அமரர் பா.செந்தூரன்

  • 1 members
  • 1 followers
  • 1505 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
Added a video 
கார் வைத்திருப்பவர்கள் கவனம் ....காரை லாக் செய்து விட்டோம் பாதுகாப்பாக உள்ளது என எண்ண வேண்டாம்.
  • 2
Added a post 
முலாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளமானவை. வைட்டமின் ஏ, சி மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்தது: நோய் எதிர்ப்பு சக்தி, பார்வை மற்றும் செல் ஆரோக்கியத்திற்கு அவசியம். பொட்டாசியம் நிறைந்தது: இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்தது: செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது: செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: ஜலதோஷம் மற்றும் சளி போன்ற நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் போராட உதவுகிறது. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வைட்டமின் ஏ பார்வையை மேம்படுத்தவும், கண் நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது.  நார்ச்சத்து செரிமானத்தை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் பசியை கட்டுப்படுத்தவும், எடை இழக்கவும் உதவுகிறது. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் தோல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், வயதான தோற்றத்தைத் தாமதப்படுத்தவும் உதவுகிறது. அதிக நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளடக்கம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • 12
Added a news 
தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களை எடுத்து இலங்கை மகளிர் அணி வெற்றி இலக்கை கடந்தது.இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்து இந்த போட்டியில் 195 ஓட்டங்களை பெற்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • 12
Added a news 
பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குடிநீர், கோலா பானங்கள் முதல் பல்வேறு ரகத்திலான உணவுப்பொருட்கள் வரை பூச்சிக்கொல்லி அதிகம் இருப்பதாக புகார்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்திய தயாரிப்பான பிரபல மசாலா நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லியின் அளவு அதிகம் இருப்பதாகக் கூறி, சிங்கப்பூரில் அதற்கு தடை விதித்துள்ளனர்.இது தொடர்பாக இன்றைய தினம் சிங்கப்பூரில் வெளியான அறிக்கை, ’இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மசாலா தயாரிப்பு நிறுவனமான எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பூச்சிக்கொல்லி இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது. எத்திலீன் ஆக்சைடு என்னும் பூச்சிக்கொல்லி மனித நுகர்வுக்குப் பொருந்தாத அளவில் இருப்பதை சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு ஏஜென்சி கண்டறிந்துள்ளது.பூச்சிக்கொல்லி மருந்தை எந்த வகையிலும் உணவில் பயன்படுத்த அனுமதி இல்லை என்று உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களின் மீதான நுண்ணுயிர் தாக்கத்தை தடுக்க ரசாயன கலவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். எனினும் சிங்கப்பூர் சட்டங்களின்படி, உணவுப்பொருட்களில் இவற்றின் சேர்க்கை தடை செய்யப்பட்டிப்பதாகவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.எத்திலீன் ஆக்சைடை உட்கொள்வது நீடித்த காலத்துக்கான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 
  • 20
Added a news 
தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், இன்று வேலூர், கரூர் பரமத்தியில் தலா 107 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம், திருச்சி, திருத்தணியில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை நகரம், தருமபுரியில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தியது.இந்த சூழலில், சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (20.04.2024) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.04.2024 முதல் 23.04.2024 வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்புஅடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3°-5° டிகிரிசெல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை (20.04.2024) அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.19.04.2024 முதல் 23.04.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 ஆகவும் மற்றும் கடலோர பகுதிகளில் 50-85%ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
  • 28
Added a news 
என் மனைவிக்கு மட்டும் ஏதாவது நடந்தால் அதற்கு ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனீர் தான் காரணம் என்றும் அவரை நான் சும்மா விடமாட்டேன் என்றும் இம்ரான் கான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகிய இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் தற்போது சிறையில் உள்ளனர்.இந்த நிலையில் இம்ரான் கான் தனது மனைவி புஷ்ரா பீவி சிறையில் அடைக்கப்பட்டதற்கு ராணுவ தளபதி அசீம் முனீர் தான் காரணம் எனவும், மனைவியை குற்றவாளி என தீர்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் நீதிபதி இருந்திருக்கிறார் அந்த தீர்ப்பில் ஜெனரல் அசை முனீர் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றும், என் மனைவிக்கு மட்டும் ஏதாவது நேர்ந்தால் நான் உயிருடன் இருக்கும் வரை அசீம் முனீரை சும்மா விடமாட்டேன். அரசியல் சட்டத்திற்கு விரோதமான அவரது நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே அவர் தனது மனைவி புஷ்ரா பீவிக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்ய முயற்சி நடந்ததாக குற்றம் காட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இம்ரான் கானின் இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை ராணுவ தரப்பிலிருந்து எந்த பதிலும் வெளிவரவில்லை.
