அமரர் இராமலிங்கம் ரகுராம்

  • 1 members
  • 1 followers
  • 1024 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
  • 67
Added article 
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத்தும் ஒரு கொலுவில் தான் சந்தித்துக் கொண்டோம். அவரிடம் பெரிதாக பந்தா இல்லை. மிகவும் பணிவாக நடந்து கொண்டார். எம்பிஏ முடித்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸில் வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அவரை பார்த்தவுடன் மிகவும் பிடித்திருந்தது. அப்போது எனக்கு 21 வயது ஆகியிருந்தது. நான் அடுத்த நாளே, அவரைப்பற்றி வீட்டில் சொன்னேன். நான் அடுத்த நாளே வீட்டில் சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. காரணம், நானும் அவரும் பழகிக்கொண்டு, காதலிக்கும் போது, எங்கேயாவது செல்வோம். அப்போழுது அதைப்பற்றி தேவையில்லாத கிசுகிசுக்கள் வெளியாகும். பத்திரிகைகளில் எழுதுவார்கள். அதுவெல்லாம் தேவையே இல்லை என்று சொல்லித்தான் நான் வீட்டில் சொல்லி விட்டேன். வீட்டில் பரத்தை பற்றி நான் சொல்லும் பொழுது, அவர் பிராமண பையன், நல்ல குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார், நன்றாக படித்திருக்கிறார், நல்ல வேலையிலும் இருக்கிறார். எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால், எனக்கு அவரை கல்யாணம் செய்து வையுங்கள் என்றேன். கேட்ட என்னுடைய அம்மாவிற்கும், அப்பாவிற்கும் ஒரே ஆச்சரியமாக இருந்தது. என்ன வந்தாள், இவ்ளோ பெரிய விஷயத்தை மிகவும் சாதாரணமாக சொல்லிவிட்டு செல்கிறாள் என்று, அவர்கள் கொஞ்சம் அதிர்ந்து போய் தான் இருந்தார்கள்.இதனையடுத்து அவர் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னுடைய அப்பா, அம்மாவை சந்தித்தார். என்னை விட மிகவும் சீக்கிரமாக, அவரை என்னுடைய பெற்றோருக்கு பிடித்து விட்டது. இதையடுத்து அவர் வீட்டில் என்னைப் பற்றி சொன்னார். ஜாதகம் பார்த்தார்கள்.என்னையும் பார்த்தார்கள் ஜாதகம் பொருத்தம் இருந்தது. என்னையும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னதான் அவரை எனக்கு பிடித்திருந்தாலும் காதல், டேட்டிங் என்பதிலெல்லாம் எனக்கு கொஞ்சம் பயம் உண்டு. அம்மாவிடம் சண்டை போட்டு, அவரை நான் இழுத்துச் சென்று ஓடும் அளவுக்கு, எனக்கு தைரியமும் கிடையாது. அதனால் அப்பா, அம்மா ஒத்துக் கொண்டால் திருமணம் செய்யலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அப்பா, அம்மா ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.” என்று பேசினார்.
  • 69
திருமணத்திற்குப் பிறகு, மணமகன் மணமகளின் காலில் விழுந்து வணங்கினார். மக்கள் சிரித்தனர், ஆனால் அவர் கூறினார்:1. இது எனது குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும்.2. அவள் என் வீட்டிற்கு செழிப்பைக் கொண்டுவருவாள்.3. அவள் என் பெற்றோரை மதித்து சேவை செய்வாள்.4. அவள் எனக்கு தந்தையான மகிழ்ச்சியைத் தருவாள்.5. தன் உயிரைப் பணயம் வைத்து எங்களின் குழந்தையைப் பெற்றெடுப்பாள்.6. அவள் எங்கள் வீட்டிற்கு அடித்தளமாக இருப்பாள்.7. அவளது ஆளுமையும் செயல்களும் சமூகத்தில் எனது நற்பெயரை உருவாக்கும்.8. அவள் என்னுடன் இருக்க தன் பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறினாள்.9. என்னுடைய குடும்பத்தில் சேர அவள் தன் சொந்தக் குடும்பத்தை விட்டு வெளியேறினாள்.அப்படியென்றால், அவர்களுக்கு கொஞ்சம் மரியாதை காட்ட முடியாதா? என் பெண்ணை வணங்குவது ஒரு நகைச்சுவை, கேலியான விஷயம் என்றால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நான் கவலைப்படுவதில்லை.
