Srikanth

  •  ·  Premium
  • 1 friends
  • 2 followers
  • 1315 views
Added a news  
கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதால் வியாபாரிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு வந்த சாவகச்சேரி பிரதேச சபையினர் இந்த நாசகார வேலையை செய்ததாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.தற்போது வெப்பமானது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. ஆகையால் மரங்கள் நிற்பதன் மூலம்தான் ஓரளவேனும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் கருத்தையும் மீறி மரத்தை வெட்டியதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.சந்தையில் உள்ள மலசலகூடங்களும் பயன்படுத்த முடியாமல் மிகவும் அசுத்தமான முறையில் காணப்படுகின்றதாகவும் அவற்றினை சாவகச்சேரி பிரதேச சபையினர் சுத்தம் செய்வதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.அத்துடன் சந்தையில் சேருகின்ற கழிவுப் பொருட்களை உரிய முறையில் பிரதேச சபையினர் அகற்றுவதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.மக்களுக்கு சரியான முறையில் சேவைகளை வழங்காத உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் திரு.வேதநாயகன் கூறியுள்ளார். எமது இந்த பிரச்சினைக்கு அவர் எடுக்கப்போகின்ற நடவடிக்கை என்ன என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இல்லாத நிலையில் இவ்வாறான விரும்பத்தகாத விடயங்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.000 
  • 692
Added a news  
ஈழம் தமிழர்களிடம் போராட்டம் என்ற சிந்தனைப் பொறியை தோற்றுவித்த மற்றொரு வரலாறும் தன் சிந்தனையை நிறுத்தி விட்டது என மறைந்த புஸ்பராணி அவர்களுக்கான  அனுதாபச் செய்தியில் வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.பிரான்சில் அமரத்துவமடைந்த அன்னாருக்கு தனது அனுதாபத்’தை வெளியிட்டுள்ள அவர் குறித்த செய்திக் குறிப்பில் மேலும் கூறுகையில் –ஈழத் தமிழர்கள் மத்தியில் போராட்டம் பற்றிய சிந்தனை பொறியை தோற்றுவித்தவர்களுள் ஒருவர் இன்று சிந்தனையை நிறுத்தி இருக்கின்றார்.யாழ்ப்பாணம் தமிழாராட்சி மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட மிலேச்சத்தனம் புஸ்பராணியின் மனதினுள் குமுறிக்கொண்டிருந்த இன உணர்வுக்கும் தமிழ் பற்றிற்கும் எண்ணெய் ஊற்றியது எனலாம்.யாழ். கோட்டையின் ராணி மாளிகையில் அன்று செயற்பட்ட வதை முகாமில் நாம் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது சுவரின் மறுபுறத்தில் அடைக்கப்பட்டிருந்த புஸ்பராணி பொலிஸாரின் அட்டூழியம் தாங்காமல் எழுப்பிய ஓலக் குரல் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.பல ஆண்டுகள் மண்ணையும் உறவுகளையும் பிரிந்திருந்தாலும் உணர்வுகளை உயிர்ப்புடன் வைத்திருந்தார் என்பதை புஸ்பராணியின் அகாலம் நூல் எமக்கு வெளிப்படுத்திநிற்கிறது.இறுதிவரை வாசிப்பு எழுத்து என்று வாழ்ந்தவர் தனது போராட்ட அனுபவங்களையும் உணர்வுகளையும் தனது நூலில் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு ஒப்படைத்து சென்றிருக்கின்றார்.அந்தவகையில் ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் தனியிடம் ஒதுக்கப்பட வேண்டிய புஸ்பராணி இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றிருக்கின்றார். அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்கள் குறிப்பாக அவரின் போராட்ட வாழ்விற்கு துணைநின்ற அவரின் சகோதரிகள் உட்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த வலிகளையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 699
Added a news  
அராலி இந்து அறநெறி சிறுவர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.பாடசாலையின் பொறுப்பாசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கல்பனா கலந்து சிறப்பித்தார்.இதன்போது மாணவர்கள் பல்வேறு விதமான பொருட்களை சந்தைப்படுத்தினர். இந்த சந்தை நிகழ்வில் பெற்றோர், ஊர்மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறுவர்களிடம் பொருட்களை வாங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர்.சிறுவர்களின் ஆளுமையை விருத்தி செய்வதுடன் அவர்களை ஒரு மகிழ்ச்சியான சூழலுக்குள் கொண்டு செல்லும் நோக்குடன் இந்த சிறுவர் சந்தை நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.000
  • 691
Added a news  
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகின்றன. இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 663,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 648,490 விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன. இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நேற்று ஆரம்பமான நிலையில், அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  இன்றும் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில், வாக்களிக்க முடியுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.000
  • 692
Added a news  
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நிலைமையை மிகுந்த அக்கறையுடன் கண்காணித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் திகதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டதை மீண்டும் நினைவூட்டியது. இந்நிலையில் நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்க பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் தாம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும், அர்த்தமுள்ள, பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாகத் தீர்க்க முடியும் என்றும், தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.000
