Srikanth

  •  ·  Premium
  • 1 followers
  • 270 views
Added a news  
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று(23) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும் அதிலிருந்த 18 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்படையினர் கைது செய்தனர்.கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 155
Added a news  
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரிடம் சகஜமாக கதைத்து அவருடைய மோதிரம் சிறுதொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை களவாடிச் சென்ற நபர் கண்காணிப்பு கமராவின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர், குறித்த நபர் தொடர்பாக விபரம் தெரிந்தால் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கோ வைத்தியசாலை நிர்வாகத்துக்கோ தெரிவிக்குமாறு அறிவித்துள்ளார்.இது தொடர்பில் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்ட வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.மேலும் அந்த செய்தி குறிப்பில்,யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் மதியம் பார்வையாளர் நேரத்தில் நூதனமான முறையிலே திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.கடந்த 19 ஆம் திகதி சத்திர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடம் சகஜமாக கதைத்து அவருடைய மோதிரம் சிறுதொகைப்பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை களவாடிச் சென்ற நபர் CCTV யில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.சத்திர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடம் குறிப்பிட்ட நபர் சென்று சகஜமாக கதைத்து குறிப்பிட்ட நோயாளியை X Ray கதிர்ப் படம் எடுக்க போக வேண்டும் எனவும் நீங்கள் உணவருந்தி குளித்து விட்டு ஆயத்தமாக இருங்கள் என்று கூறி அவரை X Ray கதிர்ப்படம் எடுக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்று நோயாளி அணிந்திருந்த மோதிரம், சிறுதொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை களவாடிச் சென்ற சம்பவம் நேற்று நடைபெற்றது.குறிப்பிட்ட நபர் CCTV மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரை பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் யாழ் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது வைத்தியசாலை பணிப்பாளர் காரியாலயத்திற்கோ தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.மேலும் வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் நோயாளிகள் தங்க ஆபரணங்களையோ பெறுமதியான பொருட்களையோ கொண்டு வரவேண்டாம் எனவும் தெரியாத நபர்களுடன் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 158
Added a news  
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரிடம் சகஜமாக கதைத்து அவருடைய மோதிரம் சிறுதொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை களவாடிச் சென்ற நபர் கண்காணிப்பு கமராவின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர், குறித்த நபர் தொடர்பாக விபரம் தெரிந்தால் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கோ வைத்தியசாலை நிர்வாகத்துக்கோ தெரிவிக்குமாறு அறிவித்துள்ளார்.இது தொடர்பில் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்ட வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.மேலும் அந்த செய்தி குறிப்பில்,யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் மதியம் பார்வையாளர் நேரத்தில் நூதனமான முறையிலே திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.கடந்த 19 ஆம் திகதி சத்திர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடம் சகஜமாக கதைத்து அவருடைய மோதிரம் சிறுதொகைப்பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை களவாடிச் சென்ற நபர் CCTV யில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.சத்திர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடம் குறிப்பிட்ட நபர் சென்று சகஜமாக கதைத்து குறிப்பிட்ட நோயாளியை X Ray கதிர்ப் படம் எடுக்க போக வேண்டும் எனவும் நீங்கள் உணவருந்தி குளித்து விட்டு ஆயத்தமாக இருங்கள் என்று கூறி அவரை X Ray கதிர்ப்படம் எடுக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்று நோயாளி அணிந்திருந்த மோதிரம், சிறுதொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை களவாடிச் சென்ற சம்பவம் நேற்று நடைபெற்றது.குறிப்பிட்ட நபர் CCTV மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரை பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் யாழ் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது வைத்தியசாலை பணிப்பாளர் காரியாலயத்திற்கோ தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.மேலும் வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் நோயாளிகள் தங்க ஆபரணங்களையோ பெறுமதியான பொருட்களையோ கொண்டு வரவேண்டாம் எனவும் தெரியாத நபர்களுடன் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 159
Added a news  
 உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.நயினாதீவு ரஜமகா விகாரையில் நேற்று (22) மதியம் 2 மணியளவில் ஆரம்பித்த இந் நிகழ்விற்கு 27 நாடுகளில் இருந்து சுமார் 350 பௌத்த மத பிரதிநிதிகளின் வருகைதந்தனர்.உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் தலைவர், உலக பௌத்த முன்னணியின் தலைவர், உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் பிரதிநிதிகள், உலக பௌத்த முன்னணியின் பிரதிநிதிகள், விகாராதிபதிகள், பௌத்த பிக்குகள், யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, வடக்கு மாகாண கடற்படை தளபதி உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்இந்நிகழ்வில் பல்வேறுபட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்ததுடன் ஞாபகார்த்த நினைவு முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.000
  • 167
Added a news  
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பாக, இந்தியாவினால் எதுவும் கூற முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒருசேரச் சந்தித்திருந்தார். இதன்போது பொது வேட்பாளருக்கு ஆதரவான தரப்பினர் இது குறித்து அவரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.  இது தொடர்பாகக் கூட்டத்தின் இறுதியில் கருத்து தெரிவித்த ஜெய்சங்கர்,  “பொது வேட்பாளர் தொடர்பாக தம்மால் எதுவும் கூற முடியாது. அது தமிழ்க் கட்சிகளுக்குள் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய தீர்மானம்” என தெரிவித்ததாக அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை கறிப்பிடத்தக்கது000
  • 167
Added a news  
கடந்த வருடத்துடன் (2023) ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் (2004) தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.  இதற்கமைய 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • 169
Added a news  
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர்- 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைப் பெற்றதுடன், விராட் கோலி 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் நஜ்முல் ஹுசைன் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ்  3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.  அதிரடியாக விளையாடி அரைசதம் மற்றும் ஒரு விக்கெட்டை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது000