  • 78
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். -ஆபிரகாம் லிங்கன்
  • 83
  • 86
முறமா? சல்லடையா?
  • 102
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 11 ஆம் தேதி மேஷம் -ராசி: உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சுத் திறமைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். பார்வை தொடர்பான இன்னல் குறையும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் திருப்பம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெண்மைரிஷபம் ராசி: உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் அபிவிருத்திக்கான வாய்ப்பு கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சைமிதுனம் -ராசி: அரசுப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கலை துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கடகம் -ராசி: மூலிகை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். இறைப்பணிகளின் மூலம் அலைச்சல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயம் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்சிம்மம் -ராசி:வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். விவேகத்துடன் செயல்பட்டு எண்ணியதை செய்து முடிப்பீர்கள். வாகனம் மாற்றுவது தொடர்பான சிந்தனை மேம்படும். மனை விருத்தி தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சிறுதொழிலில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம் கன்னி -ராசி: புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சைதுலாம் -ராசி: பணி நிமிர்த்தமான அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்விருச்சிகம்- ராசி: தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பணி நிமிர்த்தமான அயல்நாட்டு வாய்ப்புகள் சாதகமாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிள்ளைகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கவலை விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை தனுசு -ராசி: கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். சில அனுபவங்களின் மூலம் மனதில் புதிய பாதை புலப்படும். நம்பிக்கையானவர்களின் ஆதரவு கிடைக்கும். வங்கியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் மேன்மை ஏற்படும். பொதுப்பணிகளில் லாபம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மகரம் -ராசி:உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சில விஷயங்களில் தெளிவான முடிவு பிறக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்கும்பம் –ராசி:வெளிவட்டாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மேம்படும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்மீனம் -ராசி: உத்தியோகத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்துவது நல்லது. நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 117
Added a post 
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 11 ஆம் தேதி புதன்கிழமை 24.4.2024 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.54 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை. இன்று முழுவதும் சுவாதி நட்சத்திரம். சதயம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 146
Added a poem 
தலை குனிந்து வாசிக்கிறாய் உன்னை தலை நிமிர்ந்து வாழவைத்தேன் வரிகளை சுவாசித்து நெறிகளை கற்றுக்கொள்கிறாய் உன் அறிவு சிறையில் அகலம் காண்கிறாய் உணர்ந்தவர்கள் உணர்வு வளர்க்கிறார்கள் புரியாதவர்கள் பலியாகி விடுகிறார்கள் இறந்து போனது இயற்கை மட்டுமல்ல வாசிப்பும் அதன் நேசிப்பும்தான்
  • 152
Good Morning..
  • 154
Added an event 
கனடா கந்தசுவாமி கோவிலின் கார்த்திகேயன் விழா. June 22-23. இலவச நுழைவு மற்றும் இலவச வாகன நிறுத்துமிடம்.Canada Kanthaswamy Temple's Kaarthikeyan fest. Free entrance and parking.கனடா கந்தசுவாமி கோவில் திறந்த வெளி அரங்கில் மாபெரும் இசை பெரு விழா நடை பெற திருவருள் கூடியுள்ளது,இந்தியாஐரோப்பிய,கனேடிய கலைஞர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்,
733 Birchmount Rd, Scarborough, ON, Canada
  • 296
changed a profile cover 
  • 277
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜானகி அம்மா
  • 281
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் இன்று
  • 282
Added a news 
கியூபாவில் உயிரிழந்த கனடியர் ஒருவரின் சடலம் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டதனால் குடும்பத்தினர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.விடுமுறையைக் கழிப்பதற்காக மொன்றியாலைச் சேர்ந்த ஒருவர் கியூபா சென்றிருந்த போது அங்கு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபரின் சடலத்திற்கு பதிலாக வேறும் ஒருவரின் சடலத்தை கியூப அதிகாரிகள், கனடாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.இறுதிக் கிரியை பாராஜ் அல்லாஹ் ஜார்ஜோர் என்ற நபரே இவ்வாறு கியூபாவில் உயிரிழந்திருந்தார். தந்தையின் இறுதிக் கிரியைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் வேறு ஒருவரின் சடலமே கிடைக்கப் பெற்றது என குறித்த நபரின் மகளான மிரியம் ஜார்ஜோர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி மாரடைப்பு காரணமாக தமது தந்தை கியூபாவில் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார். சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக 10000 டொலர்களை செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • 347
