயற்றிய கவிதைகளை மகாவித்வானிடம் காட்டி பிழை திருத்தம் செய்துகொள்வாராம்.தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேட மலை மாலை முதலிய நூல்களை தேவராயர் இயற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.கந்த சஷ்டி கவசம் பாடப்பட்ட ஊர்தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசம் பாடியுள்ளார் என அறிய முடிகிறது.தற்போது அனைவராலும் பாடப்படும் கந்த சஷ்டி கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது எனக் கூறப்படுகிறது. ஆயினும் இக்கவசத்தின் நிறைவுப் பகுதியில் 'பழனி மலையின் மீது' கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிறு குழந்தை வடிவாகிய முருகப் பெருமானது செம்மையான திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்' (பழனிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி (225, 226) என்ற பாடல் வரியை அடிப்படையாக கொண்டு இக்கவசம் பழனியில் பாடப்பட்டது எனக் கூறப்படுகிறது.கந்த சஷ்டி கவசம் எப்போது படிக்க வேண்டும்?விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படித்தல் நன்மை பயக்கும்.கந்தசஷ்டி கவசம் அருளும் பலன்கள்முருகனின் பெயரால் நவகிரகங்களும் நமக்கு துணை நிற்பார்கள். எதிரிகளின் மனம் மாறி தோழமை உண்டாகும். வீட்டை பிடித்திருக்கும் தரித்திரம், பீடை, செய்வினைகள் அடியோடி அழிந்துவிடும். வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகளான லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி உண்டாகும்.தினமும் கந்த சஷ்டி கவசத்தை பாடுவோருக்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். மனமும், உடலும் வலிமை அதிகரிப்பதோடு, முக வசீகரம் ஏற்படும்முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளில் மூன்று முறை கந்த சஷ்டி கவசத்தைப் படிப்பதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.முருகனுக்கு உகந்த நாட்கள், சஷ்டி விரதம் மேற்கொள்ளும் தினத்திலும், முருகனுக்கு விரதம் இருந்து மூன்று முறை கந்த சஷ்டி கவசத்தைப் படிப்பதாலும், முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் நடக்காது என்று நினைத்த காரியங்கள் கூட நிறைவேறும்.
  • 1470
·
Added a post
ஓர் சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்த போது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ''ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?'' என்று கேட்டார்.''தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்" என்றார் கடைக்காரர்.பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார். அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், ''இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?''… என்று கேட்டார்.அதற்கு சிற்பி, ''வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது" என்றார். கடைக்காரர் வியந்தார்."ஆம்.. தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது'' என்றார்.————தேவையற்ற விஷயங்களை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காட்டலாம்.நமக்குள்ளே இருக்கும் நல்ல விசயங்கள் நாளும் வெளிக்கொணர்ந்தால் எல்லா நாளும் இனிய நாள் தான். புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்.... முயற்சியினாலும் தொடர்ந்த பயிற்சியினாலும் நம்மை செம்மைப்படுத்த முடியும்.