  • 168
Added a news  
 இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை (ஹட்ரிக்) கைப்பற்றினார். வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் 59 ஓட்டங்களைப் பெற்றார்.  பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குல்பாடின் நைப் 4 விக்கெட்டுக்களையும், நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிரந்தமை கறிப்பிடத்தக்கது .000
  • 168
Added a news  
 தொழிற்சங்கங்களின் சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.தற்போது நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து வரும் நேரத்தில் அரச ஊழியர்களும் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், அரச ஊழியர்களின் பிரச்சினைகளை கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தேர்தல்களை நடைபெறும் வருடம் என்பதால் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் கவனத்தை தம் மீது திருப்புவதற்கு முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 171
Added a news  
நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்’’ கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடு மாவட்ட செயலக வளாகத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (22) நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான சேவைகளை விஸ்தரித்து வினைத் திறனாக்கும் நோக்கில் இந்த புதிய மாவட்ட செயலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெயர் பலகையை திரைநீக்கம் செய்து மாவட்ட செயலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.இதுதவிர உயர்தர தேசிய பொறியியல் டிப்ளோமா நிறுவனத்தில் ஆங்கில டிப்ளோமா பெற்ற 252 பேருக்கும் இன்று ஜனாதிபதி தலைமையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.இதன்போது மேலும் அவர் கூறுகையில் - விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்தப் பகுதிகளில் பாரியளவிலான விவசாய செயற்பாடுகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் அபிவிருத்தி செய்யப்படாத மகாவலி காணிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். .மேலும் இப்பகுதியில் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பொருளாதார மாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பாரிய பணிகள் இங்கு செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படி திருகோணமலையை பிரதான ஏற்றுமதி பொருளாதா மையமாக மாற்ற முடியும்.தொழிற்கல்வித்துறையின் சீர்திருத்தத்தின் மூலம் அதிகளவான இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்க முடியும். மூன்று, நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்களை நியமிக்க முடியாததால், பாடசாலைக் கல்வி மேம்பாட்டிற்காக, இன்று ஆசிரியர் நியமனமும் வழங்கப்பட்டது.நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஒரு பாரிய பிரச்சினையாக மாறிவிட்டது. அதற்கேற்ப, புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 170
Added a news  
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (23) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.வட மாகாணத்திலும் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 170
Added a news  
தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.பல்வேறு வைரஸ் தொற்றுகள் காரணமாக சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் சிறுவர்களிடையே அதிகமாக பரவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்த நோய்கள் மிக இலகுவாகப் பரவும் என்பதால், சிறு குழந்தைகளை முடிந்தவரை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என மேலும் தெரிவித்துள்ளார்.தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் வயிற்றுப்போக்கு அதிகரித்துள்ளதாகவும்,வைரஸ் காய்ச்சலுக்குப் பின்னரே குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு அடிக்கடி ஏற்படுவதாகவும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 170
Added a news  
 தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.எனவே தேவையற்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த தேவையில்லை எனவும், பறவைக் காய்ச்சல் தொடர்பான அபாயகரமான சூழல் இல்லையென்றாலும், அது தொடர்பில் விசேடமாக ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், “குறிப்பாக இவ்வாறான நோயினால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை இலங்கை மக்களுக்கு நாம் கூற வேண்டும்.உலக சுகாதார நிறுவனம் எமக்கு விசேட எச்சரிக்கையை வழங்கவில்லை. பறவைக் காய்ச்சல் வழக்குகள் இதற்கு முன்னர் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளன.ஆனால் அவை குறிப்பாக பரவலாக இல்லை. எனவே இது தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 172
Added a news  
 இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா நேற்று(22) இந்தியா சென்றுள்ளார்.இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த கலந்துரையாடலில் இரண்டு நாடுகளினதும் உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், நீர்வளம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், பங்களாதேஷில் இருந்து சிகிச்சைகளுக்காக இந்தியா செல்வோருக்கு எளிதில் விசா வழங்குவதற்கான ஈ-விசா முறைமையை நடைமுறைப்படுத்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பங்களாதேஷின் வடமேற்கு பகுதி மக்களின் நன்மைகருதி ரங்க்பூர் பகுதியில் புதிய இந்திய தூதரகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது 00
  • 173
Added a news  
நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸ் மீண்டும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.இதன் மூலம் T20 உலகக் கிண்ண போட்களில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை பட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.செயின்ட் வின்சென்ட்டில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசியது.இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ஆப்கானிஸ்தான் அணியின் முதல் விக்கெட் 16வது ஓவரின் முடிவில் 118 ஓட்டங்களை பெற்றிருந்த போதே வீழ்த்தப்பட்டது. எனினும், கடைசி ஐந்து விக்கெட்டுகளும் 30 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் அரைசதம் கடந்திருந்தனர்.எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் மீண்டும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியிருந்தார்.முன்னதாக சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான கடந்தப் போட்டியிலும் பட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்தார்.இது அவரின் முதல் T20 உலகக் கிண்ண ஹாட்ரிக் விக்கெட்டாக அமைந்திருந்தது. இந்நிலையில், இரண்டாது முறையாகவும் அவர் இன்றையப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.இதன்மூலம் T20 உலகக் கிண்ண போட்களில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை பட் கம்மின்ஸ் படைத்துள்ளமை குறிப்பிடத்’தக்கது000
  • 170