  • 449
Added article 
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கலக்கிய நடிகை பிந்துகோஷ் கடைசி காலத்தில் தனது உடல்நல குறைவு காரணமாக வறுமையில் வாடி உள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகமாக உள்ளது.குண்டான உருவம், காமெடி நடிப்பு, குழந்தைத்தனமான சிரிப்பு மற்றும் வசனம் ஆகியவை தான் பிந்துகோஷ் . இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குரூப் டான்ஸ் ஆக நடனமாடி உள்ளார். அதன் பின் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பிந்துகோஷ் நடித்தார்இந்த நிலையில் கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு நடிப்பில் உருவான கோழி கூவுது என்ற திரைப்படத்தில் தான் காமெடி நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவரது காமெடி சூப்பராக எடுபட்டதையடுத்து பல திரைப்படங்களில் அவர் தொடர்ச்சியாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார்.சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன், பிரபு, விஜயகாந்த், உள்ளிட்டவர்களின் படங்களில் பிந்துகோஷ் நடித்தார். இவரது காமெடி காட்சிகள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக உருவங்கள் மாறலாம், தூங்காதே தம்பி தூங்காதே, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, ஓசை, கொம்பேறிமூக்கன், நீதியின் நிழல், நவக்கிரக நாயகி உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.விஜயகாந்த் நடித்த வெள்ளை புறா ஒன்று என்ற திரைப்படத்தில் பிந்துகோஷ், லூஸ் மோகனுடன் இணைந்து நடித்திருப்பார். லூசு மோகன் மிகவும் ஒல்லியான உடல்வாகுவாகவும் பிந்துகோஸ் குண்டான உடல்வாகு கொண்டவராக இருக்கும் நிலையில் இந்த ஜோடியை பார்த்து பலர் ஆச்சரியமடைந்தனர். அதுமட்டுமின்றி இந்த படத்தில் லூஸ் மோகன் பிந்துகோஸ் ஆகிய இருவருக்கும் ஒரு டூயட் பாடல் உண்டு. அந்த பாடல் தான் பொண்ணுன்னா பொண்ணு எம்மாம் பெரிய பொண்ணு என்ற பாடல். அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.நடிகை பிந்துகோஷ் திரையுலகில் உச்சத்தில் இருந்த போது சென்னை தசரதபுரத்தில் பங்களா போன்ற வீட்டை வாங்கினார். வீட்டு வேலை, சமையல் வேலை என தனித்தனியாக நான்கு வேலையாட்கள் அவரிடம் வேலை பார்த்தனர், அவர் ஆசை ஆசையாய் 10 நாய்களை வளர்த்தார். பங்களா, கார் என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தவருக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டது.தைராய்டு உள்பட பல நோய்கள் அவருக்கு இருந்ததால் அவரது சினிமா வாய்ப்பு குறைந்து போனது. ஒரு கட்டத்தில் சம்பாதித்த சொத்து எல்லாம் சிகிச்சைக்காகவே செலவழித்தார். ஒரு நாளைக்கு 16 மாத்திரைகளை அவர் சாப்பிடதாகவும் அந்த மாத்திரைகளால் சைட் எஃபெக்ட் காரணமாக மேலும் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்பட்டது.ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கே பணம் இல்லாமல் வீடு கார் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஒரு சிறிய வாடகை வீட்டில் இருந்தார். அவரது வறுமை நிலையை கேள்விப்பட்ட விஷால் அவருக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருகிறார். அது மட்டும் இன்றி அவரது நடிகர் சங்க உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் ஆயுள் காலத்திற்கு புதுப்பிக்க அவர் தான் உதவினார்.இந்த நிலையில் நடிகை பிந்துபோஸ் இறந்துவிட்டதாக கூட வதந்தி வந்தது. ஆனால் ஆனந்த விகடனில் வந்த அவரது பரிதாபமான பேட்டி தான் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை உறுதி செய்தது. நடிகை பிந்துகோஷ் மற்றும் கோவை சரளா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் அதனால் கோவை சரளா அவ்வப்போது வந்து பிந்துகோஷை நேரில் பார்த்து அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு செல்வார்.தன்னுடன் நடித்த எந்த நடிகரும் தன்னை வந்து பார்க்கவில்லை என்றும் விஷால் கோவை சரளா உள்பட ஒரு சிலர் மட்டுமே அவ்வப்போது வந்து போவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பெரிய நடிகர்களுடன் நடித்த போது தனக்கு நினைத்துப் பார்க்க முடியாத சந்தோஷம் இருக்கும்.இப்படி எல்லாம் நடித்த தன்னால் தற்போது எழுந்து கூட நிற்க முடியவில்லை என்று வருத்தத்தில் இருப்பதாகவும் இப்போது கூட எனக்கு உடல் நலம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்றும் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருந்தார். நடிகை பிந்து கோஷுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் தற்போது இருவருமே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடன இயக்குனர்களாக உள்ளனர்.
