Feed Item
Added a post 

ஒருவன் டூ வீலர் போய் கொண்டு இருக்கான், போலீஸ்காரர் நிறுத்தி ஹெல்மெட் எங்கே, லைசென்ஸ் எங்கே, ஆர் சி புக் எங்கே என்று கேட்டு தொந்தரவு செய்ய!

நம்ம ஆளு சார் ! உங்களுக்கு எவ்வளவு வேண்டும் பார்த்து செய்யுங்க என்று கேட்க அவர் 500₹ கொடு என்று கேட்க!

அதற்கு அவன் சார் உங்க கிட்ட இருக்கும் 500₹ கொடுத்து விட்டா அடுத்த போலீஸ்காரர் கேட்டா என்ன செய்வது என்று கேட்க.

அதற்கு அவர் கவலை படாதே இன்று எந்த காவலர் உன் வண்டியை பிடித்தாலும் கிளி என்று சொல்லு யாரும் உன்னை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று சொல்லி அனுப்பினார். இவனும் அது போல் அன்று எல்லா போலீஸ்காரர்களிடமும் சொல்லி இரவு வீடு வந்து சேர்ந்தான்.

அப்பாடா இனிமேல் இந்த ஓர் கோட் வார்த்தை போதும் எந்த போலீஸ்காரணுக்கும் பயம் கொள்ள தேவை இல்லை என்று மகிழ்ச்சி அடைந்தான்.

மறு நாள் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பினான்.

போலீஸ்காரர் பிடித்தார், இவன் உடனே கிளி என்று சொன்னான்.

அவர் சிரித்து கொண்டே தம்பி நேற்று கிளி, முந்தா நாள் பருந்து, அதுக்கு முந்தா நாள் மயில்,

ஒரே கிளியை எல்லா நாளும் வைத்து கொள்ள நாங்க என்ன லூசா எடு 500 ₹ என்றாராம்.

  • 250