  • 50
Added article 
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்கு நம் உரிமை என்பது போல வாக்களிப்பது நம்முடைய கடமை. முதல்முறை வாக்களிக்கப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள். நீங்கள் அதுகுறித்து உங்கள் வீட்டில் கூட ஆலோசிக்க வேண்டியதில்லை. உங்களுக்கு யாரை பிடிக்கிறதோ, அவர்களுக்கு வாக்களியுங்கள். ஆபிரகாம் லிங்கன் சொன்னது போல, ஒரு புல்லட்டை விட வலிமையானது நம் வாக்கு. எனவே அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.கண்டிப்பாக அனைவரும் போய் வாக்களிக்க வேண்டும். அதுதான் நம் கடமை. ஆட்சி குறித்த நம்முடைய கருத்துகளை எடுத்து வைப்பதற்கு முன்பு நாம் முதலில் ஓட்டு போட்டிருக்க வேண்டும். அதைத்தான் நான் என்னுடைய ரசிகளுக்கும் சொல்ல விரும்புகிறேன்.தேர்தல் ஆணையம் மிக அழகான முறையில் ஒருங்கிணைப்பு செய்திருக்கிறார்கள். அதிகபட்சம் 15 நிமிடம்தான் வாக்களிக்க ஆகிறது. அதுமட்டுமின்றி இன்று அனைத்து நிறுவனங்களும் விடுமுறை அளித்துள்ளனர். எனவே அனைவரும் சென்று வாக்களிக்க வேண்டும்” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
  • 37
Added article 
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார். வெள்ளை நிற சட்டையும், கருப்பு நிற கூலிங் கிளாசும் அணிந்தபடி வந்த அஜித்தை காண அங்கு ஏராளாமானோர் கூடினர்.தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (April.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
  • 44
Added article 
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் மற்றும் அரசியல், திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர். பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது.நடிகர் விஷால் சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக, அவர் கருப்பு டி-சர்ட் அணிந்து கொண்டு, சைக்கிளில் சென்று வாக்களித்தார். அவர் சைக்கிளில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய் திடீரென சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்தார். இது பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை குறிக்கும் வகையில் அவர் இப்படி செய்ததாக பலரும் கூறிய நிலையில், அதற்கு அறிக்கை வெளியிட்டு விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்தது. தற்போது விஷாலும் விஜய் பாணியில் சைக்கிளில் சென்று வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • 40
Added a post 
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலக வளாகத்தில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.இந்நிலையில், உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் ரவிச்சந்திரன் என்ற 34 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.000
  • 80
Added a post 
யாழ். போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் தவறே காரணம் என உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் நேற்று (18.4.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பெண்ணின் சகோதரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.கிளிநொச்சி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் பாக்கியசெல்வி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுரேஷ்குமார் பாக்கிய செல்வி எனும் எனது சகோதரிக்கு கடந்த 08ஆம் திகதி போதனா வைத்தியசாலையில்சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இந்தச் சம்பவத்திற்கு தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.000
  • 61
Added a post 
இலங்கை கல்வி நிர்வாக சேவை (Sri Lanka Education Administrative Service) ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.கடந்த வருடம் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளே இன்று (19.4.2024) வெளியாகி உள்ளன.இந்நிலையில், பரீட்சையில் சித்தியடைந்த 735 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்கள (Department of Examinations - Sri Lanka) இணையதளத்தில் சேர்க்கப்பட்டது.பரீட்சாத்திகள் முடிவுகளை https://www.doenets.lk என்ற இணையதளத்தின் மூலம் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் தகுதியான 440 பேர் நேர்முகத்தேர்வு நடத்தி கல்வி நிர்வாக சேவையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.000
  • 76
Added a post 
தற்போதும் சுண்ணக்கல் தினசரி அகழப்பட்டு இரகசியமான முறையில் திருட்டுத் தனமாக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (18.04.2024) இடம்பெற்றுள்ள நிலையிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், “காங்கேசன்துறையில் இயங்கிய சீமெந்து ஆலைக்காக சுண்ணக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்னமும் மூடப்படாமல் உள்ளது. ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே இந்த குழிகள் உள்ளனஇந்தநிலையில் தற்போது புத்தூர், மாதகல், இளவாலைப் பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுண்ணக்கல்லை அகழ்ந்து மூடி பார ஊர்திகளில் எடுத்துச் சென்றுள்ளனர்.இவ்வாறு தினமும் 10 முதல் 15 வரையான பார ஊர்திகளில் கற்கள் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்தத் திணைக்களமாவது அனுமதி வழங்கியுள்ளதா” எனவும் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்நிலையில் அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என புவிச்சரிதவியல் திணைக்களத்தைச் சேர்ந்த ஒருவர் பதிலளித்துள்ளார்.