  • 458
Nice work
  • 457
  • 469
  • 473
Good Morning
  • 475
Added a post 
கம்ப்யூட்டர் (Computer) பயன்படுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.கம்ப்யூட்டர் என்று சொல்லும் பொழுது லேப்டாப், டெஸ்க்டாப் என்று இரண்டுமே வந்துவிடுகிறது. கம்ப்யூட்டரை இயக்க கீபோர்ட் முக்கியமானது. கீபோர்ட் உதவி இல்லாமல் ஒரு கம்ப்யூட்டரை இயக்குவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது. கீபோர்ட் தான் கம்ப்யூட்டரின் இன்புட் சாதனமாக செயல்படுகிறது. கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் எத்தனை கீஸ்கள் இருக்கிறது தெரியுமா? ஒரு கீபோர்டில் மட்டும் மொத்தம் 104 கீஸ்கள் இருக்கிறது. என்ன தான் ஒரு கீபோர்டில் 104 கீஸ்கள் வழங்கப்பட்டிருந்தாலும், உலகளவில் உள்ள எல்லா கீபோர்ட்களிலும் உள்ள F மற்றும் J கீ-களில் மட்டும் ஒரு சிறிய கோடு போன்ற மேடு வழங்கப்பட்டிருக்கிறது. இதை பெரும்பாலானோர் கவனித்திருப்பீர்கள். இன்னும் பெரும்பாலானோர் இப்போது வரை இதை கவனித்திருக்கமாடீர்கள். இந்த F மற்றும் J ஆகிய இரண்டு கீஸ்களில் மட்டுமே ஏன் இந்த கோடு வழங்கப்பட்டுள்ளது? இதற்கான காரணம் என்ன? கீபோர்டில் உள்ள எல்லா கீஸ்களையும் எளிதாக அணுக அனுமதிக்கும் முறைக்கு பெயர் தான் ஹோம் ரோ கீ பொசிஷன் (home row key position) ஆகும். இந்த பொசிஷனில் உங்கள் கைகளை சரியாக வைப்பதற்கு தான் F மற்றும் J கீ-களில் மட்டும் ஒரு சிறிய கோடு போன்ற மேடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பொசிஷனில் உங்கள் விரல்களை வைப்பது தான் சரியான டைப்பிங் முறை என்றும் கூறப்படுகிறது. உங்கள் கைவிரல்களை F மற்றும் J கீஸ்களில் ஆள்காட்டி விரலை வைத்து, அதற்கு பின் மற்ற 3 விரல்களையும் வைப்பது தான் சரியான டைப்பிங் முறையாக பார்க்கப்படுகிறது.இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், A, S, D, மற்றும் F கீகளில் உங்கள் இடது கைவிரல்களும், J, K, L, மற்றும் செமிகோலன் (;) கீகளில் உங்கள் வலது கைவிரகளை வைப்பது தான் சரியான டைப்பிங் முறையாகும். இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் கீபோர்டில் உள்ள அணைத்து கீகளையும் உங்களால் எளிதாக அணுக முடியும் மற்றும் வேகமான டைப்பிங்கிற்கும் இது தான் சிறந்த முறையாக வலியுறுத்தப்படுகிறது.இதை தவிர்த்து இந்த F மற்றும் J கீ-களில் மட்டும் காணப்படும் சிறிய கோடு போன்ற மேடு பார்வையற்றவர்கள் அவர்களின் கைகளை சரியாக கீபோர்டில் பொசிஷன் செய்ய உதவுகிறது. இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே நம்முடைய கீபோர்ட்களில் உள்ள F மற்றும் J கீஸ்களில் மட்டும் ஒரு சிறிய கோடு போன்ற மேடு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் தெரிந்து கொண்ட இந்த பயனுள்ள தகவலை மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். 