  • 685
Added a news  
ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுடன் இந்தியா இனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிலைப்பாடு காரணமாக இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் இனி இந்தியா விளையாடாது என அவர் உறுதியளித்துள்ளார். மேலும், பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி உயிர்களை இழந்த சம்பவத்தால், கிரிக்கெட் சமூகம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாகவும் , இந்த கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை கண்டிக்கும் அதே வேளையில், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.000
  • 670
Added a news  
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிக்காதுவிட்டால் அந்த பிரதேச சபைக்கான ஒதுக்கீடுகள் எவையும் செய்யப்படாது என ஜனாதிபதி கூறிவருகின்றமையானது மக்களுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுவதாக என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உள்ளூராட்சி தேர்தலாக இருந்தாலும் கூட ஆளும் தரப்பின் ஜனாதிபதி ,பிரதமர் ஏனைய அமைச்சர்கள் வடக்கு கிழக்கிற்கு அடிக்கடி தமது விஜயத்தை மேற்கொண்டு வரும் அதேநேரம், ஒருவிதமான எச்சரிக்கையையும் தமிழ், மக்களுக்கு அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.முக்கியமான பிரச்சனையாக பேசப்படுவது Npp எனப்படும் தேசிய மக்கள் சக்தி எந்த எந்த பிரதேசங்களில் வெற்றி பெறுகின்றதோ அந்தந்த பிரதேசங்களுக்கு மாத்திரம் தான் நாங்கள் நிதியுதவி வழங்க முடியும் என்ற ஒரு விடயத்தை பல்வேறு பட்ட இடங்களில் ஜனாதிபதி மீண்டும் மீண்டும் கூறி கொண்டே இருக்கின்றார்.ஆனால் தற்போது நான் அப்பிடி சொல்லவில்லை வேறு விதமாக சொன்னேன் என்கிறார். ஆனால் அவர் உண்மையாகவே மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே கூறியுள்ளார்.அதாவது நீங்கள் எங்களுடைய தரப்பிற்கு அல்லது எங்களுடைய கட்சிக்கு வாக்களிக்காமல் விட்டால் பிரதேச சபைக்கான ஒதுக்கீடுகள் எதுவும் வழங்கபடமாட்டாது என்ற எச்சரிக்கையையே வழுவாக சொல்லப்படுகின்றது.இது உண்மையாகவே சட்டத்திற்கு முரணான ஒரு கருத்து. இதற்கு தேர்தல் ஆணையகம் எந்த விதமான விளக்கங்ககளும் கேட்கப்படவில்லை அது மட்டுமன்றி அது தொடர்பான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை .ஆகவே அவ்வாறான பிரச்சாரம் இடம்பெற்று கொண்டே இருக்கின்றது .ஆனால் உண்மையான விடயம் என்னவென்றால் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் மாகாண சபைகளுக்கு கீழே வரக்கூடியவை.ஆகவே மாகாண சபைகளுக்கு ஊடாகத்தான் நிதி பங்கிடப்படும். ஆகவே மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டமே இது எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தா000
  • 670
Added a news  
எதிர்வரும் 29ஆம் திகதி விசேட வாக்காளர் அட்டைகள் விநியோக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமர தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளை ஆரம்பித்திருக்கிறோம். கடந்த 16 ஆம் திகதியிலிருந்து வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.அதற்கமைய, தபால் திணைக்களத்துக்கு 14 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது வீடுகளுக்கு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளை ஆரம்பித்திருக்கிறோம்.அதன் பிரகாரம் இதுவரையில் 29 - 30 சதவீத வாக்குச் சீட்டுகளை விநியோகித்து நிறைவு செய்திருக்கிறோம். எதிர்வரும் 29ஆம் திகதிவரை வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியும்.எதிர்வரும் 27ஆம் திகதி வாக்குச்சீட்டு விநியோகிப்பதற்காக விசேட வாக்காளர் அட்டை விநியோக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனூடாக 29ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச் சீட்டுகளை விநியோகித்து நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.தற்போது நிலவும் காலநிலையினால் அதிகாரிகள் நெருக்கடியிலேயே இதனைச் செய்து வருகிறார்கள். தேர்தல் நடவடிக்கைகளில் தபால் திணைக்களத்துக்கு முக்கிய பங்கு இருந்தாலும் எங்களின் கடமைகளை குறைபாடின்றி நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம்தேர்தல் தினமான 06ஆம் திகதி வரையில் தபால் திணைக்கள அதிகாரிகளின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. விசேட காரணங்களுக்காக பரிபூரண அனுமதிக்கு மாத்திரமே விடுமுறை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
  • 666
Added a news  
மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.அத்துடன், முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கை எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.மேலும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மே மாதம் 14 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இந்த நிலையில் ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டு ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.000 
  • 658
Added a news  
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.000
  • 612
Added a news  