  • 82
Added a post 
ஈரான் நகரம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தாக்குதலின் பின்னர் அணுமின் நிலையங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை ஈரானின் அரச ஒளிபரப்பு நிறுவனமான IRIB தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலினால் இன்று குறி வைக்கப்பட்ட இஸ்பஹான் நகரம், ஈரானிய இராணுவத்திற்கான ஒரு பெரிய விமான தளத்தையும் அதன் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய தளங்களையும் கொண்டுள்ளது. நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டல் மையம் உட்பட பல ஈரானிய அணுசக்தி நிலையங்களை இஸ்பஹான் மாகாணம் கொண்டுள்ளது. இந்தநிலையில் இஸ்ரேலிய தாக்குதலுக்கு 'உடனடி' பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.இதற்கிடையில் ஈரானின் முக்கிய நகரங்களான இஸ்ஃபஹான், ஷசிராக்ஸ் மற்றும் தெஹ்ரான் ஆகியவற்றில் வணிக விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.இதேநேரம் ஓமானின் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரான் மீது இஸ்ரேல் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகமான ஐ.ஆர்.என்.ஏ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 81
Added a post 
ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கையின் பொருளாதார நிபுணர் பிரதீப் குருகுலசூரிய அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவராவார். ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தில் இணைவதற்கு முன்னர், பிரதீப் குருகுலசூரிய, சுற்றுச்சூழல் நிதிக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதியத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியிருந்தார். அங்கு அவர் 140 நாடுகளில் இயற்கை, காலநிலை மற்றும் எரிசக்தி நிதியை மேற்பார்வையிட்டார். இதேவேளை, அவர் 2006 இல் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தில் இணைந்ததுடன், அதற்கு முன்னர் உலக வங்கியுடன் இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.000
  • 81
Added a post 
சுற்றுலாப் பயணிகள் நடமாடும் வீதி உணவு என்ற பெயரில் இயங்கி வரும் உணவகம் உள்ளிட்ட, சகல உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார சபையின் விசேட சுற்றி வளைப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சஞ்ஜய இரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். தந்திரங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நுகர்வோரை தவறாக வழிநடத்துவதை தவிர்க்குமாறும் வர்த்தக சமூகத்தினரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 81
Added a news 
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் 102 தொகுதிகள் இன்று வாக்குப்பதிவை எதிர்கொள்கின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் திப்ரூகர், ஜோர்ஹாட், காசிரங்கா, லக்கிம்பூர், சோனித்பூர் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.இந்த 5 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் அம்மாநிலத்தில் ஆண்களை காட்டிலும் பெண்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று அதிகாலை 5 மணி முதலே ஏராளமான பெண்கள் வாக்குச் சாவடிகள் முன்பு வரிசையில் நின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பியதும் தங்கள் அன்றாட வேலைகளைத் தொடர்வதற்காக முன்கூட்டியே வாக்களிக்க வந்ததாக கூறினர்.அசாம் மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளில் மொத்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 43,64,859 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 42,82,887. மூன்றாம் பாலினத்தவர்கள் 123 பேர் உள்ளனர். இத்தேர்தலில் அசாமில் 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது மொத்தம் உள்ள 35 வேட்பாளர்களில் 11.4 சதவீதம் ஆகும்.