  • 1472
·
Added a post
அமானுஷ்ய இடமென்று இந்திய அரசாலேயே தடைசெய்யப்பட்ட இடம்... திரைப்படத்தை மிஞ்சிய மர்மம்...!இந்தியா அதன் நீண்ட வரலாறால் உலகம் முழுவதும் புகழ்பெற்ற நாடாகும். இந்தியாவின் வரலாறு எவ்வளவு பெரியதோ அதேயளவிற்கு அதில் நிறைந்திருக்கும் மர்மங்களும் அதிகமாகும். இந்தியாவின் பல இடங்களில் இப்போது அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆராய்ச்சியும் ஒரு மர்மத்தை வெளிக்கொணருகிறது.இந்த வகையில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானின் அரச நகரமாக இருந்த இடத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி அனைவரையும் குழப்பமடைய வைத்துள்ளது. அமானுஷ்ய சக்திகளால் சூழப்பட்டிருக்கும் உலகின் மிகவும் பயங்கரமான ஒரு இடத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா வனத்தின் எல்லையில் பங்கர் நகரம் அமைந்துள்ளது, அதன் பேய் கதைகள் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. 1613 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பங்கர் கோட்டைக்குள் வரலாற்று இடிபாடுகளுக்கு புகழ்பெற்ற இந்த நகரம் பங்கர் ஆகும். இது ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தின் ராஜ்கர் நகராட்சியில் உள்ளது. சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயத்திற்கு இடையில் இந்த 'கோஸ்ட் டவுன்' க்குள் நுழைவது சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது என்பது சுவாரஸ்யமானது.எங்கு உள்ளது?இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூருக்கும் டெல்லிக்கும் இடையிலான இடமாக பங்கர் உள்ளது. பங்கர் ஒரு வரலாற்றுக்கு முந்தைய இடமாகும். சோமேஷ்வர், மங்கலா தேவி, லவினா தேவி மற்றும் கேசவ ராய் கோயில்கள் அங்கிருக்கும் கட்டிடங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. மற்ற கட்டிடங்களில் பிரதான சாலையில் உள்ள கடைகள், பல ஹவேலிகள், ஒரு மசூதி மற்றும் ஒரு அரண்மனை ஆகியவை அடங்கும். அரண்மனை பள்ளத்தாக்கு முழுவதும் இரண்டு உள் கோட்டைகளால் பாதுகாக்கப்பட்டது. இந்த நகரம் சமவெளியில் இருந்து ஐந்து வாயில்களைக் கொண்ட கோபுரங்களால் பிரிக்கப்பட்டுள்ளது.பின்னணியில் உள்ள வரலாறு:1573 ஆம் ஆண்டில் பகவந்த் தாஸின் ஆட்சியின் போது அவரது இரண்டாவது மகன் மாதோ சிங்கின் வசிப்பிடமாக இந்த கோட்டை நிறுவப்பட்டது. மாதோ சிங் பேரரசர் அக்பரின் ஜெனரலின் முதலாம் மன் சிங்கின் சகோதரர் ஆவார். மாதோ சிங் தனது தந்தை மற்றும் சகோதரருடன் பல போர்களில் பங்கேற்றார்.பங்கரின் அடுத்த ஆட்சியாளர் அவரது மகன் சத்ர் சிங் ஆவார், 1630 இல் இறந்த பிறகு, பங்கர் புறக்கணிக்கப்பட்டது. ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய சாம்ராஜ்யம் பலவீனமடைந்தபோது, ஜெய் சிங் II பங்காரை 1720 இல் தனது மாநிலத்துடன் பலத்துடன் இணைத்தார். இதன் பின்னர் பங்கர் மக்கள் தொகை குறைந்து, 1783 பஞ்சத்திலிருந்து மக்கள் வசிக்காத இடமாக இருந்து வருகிறது.நுழைவதற்கு தடையா?சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயத்திற்கு இடையில் பங்கருக்கு நுழைவது சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இது இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ‘சட்டரீதியாக பேய்' உள்ள இடமாகும். இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு ஒரு அடையாள அட்டை மூலம் இந்த வழிமுறைகளை சிறப்பாக குறிப்பிடுகிறது, இது இந்த நகரத்தின் மர்மத்தை மேலும் வலுவாக்குகிறது.போர்டு இந்தியில் எழுதப்பட்டிருக்கிறது, அதன் வழிமுறைகள் மொழிபெயர்க்கப்படும் போது, 'சூரிய உதயத்திற்கு முன்பும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் பங்கரின் எல்லைகளுக்குள் நுழைவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றாத எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் '.