  • 480
Added a post 
அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம். ஆகவே, மந்திரி ஒரு தந்திரம் செய்தார்.‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’‘ஆமாம்’ என்றான் அரசன்.‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி.‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்? அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’‘குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார்.அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.இந்தக் களேபரமெல்லாம் முடிந்தபிறகு அரசன் தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான்.குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.கடைசியாக அரசன் கேட்டான். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’அவர் எதுவும் பதில் பேசவில்லை.சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார். அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் காட்டை நோக்கிப் பயணமானான்.இதைப் பார்த்த மந்திரி குருநாதரிடம் ஓடினார். ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்து வைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.‘உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்’ என்றார் ஜென் குரு. ‘நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!’“அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கூர தேவையில்லை, பொறுமையாக காது கொடுத்துக் கேட்டாலே போதும்” என்றார் ஜென் குரு
  • 488
Added a post 
ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன.ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன.இரண்டு எறும்புகளும் பசியாக இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடீரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்தழிக்க ஆரம்பித்தன.நண்பா இப்படி வந்து தண்ணீல விழந்துட்டோமே. இப்ப என்ன பண்றது என்றது செவ்வெறும்பு.நிச்சயம், எதாவது உதவி கிடைக்கும். அது வர நீந்திட்டே இருப்போம்’ என்றது கட்டெறும்பு.நேரமாகி கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின.நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்க தான் போறேன்;’ என்றது செவ்வெறும்பு.இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு.இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நான் சாக தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது’ செவ்வெறும்பு.எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு. அந்த வழியே போன எறும்பு கூட்டம், ‘ இந்த குளத்துல வந்து மாட்டிக்கிட்டியா. இந்த குளத்துல விழுந்த யாருமே பிழச்சது இல்ல’ என்று சொல்ல,  இந்த குளத்துல இருந்து நாம எங்க தப்பிக்க போறோம் ’ என்று தன் மேல் இருந்த நம்பிக்கையை இழந்த கட்டெறும்பு, சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது.மேல் உலகம் சென்ற கட்டெறும்பு கடவுளை பார்த்து,கடவுளே என் உயிர ஏன் இவ்வளவு சீக்கிரமா எடுத்துக்கிட்டீங்க.?’நான் உன்ன சாகடிக்கல நீயா தான் இறந்துட்டஎன்ன சொல்லுறீங்க..’நீ குளத்தில் விழுந்த போது அடுத்தவங்க சொன்னாங்க என்பதுக்காக உன் மேல உனக்கு இருந்த நம்பிக்கையை இழந்து போரடுறத விட்டுட்டு தண்ணீல மூழ்கி இறந்துட்ட. ஆனா நீ மட்டும் அன்னைக்கு இன்னும் கொஞ்ச நேரம் போராடிருந்த நிச்சயம்; எதாவது ஒரு வகையில உதவி செஞ்சு காப்பாத்திருப்பேன்.கடைசியா ஒண்ணு சொல்லுறேன் கேட்டுக்கோ வாழ்கையில நம்பிக்கை இழந்தவன் எல்லாத்தையும் இழந்துருவான்’ என்றார் கடவுள்.
  • 493
  • 497
  • 519
Added article 