  • 83
Added a post 
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (19) காலை 7 மணியளவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 6 மணிவரை இடம்பெற்றது.7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், இன்று முதற்கட்டமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெறுகின்றன. 000
  • 82
Added a post 
யாழ் காரைநகரில் காணி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கடற்படை முகாம் அமைந்திருந்த மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து 50 மீற்றர்கள் தொலைவில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.குறித்த அகழ்வுப் பணியை இன்றையதினம் மேற்கொள்வதற்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், இன்று ஜே.சி.பி இயந்திரம் இல்லாத காரணத்தால், மீண்டும் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு நாளையதினம் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.000
  • 86
Added a news 
இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த தகவல்.பலரும் பரவலாக அறிந்திருக்க சந்தர்ப்பம் இருக்காது. இங்கு சொல்லப்படும் கருப்பொருளை மனக்கண்ணில் கொண்டுவரும்போது இலகுவாக புரிந்துகொள்ளலாம்.சந்திகளில் பொருத்தப்பட்டிருக்கும் "வீதி ஒழுங்கு ஒளி சைகை" (Traffic signal light) என்பது பொதுவாக குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஒருமுறை மாறி மாறி வீதியில் வாகனம் செலுத்துபவர்களுக்கு சைகைகளை வழங்கி வழிகாட்டி கொண்டேயிருக்கும் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.முக்கியமான பெரிய சந்திகளில் இரு பக்கமும் சம நேரங்களில் இவ் ஒளி சைகைகள் மாறிக்கொண்டேயிருக்கும்.ஆனால், இங்கு சமநிலையற்ற நிலைமையில் அதாவது ஒரு பக்கம் மட்டும் நீண்ட நேரம் பச்சை நிற சைகையாகவும் தொடர்ந்து மறுபக்கம் நீண்டநேரம் சிவப்பு நிற சைகையாகவும் இருக்கும் சந்திகளையும் வாகனம் செலுத்துபவர்கள் எவரும் எதிர்கொள்ளாமல் இருந்திருக்க மாட்டார்கள். உதாரணமாக, உள் வீதி ஓன்று வந்து தொடுக்கும் பிரதான வீதி சந்திகளை இங்கு குறிப்பிடலாம். அநேகமாக முச்சந்திகள் போல் காணப்படும் இடங்களினை இங்கு குறிப்பிடலாம்.  உள் வீதியால் அந்த முச்சந்தி உள்ள இடத்தினை நோக்கி வந்துகொண்டிருக்கும் வாகனங்களின் செறிவு குறைவாக இருக்கும் என்பதால் அந்த பக்கம் நீண்ட நேரம் சிவப்பு நிற ஒளி சைகையாகவும், மறுபக்கம் வாகன செறிவு அதிகமாக உள்ள பிரதான வீதி என்பதால் நீண்டநேரம் பச்சையாகவும் இருக்கும் வகையில் அங்கு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.அப்படியாயின் உள் வீதியால் வாகனம் செலுத்திவந்து பிரதான வீதியில் இடது பக்கம் திரும்புவருக்கு நீண்டநேரம் தொடர்ந்து இருக்கும் சிவப்பு ஒளி சைகை பச்சை ஒளியாக மாறிகொடுக்க சற்று அதிக நேரம் எடுக்குமல்லவா? இதற்கு தொழில்நுட்பவியலாளர் ஓர் தொழில்நுட்பத்தினை கனடாவில் கையாள்கின்றனர்.இப்படியான இடங்களில் மின் காந்த தூண்டல் இணைப்பு நிலத்தின் கீழ் கண்ணுக்கு தெரியாதமாதிரி பதிக்கப்பட்டிருக்கும். இந்த மின்காந்த தூண்டல் இணைப்பின் செயல்பாடு என்பது வாகனம் அந்த இடத்தில் வந்து நின்று சில நொடிகளில் சைகை சிவப்பிலிருந்து பச்சைக்கு மாற்றிக்கொடுக்கும். வாகனம் அந்த இடத்திற்கு வரவில்லையானால் அந்த பக்க சிவப்பு ஒளி சைகை மாறாமல் தொடர்ந்திருக்கும்.(Inductive Metal loop has been embedded in the pavement without visible )இதேபோல் வாகனசெறிவு அதிகமாக இருக்கும் பெரிய சந்திகளில் நேரே வரும் வாகனங்களை மின்னொளி சைகையால் நிறுத்திவிட்டு, விசேட அம்புக்குறி சைகையால் (Left turn arrows), இடது பக்கம் திரும்பும் பல வாகனங்களுக்கு............தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள கீழ்க்காணும் வீடியோவைப் பாருங்கள்.‍
  • 91