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட முன்னாயத்த செயலமர்வானது யாழ் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம்(23) காலை நடைபெற்றது.இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கிராம அலுவலர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் வாக்களிப்பு நிலையத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த பிரிவுக்குரிய கிராம அலுவலர்கள் வழங்கும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானதும் அத்தியாவசியமானதும்  எனவும் தெரிவித்தார்.அதேவேளை, இம்முறை வட்டாரத்திலேயே வாக்கெண்ணல் அமையவுள்ளதால் வாக்கெண்ணல் நிலையங்களையும் அமைக்கும் பொறுப்புக்கள் கிராம அலுவலர்களுக்கு உள்ளதால் பெளதீகச்சூழல் மற்றும் புறச்சூழலை போன்றவற்றை கருத்தில் எடுத்து வினைத்திறனான பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், கடந்த இரண்டு தேர்தல்கள் கடமைகளில் ஈடுபட்ட கிராம அலுவலர்கள் எதிர்நோக்கிய இடர்பாடுகள் மற்றும் கருத்துக்களையும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டதுடன் அதற்குரிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் பொதுமக்களுக்கான கிராம அலுவலர்களின் சேவையானது மிக முக்கியமானது எனவும், நேர முகாமைத்துவம் பேணுவது அவசியமானது எனக் குறிப்பிட்டதுடன் ஒரு சில கிராம அலுவலர்களின் அசமந்த செயற்பாட்டால் அது ஒட்டுமொத்த கிராம அலுவலர்களின் சேவையினையும் பாதிப்பதாக அமைவதாகவும் குறிப்பிட்டு, கிராம அலுவலர்கள் பொது மக்களுக்கான அர்ப்பணிப்பான சேவையினை வினைத்திறனாக வழங்க வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் கிராம அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளர் இ.சசீலனால் விளக்கமளிக்கப்பட்டது.இச் செயலமர்வில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்000
  • 600
Added a news  
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. அத்துடன் நாளையதினமும் எதிர்வரும் 28 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 6,63,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 6,48,490 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும், அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் அரச நிறுவனங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், புனித தந்ததாது கண்காட்சி இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காகக் கண்டியில் விசேட வாக்களிப்பு நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.000
  • 581
Added a news  
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. அத்துடன் நாளையதினமும் எதிர்வரும் 28 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 6,63,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 6,48,490 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும், அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் அரச நிறுவனங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், புனித தந்ததாது கண்காட்சி இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காகக் கண்டியில் விசேட வாக்களிப்பு நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.000
  • 575
Added a news  
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 292 வாக்களிப்பு நிலையங்கள் தபால் மூல வாக்களிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள நிலையில் 21,064 பேர் யாழ். மாவட்டத்தில் தபால் மூலமாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்தினை தெரிவிக்கும் போது அவர் இந்த தகவலை வழங்கினார். யாழ். மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 243 வட்டாரங்களில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. யாழ் மாநகர சபை, மூன்று நகர சபைகள்,13 பிரதேச சபைகளுக்குமாக 17 சபைகளுக்கு இந்த தேர்தல் நடாத்தப்படவுள்ளது.இந்த தேர்தலுக்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றது. மொத்த வாக்களார் எண்ணிக்கையாக 4,98140 பேர் காணப்படுகின்றனர்.இதேவேளை தபால் மூல வாக்களிப்பு நாளை மற்றும் நாளை மறுதினம் 24,25 மற்றும் 27,28 ஆம் திகதிகளில் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் நடாத்தப்படவுள்ளது.இதன்படி 292 வாக்களிப்பு நிலையங்களில் அஞ்சல் வாக்களிப்பு யாழ் மாவட்டத்தில் இடம்பெற காத்திருகின்றது. அதேவேளை வாக்களிப்பு கடமைகளுக்காக 292 அத்தாட்சி படுத்தல் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.யாழ். மாவட்டத்தில் 21ஆயிரத்து 64பேர் வாக்களிக்க அஞ்சல் வாக்களிப்புக்காக தகுதி பெற்றுள்ளனர். அஞ்சல் வாக்களிப்புக்காக விசேடமாக உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் பயிற்றுவிக்க பட்டுள்ளனர்.மேற்பார்வை நடவடிக்கைகளுக்காக 28வலயங்கள் தெரிவுசெய்யபட்டு வலய செயற்பாடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மேற்பார்வை செயற்பாடுகளுக்காக 240உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் நீதியானதும் சுதந்திரமானதும் தேர்தல் நடாத்த நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பு யாழில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 567
Added a news  
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது.  சுகவீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், குணமடைந்து வெளியேறிய நிலையில் ஓய்வில் இருந்தார். இந்தநிலையில், இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான அவர் 12 ஆண்டுகள் இறைச் சேவையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.000
  • 559