வரலாற்றின் படி, பங்கார் நகரம் குருபால் நாத்தால் சபிக்கப்பட்டது. அவர் ஒரு நிபந்தனையின் பேரில் நகரத்தை நிர்மாணிக்க அனுமதித்திருந்தார், 'உங்கள் அரண்மனைகளின் நிழல்கள் என்னைத் தொடும் தருணம், நகரம் இனி இருக்காது '.ஒரு வம்சாவளியை சேர்ந்த இளவரசன் அரண்மனையைகுருபால் நாத்தின் தடைசெய்யப்பட்ட பின்வாங்கலில் நிழலைக் காட்டிய உயரத்திற்கு உயர்த்தியபோது, அவர் நகரத்தை சபித்தார். குருபால் நாத் ஒரு சிறிய சமாதியில் இன்றுவரை அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த இடத்தை சுற்றி மற்றொரு கதை உள்ளது. அது பங்கர் இளவரசி ரத்னாவதியின் கதை. அவர் ராஜஸ்தானின் பொக்கிஷம் என்று அறியப்படுகிறார். தனது பதினெட்டாம் பிறந்தநாளில் அவர் பிற பிராந்தியங்களிலிருந்து திருமண வரன்களைப் பெறத் தொடங்கினார். அந்த பகுதி தாந்திரீகத்தை நன்கு அறிந்த மந்திரவாதி சிங்கியா என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இளவரசி மீது காதல் இருந்தது. ஆனால் போட்டியில் பங்கேற்பது சாத்தியமற்றது என்பதை அவன் அறிந்திருந்தான்.ஒரு நாள் சிங்கியா இளவரசியின் பணிப்பெண்ணை சந்தையில் பார்த்தபோது, அவர் வாங்கும் எண்ணெயில் தனது சூனியத்தை பயன்படுத்தினான், அதனால் அதைத் தொட்டால் இளவரசி தன்னை அவனிடம் ஒப்படைப்பார் என்று அவன் எண்ணினான். அந்த தாந்திரீக எண்ணெயை கண்ட இளவரசி அதனை தரையில் ஊற்றி அவனின் திட்டத்தை முறியடித்தார்.எண்ணெய் தரையில் ஊற்றப்பட்டதால் அது ஒரு கற்பாறையாக மாறியது, அது சிங்கியாவை நசுக்கியது. இறக்கும் நேரத்தில் தாந்த்ரீகன் அரண்மனையையும் அதில் வசித்த அனைவரையும்ன் மரணத்தால் சபித்தார். அடுத்த ஆண்டு பங்கருக்கும் அஜப்கருக்கும் இடையில் ஒரு போர் நடந்தது, அதில் இளவரசி ரத்னாவதி கொல்லப்பட்டார்.பங்கரில் பேய்கள் இருப்பதாக புராணக்கதைகள் கூறுகின்றன, அதனால்தான் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மற்றும் சூரிய உதயத்திற்கு முன்பாக கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. ரத்னாவதி இளவரசி வேறு எங்காவது பிறந்திருக்கிறாள் என்றும், சாபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவள் திரும்பி வருவதற்காக பங்கர் கோட்டையும் பேரரசும் காத்திருக்கிறது என்றும் உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.சிங்கியாவின் ஆன்மா மற்றும் அவனால் சாபமிடப்பட்டவர்களின் ஆன்மா இன்றும் கோட்டையில் அலைவதாக நம்பப்படுகிறது. அதனால்தான் சூரிய உதயத்திற்கு முன்னரும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்னரும் யாரும் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. கால்நடைகளை கூட சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு யாரும் இங்கு அனுமதிப்பதில்லை. இது இந்திய அரசாங்கத்தாலேயே பேய் இருக்கும் இடமாக அறிவிக்கப்பட்ட இடமாகும்.
  • 1476
·
Added article
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் தனுஷுக்கு ரெட் கார்டு விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.மெர்சல் பட தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியின் படம் ஒன்றில் நடித்து 80 சதவீத படப்பிடிப்பு முடிந்தபின் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகவும், பைவ் ஸ்டார் கதிரேசனிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு படமும் நடித்து தராமல், அட்வான்ஸையும் திரும்ப தராமல் இழுத்தடித்ததாகவும் எழுந்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதையடுத்து நடிகர் சங்கம் தனுஷ் சார்பாகப் பேசி தயாரிப்பாளர் சங்கம் தனுஷ் மேல் விதித்திருந்த ரெட் கார்டை நீக்கியது. தனுஷ் மெர்சல் தயாரிப்பாளருக்கு வேறொரு படம் நடித்துக் கொடுப்பது மற்றும் பைவ் ஸ்டார் கதிரேசனிடம் வாங்கிய அட்வான்ஸை வட்டியுடன் திரும்ப தருவது உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு தனுஷ் ஒத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தனுஷ் இயக்கி நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.