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவருக்கு வந்தது. ஆனால், அதற்கு முன் அவர் மிகவும் ஆக்ரோஷமான மனிதராகவே இருந்தார். அதற்கு காரணம் இரவு, பகல் என ஓய்வில்லாமல் படங்களில் நடித்ததுதான். அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மனநிலையும் பாதிக்கப்பட்டது.படப்பிடிப்பிற்கே குடித்துவிட்டு வாருவார். தூக்கம் வரக்கூடாது என்பதற்காக ஜர்தா பீடா போடுவார். ஆனால், அப்படி இருந்த ரஜினியை ஒரு பெண் மாற்றியது பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். தர்ம யுத்தம் படத்தின் படப்பிடிப்பு ஒரு கிறிஸ்துவ தொழிலதிபரின் வீட்டில் நடந்தது. அந்த வீட்டில் ரெஜினா வின்செண்ட் என்கிற வயதானவர் தங்கியிருந்தார்.அவருக்கு அந்த வீட்டை படப்பிடிப்புக்கு கொடுக்க விருப்பமில்லை. ஆனாலும், அவரின் வீட்டில் இருந்த குழந்தைகளுக்கு ரஜினியை பிடிக்கும் என்பதால் மேலே தங்கிகொண்டு கீழ் போர்ஷனை கொடுத்தார். ஆனால், ரஜினி சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை. வந்தாலும் மதுபோதையில் இருந்தார். படப்பிடிப்பு சரியாக நடக்காமல் இருப்பதற்கு ரஜினிதான் காரணம் என்பதை அவர் புரிந்துகொண்டார்.ஒருநாள் அவரை பார்த்த ரஜினிக்கும் குற்ற உணர்ச்சி வர ‘உங்களிடம் பேச வேண்டும்’ என சொல்ல, அந்த அம்மாவும் ‘நானும் உன்னிடம் பேச வேண்டும். தினமும் இப்படி குடித்துவிட்டு வரலமா?. இப்படி வந்தா படப்பிடிப்பு எப்படி நடக்கும்?’ எனக்கேட்க ‘இனிமேல் இப்படி செய்யமாட்டேன் அம்மா’ என ரஜினி சத்தியம் செய்தார். சொன்னதுபோல கொஞ்சம் மாறி இருந்தார் ரஜினி.ரஜினி அப்போது மருத்துவர் செரியனிடம் மனநல சிகிச்சையும் பெற்றுவந்தார். ஒருநாள் செரியனிடமிருந்து அந்த அம்மாவுக்கு போன் வந்தது. ரஜினி மருத்துவமனயில் மிகவும் வயலண்டாக இருக்கிறார். அவர் அம்மா அம்மா என உங்கள் பெயரை சொல்கிறார். நீங்கள் இங்கே உடனே வாங்க’ என சொல்ல ரெஜினா அங்கே விரைந்து சென்றார். அங்கே மருத்துவர்களும், செவிலியர்களும் ரஜினியிடம் மல்லுக்கட்டி கொண்டிருந்தார்கள். அந்த அம்மா ரஜினியை சமாதனப்படுத்த ஹாஸ்பிட்டலில் இருந்து ரஜினி வெளியேறி அந்த அம்மாவின் வீட்டுக்கு போனார்.‘நான் இங்கேயே கொஞ்சநாட்கள் தங்கலாமா?’ என ரஜினி கேட்க அந்த ரெஜினாவும் சம்மதித்தார். அடுத்தநாள் நேற்று நன்றாக தூங்கியதாக ரஜினி சொல்ல அது செரியனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அந்த அம்மாவிடம் ‘நீங்கள் ஒருவருக்கு மறுவாழ்வு கொடுத்திட்டீங்க’ என பாராட்டினார். அந்த அம்மா செலுத்திய அன்பில் மாறிய ரஜினி படப்பிடிப்புக்கு ஒழுங்காக போனார். அவரோடு தன்னுடைய வேலைக்காரர்களை அனுப்பி பார்த்துக்கொண்டு, படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வரசொன்னார் ரெஜினா. மொத்தத்தில் ரெஜினா அம்மா பெறாத மகனாகவே ரஜினி மாறியிருந்தார்.அந்த வீடு. அந்த அம்மா மற்றும் குழந்தைகளின் அன்பு என ரஜினி மொத்தமாக மாறினார். ஒருநாள் அந்த அம்மா அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது. ’நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்?’ என புலம்பிய ரஜினிக்கு நல்ல அறிவுரைகளை சொல்லிவிட்டு போனார் ரெஜினா.சில மாதங்கள் கழித்து அவர் திரும்பி வந்தபோது ரஜினி நன்றாகவே மாறியிருந்தார். அதோடு, லதாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் இருந்தார். ரெஜினா அம்மாவுக்கும் மிகவும் சந்தோஷம். ரஜினி திருமண வாழ்க்கையில் நுழைந்து ஒருகட்டத்தில் சூப்பர்ஸ்டாராக வளர்ந்துவிட ரெஜினா அம்மா சமூக சேவகியாக மாறி பல நன்மைகளை மக்களுக்கு செய்தார்.80களில் பிரபலமான சமூக சேவகி இவர். மதர் தெரசா சமூக நல அமைப்பின் சென்னை நகர பொறுப்பாளராக இருந்தவர் இவர். இயற்கை வைத்தியத்தில் பல்வேறு பட்டங்களையும் பெற்றிருக்கார். ஆனாலும், அதை தொழிலாக செய்யாமல் தனக்கு தெரிந்தவர்கள், நண்பர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே சிகிச்சை செய்துவந்தார். அவரது அன்பிலும், சிகிச்சையிலும் மாறியவர்தான் ரஜினி.தர்மயுத்தம் படத்தில் ரஜினி பாடும் பாடல் வரிகள் இப்படி வரும்..கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா..முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா..என் ஆலயம் பொன் கோபுரம் ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா..எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள்!…
  • 536
  • 531