மஹா சிவராத்திரி

  • 1 members
  • 1 followers
  • 1159 views
  • More
Ads
Add your Post

உங்கள் தகவல்களை இங்கு  பதிவு செய்யலாம்.

  • 791
  • 792
மகா சிவராத்திரி சிவராத்திரி விரத மஹிமையை போற்றும் வேடனின் கதை சிவராத்திரி விரத மஹிமை குறித்துப் பல கதைகள் உள்ளன. அவற்றிலொரு சுவாரசியமான கதையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.மஹாசிவத்திரி தினத்தில் வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேடடையதாகி சென்றான். நாள் முழுவதும் அலைந்தும் ஒரு மிருகமும் அவனுக்கு கிடைக்கவில்லை. பசியால் வாடிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரை எண்ணி வருந்தினான். வேடன் வழியிலிருந்த சுனையில் நீர் அருந்தினான். எதாவது மிருகம் சுனைக்கு வரும் அதைக் கொன்று எடுத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையுடன் , சிறிது நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அருகிலிருந்த மரத்திலேறி உட்கார்ந்து கொண்டான். அது வில்வ மரம் என்பதும் ,அதன் கீழ் ஒரு சிவலிங்கம் இருப்பதும் அவனுக்கு தெரியாது. வேடன் உறங்காமல் மிருகத்துக்காக காத்திருந்தான். அப்போது ஒரு பெண் மான் நீர் நிலைக்கு வந்தது. அது முதல் சாமம் முடிவடையும் நேரம். மானைக் கண்ட வேடன் அம்பை எடுத்து வில்லில் பூட்டினான் அவனது அசைவினால் ஒரு வில்வ இலையும் சிறிது தண்ணீரும் மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.வேடன் தன்னை குறிபார்ப்பதை அறிந்த மான், "வேடனே, என் இளம் குட்டிகள் என்னை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் எனக்கு கொஞ்சம் அவகாசம் தா ." என்றது. மானின் வேண்டுகோளுக்கு வேடன் இசைந்தான். மான் தன் இருப்பிடம் நோக்கி ஓடியது. அந்த மானை எதிர்பார்த்து தூங்காமல் காத்துக் கொண்டிருந்த போது மற்றுமொரு பெண் மான் தண்ணீர் பருக வந்தது. அதைக் கொல்ல அம்பை எடுத்த போது வில்வ இலையும் தண்ணீரும் லிங்கத்தின் மீது விழுந்தது. அது இரண்டாவது சாமம் முடிவடையும் நேரம். ஓசையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த மான் வேடன் தன் மீது குறிவைப்பதைக் கண்டு திகைத்து "வேடனே , என்னைக் கொல்லாதீர்கள் என் மூத்தாளைத் தேடி இங்கு வந்தேன். அவள் குட்டிகள் என் பொறுப்பில் இருக்கின்றன. அவற்றை  அவளிடம் ஒப்படைத்துவிட்டு வந்து விடுகிறேன்  பிறகு நீங்கள் என்னைக் கொல்லலாம்." என்றது வேடன் அதற்கும் அனுமதி தந்தான்.மூன்றாம் சாமம் முடிவடையும் வேளையில் ஒரு ஆண் மான் நீர் பருக வந்தது. அதைக்கண்ட வேடன் வில்லை எடுத்த போது, வில்வ இலையும் சிறிது நீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. வேடன் தன்னை கொல்லப் போவதை அறிந்த ஆண் மான் ," ஐயா , என் ஒரு மனைவிகளையும் குட்டிகளையும் தகுந்தவரிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு என்னை கொள்ளுங்கள். " என்று கெஞ்சி கேட்டது.அதற்கும் அனுமதியளித்த வேடன், அந்த மான்கள் ஒன்றின் மீது ஒன்று வைத்திருக்கும் பாசத்தை எண்ணி வியந்தபடி , மான்களை எதிர்பார்த்து உறங்காமல் மரத்தில் அமர்ந்திருந்தான். இப்படி மூன்று மான்களுமே விவாதித்தன. இறுதியில் மூவருமே வேடனிடம் செல்வதென்று தீர்மானித்தன. பெற்றோர்கள் பலியாகச் செல்லும் போது தாங்களும் உயிர்வாழ விரும்பவில்லை என கூறி, குட்டி மான்களும் அவற்றைப் பின்தொடர்ந்து சென்றன. நான்காவது சாமம் முடிவடையும் நேரம். மான்கள் கூட்டமாக வருவதைக் கண்ட வேடன் மகிழ்ந்து வில்லையும் அம்பையும் எடுத்த போது, சிவலிங்கத்தின் மீது தண்ணீரும் வில்வ இலையும் விழுந்தன. நான்கு சாமங்களிலும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்கிறோம் என்றோ பூஜையின் மகிமை பற்றியோ அறியாமல் வேடன் பூஜை செய்திருக்கிறான். நித்திரையின்றி செய்த இந்த பூஜையின் காரணமாக சிவனருள் கிட்டி அவனுக்கு ஞானம் பிறந்தது. அப்போது சிவபெருமான் அங்கு காட்சி அளித்து  " வேடனே , உன்னை அறியாமல் செய்திருந்தாலும் சிவராத்திரி விரதமிருந்த பலன் உன்னை சேரும். அதன் காரணமாக உனக்கு தரிசனம்  தந்தேன். நீ வேண்டும் வரத்தை கேட்கலாம் " என்றார்.ஈசனை பணிந்த வேடன், " ஐயனே என் பாவங்களை போக்கியருள வேண்டும்" என்றான். அவ்வாறே அருளிய சிவபெருமான் , பல செல்வங்களையும் அவனுக்கு வழங்கி , " வேடனே உன் பெயர் குகன் என்று வழங்கப்படும். ஸ்ரீமந் நாராயணன் சிறிது காலத்தில் இப் பூவுலகில் பிறந்து இங்கு வருவார். அவர் உன்னை சகோதரனாக ஏற்றுக் கொள்வார்" என்று ஸ்ரீராமர் அவதாரத்தை குறிப்பிட்டுக் கூறி , சிவராத்திரி விரதத்தின் மகிமையை விவரித்து மறைந்தார். சிவ தரிசனம் கிட்டிய அந்த மான்களும் மிருக உடலை விடுத்து திவ்யரூபம் பெற்று சிவபதவி அடைந்தன. வியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் வியாதேஸ்வரர் என்ற பெயர் பெற்றதாக வரலாறு. ஓம் நமச்சிவாய ... ஓம் நமச்சிவாய ...
  • 738
மகா சிவராத்திரி Shivaratri Special
  • 756
ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும். சிவனாருக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம். வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி  வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன.
  • 757
  • 581
  • 516
சிவ புராணம்
  • 507
  • 524
  • 515
  • 519
  • 503
  • 421
  • 411
  • 401