  • 1506
·
Added a news
நர்மதா ஆற்றங்கரையில் உள்ள புனித நகரங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் மது மற்றும் இறைச்சிக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.நர்மதா நதியின் பிறப்பிடத்தை தூய்மையாகவும் புனிதமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்கு அதிகம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார். நர்மதா அருகில் மிகத் தொலைவில் ஒரு செயற்கை நகரம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நதியை சுற்றி உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் கழிவுநீரை ஆற்றில் விடக்கூடாது என்றும் தெரிவித்தார்.
  • 1512
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 30 ஆம் தேதி மேஷம் -ராசி: பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உறவினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். பயணங்களால் புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும். கால்நடை பணிகளில் லாபம் மேம்படும். எதிர்ப்பு விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  ரிஷபம் ராசி: எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் சாதகமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சகோதரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : செம்மஞ்சள்மிதுனம் -ராசி: மறைமுகமாக விமர்சனங்கள் தோன்றி மறையும். கணிதம் சார்ந்த தொழில்களில் கவனம் வேண்டும். விவாதங்களில் நிதானத்துடன் இருக்கவும். வரவுகள் இருந்தாலும் அதற்குகேற்ப செலவுகளும் இருக்கும். ஆரோக்கிய விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும். மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்கடகம் -ராசி: நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அச்சம் மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பச்சைசிம்மம் -ராசி:தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் கன்னி -ராசி: புத்திரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேளிக்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அறிவியல் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமாக இருந்துவந்த இன்னல்கள் விலகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெண்மைதுலாம் -ராசி: கல்வி சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த குழப்பம் குறையும். தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். இயற்கை மருத்துவம் சார்ந்த தேடல் உண்டாகும். மனதில் புரட்சிகரமான சிந்தனைகள் ஏற்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்விருச்சிகம்- ராசி: பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கடினமான செயல்களை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். நுட்பமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : காவி தனுசு -ராசி: சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். பற்கள் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தனிப்பட்டு செயல்படுவதில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்மகரம் -ராசி:பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் நன்மதிப்பு ஏற்படும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்பான சூழ்நிலை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செலவுகளை குறைப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புகும்பம் –ராசி:சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். செயல்பாடுகளில் அலட்சியப்போக்கு இனறி செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். கடன் செயல்களில் பொறுமை வேண்டும். பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்மீனம் -ராசி: மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். கடினமான சூழ்நிலைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் உண்டாகும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிதல் மேம்படும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : நீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 1591
  • 1646
  • 1658
Good morning
  • 1658
·
Added a news
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"கோவிட் காலத்தில் அப்போதைய அரசு வரிச் சுமைகளைக் குறைத்தமையின் காரணமாகவே இலங்கை நெருக்கடிக்குள் சிக்கியது.அதேபோல் இரசாயன உர இறக்குமதிக்குத் தடை விதித்தமையினால் இலங்கையின் விவசாய உற்பத்திகள் முற்றாகச் சரிவைக் கண்டன.அதனால் புதிய வகையிலான விளைச்சல்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளும் பாதிப்பை எதிர்கொண்டன.அந்த நிலையிலிருந்து மீளவே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனாலேயே நாட்டின் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகளிலிருந்து மீண்டு வர முடிந்தது.குறிப்பாக சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் சுற்றுலாத்துறையும் மூச்சுவிட ஆரம்பித்தது.அதனால் அப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மேற்கொள்ளப்பட்ட நிதி முகாமைத்துவம் உள்ளிட்டச் செயற்பாடுகள் தேசிய பொருளாதாரத்தை நிலைப்படுத்தியிருந்தது.அதன்படி இப்போது துரித அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் அவசியப்படுகின்றது. இந்த வருடத்தின் இறுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகையை 25 இலட்சமாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி தயாரித்திருக்கின்றார்.அதேபோல் எமது இறக்குமதிகளுக்குச் செலுத்தவே வருமானம் போதுமாக இருப்பதால் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி அதிக வருமானத்தை ஈட்டும் திட்டங்களையும் அவர் தயார்படுத்தியுள்ளார்.தற்போதும் இலங்கை பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கைசாத்திட்டுள்ளது. மேலும் மீள் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி உற்பத்தியை ஆரம்பித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 1712
