Feed Item
Added a news 

குடியரசு தலைவர் மாளிகையான் ராஷ்டிரபதி பவனில் இரண்டாம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்று பத்ம விருதுகளை வழங்கினர். இந்த விழாவில் மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக இந்த விழாவில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து கலைப் பிரிவில் தெலங்கு நடிகர் சீரஞ்சிவிக்கு பத்ம விபூஷன் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். அந்தமான் நிகோபார் தீவுகளை சேர்ந்த பெண் விவசாயி கே செல்லமாளுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கவுரவித்தார். மேலும், நடிகை வைஜெயந்திமாலா உள்ளிட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

  • 407