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 6 ஆம் தேதி மேஷம் -ராசி: வாகன பயணத்தில் கவனம் வேண்டும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். வியாபாரம் சார்ந்த முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். சக ஊழியர்களால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். புதிய துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைரிஷபம் ராசி: உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில பணிகளில் காலதாமதம் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பரமான விஷயங்களால் குழப்பங்கள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஆலோசனைகளால் நம்பிக்கை உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்மிதுனம் -ராசி: மனதளவில் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பயணங்களால் நன்மை ஏற்படும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபார ரீதியான பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பயம் மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்கடகம் -ராசி: பேச்சுக்களில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் குறித்த சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். முதலீடு தொடர்பான செயல்பாடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஊதாசிம்மம் -ராசி:குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். ஆதரவு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் கன்னி -ராசி: பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். வியாபாரம் ரீதியான பயணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்துலாம் -ராசி: சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உடன் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திடீர் பயணங்களால் மாற்றம் உண்டாகும். மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். கலைத்துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் மேம்படும். கோபம் விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சைவிருச்சிகம்- ராசி: தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் தெளிவு ஏற்படும். பெருமை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் தனுசு -ராசி: செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் உதவியால் நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமகரம் -ராசி:குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் திருப்தியின்மையான சூழல் அமையும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய நபர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்கும்பம் –ராசி:வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்மீனம் -ராசி: வியாபாரத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் ஒத்துழைப்பு உண்டாகும். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நற்செய்தி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 164
Added a post 
குரோதி வருடம் சித்திரை மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 19.4.2024. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 10.28 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று பிற்பகல் 01.18 வரை மகம். பின்னர் பூரம். மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 171
"என்னங்கய்யா வேணும்.... டீ சாப்பிடுறீங்களா ?" "சூஸ்... சூஸ்... வாங்கி தா கண்ணு.. ஆசையா இருக்கு" "என்ன ஜூசுங்க ஐயா வேணும்?" "ஆப்பிள் சூசு" கடையில் சுற்றி நிற்பவர்கள் கேலியுடன் "பார்ரா" என்கிறார்கள். சிரித்தவாறு ஜூஸ் வாங்க உள்ளே போகிறார் அந்த முகம் தெரியாத மனிதர். அந்த கேப்பில் அந்த முதியவரை நானொரு படமெடுத்துக் கொண்டேன்.உள்ளே போனவர் பெரிய கப் நிறைய ஜூஸுடன் வெளியே வந்தார். பெரியவர் ஆசையாசையாக இரு கைகளிலும் ஜூஸ் கப்பை ஏந்தி, ஸ்ட்ரா வழியாக மெல்ல உறிகிறார். அவர் கண்கள் சொக்கிப்போகிறது. முகத்தில் அப்படி ஒரு திருப்தி. அளவு பார்த்து பார்த்து பாதி ஜூஸை குடித்துவிட்டு மெல்ல அங்கிருந்து நகர்ந்தார். வாங்கிக்கொடுத்தவர் பதறிப்போய்... "ஐயா... அந்த டம்ளரை கொடுத்துட்டு போங்க" என்று அழைக்க... கையால் சைகை காட்டிவிட்டு முன்னாள் சென்றார். அங்கே அவர் மனைவி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்க. அவர் கையில் மீதி ஜூஸை கொடுத்து குடிக்க சொல்கிறார். "ஏது?" என்று அந்த அம்மா கேட்க... வாங்கிதந்தவரை நோக்கி விரல் நீட்டுகிறார். "குடி... இனிப்பா இருக்கு..." என்று ஆசையாய் அவர் சொல்ல, பாட்டி கண்ணில் காதல் மின்னுகிறது.. வாங்கிக்கொடுத்தவர் சிரித்துக்கொள்கிறார். அழகு...இதுவல்லவா காதல்....
  • 165
Added a poem 
ஊண்டுகோல்ஒதுங்கி கொண்டதுவயது போனதுஅன்புகுறையவில்லைஇவர்களின்ஒற்றுமை கண்டுஊண்டுகோல்ஒதுங்கி கொண்டது.
  • 156
Good Morning...இன்று (ஏப்ரல் 19) இந்தியப் பொதுத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்குகிறது!
  • 162
  • 205
  • 211
  • 210