·
Added a news
எதிர்வரும் 5 வருடங்களுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்பொது அவர் மேலும் கூறுகையில் - வடக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகளை, அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது.வடக்கிற்கு அபிவிருத்தியும் அவசியம். ஏனைய மாகாணங்கள் முன்னேறுகையில் வடக்கு பின்தங்கிவிடும். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை முன் கொண்டு செல்ல வேண்டும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்து அதனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.இந்தநிலையில், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்கான தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.000
  • 1713
·
Added a news
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கள்ள வாக்கு அளிக்கும் நபர்களுக்கு 2023ஆம் ஆண்டு 21ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 12 மாதங்கள் வரை சிறை தண்டனையும் 2 இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் அதிகமான கள்ள வாக்குகளை அளிக்க சிலர் முற்பட கூடும் என பலக் கட்சிகள் தேர்தல்களை ஆணைக்குழுவிடம் குற்றச்சாட்களை முன்வைத்துள்ளன.இதனால், வாக்குப் பெட்டியை வாக்கு எண்ணும் தேர்தல் மத்திய நிலையங்களுக்கு கொண்டுசெல்லும் போது குறித்த வாகனத்துடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்ப்பில் இருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் வாகனத்தை பின்தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கள்ள வாக்கு அளிக்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை மேல் நீதிமன்றத்தின் ஊடாக அளிக்க முடியும் என ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்தார்.கள்ள வாக்கு அளிப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபா தண்டப்பணத்தை விதிக்க முடியும். அல்லது 12 மாதங்கள் சிறை தண்டனையை விதிக்க முடியும். அல்லது இரண்டு இலட்சம் அபராதத்துடன், தண்டனையையும் வழங்க முடியும்.1981 ஆம் ஆண்டு 15 இலக்க சட்டத்தின் பிரகாரம் 500 ரூபா தண்டப்பணமே கள்ள வாக்கு அளிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டது. என்றாலும், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான சட்டத்திருத்தின் ஊடாக இந்த தொகை 2 இலட்சமாக அதிகரிக்கப்பட்டது.கள்ள வாக்கு அளித்த குற்றவாளியாக அடையாளம் காணப்படும் நபர்களுக்கு மேற்படி தண்டனைகளை விதிப்பதுடன், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வாக்களிக்கவும் வாக்காளர் பதிவேட்டில் பதியவும் தடைவிதிக்கப்படும் என்றும் சிந்தக குலரத்ன கூறினார்.000
  • 1714
·
Added a news
வடக்கில் மாகாண சபையை வலுப்படுத்தி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக தனது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும், மத்திய அரசாங்கத்திற்கு உதவும் வகையில் 09 மாகாண சிற்றரசுகளின் கீழ் அபிவிருத்தி வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும் தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் எனவும் நவாஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக எதிர்வரும் 05 வருடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,''வடக்கின் விடயங்களை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. அப்பிரதேசத்திற்கு அபிவிருத்தியும் அவசியம். இல்லையெனில் ஏனைய மாகாணங்கள் முன்னேறுகையில் வடக்கு பின்தங்கிவிடும் .வடக்கின் அபிவிருத்தியை போன்றே அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன்.முன்னாள் விவசாய அமைச்சர் அனுரகுமார எவ்வாறு தென்னிலங்கையில் மாகாண சபைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இன்று யாழ்ப்பாணம் வந்து மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் இந்த விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு உறுதிமொழி அளிக்க வேண்டும்“ எனவும் வலியுறுத்தினார்சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை வலுவாக தொடராவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் நேற்று விடுத்த எச்சரிக்கையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்றார்.இன்னும் 03 வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் எவராலும் உடைக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி வடக்கை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்று வடக்கிற்கு அவசியம் எனவும் சஜித் பிரேமதாசவிடமோ அனுரகுமாரவிடமோ அதற்கான தீர்வு இல்லை" எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது000
  • 1714
ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.9.2024.சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 03.30 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.இன்று மாலை 05.03 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 1793
Good Morning..
  • 1813